Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிமால் சிறிபால டி சில்வாவின் கனவு

Featured Replies

சுகாதார அமைச்சர் கூறுகிறார்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முயற்சியால் நாட்டில் இன்று அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசாங்கமொன்று பெரும்பான்மை பலத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவிக்கும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, படையினர் புலிகளை முழுமையாக தோல்வியடையச் செய்த பின்னர் தமிழர் கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்களென்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊவா வெல்லஸ்ஸ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் லொக்கல் ஓயா ஊடாக மக்கள் பயணிப்பதற்காக அமைக்கப்பட்ட பாலமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்த போதும் பலமிக்க அரசாங்கத்தை உருவாக்கியிருப்பதால் அவற்றை வெற்றி கொண்டு முன்னோக்கிச் செல்ல முடிந்துள்ளது.

ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே தனித்து அதிகாரத்திலுள்ள ஆட்சியல்ல. தற்போதிருப்பது அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்ட தேசிய அரசாங்கமே ஆட்சியில் உள்ளது.

பல அரசியல் கட்சிகள் இணைந்த அரசாங்கம் மட்டுமல்ல இனத்துவ அடிப்படையிலும் தமிழர், சிங்களவர், முஸ்லிம் இனங்களும் ஒன்றிணைந்திருப்பது விசேட அம்சமாகும்.

எமது பாதுகாப்புப் படையினர் கிழக்கு மாகாணத்தில் பல வெற்றிகளை பெற்று வருகின்றனர். விரைவில் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதே போல் புலிகளை ஏனைய எஞ்சிய பிரதேசங்களிலிருந்தும் விரட்டியடிப்பார்கள்.

அதன் பின்னர் தமிழர் கூட்டமைப்பினரும் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

மகிந்த சிந்தனையை முன்னெடுப்பதற்கு பல தரப்புகளிலிருந்து ஒத்துழைப்பு கிடைத்துள்ளதால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கின்றோம். எனவே, அவசியமற்ற தேர்தலை நடத்தி மக்கள் பணத்தை வீணடிக்க அரசு விரும்பவில்லை.

அரசாங்கத்திற்கு அல்ல இன்று ஐ.தே.கட்சிக்கே சிக்குன் குனியா தொற்றிக் கொண்டுள்ளது. இந் நோய் தொற்றிக் கொண்டவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுமென டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ரணிலும் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டு ஞாபகச் சக்தியை இழந்துள்ளார்.

எனவே தான் தனது கட்சிக்குள்ளிருக்கும் பிரச்சினைகளை மறந்து பிதற்றுகிறார் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

http://www.thinakkural.com/news/2007/2/13/...s_page21299.htm

யாராவது எழுப்பி விடுங்கப்பா :P

சிங்களமக்களே இவரை கெதியில எழுப்பிவிடுவாங்கள்

Chickgunya is not just for Ranil. Its gotten Nimal Sri Dilva as well. He just doesn't realize it.

:rolleyes: நான் ஒரு கனவு கண்டேன் தமிழீழம் எல்லாம் போராடும் மக்கள் கைகளில் ஏ.கே 47 ஐ தூக்கியபடி தமிழீழ மக்கள் புரட்சி எண்டு ஒரே நாளில் எல்லா இடங்களிலும் தொடங்குவதாக. அப்ப அது நடக்கும் எண்டா அர்த்தம். அப்படி ஒரு எண்ணமுமே எங்களுக்கு இல்லையிங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.