Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த மாதம் கொழும்பில் பிரித்தானிய பிரஜை கடத்தப்பட்டதன் பின்னனியில் லண்டனில் இயங்கும் ஒட்டுக்கும்பல் கருணாவின் கூலிகள்.

Featured Replies

கடுவன்,

இந்த முக்கியமான செய்தியை முழுவதுமாக ஒட்டாது ஏன் வெறும் லிங்க்கை மாத்திரம் இணைத்துள்ளீர்கள்? நெருப்பு இணையம் உங்களினாலா நடத்தப்படுகின்றது?

வெளிநாடுகளில் இருந்து சிறீ லங்கா செல்லும் நம்மவர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். சொறிநாய் குழு உங்களைக் கடத்தி காசு பறிப்பதற்காக மகிந்துவின் மந்திக்கூட்டங்களுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் காத்திருக்கின்றது கவனம்!

கடந்த மாதம் கொழும்பில் பிரித்தானிய பிரஜை கடத்தப்பட்டதன் பின்னனியில் லண்டனில் இயங்கும் ஒட்டுக்கும்பல் கருணாவின் கூலிகள்.

கடந்த மாதம் 31ம் திகதி லண்டனிலிருந்து கொழும்புக்கு "சிறீலங்கா எயார்லைன்ஸ்" விமானத்தில் சென்ற பிரித்தானிய பிரஜையான திரு விஜயகுமார் (55 வயது) எனும் வர்த்தகர், அவரது கொழும்பு வெள்ளவத்தை பெரேரா லேனிலுள்ள வீட்டுக்கு அருகில் வைத்து, வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டதாக, வெள்ளவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நெற் இணையத்தளம் செய்தி 01ஃ02ஃ07 இல் வெளியிட்டிருந்தது. கடத்தப்பட்ட பிரித்தானிய பிரஜையான திரு விஜயகுமார் முன்னால் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் திரு சிவத்தம்பி அவர்களின் மருமகனுமாவாவார்.

எமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, பிரித்தானிய பிரஜையான திரு விஜயகுமாரின் கடத்தலானது, கொழும்பிலிருந்து இயங்கும் ஒட்டுக்குழு கருணா கும்பலினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இக்கடத்தலானது லண்டனிலிருந்து இயங்கும் ஒட்டுக்குழு கருணாவின் கூலிகளான "உண்டியல் டாக்டர்" ஜெயதேவன் சார்ந்தோரின் வேண்டுகோளின்படி ஒட்டுக்குழு உறுப்பினர் பிள்ளையானினால் நடத்தப்பட்டிருக்கிறது.

இக்கடத்தல் குறித்து மேலதிகமாக தெரிய வருவதாவது, கடத்தப்பட்ட நபர் கொழும்பு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் லண்டன் கரோப்பகுதியிலுள்ள ஒரு மதுபாண விடுதியில், ஒட்டுக்குழு கருணாவின் கூலிகள் சிலருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், இவர் கொழும்பு செல்ல இருப்பதை விமான பயண முகவர் நிலையத்தில் வேலை செய்யும் ஒருவர் மூலம் ஒட்டுக்குழு கருணாவின் கூலிகளுக்கு தெரிந்ததாகவும், அதனையடுத்து இவர்களின் வேண்டுகோளின்படியேதான் இந்தக் கடத்தல் நாடகம் நடைபெற்றிருக்கிறதாம்.

இக்கடத்தப்பட்ட பிரித்தானிய பிரஜை முதலில் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஒட்டுக்குழு கருணாவின் அலுவலகத்தில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தற்போது சிங்கள விசேட அதிரடிப்படையினரின் காவலில் இருப்பதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப்பட்ட இந்த பிரித்தானியப் பிரஜையின் விடுதலைக்கு அமைச்சர் தொண்டமான் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாகவும், திரு தொண்டமான் அவர்களுக்கு, இலங்கை ஜனாதிபதி அவர்கள் கடத்தப்பட்ட பிரித்தானிய பிரஜையை விரைவில் விடுதலை செய்ய உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் குடும்ப உறுப்பினர்களும் இச்செய்திகளை மறைப்பதாகத் தெரிகிறது. பிரித்தானிய பிரஜையான இவரின் கடத்தல் இன்றுவரை பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகத்துக்கோ, ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸாருக்கோ அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை.

கடந்த சில காலங்களாக ஒட்டுக்குழுக்களின் இணையத்தளங்கள் புலத்தில் உள்ள வர்த்தகர்களுக்கும், பொது மக்களுக்கும் மிரட்டல்கள் விடுவதும் பின் அவர்கள் இலங்கையில் கடத்தப்படுவதும் அதிகரித்து வருவதை பல விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். கடந்த வருடம் லண்டன் வெஸ்ரேன் ஜுவலர்ஸின் உரிமையாளரும் இவ்வாறே கடத்தப்பட்டு பல கோடி கப்பம் ஒட்டுக்கும்பல் கருணா குழுவினரால் அறவிடப்பட்டதும் தெரிந்ததே.

Web : neruppu.org

Thursday, 15 Feb 2007

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.