Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்க தமிழக பாரதிய ஜனதா அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்க தமிழக பாரதிய ஜனதா அழைப்பு

சென்னை: காவிரி பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து ரஜினிகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும். நடிகர் விஜயகாந்த் மக்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை. அவரது கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து ஏமாற வேண்டாம், என்று பா.ஜ., மாநில பொதுச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

வேலுõரில் நடந்த பா.ஜ., மாநில செயற்குழுக் கூட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், மக்கள் விரோத அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் மாநிலம் முழுவதும் ஆயிரம் பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருவதுடன், நாட்டின் பாதுகாப்பிலும் கோட்டை விட்டு வருகின்றன. விடுதலை புலிகள் தமிழகத்திலிருந்து ஆயுதங்கள் கடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பெங்களூர் அறிவியல் கழகத்தில் தாக்கிய பயங்கரவாதி சென்னையிலிருந்து ரயில் டிக்கெட் வாங்கியுள்ளான். சென்னையில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கிறான். இதை வைத்து பார்த்தால் தமிழ்நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறது என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

முட்டை, கறிக்கோழி, பால் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆன் லைன் வர்த்தகம் மூலம் சாதாரண பருப்பு விலை 40 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்ந்து விட்டது. எல்லா விஷயத்திலும் தி.மு.க., அரசு இரட்டை நிலையை கடைப்பிடிக்கிறது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசுடன் பேச்சு வார்த்தை தேவையில்லை என்றனர். இப்போது, பேசித் தான் பார்ப்போமே என்கின்றனர். காவிரி பிரச்னையில் கன்னடர்களை கண்டித்து ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.

கர்நாடகாவில் காவிரிப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பை கண்டித்து மத்திய அமைச்சரும், நடிகருமான அம்ப்ரீஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தில் 13 அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்கள் காவிரிப் பிரச்னையில் என்ன செய்தனர். அம்ரீசுக்கு இருக்கும் தன்மான உணர்ச்சி இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது. சென்னையில் எம் சர்வீஸ் பஸ்களில் கட்டணம் குறைக்க வேண்டும் என்று பா.ஜ.,வின் சார்பில் போராட்டம் நடத்த எண்ணியுள்ளோம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

http://www.dinamalar.com/

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் தமிழகத்திலிருந்து ஆயுதங்கள் கடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். http://www.dinamalar.com/

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவினைக் குறைக்க தினமலர், சோவின் துக்ளக், இந்துப் பத்திரிகை, பாரதிய ஜனதா, அதிமுக போன்றவை மறுபடியும் இலங்கை ரம்புக்கெலா போல குறைக்கத் தொடங்கிவிட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக தானா கர்னாடகாவை ஆட்சி செய்வது? :lol:

இல்லை தூயவன் கர்நாடாகாவில் காங்கிரஸ் சேர்ந்த கூட்டாட்சி நடக்கிறது. அதுதான் இம் முறை தமிழர் மீதான தாக்குதல்கள் குறைந்திருந்தன.

மத்தியில் பிரச்சனை தி.மு.க வினால் வந்துவிடும் என்ற பயம்

பாஜக தானா கர்னாடகாவை ஆட்சி செய்வது? :lol:

ரஜினி விடிய(?) 10 மணிக்கு போய் உண்ணாவிரதம் இருக்க தொடங்குவார் 3.30 க்கு உண்ணாவிரததை முடித்துகொள்ளுவர் அந்தே நேரம் தண்ணீ வந்து கொண்டு இருக்கும் காவேரியில் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.