Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.வில் தமிழர்களுக்கு நீதி மீண்டும் மறுக்கப்பட்டுவிட்டது புலம்பெயர், வடக்கு,கிழக்கு, சிவில் சமூக, அரசியல் அமைப்புக்கள் கூட்டறிக்கை

Featured Replies

ஐ.நா.வில் தமி­ழர்­க­ளுக்கு நீதி மீண்டும் மறுக்­கப்­பட்­டு­விட்­டது

 

புலம்­பெயர், வடக்கு,கிழக்கு, சிவில் சமூக, அர­சியல் அமைப்­புக்கள் கூட்­ட­றிக்கை  

 (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

இலங்கை விவ­கா­ரத்­தினை ஐ,நா.வின் பொதுச்­ச­பையின் விசா­ர­ணைக்கு அனுப்­ப வேண்டும். ஐ.நா பொதுச்­சபை வழியே, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திற்கு இலங்­கையை பாரப்­ப­டுத்­து­வ­தற்­கான பரிந்­து­ரை­ யினை ஐ.நா . பாது­காப்பு பேர­வைக்கு வழங்க வேண்டும் என்று புலம்­பெயர்,  வடக்கு கிழக்கு, சிவில் சமூக அர­சியல் அமைப்­புக்கள் கூட்­டாக தெரி­வித்­துள்­ளன.  

மேலும் இலங்­கைத்­தீவின் இன­நெ­ருக்­க­டிக்கு தீர்­வு­காண வடக்கு கிழக்கு பகு­தி­யிலும், புலம்­பெயர் தமி­ழர்­க­ளி­டத்­திலும் பொது­வாக்­கெ­டுப்­பினை நடத்­து­வற்­கு­ரிய நிலையை ஏற்­ப­டுத்த வேண்டும் என்றும் கோரப்­பட்­டுள்­ளது.  இலங்கை தொடர்­பாக நேற்று ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை நிரா­க­ரித்து விடுத்த அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது  

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரி­மைச்­ச­பையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள 34:1 தீர்­மா­ன­மா­ன­மா­னது, தமிழ்­மக்­க­ளுக்கு மீண்­டு­மொ­ரு­முறை நீதி மறுக்­கப்­பட்­டி­ருப்­ப­தையே உணர்த்­து­கின்­றது. இது உலகத் தமி­ழர்­க­ளுக்கு வருத்­தத்­தையும், பெருத்த ஏமாற்­றத்­தையும் தந்­தி­ருக்­கின்­றது.

 ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மானம் அர­சாங்­கத்­தக்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவ­கா­சத்தை கொடுக்­கி­றது. ஐ.நா மனித உரி­மைச்­ச­பையின் ஆணை­யாளர் அலு­வ­லகம், 2015ல் சமர்ப்­பித்­தி­ருந்த அறிக்­கையில் காத்­தி­ர­மான பல பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்ட போதிலும், மிகவும் நீர்த்­துப்­போன 30-1 தீர்­மானம் ஒன்றே , 2015 இல் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

 அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­பிலும், பங்­க­ளிப்­பிலும் நிறை­வேற்­றப்­பட்ட அத்­தீர்­மானம் முன்­வைத்­தி­ருந்த விட­யங்­களை, அர­சாங்கம் நிறை­வேற்­று­வ­தற்கு 18 மாதங்­களை வழங்­கி­யி­ருந்­தது. அதே சம­யத்தில், ஐ.நா.வின் மனித உரி­மைச்­சபை விசா­ர­ணைக்­குழு பாதிக்­கப்­பட்ட தமிழ்­மக்­களை சந்­திப்­ப­தற்கு ஆட்­சி­யா­ளர்­க­ளினால் அனு­மதி மறுக்­கப்­பட்­டது என்­ப­தையும் நினைவில் கொண்­டு­வ­ரு­கிறோம். 

இந்த அறிக்கை அர­சாங்கம் புரிந்த போர்­குற்­றங்கள், மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­களை விவ­ரித்­தி­ருந்­தது. அதே சம­யத்தில் ஜேர்­ம­னியின் ப்ரேமன் நகரில் நடந்த ப்ரேமன் மக்கள் தீர்ப்­பாயம் ‘இனப்­ப­டு­கொலை’ நடந்­துள்­ளது என்று தீர்ப்­ப­ளித்­தது.

இலங்கை அர­சினை, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஐ.நா பாரப்­ப­டுத்த வேண்­டு­மென்ற கோரிக்­கை­யுடன் 1.6 மில்­லியன் மக்கள் கையொப்­ப­மிட்­டி­ருந்­தனர். ஐ.நா மனித உரிமைச் சபை­யா­னது கலப்பு விசா­ரணை தேவை என்று கூறி இருக்­கி­றது. இதை 2015, 2017 ஆகிய இரு­மு­றையும் ஐ.நா மனித உரி­மைச்­சபை ஆணை­யாளர் கூறி­யி­ருக்­கின்றார்.

ஆனால், செப்­டம்பர் 2015 முதல் இலங்யைின் பிர­த­மரும், அரசுத் தலை­வ­ரும, வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளையும், கலப்பு நீதி­மன்­றத்­தையும் தொடர்­சி­யாக நிரா­க­ரித்து வரு­கின்­றனர்.

தீர்­மானம் 30-1 முன்­வைத்­தி­ருந்த, ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலத்தை திரும்ப அளிப்­பது, பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தை ரத்து செய்­வது, சித்­த­ர­வ­தைகள் குறித்து விசா­ரணை நடத்­து­வது, பாலியல் வன்­மு­றைகள் குறித்து விசா­ரிப்­பது என்­ப­ன­வற்றை நடத்­து­வ­தாக உறுதி அளித்­தி­ருந்த அர­சாங்கம் எத­னையும் இற்­றை­வரை செய்­ய­வில்லை.

பெரும்­பா­லான தமி­ழர்கள் உள்­நாட்டு முகாம்­களில் பாதிக்­கப்­பட்ட நிலையில் இருக்­கி­றார்கள். தமிழர் தாயகப் பகு­தி­யெங்கும் இரா­ணுவம் நிலை­நி­றுத்­தப்­பட்ட நிலையில் தொடர்­சி­யாக காணப்­ப­டு­கின்­றது. அப­க­ரிக்­கப்­பட்ட தமிழ்­மக்­களின் நிலங்கள் திருப்பி அளிக்­கப்­ப­ட­வில்லை. சித்­தி­ர­வ­தையும், பாலியல் வன்­மு­றை­களும் நின்­ற­பா­டில்லை. வடக்கு கிழக்கில் இருக்கும் படை­யி­ன­ரது உயர்­பா­து­காப்பு வலை­யங்கள் மூடப்­ப­ட­வில்லை.

நாக­ரீ­க­ம­டைந்த எந்த சமூ­கமும், நவீன வர­லாற்றில் சொந்த மக்கள் மீது குண்­டு­க­ளையும், தரைப்­ப­டை-­வான்­வெளி தாக்­கு­த­லையும் நடத்­தி­ய­தில்லை. உணவும், மருந்தும் போரின் ஆயு­தங்­க­ளாக பயன்­ப­டுத்­தப்­பட்­டன. குற்­ற­வா­ளி­யாக நிற்கும் அரசு தனது குற்­றங்­களை விசா­ரிக்க தகு­தி­யற்­ற­தாக இருக்­கி­றது.

ஐ.நா. மனித உரிமைச் சபை ஆணை­யா­ளரின் அறிக்கை கட்­ட­மைக்­கப்­பட்ட நிர்­வாக குற்­றங்­களை குறிப்­பி­டு­கி­றது, இந்த தன்­மை­யோடு சேர்த்து இரா­ணுவம், பொலிஸ், உள­வுத்­துறை ஆகிய தரப்­புக்கள் முழு­மை­யாக குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­க­ளி­லி­ருந்து பாது­காக்கும் வழி­மு­றையை கொண்­ட­தாக இருக்­கி­றது.

 குறிப்­பாக போர்க்­குற்­றங்கள், மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான குற்­றங்கள், இனப்­ப­டு­கொ­லைக்­கான குற்­றங்கள் குறித்து விசா­ரிக்க தகு­தி­மிக்க முடி­யாத நிலையில் இலங்­கையின் நீதி­மன்ற வழி­மு­றைகள் உள்­ளன. சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான கோரிக்கை இன்மும் நிறை­வேற்­றப்­ப­டாமல் இருக்­கி­றது.

கொடுத்த வாக்­கு­று­தி­களை வெறும் வாய்­மொ­ழிச்­சொல்­லாக பொருட்­ப­டுத்­தாத அர­சா­கவே அர­சாங்கம் இருக்­கி­றது. இது நீதி­மு­றை­முக்கு எதி­ரா­ன­தாக இருக்­கி­றது. காணாமல் போனோர் குறித்த சட்டம் குறித்து பேசும்­பொ­ழுது இலங்கை அரசுத் தலைவர் சிறி­சேனா, தனது அரசு ஒரு பொழுதும் படை­யி­னரை குறி­வைக்­காது என்று பதிவு செய்­தி­ருக்­கிறார்.

மேலும், நீதித்­துறை அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ, சிறி­லங்கா இரா­ணு­வத்தின் மீதான அனைத்து போர்க்­குற்­றங்­க­ளையும் மறுத்­தி­ருக்­கிறார். மேலும், அவர் அரசு மீது குற்றம் சுமத்­து­ப­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­வ­தாக பதிவு செய்­தி­ருக்­கிறார்.

இலங்கை இரா­ணு­வத்தின் பாரிய குற்­றங்கள் குறித்து விவா­திப்­ப­வர்கள் நாட்டின் எதி­ரிகள் என்றும், இரா­ணு­வத்தின் எதி­ரிகள் என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

பெரும்­பான்மை சிங்­கள மக்கள் நிறைந்த தெற்கு இலங்­கையின் தேசி­ய­வாத தொகு­தி­க­ளுக்­காக தான் ‘தேசிய பாது­காப்­பினை சம­ரசம் செய்து சிறி­லங்கா இரா­ணு­வத்­தினர் மீது நட­வ­டிக்கை எடுக்க மாட்டேன் என்றும் அர­சுத்­த­லைவர் பதிவு செய்­தி­ருக்­கிறார். தற்­போ­தைய இலங்கைத் தீவின் சூழலில் சிறி­லங்­காவில் ஒரு நம்­ப­க­மான தீர்­வுகள் கொண்­டு­வ­ரு­வ­தற்­கு­ரிய அர­ச­கட்­ட­மைப்­பாக, தற்­போ­தைய அரசு இயங்­க­வில்லை. 

அரசின் மீது எந்­த­வொரு பிடிப்பும், கட்­டுப்­பாடும் இல்­லாத நிலையில் அரசு தான் கொடுத்த வாக்­கு­று­தி­களை நடை­மு­றை­ப­டுத்­து­வதோ தன்­னு­டைய நட­வ­டிக்கை மறுப்பு நிலை­யையோ நிறுத்­து­வதோ சாத்­தியம் இல்லை.

மனித உரி­மைச்­ச­பை­யினால் அர­சுக்கு கொடுக்­கப்­படும் கால அவா­ச­கத்­தினைக் வைத்­துக்­கொண்டு, ஒரு புறத்தில் தமி­ழர்­க­ளி­டத்தில் இயங்கும் நீதிக்­கான மன­நி­லையை குலைப்­பதும், மறு­பு­றத்தில் வள­மான கட்­ட­மைப்­பு­களை தமிழர் பகு­தியில் கொண்­டு­வ­ரு­வதன் மூலமும் சிங்­கள குடி­யேற்­றங்­க­ளையும் அர­சாங்கம் செய்தும் வரு­கின்­றது.

அதே சமயம் இனப்­ப­டு­கொ­லையின் தட­யங்­களை அழித்து வரு­வ­தற்கும் இந்த கால அள­வையும் பயன்­ப­டுத்­திக்­கொள்­கி­றது. அர­சாங்கம் ஒரு பொழுதும் தமி­ழர்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை காப்­பாற்­றி­யதும் இல்லை, அதே சமயம் அர­சியல் தீர்­வையும் முன்­வைத்­த­தில்லை.

இந்தக் கார­ணங்­களை கவ­னத்தில் எடுத்­துக்­கொண்டு,தமி­ழர்­களின் தேசி­யத்­திற்­கான சுய­நிர்­ணய உரி­மையி உறுதி செய்­ய­வேண்டும் - இலங்கை விவ­கா­ரத்­தினை ஐ,நா.வின் பொதுச்­ச­பையின் விசா­ர­ணைக்கு அனுப்­பிட வேண்டும். ஐ.நா பொதுச்­சபை வழியே, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திற்கு இலங்­கையை பாரப்­ப­டுத்­து­வ­தற்­கான பரிந்­து­ரை­யினை ஐ.நா . பாது­காப்பு பேர­வைக்கு வழங்க வேண்டும். 

இலங்­கைத்­தீவின் இன­நெ­ருக்­க­டிக்கு தீர்­வு­காண வடக்கு கிழக்கு பகு­தி­யிலும், புலம்­பெயர் தமி­ழர்­க­ளி­டத்­திலும் பொது­வாக்­கெ­டுப்­பினை நடத்­து­வற்­கு­ரிய நிலையை ஏற்­ப­டுத்த வேண்டும். ஆகவே மார்ச் 23 ஆம் திகதி 2017ல் ஐ.நா மனித உரி­மைச்­ச­பையில் சிறி­லங்கா தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தினை முற்­றாகம் நாம் நிரா­க­ரிக்­கின்றோம். 

இதே­வேளை இந்த கூட்டு அறிக்­கையில் கீழ் வரும் அமைப்­பி­னரும் அர­சியல் கட்சிகளும் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டுள்ளனர்.

1.ஈழத்தமிழர் செயலகத்துக்கான வெ ளிவிவகார சர்வதேச பேரவை

2.சுவிஸ் தமிழ் ஒருங்கிணைப்பு குழு

3.நாடுகடந்த தமிழீழ அரசின் இனப்படுகொலை மற்றும் பாரிய அழிவுகளுக்கு எதிரான அமைச்சு

4. சுவிஸ் ஈழத்தமிழர்கள் பேரவை

5. அரசகுலரட்ணம் ரட்னகாந்தன்

6. மன்னார் பிரஜைகள் குழு

7. வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்

8. நாம் தமிழர் கட்சி

9. மே 17 அமைப்பு

10. கலாநிதி போல் நியுமன்

11. தமிழ் பேரவை

12. பிரான்ஸ் தமிழ் அமைப்பு

13. பிரான்ஸ் தமிழர் சம்மேளனம்

14.இலங்கை நீதி மற்றும் சமாதானத்துக்கான அமைப்பு

15. மறுமலர்சசி திராவிட முன்னேற்றக் கழகம்

16. விடுதலை சிறுத்தைகள் கட்சி

17. தந்தை பெரியார் திராவிட கழகம்

18. விடுதலை தமிழ் புரட்சிகள் கட்சி

19. தமிழ் புலிகள் கட்சி

"20. தமிழர் விடியல் கட்சி

21. தமிழக மக்கள் முன்னணி

22. காஞ்சி மக்கள் மன்றம்

23. தமிழர் விடுதலை கழகம் 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.