Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கை தெற்கு உணர்ந்துள்ளது : யாழ். மாவட்ட சு.க. அமைப்பாளர் அங்கஜன்

Featured Replies

வடக்கை தெற்கு உணர்ந்துள்ளது : யாழ். மாவட்ட சு.க. அமைப்பாளர் அங்கஜன்

Published by Priyatharshan on 2017-04-01 10:11:30

 

தெற்கு இளைஞர்­க­ளுக்கு இருக்கும் பிரச்­சி­னையே வடக்கு இளைஞர்­க­ளுக்கும் இருக்­கின்­றது. அத­னால்தான் வடக்கு இளைஞர்கள் ஆயு­த­மேந்தும் நிலைக்கு தள்­ளப்­பட்­டனர் என்­பதை தெற்கில் இருப்­ப­வர்கள் தற்­போது உணர்ந்­துள்­ளனர் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் யாழ். மாவட்ட அமைப்­பா­ள­ரு­மான இராம­நாதன் அங்­கஜன் தெரி­வித்தார்.

Angajan-Ramanathan.jpg

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ளனம் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு சுக­த­தாச அரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது.

நடை­பெ­ற­வுள்ள சம்­மே­ளனம் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்­துத் ­தெ­ரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பங்குபற்­ற­லுடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ளனம் சுக­த­தாச அரங்கில் நாளை இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த சம்­மே­ளனத்தில் வடக்கு, கிழக்கு, மலை­ய­க­ம் ­போன்ற பிர­தே­சங்­களில் இருந்தும் எமது இளைஞர், யுவ­திகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட இளைஞர்கள் அதில் கலந்­து­கொள்ள எதிர்­பார்க்­கப்­பட்­ட ­போதும் இட­ப்­பற்­றாக்­குறை கார­ண­மாக 500பேர் வரைக்­குமே கலந்­து­கொள்ள எமக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இளைஞர், யுவ­திகள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ள­னத்தில்  வடக்கு, கிழக்கில் இளைஞர், யுவ­திகள் கலந்­து­கொள்­வ­தற்கு ஆர்­வ­மாக இருக்­கின்­றனர்.  அதே­போன்று நாட்டில் இடம்­பெற்று வந்த மதவாதம் பிரி­வினை வாதங்­களை அடக்­கு­வ­தற்கும் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுத்துள்­ள­துடன் சகல இன மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்­துள்ளார். 

மேலும் தெற்கு இளைஞர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னையும் வடக்கு இளைஞர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னையும் ஒரே மாதி­ரி­யா­கவே இருக்­கின்­றது. அதா­வது ஒட்டு மொத்த இளைஞர்­களும் இன்று எதிர்­கொள்ளும் பிர­தான பிரச்­சி­னை­யாக இருப்­பது தொழில் இல்­லா­மை­யாகும். அதனால் தான் வடக்கு இளைஞர்கள் அன்று ஆயும் ஏந்­து­வ­தற்கு கார­ண­மாக இருந்­தனர் என்­ப­தையும் தெற்கு இளைஞர்கள் இன்று உணர்ந்­துள்­ளனர்.

எனவே நாளை நடை­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ள­னத்­தின்­போது இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அத்துடன்  13வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த சம்மேளனம் ஒட்டுமொத்த இளைஞர் யுவதிகளுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும் என்றார்.

http://www.virakesari.lk/article/18567

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.