Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராடும் மக்களுக்கு விடிவு கிடைக்காதா ?

Featured Replies

போராடும் மக்களுக்கு விடிவு கிடைக்காதா ?

 

ரொபட் அன்டனி

தமது பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்­கு­மாறு மக்கள் தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திடம் கோரி வரு­கின்ற நிலையில் அதற்கு அர­சாங்கம் உரிய முறையில் பதி­ல­ளிக்­கா­வி­டினும் அல்­லது மக்­களின் பிரச்­சி­னை­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் செவி­ம­டுக்­கா­வி­டினும் மக்கள் விரக்தி அடைந்­து­வி­டு­வ­துடன் தொடர் போராட்­டங்­களை நடத்­து­வ­தற்கு முன்­வந்­து­வி­டு­வார்கள். காரணம் கோரிக்­கை­களின் மூலம் அல்­லது வேண்­டு­கோள்­களின் மூலம் நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யாத தமது தேவை­களை மக்கள் போராட்­டங்­களின் மூலம் நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு முயற்­சிப்­பதை தவிர்க்க முடி­யாது. அந்­த­வ­கையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது பிரச்­சி­னை­களை தீர்த்து வைக்­கு­மாறும் தமது தேவை­களை நிலை­நாட்­டு­மாறும் தமக்கு நீதியைப் பெற்­றுத்­த­ரு­மாறும் வலி­யு­றுத்தி தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

விசே­ட­மாக வடக்கு, கிழக்கின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் தற்­போ­து­கூட பல்­வேறு வகை­யான போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. வடக்கில் காணி­களை இழந்த மக்கள் தமது காணி­களை மீள வழங்­கு­மாறு வலி­யு­றுத்தி போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். அதே­போன்று காணாமல் போனோரின் உற­வு­களும் காணாமல் போன தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறும் வலி­யு­றுத்­தியும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அதே­போன்று கிழக்கு மாகா­ணத்­திலும் காணாமல் போனோரின் உற­வி­னர்கள் தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

அத்­துடன் யுத்­த­கா­லத்தில் பல்­வேறு கஷ்­டங்கள், பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் படித்து பட்டம் பெற்ற பட்­ட­தா­ரி­களும் தமக்கு வேலை­வாய்ப்பை வழங்­க­வேண்­டு­மெ­னக்­கோரி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இவ்­வாறு வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இன்று ஒரே போராட்ட மய­மாக காட்­சி­ய­ளிக்­கின்­றன. அர­சாங்கம் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற்­றுத்­த­ரு­மென இது­வ­ரை ­கா­லமும் பொறு­மை­யாக இருந்த மக்கள் தற்­போது பொறு­மையை இழந்த நிலையில் தொடர் போராட்­டங்­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் ஆரம்­பித்­துள்­ளனர்.

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்­ப­மாகி மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெற்­றது. இந்­நி­லையில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்­டத்­தொடர் நடை­பெ­று­வ­தற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் இந்தப் போராட்­டங்கள் ஆரம்­ப­மா­கின. இந்­நி­லையில் ஜெனிவா கூட்டத் தொடர் முடி­வ­டைந்­ததும் போராட்­டங்கள் முடி­வுக்கு வந்­து­விடும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதும் அவ்­வா­றில்­லாது போராட்­டங்கள் தீவி­ர­ம­டைய ஆரம்­பித்­துள்­ளன. போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்கள் தாம் தமக்கு நீதி கிடைக்கும் வரை போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என்றும் தொடர்ந்து போராட்டம் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் மிகவும் வலு­வான முறையில் தெரி­வித்து வரு­கின்­றனர்.

இந்த நிலையில் கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிரா­ம ­மக்­களும் இரா­ணு­வத்­தினர் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள தமது காணி­களை விடு­விக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். ஏற்­க­னவே கேப்­பாப்­பு­லவு பிலக்குடி­யி­ருப்பு மக்கள் தமது காணி­களை விடு­விக்க வலி­யு­றுத்தி தொடர் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் அவர்­க­ளு­டைய குறிப்­பிட்­ட­ள­வி­லான காணிகள் விடு­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந்தப் போராட்டம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதன் பின்­னரே கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிரா­ம­மக்களின் தொடர் போராட்டம் ஆரம்­ப­மா­னது. இந்தப் போராட்டம் தற்­போது ஆரம்­ப­மாகி ஒரு­மாதம் கடந்­து­விட்ட நிலை­யிலும் இது­வரை அந்தப் போராட்டம் தொடர்பில் அர­சாங்கம் சாத­க­மாக அணு­க­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்டு காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக கேப்­பாப்­பு­லவு பூர்­வீக கிராம மக்­களின் போராட்­டத்­தையோ அல்­லது அந்த மக்­களின் குமு­றல்­க­ளையோ அர­சாங்கம் உரிய முறையில் செவி­ம­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. இதனால் அந்த மக்கள் சளைத்­து­விட்­ட­தாக தெரி­ய­வில்லை. மாறாக போராட்­டத்தின் தீவி­ரத்தை தொடர்ந்து அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அந்­த­வ­கையில் தொடரும் அந்த மக்­களின் போராட்டம் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த நிலையில் நேற்று முன்­தினம் அங்கு விஜயம் செய்­தி­ருந்த தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள கேப்­பாப்­பு­லவு மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது அந்த மக்­களின் பிரச்­சி­னை­களை கேட்­ட­றிந்­து­கொண்ட தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர், அவர்­க­ளுக்கு தாம் முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தா­கவும் கூறி­யி­ருந்தார். விசே­ட­மாக போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் குறிப்­பி­டு­கையில்

கேப்­பா­ப்பு­லவு காணி விடு­விப்பு தொடர்பில் நானும் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனும் ஜனா­தி­ப­தி­யிடம் பேசினோம். அவர் உங்­களின் காணி­களை விடு­விக்­கலாம் என தெரி­வித்­துள்ளார். ஆனால் அதற்கு எவ்­வ­ளவு காலம் எடுக்கும் என்­பது தெரி­ய­வில்லை. காரணம் கேப்­பா­ப்பு­லவில் முல்­லைத்­தீவின் பிர­தான பாது­காப்பு படை­த்த­லை­மை­ய­கமே அமைந்­துள்­ளது. அது வேறு ஒரு இடத்­துக்கு மாற்­றப்­பட வேண்டும் அதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ள­ப்ப­டு­கின்­றன. எனவே எவ்­வ­ளவு காலம் எடுக்கும் என்­பது தெரி­யாது. ஆனால் மிக விரைவில் விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றோம்­ என்று கூறி­யி­ருந்தார்.

அத்­துடன் நீங்கள் உங்கள் போராட்­டத்தை தொடர்ந்து மேற்­கொள்­ளுங்கள் விரைவில் நல்ல முடிவை பெற்று தரு­வ­தற்­காக உரி­ய­வர்­க­ளுக்கு தொடர்ந்தும் அழுத்­தத்தை நாங்கள் பிர­யோ­கிப்போம் என்றும் கேப்­பாப்­பு­லவு போராட்ட மக்­க­ளிடம் சுமந்­திரன் எம்.பி. கூறி­யி­ருந்தார். அந்­த­வ­கையில் தொடர்ந்து போராட்­டத்தை நடத்தி வரு­கின்ற கேப்­பாப்­பு­லவு மக்கள் தமது போராட்டம் தொடர்பில் மக்கள் பிர­தி­நி­திகள் அக்­கறை செலுத்­த­வில்­லை­யென கோரிவந்­தி­ருந்­தனர். அந்த நிலை­யி­லேயே நேற்று முன்­தினம் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இந்த மக்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளமை விசேட அம்­ச­மாகும். போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்கள் தொடர்ச்­சி­யாக தீவி­ர­மான முறையில் தமது போராட்­டத்தை நீடித்து வரு­கின்­றனர். தமது காணிகள் கிடைக்கும் வரை எக்­கா­ரணம் கொண்டும் போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என்று இந்த மக்கள் அழுத்தம் திருத்­த­மாக கூறி­வ­ரு­கின்­றனர்.

அதா­வது இறு­திப்­போரில் இழப்­பு­களை சந்­தித்து உற­வு­க­ளைத்­தொ­லைத்து சொந்­த­நி­லத்­தி­லா­வது வாழ்ந்து எமது மீதி வாழ்க்­கையை கொண்டு நடத்­தலாம் என வந்த எங்­க­ளுக்கு இன்னும் இன்னும் துன்­பத்தை ஏன் இந்த அர­சாங்கம் தரு­கின்­றது என்று கேப்­பாப்­பு­லவில் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.

 மேலும் ஜனா­தி­பதி அவர்­களே எம்மை திருப்பிப் பாருங்கள், நாமும் இந்த நாட்டின் பிர­ஜைகள் தானே எமக்கு இந்த மண்ணில் வாழ உரி­மை­யில்­லையா? எம்மை எமது சொந்த நிலத்­துக்கு திரும்ப அனு­ம­தி­யுங்கள். எமக்கு எமது கேப்­பாப்­பு­லவு மண்ணை பெற்றுத்­தா­ருங்கள் என ஜனா­தி­ப­தி­யிடம் கேட்­ப­தா­கவும் போராட்­டத்தில் ஈடு­படும் மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

நாம் அர­சாங்­கத்தின் சொத்தை கேட்­க­வில்லை, ஆண்­டாண்­டு­காலம் வாழ்ந்த சொந்த தாய்­நி­லத்­தையே கோரி நிற்­கின்றோம். அத்­தோடு சொந்த தாயை பறித்து வைத்­துக்­கொண்டு இன்­னொ­ரு­வரை காட்டி இவர்தான் உங்கள் அம்மா எனக்­கூ­று­வது போன்­ற­துதான் நாம் தற்­போது குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள கேப்­பா­ப்பு­லவு மாதி­ரி­க்கி­ராம வாழ்க்­கை­யாகும். கேப்­பாப்­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­களின் போராட்­டத்­துக்கு எவ்­வா­றான வழி­க­ளி­லெல்லாம் ஆத­ரவு கிடைத்­ததோ அவ்­வாறே கேப்­பா­ப்பு­லவு பூர்­வீக கிராம மக்­க­ளான எமக்கும் அனை­வ­ரும் திரண்­டு­வந்து ஆத­ரவு அளிக்­க­வேண்டும். எமது நிலத்தை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் இந்த மக்கள் மிகவும் திட்­ட­வட்­ட­மான முறையில் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அந்­த­வ­கையில் தமது காணி­களை மீட்­டுக்­கொள்­வ­தற்­காக வடக்கில் மக்கள் மிகவும் தீவி­ர­மான முறையில் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அதா­வது யுத்தம் முடி­வ­டைந்து கடந்த ஏழரை வரு­டங்­க­ளாக மக்கள் பொறு­மை­யுடன் காத்­தி­ருந்­தனர். அதா­வது அப­க­ரிக்­கப்­பட்ட தமது காணிகள் விரை­வாக மீள வழங்­கப்­ப­டு­மென்றும் காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்மை கண்­ட­றி­யப்­படும் என்றும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக காத்­தி­ருந்­தனர். ஆனால் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

 எனவே மக்கள் தமது தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ளனர். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை மீள் வழங்­கு­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகவும் உறு­தி­யாக இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. அதா­வது இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி மிகவும் உணர்­வு­பூர்­வ­மா­ன­வ­ராக இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. அடிக்­கடி யாழ்ப்­பாணம் செல்லும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு காணி­களை இழந்து இடம்­பெ­யர்ந்­துள்ள மக்கள் முகாம்­களில் எதிர்­கொண்­டுள்ள அவல நிலை­மை­களை நேரில் பார்­வை­யிட்­டி­ருந்தார். அத்­துடன் இந்த மக்­களின் காணிகள் விரை­வாக விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் தமது காணி­களை இழந்­து­விட்டு வரு­டக்­க­ணக்­காக மக்கள் துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­வ­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்­த­துடன் மக்­களின் விடு­விக்­கக்­கூ­டிய காணிகள் தொடர்பில் ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுக்க விசேட செய­ல­ணி­யொன்­றையும் நிய­மித்தார். ஆனால் அந்த செய­லணி இது­வரை நட­வ­டிக்­கை­களை உரிய முறையில் எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­விக்கு வந்­த­துமே வடக்கு, கிழக்கு மாகாண மக்­களின் காணிப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதற்­கேற்­ற­வ­கையில் அர­சாங்­கமும் சில நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தது. ஆனால் காலப்­போக்கில் அந்த செயற்­பா­டுகள் அச­மந்­தப்­போக்கை அடைந்­தன. அத­னால்தான் பொறு­மை­யுடன் காணப்­பட்ட மக்கள் தற்­போது போராட்­டங்­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர். இதே­வேளை காணாமல் போனோரின் உற­வி­னர்­களும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் தொடர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­த­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தியே இந்தப் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. காணாமல் போனோர் விவ­கா­ரத்­திலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் பொறு­மையின் எல்­லைக்கே சென்­று­விட்­டனர். தமது காணாமல் போன உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அர­சாங்கம் கண்­டு­பி­டித்து தமக்கு கூறும் என எதிர்­பார்த்து காத்­தி­ருக்கும் மக்­க­ளுக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யுள்­ளது. எனவே மக்கள் பொறு­மை­யி­ழந்து தற்­போது தமக்கு நீதி வழங்­கக்­கோரி தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அர­சாங்கம் காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் நோக்கில் காணாமல் போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தது. அதற்­கான சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் இது­வரை அந்த காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்கும் இயங்க வைப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. அது­மட்­டு­மன்றி நிறை­வேற்றம் குறித்த சட்­டத்தை மீண்டும் திருத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது மக்கள் மத்­தியில் ஏமாற்­றத்­தையே அளித்­தி­ருக்­கி­றது.

காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் அவ்­வப்­போது தமக்கு நீதி­வ­ழங்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்தி ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தி வரு­கின்ற போதிலும் அர­சாங்கம் அவை தொடர்பில் கருத்தில் கொள்­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. என­வேதான் பாதிக்­கப்­பட்ட மக்கள் தற்­போது வீதியில் இறங்கி போராட ஆரம்­பித்­துள்­ளனர். எனவே இந்த போராட்­டங்கள் தொடர்பில் அர­சாங்கம் விரைந்து கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­காரம் காணாமல்போனோரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதுடன் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் மீளவழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீடிக்கும் வகையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது. அதனால் காணாமல்போனோர் விவகாரம் மற்றும் காணிப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்பை தட்டிக்கழித்து செயற்பட முடியாது. தற்போதைய நிலைமையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தீவிரமாக பரவியிருக்கும் பிரச்சினையாக காணாமல் போனோர் விவகாரம் காணிப்பிரச்சினை என்பன காணப்படுகின்றன. எனவே இதற்கு முதற்கட்டமாக அரசாங்கம் தீர்வுகாணவேண்டும். அதனூடாகவே நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் அரசாங்கம் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். குறிப்பாக நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் செவிமடுக்கவேண்டியது அவசியமாகும். தொடர்ந்தும் இந்த விடயத்தில் செவிமடுக்காத தன்மையுடனும் அசமந்த போக்குடனும் செயற்படக்கூடாது. நீதிக்காக ஏங்கி போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடிவே கிடைக்காதா? என்பதே தற்போது நீதியை வலியுறுத்துவோர் மத்தியில் எழுந்துள்ள வினாவாகும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.