Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம்: மாமல்லபுரத்தில் ஜெர்மனிய பெண் மீது பாலியல் தாக்குதல்

Featured Replies

தமிழகம்: மாமல்லபுரத்தில் ஜெர்மனிய பெண் மீது பாலியல் தாக்குதல்

  • சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஜெர்மனிய நாட்டு பெண்மணி மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்ததியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
KIEFERPIX/GETTYபடத்தின் காப்புரிமைகோப்புப் படம்

இது தொடர்பான புகாரை பாதிக்கப்பட்ட பெண்மணியிடமிருந்து பெற்றுள்ள மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த ஜெர்மனிய நாட்டு சுற்றுலா பெண் 38 வயது மிக்கவர் எனவும், அவர் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் இருந்த கடற்கரையில் சூரியகுளியல் எடுத்துக்கொண்டிருந்த போது, அவரை மூன்று பேர் கடத்தி சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக அந்த பெண் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

 

அந்த புகாரின் அடிப்படையிலான விசாரணைகளை துவக்கியுள்ள காவல்துறையினர், இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் விரைவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், இந்தியாவில் உள்ள ஜெர்மனிய நாட்டு தூதகரத்திலும் புகார் அளித்துள்ளார்.

 

இதனையடுத்து ஜெர்மனிய தூதரக அதிகாரிகளும், தமிழக காவல்துறையினரின் விசாரணைகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை கவனித்து வருவதாக தெரிகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடமும் ஜெர்மனிய தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை காலை விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் முறையாக கிடைக்க தமிழக காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்ச்சியாகவே மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மீது, இது போன்ற பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களும், சமூக ஆர்வலகர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் தொடர்ச்சியாக ரோந்து பணிகளில் ஈடுப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

http://www.bbc.com/tamil/india-39476156

  • தொடங்கியவர்

மாமல்லபுரத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை

மாமல்லபுரத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

 
 
 
 
மாமல்லபுரத்தில் கற்பழிக்கப்பட்ட ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை
 
மாமல்லபுரம்:

சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். தினமும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

ஜெர்மன் நாட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் 15 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். லோமன் ஜெனு (38) என்கிற இளம் பெண்ணும் அவர்களுடன் வந்திருந்தார்.

மாமல்லபுரத்தில் நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் லோமன் ஜேனுவும், அவருடன் வந்திருந்தவர்களும் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்தனர்.

அங்கு 15 நாட்களாக அவர்கள், தங்கி இருக்கிறார்கள். பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு இரவில் மாமல்லபுரம் வந்து தங்கியுள்ளனர். திருவண்ணாமலை, ராமேஸ்வரம் காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

201704031147077572_mma._L_styvpf.gif

நேற்று மதியம் லோமன் ஜெனுவும் ஜெர்மனை சேர்ந்த 2 பெண்களும் மாமல்லபுரம் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட திட்டமிட்டனர். இதற்காக மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே வலது புறத்தில் உள்ள காலியான இடத்துக்கு சென்றனர்.

அங்கு சூரியகுளியலில் ஈடுபட சிலர் இடையூறாக இருந்ததால் 3 பேரும் 5 கி.மீ தூரத்தில் பட்டிபுளம் கடற்கரை பகுதிக்கு நடந்து சென்றனர். பின்னர் அங்கு சூரியகுளியலில் ஈடுபட்டனர்.

லோமன் ஜெனுவும் மற்ற 2 பெண்களும் உள்ளாடைகளை மட்டும் அணிந்த நிலையில் கடற்கரை மணலில் படுத்து தனித்தனியாக சற்றுதூரத்தில் சூரிய குளியலில் ஈடுபட்டனர். அப்போது லோமன் ஜேனு அயர்ந்து தூங்கி விட்டார்.

ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த அந்த பகுதிக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். வெளிநாட்டு பெண் ஒருவர் தனியாக கடற்கரை மணலில் படுத்திருப்பதை பார்த்ததும் அவர்களது மனதில் விபரீத எண்ணம் ஏற்பட்டது. அவரை அடைய திட்டமிட்டனர்.

சூரிய குளியலில் ஈடுபட்டபடியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த லோமன் ஜெனுவை வாயை பொத்தி குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து கடத்திச்சென்றனர். அப்பகுதியில் இருந்த சவுக்குத் தோப்புக்கு அவரை கடத்திச் சென்ற 3பேரும் அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கற்பழித்தனர்.

பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. தனக்கு நேர்ந்த இந்த கொடுமையால் லோமன் ஜெனு கடும் அதிர்ச்சி அடைந்தார். சவுக்குத் தோப்பில் இருந்து பதட்டத்துடன் வெளியேறி கடற்கரைக்கு வந்த லோமன் ஜெனு, தான் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது பற்றி மற்ற 2 பெண்களிடமும் கூறி கதறி அழுதார்.

பின்னர் இது பற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. லோமன் ஜேனு அளித்த புகாரில், இந்தியர்கள் 3 பேர் தன்னை கற்பழித்துவிட்டதாக கூறி இருந்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்கு பதிவு செய்தார். சம்பவ இடத்துக்கு லோமன் ஜெனுவை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

சந்தேகத்துக்கிடமாக அப்பகுதியில் யாராவது சுற்றி திரிந்தார்களா? என்பது பற்றி மீனவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜெர்மன் பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. நஜ்மல் கோடா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஆகியோரும் உடனடியாக மாமல்லபுரத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இரவு 12 மணி வரையிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பாலியல் வல்லுறவு புகார் கூறிய லோமன் ஜெனுவுக்கு செங்கல்பட்டு, மற்றும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கூறும் போது மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்தவுடன் நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் என்றார்.

இதற்கிடையே ஜெர்மன் தூதரக அதிகாரிகளும் மாமல்லபுரம் வந்து லோமன் ஜெனுவிடம் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே ரஞ்சித் என்ற வாலிபர் பிடிபட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனை போலீசார் உறுதி செய்யவில்லை.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/03114707/1077740/German-embassy-officials-investigate-to-our-country.vpf

  • தொடங்கியவர்

ஜெர்மன் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! மருத்துவ பரிசோதனையில் திடுக் தகவல்

ஜெர்மன் பெண்

 

மாமல்லபுரம் கடற்கரையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

ஜெர்மனில் இருந்து 4 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள், மாமல்லபுரம், ஒற்றைவாடைத் தெரு, தனியார் விடுதியில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தனர். நேற்று காலை 11 மணியளவில் ஒரு இளம்பெண், இரண்டு ஆண்கள் கடற்கரைக்கு வந்தனர். கடற்கரை வழியாக வாக்கிங் சென்ற இளம்பெண், பட்டிபுலம் கிராமத்தில் சூர்ய குளியலுக்காகக் கடற்கரையில்படுத்திருந்தார். அப்போது, கடலில் இரண்டு ஆண்களும் உற்சாகமாக குளித்துக் கொண்டு இருந்தனர். வெளியே வந்த அவர்கள் தங்களுடன் வந்த பெண் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 
இந்நிலையில் ஜெர்மன் பெண், மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில், தன்னை பட்டிபுலம், சவுக்குதோப்பில் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை நடந்தது. அதில் அவர் தெரிவித்த தகவல் உறுதி செய்யபட்டதாகச் சொல்லப்படுகிறது. 
ஜெர்மன் நாட்டு தூதரக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும், போலீஸ் விசாரணை அதிகாரிகளிடமும் விசாரணை குறித்தும் கேட்டறிந்தனர். இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் உள்பட ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் நாளை சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 பாலியல் தொல்லைகள் 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது கொடுமையானது. மதுபோதையில் இருந்த இரண்டுபேர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். கடற்கரையிலிருந்த அந்தப்பெண்ணின் கை, கால்களைக் கட்டிய அந்த இரண்டு பேர், சப்தம் போடாமலிருக்க வாயையும் பொத்தி சவுக்கு தோப்புக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கேதான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. அவர்களிடமிருந்து தப்பிக்க ஜெர்மன் பெண், கடைசிவரை போராடி தோற்றுப்போயிருக்கிறார். இதுகுறித்து எங்களுக்கு புகார் வந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து பெண் போலீஸார் விசாரித்துள்ளனர். அவர் சொன்ன தகவல் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். இதற்கிடையில், மருத்துவ பரிசோதனை முடிவில் சில சிக்கல்கள் இருக்கின்றன. குற்றவாளிகள் முன்எச்சரிக்கையாகவே செயல்பட்டுள்ளனர். இருப்பினும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். சம்பவ இடத்திலிருந்து சிலதடயங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அதன்அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் உள்ளூர்நபர்கள் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்கிற வாய்ப்புகள் குறைவு. எங்களின் சந்தேக வளையத்தில் மூன்று பேர் உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வோம்"என்றனர். 

 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகம். ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் மாமல்லபுரத்துக்கு வருவதாக தகவல் உள்ளது. உள்ளூர்நபர்களின் வாழ்வாதாரமாகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளது. இதனால் வெளியூரைச் சேர்ந்த நபர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. மாமல்லபுரத்தில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரியின் மகளுக்கு இதுபோன்ற கொடூரம் நடந்தது. அடுத்து, ஜெர்மன் பெண்ணுக்கு இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து மாமல்லபுரத்தில் சம்பவங்கள் நிகழ்ந்தால் வெளிநாட்டினரின் வருகை குறைந்துவிடும். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமலிருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்"என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/85304-medical-examination-of-the-german-lady-reveals-shocking-information.html

  • தொடங்கியவர்

'நியாயம் கிடைக்காமல் ஊர் திரும்ப மாட்டேன்!' - ஜெர்மன் பெண் வழக்கில் சிக்கிய 600 படங்கள்

german_lady_16409.jpg

 

மாமல்லபுரத்தில் ஜெர்மன் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக விசாரித்து வரும் போலீஸார், அவரிடம் 600 புகைப்படங்களைக் காண்பித்துள்ளனர். மேலும், 36 பேரை அவர் முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர். 

 இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டினரில் பலர், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்துக்கு வராமல் சொந்த ஊருக்குத் திரும்புவதில்லை. அவ்வாறு வருபவர்கள், சில தினங்கள் மாமல்லபுரத்தையொட்டி உள்ள ரிசார்ட்களில் தங்குவதுண்டு. இதற்கு மாமல்லபுரச் சிற்பங்கள் வெளிநாட்டினரை வெகுவாகக் கவர்ந்திழுப்பதே முக்கியகாரணம். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 15 பேர் இந்தியாவுக்கு வந்தனர். சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றுவிட்டு மாமல்லபுரத்துக்கு அவர்கள் வந்தனர். அவர்களில் ஒரு இளம்பெண், கடந்த 2ம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டிலிருந்து சூர்யக்குளியலுக்காகக் கடற்கரைக்குச் சென்றார். மாமல்லபுரம் அடுத்துள்ள பட்டிபுலம் கிராமத்தின் அருகே நீச்சல் உடையில் சூர்யகுளியலுக்காக அவர் கடற்கரையில் படுத்திருந்தார். அப்போது, 40 வயதுமதிக்கத்தக்க ஒருவரும், 25வயது மதிக்கத்தக்க இன்னொருவரும் அங்கு வந்துள்ளனர். 
 ஜெர்மன் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தபடியே இருந்த அந்த கொடூர மிருக குணம் உடையவர்கள் திடீரென அருகில் உள்ள சவுக்குத் தோப்புக்கு அவரைத் தூக்கிச் சென்றனர். பிறகு அங்கு அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. மயங்கிய அந்தப்பெண்ணை அப்படியே விட்டுச் சென்றுவிட்டனர் அந்தக் கொடூர மிருக மனம்படைத்தவர்கள். பிறகு, மயக்கம் தெளிந்த அந்தப்பெண், தனக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு கதறியபடி ரிசார்ட்டுக்கு வந்துள்ளார். பிறகு மாமல்லபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜெர்மன் பெண்ணிடம் அத்துமீறிய இருவரைத் தேடி வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் பிடிப்படவில்லை. 

 


 இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாமல்லபுரத்தில் ஜெர்மன் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜெர்மன் நாட்டு தூதரக அதிகாரிகளிடமும் வழக்கு விசாரணை குறித்த விவரங்களைக் கொடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடன் வந்தவர்கள் இன்று காலை ரிசார்ட்டை காலி செய்துவிட்டு வாரணாசிக்குச் சென்றுவிட்டனர். 


 பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, 'தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்கும் வரை சொந்த ஊருக்குச் செல்ல மாட்டேன்' என்று ஆவேசமாக எங்களிடம் தெரிவித்தார். அப்போது, நாங்களும் விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து உங்கள்முன் நிறுத்துவோம் என்று தெரிவித்தோம். 


 இந்த வழக்கு தொடர்பாக மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள 9 மீனவ கிராமங்களில் விசாரணை நடத்தினோம்.  அப்போது, சந்தேகத்துக்குரிய இளைஞர்களை எங்களது செல்போனில் போட்டோ எடுத்தோம். சுமார் 600 பேரின் போட்டோவை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காண்பித்தோம். அதில் யாருமில்லை என்று அவர் தெரிவித்துவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண், சொன்ன அடையாளங்கள் அடிப்படையில் 32 பேரை அவர் முன்பு நேரில் ஆஜர்படுத்தினோம். அவர்களில் யாருமில்லை என்று அவர் தெரிவித்தார்.  இதற்கிடையில் இன்று அவர், விமானநிலையத்துக்குச் சென்றநிலையில் மேலும் 4 பேர் எங்களிடம் சிக்கினர். உடனடியாக அவர்களை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் காட்டினோம். அவர்களும் இல்லை என்று அந்தப்பெண் சொல்லிவிட்டார். இதனால், அடுத்தக்கட்ட விசாரணையில் களமிறங்கியுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண், மாமல்லபுரத்தில் இருந்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும். ஆனால், அவரின் மனஅமைதிக்காக இங்கிருந்து வாரணாசிக்குச் செல்ல அனுமதித்துள்ளோம். இந்த வழக்கு தொடர்பாக எங்களிடம் பிடிபடுபவர்களின் புகைப்படங்களை வாட்ஸ்அப் அல்லது மெயில் மூலம் அந்தப்பெண்ணுக்கு அனுப்பி அடையாளம் காணவும் திட்டமிட்டுள்ளோம். அவர் மாமல்லபுரத்தில் இல்லை என்பதால் வழக்கு விசாரணையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது" என்றார். 

 இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஜெர்மன் பெண் எதற்காக இந்தியா வந்தார் என்ற தகவலைக் கேட்ட போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விவரம் தெரிந்த ஒருவர் நம்மிடம், "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வு அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மனநிம்மதிக்காக ஜெர்மனியிலிருந்து அவர், இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாகத் தெரிகிறது. சோகத்தை மறக்க நினைத்த அந்தப்பெண்ணுக்கு மாமல்லபுரத்தில் மறக்க முடியாத ஒரு களங்கம் ஏற்பட்டுள்ளது" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/85398-i-will-not-return-to-germany-without-justice-says-the-lady-who-was-sexually-abused.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3.4.2017 at 8:37 AM, நவீனன் said:

தமிழகம்: மாமல்லபுரத்தில் ஜெர்மனிய பெண் மீது பாலியல் தாக்குதல்

 

On 3.4.2017 at 5:14 PM, நவீனன் said:

"ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது கொடுமையானது. மதுபோதையில் இருந்த இரண்டுபேர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். கடற்கரையிலிருந்த அந்தப்பெண்ணின் கை, கால்களைக் கட்டிய அந்த இரண்டு பேர், சப்தம் போடாமலிருக்க வாயையும் பொத்தி சவுக்கு தோப்புக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கேதான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. அவர்களிடமிருந்து தப்பிக்க ஜெர்மன் பெண், கடைசிவரை போராடி தோற்றுப்போயிருக்கிறார்.

ஆனால் ஒரு இந்திய பொம்மனாட்டியை விமானநிலையத்தில் சட்டபூர்வமாக பரிசோதனை செய்தால் சுஷ்மா சுவராசுக்கு உடம்மெல்லாம் எரியவெளிக்கிட்டுதாம். :cool:

ஜேர்மனியனும் ஐரோப்பியனும் பாலியல் விசயத்திலை இந்தியனை மாதிரி காய்ஞ்சு போய் கிடக்கேல்லை..:grin:

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.