Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத் தாக்குதல்களை முறியடிக்க புலிகளிடம் நவீன ஆயுதங்கள்

Featured Replies

விமானத் தாக்குதல்களை முறியடிக்க புலிகளிடம் நவீன ஆயுதங்கள்

கடந்த 12 ஆம் திகதி விடியற்காலை 4.30 மணியளவில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லாறு பிரதேசத்தை அண்டிய கடற்பிராந்தியத்தில் கடற்புலிகள் பிரிவுப் பயங்கரவாதிகளின் படகுகள் இரண்டு நடமாடுவதை அவதானித்த கடற்படையினர் அவற்றின் மீது மேற்கொண்ட தீவிர தாக்குதல்களின் போது கடற்புலிகளின் ஒரு படகு முற்றாக அழிக்கப்பட்டதாகவும் மற்றொரு படகு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டதாகவும் இந்த படகில் விமானங்களைச் சுட்டு விழித்தும் நவீன ஆயுதாமாகிய `பைற் சீரோ' (Fight Zero) துப்பாக்கி பொருத்தப்பட்டிருந்ததுடன் அதி சக்திவாய்ந்த ஒலியலைத் தொழிநுட்பம் கொண்ட நவீன தகவல் பரிமாற்றக்கருவியும் மற்றும் ஆயுத உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தப் படகில் உயிரிழந்த இரண்டு கடற்புலிகள் உறுப்பினர்களின் உடல்களும் இருந்ததாகவும் மேற்படி கடற்படை அதிகாரி கூறியுள்ளார். குறித்த `பைற்சீரோ' விமான அழிப்புத் துப்பாக்கியை விட அந்தப் படகிலிருந்து ரீ 56 மற்றும் எம்.பீ.எம்.ஜி. துப்பாக்கிகளையும், சயனைற் தற்கொலைக் குப்பிகளையும், கடற்பாதுகாப்புக் கவசங்களையும் கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர். மேலும், அந்தக் கடற் பிராந்தியத்தில் உத்தேச தாக்குதலை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும் பிரதேச வரைபடத்தையும் கடற்படையினர் கண்டெடுத்தனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் `சேவ் த சில்ரன்' (SAVE THE CHILDREN) சர்வதேச நிவாரண அமைப்பினால் வழங்கப்பட்டவையாகும். அதைக்காட்டும் வகையில் அவற்றில் "ஷ்ரீலங்காவிலுள்ள சேவ் த சில்ரன்" உதவிக் கொடையாக வழங்கியது. (Donated by save the children in Sri Lanka) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி கடற்புலிகளின் படகுகள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி குறித்த கடற்படை சிரேஷ்ட உத்தியோகத்தர் விபரமாகத் தகவல் தெரிவிக்கையில், கடந்த 12 ஆம் திகதி அதிகாலை மேற்படி கடற்புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் இரண்டு தாக்குதல் படகுகளும் கல்லாறு கடற்பிராந்தியத்தின் ஊடாக புல்மோட்டை பிரதேசத்திலிருந்து திருகோணமலை துறைமுகப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை கடுவாக்கட்டைக்காடு கடலோரம் அமைக்கப்பட்டிருந்த கடற்படைக் காவரணிலிருந்த கடற்படையினர் அவதானித்ததாகவும் அதைத் தொடர்ந்து அந்தப் படகுகளை நோக்கி கடற்படையினர் தீவிர தாக்குதலை ஆரம்பித்ததாகவும், பதிலுக்கு குறித்த படகுகளிலிருந்த கடற்புலிப் பயங்கரவாதிகளும் தாக்குதலை மேற்கொள்ளவே இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கிச் சுமர் நெடுநேரம் நடைபெற்றதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். கடற்படையினரின் தாக்குதல்களின் உச்சக் கட்டத்தில் கடற்புலிகளின் ஒரு படகு முற்றாகத் தீப்பற்றி எரிந்தது. இரண்டாவது படகைக் கடற்படையினர் கைப்பற்றிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களின் போது கடற்படையினர் தரப்பில் எந்தவிமான சேதமும் ஏற்படவில்லை.

இதன் பின்னர் அந்தப் படகில் கடற்படையினர் "பைற் சீரோ" விமான அழிப்பு துப்பாக்கியைக் கைப்பற்றியிருப்பது புலிகள் இயக்கத்தினர் விமானப்படையினரின் தாக்குதல்களை முறியடிக்க நவீன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

-லங்காதீப : 13.02.2007-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமானத்தை தாக்க நவீன? ஆயுதம் வைத்திருந்த படகில் கடற்படையினரை எதிர் கொள்ள ஆக A.Kயும் L.M.Gயும்தான் வைத்திருந்தார்களாம்.

நல்ல கதையும் திரைக்கதையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.