Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1996 இல் யாழ். குடாநாட்டில் பலர் காணாமற்போனதற்கு படையினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களுண்டு - சாவகச்சேரி நீதிபதி தீர்ப்பு

Featured Replies

1996 இல் யாழ். குடாநாட்டில் பலர் காணாமற்போனதற்கு படையினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களுண்டு - சாவகச்சேரி நீதிபதி தீர்ப்பு

1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களில் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல்போனதற்கு இராணுவத்தினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களிருப்பதாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் முடிவிலேயே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

1996 ஆம் ஆண்டு காலை 19 ஆம் திகதி, ஆகஸ்ட் 4 ஆம் திகதி மற்றும் அக்டோபர் 2 ஆம் திகதிகளில் தென்மராட்சியின் கைதடி, நாவற்குழி, கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு பகுதிகளில் இடம்பெற்ற இராணுவ சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்ட பலர் பின்னர் காணாமல் போயினர்.

இவ்வாறு காணாமல்போனவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யக்கோரி அவர்களது குடும்பத்தவர்களால் 2003 ஆம் ஆண்டு முதல் யாழ். மேல் நீதிமன்றில் பல ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த ஆட்கொணர்வு மனுக்களில் பல விசாரணைக்கென சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் மேல் நீதிமன்றினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் சாவகச்சேரி நீதிமன்றில் நீதிவான் அ. பிரேம்சங்கர் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

இத்தீர்ப்பிலேயே மேற்படி காலப்பகுதியில் காணாமல்போனவர்கள் அந்தந்தப்பகுதியில் இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்ததுடன் இவ்வழக்குகள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காக யாழ். மேல் நீதிமன்றிற்கு அனுப்ப சாவகச்சேரி நீதிவானால் பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தண்டனைக்கு பதில் பதவி உயர்வே

இதற்கிடையில் யாழ். குடாநாட்டில் 1996/97 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள படை அதிகாரிகளுக்கு தண்டனைக்குப் பதில் பதவி உயர்வே வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல பதவி உயர்வுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

அதேவேளை, தென்மராட்சிப் பகுதிகளில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் காணாமல்போதல் சம்பவங்களில் முதலாவது எதிரியாக குற்றஞ்சாட்டப்பட்ட கப்டன் துமிந்த கெப்பிற்றிகொலாவ, லெப். கேணல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிதம உதவியாளராகவும் இவர் தற்போது கடமையாற்றி வருகின்றார்.

எனினும், இவருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றபோதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லையெனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.