Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரியா கலவரம்... கலங்கடிக்கும் குழந்தைகள் புகைப்படம்!

Featured Replies

சிரியா கலவரம்... கலங்கடிக்கும் குழந்தைகள் புகைப்படம்!

சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகரில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ‘குழந்தைகள் கொடூரமான முறையில் பலியாகியிருக்கின்றனர். ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். தாக்குதலில் பலியாகி கிடக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகி உலக மக்களை துயரத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர்.

அதிர்வை ஏற்படுத்திய சிரியா குழந்தைகள் புகைப்படம்

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டுப் போர் மூண்டது.  ஐ.எஸ்.ஐ.எஸ் முதல் 'ஃப்ரீ சிரியன் ஆர்மி' வரை பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதக் குழுக்கள் இந்த குட்டி நாட்டில் இயங்கி வருகின்றன. ரஷ்ய ஆதரவுடன்.. சிரிய அரசுப் படையினர் தீவிரவாதக் குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அதிபர் பஷார் அல் ஆஷாத் இதுவரை 14 முறை விஷ வாயுத் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு இருக்கிறது. விஷ வாயு தாக்குதலுக்கு இதுவரை 1,300 பேர் பலியாகியிருக்கின்றனர். ஆயுதத் தாக்குதலில் இதுவரை லட்சம் பேர் இறந்துள்ளனர்.

எந்த ஆயுதத்தை பயன்படுத்தினாலும் பலியாவது உயிர்கள்தான். 'ரசாயனத் தாக்குதல்தான் கூடாது; மற்ற ஆயுதங்களைக் கொண்டு மக்களை கொன்றால் பரவாயில்லை என்பது போல உலக நாடுகள் நடந்து கொள்கின்றன. தற்போது சிரியா மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தக் கூடும். கடந்த 6 ஆண்டு கால சிரிய உள்நாட்டுப் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டது இல்லை. மத்திய தரைக்கடலில் உலவும் அமெரிக்க போர்க்கப்பல்கள் முதன் முறையாக 60 தொமாஹாக் ஏவுகணைகளை சிரியா மீது ஏவியிருக்கின்றன. ஏற்கெனவே , சிரியாவில் ரஷ்ய ராணுவம் நிலை கொண்டிருக்கிறது. தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராகவும் போராடி வருகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்காவும் மூக்கை நுழைத்திருக்கிறது. 

அமெரிக்காவின் தாக்குதல் எதிர்பார்த்தது போலவே எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து புதின் கூறியிருப்பதாவது, ''சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல். அந்த நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடக் கூடியது. ஐ.எஸ்ஐ.எஸ் இயக்கத்தினருக்கு எதிராக சிரிய அரசு நடத்தி வரும் போராட்டத்துக்கு அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் ரஷ்ய அமெரிக்காவுக்கிடையே நல்லுறவு பாதிக்கப்படும்''  என எச்சரித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, சிரியா நாடுகள் இணைந்து செயல்பட்டால்தான் தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க முடியும். சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினாலும் பாதிக்கப்படுவது சிரிய மக்கள்தானே!

சிரியாவில் விஷவாயு குண்டு வீசப்பட்ட பகுதி

அதேவேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒபாமாவைக் குற்றம் சாட்டுகிறார். ''குழந்தைகள் அழகு மிகுந்த ஏஞ்சல்கள். அவர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் மனித குலத்துக்கே விரோதமானது. சிரியா, அதன் அதிபர் ஆஷாத் மீதான பார்வையை நான் மாற்றிக் கொண்டுள்ளேன். இதற்கு முன், நடந்த விஷவாயுத் தாக்குதல்களை ஒபாமா அரசு கண்டு கொள்ளாமல் விட்டதுதான் தற்போதையை பின்னடைவுக்குக் காரணம்.'' என்கிறார்.

இதற்கிடையே பிரிட்டனும் சிரியா மீது தாக்குதல் நடத்தும் முடிவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த சூழலில், கான் ஷேக்கான் நகர் மீது நடத்தப்பட்ட விஷ வாயு தாக்குதல் குறித்து ரஷ்யா புதுக்கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறது. 'கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கில் விஷ வாயு குண்டுகள் இருந்ததாகவும் சிரிய விமானத் தாக்குதலில் அவை வெடித்து சிதறியது' எனவும் மாஸ்கோ சொல்கிறது. வெள்ளை மாளிகையோ,' ரஷ்யா சொல்லும் காரணம் நம்பும்படி இல்லை' என சந்தேகப்படுகிறது.

ரசாயன தாக்குதலையடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் நாடுகள் இணைந்து தீர்மானம் கொண்டு வர உள்ளன. தீர்மானத்துக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தீர்மானம் கொண்டு வரப்படுகிறது' என  குறை கூறியுள்ளது ரஷ்யா. ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹீலே, 'இன்னும் எத்தனை குழந்தைகள் சாக வேண்டும்..?' என குழந்தைகள் இறந்து கிடக்கும் புகைப்படத்தைக் காட்டி கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

 

http://www.vikatan.com/news/world/85743-images-of-syrian-children-spreading-viral-on-social-media.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை விட அவலமான முள்ளிவாய்க்கால் படங்கள் வந்தனவே? யாருக்காவது ஞாபகம் இருக்கா? 
எங்கடை சனத்துக்கு இப்ப புரிந்துணர்வு வந்துட்டுதெல்லே இனி எங்கை ஞாபகம் வரப்போகுது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.