Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''சுதந்திரதினப் பிரகடனமும் எமது வரலாற்றுக்கடமையும்''

Featured Replies

''சுதந்திரதினப் பிரகடனமும் எமது வரலாற்றுக்கடமையும்''

-சி.ஆதித்தன்-

கடந்த பெப்ரவரி 04. 2007 அன்று சிறிலங்காவின் 59 வது சுதந்திர தினத்தில் மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவர் என்ற வகையிலே ஆற்றியிருந்த உரை மூலம் இனவாதச் சிங்கள அடிப்படை வர்க்கத்தினரிடம் அவர் மீண்டும் தானொரு சிங்கள மேலாண்மை வாதத்தின் கதாநாயகன் என்பதை நிரூபித்துள்ளார்.

‘இந்த மகத்துவம்மிக்க நாளில் நான் ஆற்றுகின்ற உரை சம்பிரதாய பூர்வமாக சுதந்திர தினத்தின் தேவைக்காக ஆற்றப்படுகின்ற ஓர் உரையல்ல என்பதையும்இ அதற்கு உறுதிப்பாடான அர்த்தமொன்று பெற்றுத்தரப்பட்டுள்ளது என்பதையும் நான் மிகப் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன்.”

இவ்வாறு மகிந்த ராஜபக்ச அவர்களின் சுதந்திரதினப்பிரகடனம் சிங்களவர்களுக்கு உணர்ச்சி ததும்பும் வகையில் அமைந்திருந்தது. இங்கு நாம் கூறவிழைவது என்னவெனில் சிறிலங்காவின் 59 வருடகால சுதந்திர வரலாற்றின் புரட்டப்படாதஇ புரட்டப்பட்ட பக்கங்களை நாம் உணர்ச்சி அடிப்படையிலன்றி தர்க்கபூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் உணர்ந்து கொள்ள வேண்டியது என்பதைத்தான்.

ஏனெனில் கடந்த சனாதிபதித் தேர்தலில் மகிந்த அவர்கள் சனாதிபதிக் கட்டில் ஏறுவதற்கு அவருக்கு பலமாக இருந்தது அவரது மகிந்த சிந்தன. மகிந்த சிந்தனையை பொறுத்தவரை அது அடிப்படை சிங்கள பேரினவாத மேலாண்மையைத்தான் சொன்னாலும் பழையவர்களிலிருந்து விலகி கவர்ச்சிகரமான புதிய பணியில் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனால் சொல்வது இலகுவாயிற்று. குறிப்பாகச் சொன்னால் மகிந்த ஒரு ஜனரஞ்சக கதாநாயகன் அவ்வளவும் தான். மாறாக அவர் குறிப்பிடுவது போன்று முற்றுமுழுதுமாக பழையவர்களிடமிருந்து விலகியவர் என்று சொல்லமுடியாது.

ஏனெனில் மகிந்த பதவியேற்று இக்காலப்பகுதிவரை வடக்கு கிழக்கு கள அரங்கில் சூடுபிடித்த நிழல் யுத்தமும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனப்படத்தப்படாத போரும்இ அப்போரிற்கு முகங்கொடுக்க விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தந்திரோபாய யுத்தமுனைப்புக்களாலும் சிறிலங்காப்படைத்தரப்பும் சிங்கள மக்களும் பாரிய தொரு உளநெருக்கடிக்குள்ளும் உயிர் இழப்புக்களுக்குள்ளும் தள்ளப்பட்டதால்இ அவர்களிடையே ஒரு மந்தமான சிந்தனை நிலையே பேணப்பட்டு வருகின்றது. இம்மந்த நிலையைக் கலைத்து படையினரையும் சிங்கள மக்களையும் உற்சாகப்படுத்த வேண்டிய நிலைக்கு மகிந்த தள்ளப்பட்டார்.

அதன் ஒரு கட்டம் தான் வாகரையை நூற்றுக்கணக்கான எறிகணைகளையும் ஏராளமான சிறப்புக் கொமோண்டாக்களையும் பயன்படுத்தி பல நூறு தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் புறக்கணித்து கைப்பற்றிக் கொண்டமையால் சிங்கள மக்களின் நவீன துட்டகெமுனுவாக தன்னைச் சித்திரித்துக் கொண்ட மகிந்த வாகரையைக் கைப்பற்றி அதையொரு சூனிய பூமியாக்கி அதர்மதேவனின் பாதத்தில் தனது காணிக்கையாகச் சமர்ப்பித்துள்ளார் இவற்றைவிட ஏனைய வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பகுதிகளையும் தான் கைப்பற்றுவதாக சபதமெடுத்துமிருக்கிறார்.

இக்குழப்பம் நிறைந்த அரசியல் காலநிலை நிலவிக் கொண்டிருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில் மகிந்த எதிர்பார்த்த மாதிரி படையினர் உற்சாகமூட்டப்பட்டனரா? நவீன துட்டகைமுனுவாகின்ற அவரது கனவுகள் மெய்ப்படுமா? என்பது போன்ற சந்தேகங்கள் தற்பாது நிலவி வருகின்றதுஇ ஏனெனில் அண்மையில் கிடைத்தஇ அதாவது படையினர் மத்தியில் ஜே.வி.பி யினரின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது என்ற செய்தியே மகிந்தரை குழப்பத்திலாழ்த்தியள்ளது.

மகிந்த சிந்தனை மூலம் சிங்கள அதிதீவிரவாதத்தை நோக்கிய மகிந்தவின் காய் நகர்வு தீவிர இனவாத குட்டையிலூறிய மட்டைகளான ஜே.வி.பி யினரையும் ஹெல உறுமயவினரையும் சமாந்தரமாக வளர்த்துவிட்டிருக்கிறது. இவர்களது வளர்ச்சியால் மட்டற்ற மகிழ்ச்சியடையக்கூடிய மகிந்த இராணவத்தில் இவர்கள் செலுத்துகின்ற ஆளுமையாலும் அச்சமடைந்திருக்கிறார்.

சிங்கள மக்களின் மேலாதிக்க உணர்வுத் தளத்தினை ஆக்கிரமித்திருக்கும் ஜே.வி.பி மற்றும் பிக்குமார் முன்னணியினரையும் மீறி தனது அரசியல் இருப்பினைத் தக்கவைக்கப் பெரும் போராட்டத்தையும் வரவு செலவுத்திட்டத்தில்; பாதுகாப்புச் செலவினங்களிற்காக பல மில்லியன் ரூபாய்களை ஒதுக்கிய நிலையில் நாட்டு மக்களின் சமூக பொருளாதாரவாழ்வை சராசரி நிலையிலாவது பேணவேண்டிய போராட்டத்தையும் இக்காலத்தில் சனாதிபதி செய்ய வேண்டிய நிலைக்கத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசாங்கத்திற்குள் அகமுரண்பாடுகள் கூர்மையடைகின்றன. ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பல முக்கிய பிரமுகர்கள் மகிந்தவுடன் இணைந்தமையால் சிறிலங்காவின் ஆட்சி பீடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இருபெரும் சக்திகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக்கட்சிக்குமிடையில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.