Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியாவிடில் பிக்குகளின் பெரும் போராட்டம் வெடிக்கும் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் அரசு உறுதிமொழி தர வேண்டுமாம்

Featured Replies

போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியாவிடில் பிக்குகளின் பெரும் போராட்டம் வெடிக்கும் உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் அரசு உறுதிமொழி தர வேண்டுமாம்

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை புரிந்துணர்வு உடன்படிக்கையை அதன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அரசாங்கம் கிழித்தெறியவேண்டும். அவ்வாறு செய்ய வில்லையெனில் பௌத்த பிக்குகள் அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்துவர்.

இவ்வாறு சரித்திரப்பிரசித்தி பெற்ற தலதா மாளிகைக்கு முன் நேற்றுக் கூடிய பௌத்த பிக்கு கள் பிரகடனம் செய்தனர்.

தலதா மாளிகைக்கு முன் கூடிநின்ற பல நூற்றுக்கணக்கான பிக்குகள் மத்தியில் மேற்படி பிரகடனத்தை தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண. தம்பர அமிலதேரர் வாசித்தார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் செல்லுபடியற்றதாக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர், கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் உண்ணாவிரதம் இருக்கும் பௌத்த பிக்குகளிடம் எழுத்தில் உறுதிமொழி தரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நேற்றுக்காலையில் தலதா மாளிகை முன் கூடிய நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள், அங்கு விசேட வழிபாடு ஒன்றை நடத்தினர்.

அதன் பின்னர் வண. தம்பர அமில தேரர் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது குறித்தும் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்டு வரும் பௌத்த குரு மாரின் உண்ணாவிரதம் குறித்தும் விளக்க மாகவும் விரிவாகவும் எடுத்துக்கூறினார்.

நாட்டின் நலனுக்காக பௌத்த குருமார் ஏற்கனவே மிகப் பல தடவைகள் இத்த கைய போராட்டங்களை நடத்தி இருக்கின் றார்கள்.

அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலி களுக்கும் இடையில் செய்து கொள்ளப் பட்ட ஒப்பந்தம் நாட்டின் ஒருமைப்பாட் டுக்குத் தீங்கு விளைவிப்பதாகும். இந்த ஒப்பந்தம் பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து பூண்டோடு அழிப்பதற்குத் தடை யாக உள்ளது.

ஒப்பந்தத்தின் ஐந்து வருடம் எதிர்வரும் 21ஆம் திகதி பூர்த்தியடைகிறது. மேற்படி ஒப்பந்தம் இந்த நாட்டின் அரசியலில் பெரும் பின்னடைவை உண்டாக்கவல் லது. ஒப்பந்தத்திற்கு ஐந்து வருடங்கள் பூர்த்தி யானால் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துவிடும். சர்வதேச விதிகள் சில அதற்கு வகை செய்வதாக சாதகமாக அமைந்துள்ளன.

அதுமட்டுமன்றி விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுக்கவும் வாய்ப்பாகிவிடும்.

இவ்வாறாக நாட்டுக்கு அரசியல் ரீதி யாக நாசம் விளைவிக்கவல்ல போர்நிறுத்த ஒப்பந்தம் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகா மல் பார்த்துக்கொள்வது மக்கள் எல்லோ ரதும் கடமையாகும்.

நாட்டை காப்பாற்றுவதற்காக இந்த ஒப்பந்தத்தை அரசு கிழித்தெறியச்செய் வதற்கான போராட்டத்தில் பௌத்த குரு மார்களாகிய நாம் எமது உயிரை அர்ப் பணிக்கவும் தயார். ஏற்கனவே பல போராட் டங்களில் பௌத்த குருமார் நாட்டுக்கா கத் உயிர்களைத் தியாகம் செய்த வரலாறு கள் பலவும் உண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதில் ஒப்ப மிட்ட இரண்டு தரப்புகளில் ஒன்று விரும் பினால் ரத்துச் செய்ய, முறித்துக்கொள்ள வசதி உண்டு. அதனால் அரசாங்கம் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும், எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் அதிலிருந்து வில கிக்கொள்வதாக அறிவித்து அதனைக் கிழித்தெறிய வேண்டும்.

அவ்வாறு செய்வதாக இப்போது உண்ணாவிரதம் இருக்கும் பௌத்த துறவி களிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சார்பில் அரசுப்பிரதிநிதி ஒருவர் எழுத்து மூலம் உறுதியளிக்கவேண்டும். இல்லை யேல் எமது தேச நலன் கருதிய போராட் டம் பெரிய அளவில், பரந்த அளவில் முன்னெடுக்கப்படும் என்று வண. தம்பர அமில தேரர் பிரகடனத்தை வாசித்து விளக்கவுரை நடத்தினார்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

விடுங்கப்பா கொஞ்சம் கொழுப்பு குறையட்டும்.முற்றிலும் துறந்தது எண்டுறாங்கள் உயிரை மட்டும் துறக்கிறாங்களே இல்லையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.