Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரன் ஓட்டமெடுத்தது ஏன்?

Featured Replies

  • gallerye_235756178_1754789.jpg

 

அமைச்சர்கள் எதிர்ப்பு, பொது மக்கள் வெறுப்பு, வழக்குகள் குவிப்பு என, பல முனை தாக்குதலால், அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஓட்டம் பிடித்தார்.

 

Tamil_News_large_175478920170419235718_318_219.jpg

போட்டி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கைவிட்டு, கட்சியில் இருந்தே ஒதுங்கி விட்டதாக அறிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின், துணை பொதுச் செயலர் பதவியை துறக்கவும் முடிவு செய்துள்ளார். அவருக்கு கூஜா துாக்கிய, கூவத்துார் புகழ், எம்.எல்.ஏ.,க்கள், இப்போது பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர்.

சசிகலா சிறைக்கு சென்றதும், அவரால், அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். முதல்வராக ஆசைப்பட்ட அவர், பொது மக்கள் எதிர்ப்பை மீறி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் களமிறங்கினார். பண பலத்தால் வெற்றி பெற்று விடலாம் என, கணக்கு போட்ட தினகரன், பணத்தை வாரியிறைத்தார். ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வீதம், வீடு வீடாக வினியோகித்தார். அதற்கான ஆதாரம், அமைச்சர் வீட்டில் சிக்கியதால், தேர்தல் ரத்தானது.
 

வெடித்தது


இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு, தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் பெரிதாக வெடித்தது. டில்லி போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய காத்து இருக்கின்றனர்.அவரால், தொடர்ந்து கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்ட தால், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் கடும் அதிருப்தி அடைந்தனர். தினகரன் தலையீட்டை தவிர்த்தால் தான், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்தனர்.

அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், தினகரன் அதிர்ச்சி அடைந்தார். எனினும், தனக்கு குறைந்தது, 20 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிப்பர்; அவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்கலாம் என, திட்டமிட்டார். எனவே, தன் ஆதரவாளர்கள் மூலம், நேற்று மாலை, 3:00 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என, அறிவிக்க செய்தார். ஆனால், எட்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், கட்சி அலுவலகத்தில், அவர் போட்டி கூட்டம் நடத்த வந்தால், கடும் எதிர்ப்பு தெரிவிக்க, கட்சியினர் தயாராக இருந்தனர். இந்த தகவல் தெரிய வந்ததும்,

தினகரனை போலீசார் எச்சரித்தனர். 'நீங்கள் கட்சி அலுவலகம் வந்தால், உங்களுக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கும்' என, கூறினர்.

ரத்து செய்தார்
ஒரு பக்கம் வழக்குகள், கட்சியிலும் கடும் எதிர்ப்பு, பொது மக்கள் வெறுப்பு என, பல முனை தாக்குதல் தொடர்ந்ததால், விரக்தி அடைந்த தினகரன், போட்டி கூட்டத்தை ரத்து செய்தார். கட்சியில் இருந்தே ஒதுங்கி விட்டதாக அறிவித்தார். தன்னை துணைப் பொதுச்செயலராக, சசிகலா நியமித்ததால், அவரை சந்தித்த பின், கட்சி பதவியில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார். அவரது அறிவிப்பை தொடர்ந்து, பன்னீர் அணியுடனான இணைப்பு வேகமெடுத்துள்ளது. அதன் காரணமாக, தினகரனுக்கு கூஜா துாக்கிய, எம்.எல்.ஏ.,க்கள், இப்போது பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர்.

பன்னீர்செல்வம்முதல்வராக இருந்த போதே, சசிகலா முதல்வராக வேண்டும் என, முதலில் குரல் கொடுத்த, அமைச்சர் உதயகுமார், நேற்று அளித்த பேட்டியில், ''விசுவாசம் என்றால் என்ன என்பதை, நாங்கள் பன்னீர்செல்வத்திடம் இருந்து தான் கற்றுக் கொண்டோம்,'' என்றார்.

பன்னீர்செல்வத்தை கடுமையாக எதிர்த்து வந்த, எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன், ''தினகரன் ஆலோசனைப்படி, பன்னீர் அணியுடனான இணைப்பை ஏற்றுக் கொள்கிறோம்,'' என்றார். இப்படி, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து, பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர்.
 

நானே ஒதுங்கி விட்டேன்!


''கட்சிக்கு இடையூறு ஏற்படும் வகையில், நான் நடந்து கொள்ள மாட்டேன். ஒதுங்கி இருக்கும்படி, என்னிடம் கூறியிருந்தால், நானே அறிவித்திருப்பேன்,'' என, தினகரன் நேற்று தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:

திடீரென இத்தகைய முடிவு எடுக்க, என்ன காரணம் என, தெரியவில்லை. ஏதாவது பயம் காரணமாக இருக்கலாம். ஏப்., 14 வரை என்னை வந்து பார்த்தனர். நான் பொதுச்செயலரை பார்க்க சென்ற போது, மாலை, 5:00 மணிக்குள் சென்றிருக்க வேண்டும். நேரமாகி விட்டதால், அவரை சந்திக்காமல் திரும்பினேன்.

சென்னை வந்த பின், செங்கோட்டையன், சீனிவாசன் வந்து பேசினர். அப்போதும், வெளிப் படையாக பேசவில்லை. என்னை ஒதுக்குவ தாக, அமைச்சர்கள் கூறிய பின், என்னை பார்க்க எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். அவர்களிடம், 'பொறுமையாக இருங்கள்; ஒற்றுமையாக இருங்கள்' என்று தான் கூறினேன்.

ஒதுங்கு எனக் கூறியதால், ஒதுங்கி விட்டேன். சகோதரர்களிடம் சண்டை போட விருப்பம் கிடையாது. கட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. அனைவரும் சேர்ந்து ஒதுக்கி

 

விட்டதாகக் கூறினர்; ஒதுங்கிக் கொண்டேன்.

நான் சண்டை போட்டு, இயக்கம் பாதிக்கக் கூடாது. இயக்கத்திற்கு எதிராக என்றும் நடக்க மாட்டேன். இவர்கள் அதிருப்தியாலோ, பயத்தாலோ செய்யும் செயல், கட்சி மற்றும் ஆட்சிக்கு எதிராக அமைந்து விடக்கூடாது. கட்சிக்கு இடையூறு ஏற்படும்படி, நான் நடந்து கொள்ள மாட்டேன்.கட்சியையும், ஆட்சியை யும் காப்பாற்றுவதற்காக, இந்த முடிவை எடுத்ததாக கூறும் நண்பர்கள், பயப்படாமல், தைரியமாக, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி செல்ல வேண்டும்.இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.
 

தினகரன் ஓட்டமெடுத்தது ஏன்?


எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிக்க மறுத்த தால், கட்சிப் பணியில் இருந்து ஒதுங்குவதாக, தினகரன் அறிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தும், அமைச்சர்கள் எதிர்ப்பை மீறி, களம் இறங்கினார். தனக்கு தேர்தல் பணியாற்றுவதற் காக, அனைத்து அமைச்சர் களையும், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்தார். முதல்வர் பெயரையும், அந்த பட்டியலில் சேர்த்தார்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க, ஒவ்வொரு அமைச்சரும் குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும் என்றார். பணத்தை கையாளும் பொறுப்பை, தன் விசுவாசியான அமைச்சர், விஜயபாஸ்கரிடம் ஒப்படைத்தார்.அவரது வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பணம் பட்டுவாடா ஆதாரங்கள் சிக்கின. கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டதால், விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியில் இருந்து விலக்க, முதல்வர் முடிவு செய்தார். அதற்கு, தினகரன் முட்டுக்கட்டை போட்டார்.

இந்நிலையில், தேர்தல் கமிஷனர்களுக்கு லஞ்சம் கொடுக்க, இடைத்தரகர் மூலம் முயற்சித்ததாக, தினகரன் மீது, டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அடுத்தடுத்து, தினகரனால் சிக்கல் வருவதால், அவரை கட்சியில் இருந்து, ஒதுங்கி இருக்கும்படி வலியுறுத்த, அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, ஏப்ரல், 14ல், தினகரன் வீட்டிற்கு சென்று, அவரிடம் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கும்படி, அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த தினகரன், அமைச்சர்களை கடுமையாக திட்டி அனுப்பி விட்டார். அதன்பின், அமைச்சர்கள் கூடி பேசி, தினகரன் குடும்பத்தை விலக்குவதாக அறிவித்தனர். அப்போதும் தினகரன், தனக்கு ஆதரவாக, சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வருவர் என, நம்பினார். எனவே, எம்.எல்.ஏ., வெற்றிவேல் மூலம், நேற்று முன்தினம் இரவு, எம்.எல்.ஏ.,க்களை, மொபைல் போனில் தொடர்பு கொண்டார்; யாரும் எடுக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, ஜெ., உதவியாளர் பூங்குன்றன் மொபைல் போனில் இருந்து பேசி உள்ளார்; அவரது பேச்சை கேட்ட பிறகும், யாரும் முன்வரவில்லை. வெறும், எட்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, தன் பக்கம் வந்தததால், தினகரன் ஏமாற்றமடைந்தார்; ஒதுங்குவதாக அறிவித்தார்.
 

தினகரனுக்குசம்மன்


நேற்று(ஏப்19) இரவு 11மணியளவில் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு வந்த டில்லி போலீசார் சம்மனை கொடுத்து விட்டு உடனடியாக புறப்பட்டு சென்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1754789

  • கருத்துக்கள உறவுகள்
தினகரன், தேடப்படும் நபராக அறிவிப்பு டெல்லி போலீசார் கைது செய்ய தீவிரம்

201704191055467782_Dinakaran-of-the-anno
 

சென்னை, 

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் இடைத் தரகர் சுகாஷ் என்ற சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப் பட்டது. 2 கார்களும் கைப்பற் றப்பட்டன.

சுகேசிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசிய தினகரன் முதல் கட்டமாக ரூ.10 கோடியை ஹவாலா மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் கொடுத்தான். இதையடுத்து அவனது செல்போன் தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது டி.டி.வி. தினகரனுடன் இடைத்தரகர் சுகேஷ் கடந்த 15-ந்தேதி பலதடவை பேசியிருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டி.டி.வி.தினகரனிடம் நேரில் விசாரணை நடத்தவும் டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று சென்னை வருவார்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நேற்று டெல்லி போலீசார் வரவில்லை. 

இடைத்தரகர்  சுகேஷ் சந்திரசேகரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதால் கூடுதல் ஆதாரங்களுடன் சென்னை வர டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது சுகேஷ் மூலம் ஓரளவு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே டெல்லி போலீசார் நாளை சென்னை வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லி போலீசாருக்கு நேற்று ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், “டி.டி.வி.தினகரன் வெளிநாட்டு குடியுரிமை பெற்று இருப்பவர். எனவே அவர் வெளிநாட்டுக்கு சென்று விட கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று டி.டி. வி.தினகரனை  தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

இதற்கிடையே இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறை முகங்களுக்கு டெல்லி குற்றப் பிரிவு போலீசார் டி.டி.வி. தினகரன் பற்றிய தகவல்களை அனுப்பி  உள்ளனர். விமானம் மற்றும் கப்பல் மூலம் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக  உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தினகரன் மீதான டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகள் இறுகி வருகிறது. டெல்லி போலீசார் சென்னை வந்து விசாரிக்கும் போது  தினகரன் கைது செய் யப்படுவார் என்று கூறப்படுகிறது.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.