Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss

Featured Replies

  • தொடங்கியவர்

"அன்புக்கு நன்றி" - 67 நாட்களுக்கு பிறகு ஓவியாவின் முதல் ட்விட்! #Biggbosstamil

 

ஒரே டிவிட்டில் அதிரவிட்டிருக்கிறார் ஓவியா. 67 நாட்களுக்குப் பிறகு அவர் எழுதியுள்ள முதல் டிவிட் இது.  நேற்று முன்தின பிக்பாஸில் கமல் நிறையப் பேசினார். நிறையக் கோபமும்பட்டார்.  விமர்சனம் செய்பவர்கள் நாகரீகத்துடன் விமர்சனம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நேற்று முதல் ஆர்த்தியும் ஜூலியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்துள்ளனர். ஓவியா அளவிற்கு இல்லையென்றாலும் முதல் முறையாகப் போனவர்களில் ஓரளவுக்கு இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த ரைஸாவும் ஞாயிறன்று வெளியேறிவிட்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த அட்ராக்சன் மொத்தமும் போய்விட்டது போன்ற ஃபீல் உருவாகி இருந்தது.  புதிதாக உள்ளே வந்த ஆர்த்தியும் ஜூலியும் அவர்கள் குறித்த வெளியுலகின் கருத்துக்களை அறிந்து கொண்டும், அவர்கள் உள்ளே இருந்தவரை எப்படி தங்களை வெளிப்படுத்தினார்கள் என்பதையும் முந்தைய விடீயோக்களில் பார்த்து விட்டும் உள்ளே சென்றுள்ளார்கள். எனவே அவர்கள் முன்பு இருந்த குணங்களுடன் இனிமேல் இருக்கமாட்டார்கள் என்பது உண்மை. 

ஓவியா

இவை ஒருபக்கம் நடந்து கொண்டு இருந்தாலும் 67 நாட்கள் கழித்து ஓவியா தனது டிவிட்டர்தளத்தில் ஒரு கீச்சு எழுதியுள்ளார்.  அந்த டிவிட் வெளியான 5 மணி நேரத்தில் 10 ஆயிரம் ரீடிவிட்கள், 32 ஆயிரம் லைக்ஸ் என அதிரி புதிரி அடித்துள்ளது. அதில் அவர் " உங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் கிடைத்த  அன்பை விவரிக்கச் சொற்களே இல்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றியுடனும் பொறுப்புடனும் இருப்பேன்" என்று நெகிழ்வான கீச்சினை எழுதியுள்ளார் ஓவியா. 

 

பல்வேறு இடங்களில் அவர் தோன்றும் வீடியோக்களும், செல்பிக்களும் வெளியாகி வந்தாலும் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் அவர் அதிர்காரப்பூர்வமாக எழுதும்  முதல் டிவிட் இது. தொடர்ந்து தன் ரசிகர்களுடன் அவர் பேசுவார் என்று தெரிகிறது.   

http://www.vikatan.com/news/tamilnadu/100611-oviya-tweets-after-67-days-of-biggbosstamil.html

  • 2 weeks later...
  • Replies 79
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பரணி காலில் விழுந்து மன்னிப்புக் கோரியது நானே: ஜூலி ஒப்புதல்

 

 
julie

கோப்புப் படம்

பரணி காலில் விழுந்து மன்னிப்புக் கோரியது நானே என்று நேற்றைய பிக் பாஸ் நிகழ்வில் சுஜாவிடம் ஜூலி தெரிவித்தார்.

சமீபத்திய பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மக்களிடையே கொஞ்சம் வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பிரபலங்களின் குடும்பத்தினர், வீட்டிற்குள் அனுப்பப்பட்டு ஆச்சர்யப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதில் சிநேகனின் தந்தை பிக் பாஸ் வீட்டிற்கு சென்றது அனைவரையும் கலங்கடித்தது. ஏனென்றால், இருவரும் சந்தித்து 15 வருடங்களாகிறது. சென்னைக்கு வந்தப் பிறகு சிநேகன் தனது சொந்த கிராமத்துக்கு செல்லவே இல்லை.

நேற்றைய (செப்டம்பர் 8) நிகழ்ச்சியில் ஆரவ்வின் குடும்பத்தினர் வந்தனர். அதற்கு முன்பாக சுஜா மற்றும் ஜூலி இருவரும் பேசிக் கொண்டார்கள். அவை அப்படியே..

சுஜா: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே போனவுடன் எப்படி பார்த்தார்கள்?

ஜூலி: நான் சாதாரணமாக தான் போனேன். ஆனால், பார்ப்பவர்கள் என்னை செலிபிரட்டி மாதிரி காண ஆரம்பித்துவிட்டார்கள். சில பேர் "நீங்க தானே 'பிக் பாஸ்' ஜூலி" என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகே கோயிலுக்கு சென்றிருந்த போது, ஒரு அடகு கடைக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் பார்த்து அங்கியிருப்பவர்களிடம் சொல்லி சுமார் 300 பேர் கூடிவிட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றவுடன் முதல் நாள் மட்டுமே வெளியே சென்றேன். அதற்குப் பிறகு ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து சனிக்கிழமை வெளியே சென்றேன். ஞாயிற்றுகிழமை அன்று வளசரவாக்கத்தில் பரணி அண்ணா இருக்கிறார் என்று தெரிந்து அங்குச் சென்றேன். பின்பு, நம்பரை தேடிப் பிடித்து சேப்பாக்கத்தில் இருக்கிறார் என்று தெரிந்து சென்று அவருடைய காலில் விழுந்து வந்தவுடன் வீட்டிலிருந்து எங்கேயும் செல்லவில்லை.

சுஜா: அது நீதானா?

ஜூலி: ஆம். நான் தான்.

சுஜா: எதனால் திடீரென்று?

ஜூலி: எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் இருந்தது. பரணி அண்ணன் இங்கிருந்து போனதிலேயே வருத்தம் தான். அவரை அண்ணன் என கூப்பிட்டவள் நான். என்னிடம் உண்மையாகத் தானே இருந்தார். அவர் இங்கிருந்து சுவர் ஏறிக் குதிக்கும் போதே வருத்தப்படத் தொடங்கிவிட்டேன்.

சுஜா: அப்போதே ஏன் சொல்லவில்லை

ஜூலி: பரணி அண்ணன் என்னிடம் "என்னோடு சேராதே. அப்படிச் சேர்ந்தால் அனைவருமே உன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்று கூறினார்.

இவ்வாறு சுஜா மற்றும் ஜூலி இருவருக்கும் இடையே ஆன பேச்சுகள் நடைபெற்றது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19650579.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிக் பாஸில் வெற்றி பெற்றால் நூறு கிராமங்களுக்கு ஏற்ற ஒரு நூலகம் கட்ட கவிஞர் சிநேகன் விருப்பம்!

 

 
bb_snehan
 

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் பெரிய நூலகம் ஒன்றைக் கட்டவுள்ளதாகக் கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் சிநேகன் - நடிகர் வையாபுரி இடையேயான உரையாடலின்போது கவிஞர் சிநேகன் கூறியதாவது:

100 நாள் இங்கிருந்து நிகழ்ச்சியில் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், நூறு கிராமங்களுக்கு பொதுவாக ஒரு நூலகம் கட்டவேண்டும். பிக் பாஸ் நூலகம் என்று பெயரிட்டு தலைவனை (கமல்) வைத்து திறப்புவிழா நடத்த வேண்டும். அதிலிருந்து ஒரு பைசா நம் சொந்தச் செலவுக்கென்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறினார். 

 
 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/11/biggbosstamil-snehan-vijaytv-kamal-2771267.html

  • தொடங்கியவர்

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

 
 
 
 

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சிறுது நாட்களில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகின. புதிய சீசனுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் "எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்" என யாஷிகா அவர் கூறியுள்ளார்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

இதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2-வில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, பிரபல தொகுப்பாளினி DD, கலக்க போவது யாரு பாலா, தொடை அழகி நடிகை ரம்பா, சரவணன் மீனாட்ச்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் இவர்களை தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

https://news.ibctamil.com/ta/celeberities/Tamil-bigg-boss-season-2-participants

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யார் உள்ளே? யார் வெளியே? பிக் பாஸ் கடைசி வார பரபரப்பு!

 

 
suja

ஒரு போட்டின்னு வந்துட்டா யாருக்காகவும் பார்க்க மாட்டேன், அதில் ஜெயித்தே தீர வேண்டும் என்ற தரப்பை எடுத்து அதில் உறுதியாகவும் ஒருவித போராட்ட குணத்துடனும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர் சுஜா. இந்நிலையில் இந்த வாரம் அவரும் கணேஷ் வெங்கட்ராமும் குறைந்த அளவே ஓட்டுப் பெற்றிருப்பதாக கமல் அறிவித்திருந்தார். இந்த இருவரில் வெளியேறப் போகும் நபர் யார் என்று இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

suja-bb-main.jpg

பிக் பாஸ் போட்டி முடிவடைய ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் கடைசி கட்டம் பரபரப்பாக உள்ளது. கணேஷ் அல்லது சுஜா வெளியேற்றப்படவேண்டிய சூழலில் உள்ளார்கள். ஆனால் இவர்களில் ஒருவரை சினேகன் தன்னுடைய புள்ளிகளை தந்து உதவிக் காப்பாற்றலாம் என்று கமல் கூறியிருக்கிறார்.

ganesh.jpg

ஏற்கனவே சுஜாவுக்கு சில உதவிகள் செய்திருக்கிறார் சினேகன். எனவே இந்தச் சமயத்தில் அவர் கணேஷைத் தான் காப்பாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுஜா தான் வெளியேறக் கூடிய நபர் என்றும் கணிக்கிறார்கள் ரசிகர்கள்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/24/last-week-of-big-boss-program-2778912.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.