Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் நிகழும் மனித அவலத்தை எடுத்துக்கூறும் ஒரு பெண்ணின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நிகழும் மனித அவலத்தை எடுத்துக்கூறும் ஒரு பெண்ணின் கதை

கடந்த நான்கு மாதங்களாக தனது கணவனின் வரவுக்காக காத்திருக்கிறார் சுதர்சினி ஜசுதன். கடந்த ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கந்தையா ஜசுதன் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் இராணுவத்தினராலும் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள மக்கள் தினம், தினம் அனுபவிதித்து வரும் மனித அவலங்களுக்கும் தமது உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும் சுதர்சினியின் நிலமை ஒரு சிறு உதாரணமாகும்.

துரதிர்ஸ்டவசமான அந்த நாள் தொடர்பாக கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு சுதர்சினி தெரிவித்ததாவது:

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 19 ஆம் நாள் நள்ளிரவு 12.15 மணியளவில், தமது முகங்களை கறுப்புத் துணிகளால் மறைத்த நான்கு பேர் நீர்வேலியில் உள்ள எமது வீட்டிற்கு வந்தனர். கதவை திறக்கும் படி கேட்டுக்கொண்டனர். எனது தாயார் அவர்களை காலையில் வரும்படி கூறினார்.

ஆனால் அவர்கள் கதவை திறக்கும் படி வற்புறுத்தியுடன், கதவை கால்களால் உதைத்து திறப்பதற்கு முயற்சி செய்தனர். அதேசமயம் கறுப்புத் துணிகளால் முகங்களை மூடிய 30 பேர் எமது வீட்டை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் சரளமாக சிங்களத்தில் பேசினார்கள், அவர்களால் தமிழில் பேசமுடியவில்லை. எனவே அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினர் என்ற சந்தேகம் எமக்கு தோன்றியது.

ஆயுதம் தரித்த நபர்கள் வீட்டுக்குள் வந்து எல்லா அறைகளிலும் தேடுதலை நடாத்தினர். பின்னர் எனது கணவரை அழைத்துச்செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் கதவை இறுகப்பற்றிய படி வரமுடியாது என கூச்சலிட்டார். எனினும் ஆயுதம் தரித்த நபர்கள் அவரை பலவந்தமாக இழுத்துச் சென்றுவிட்டனர்.

அதன் பின்னர் நான், எனது கணவனைப் பற்றிய எந்த தகவலையும் அறியவில்லை என சுதர்சினி தெரிவித்தார். சுதர்சினிக்கு ஏழு மற்றும் ஐந்து வயதில் இரு பிள்ளைகள் உண்டு. அவர் தன்னால் முடிந்த அளவிற்கு முறைப்பாடுகள் கொடுக்கப்படும் ஒவ்வொரு அலுவலகங்களுக்கும் முறைப்பாடுகளை செய்துள்ளார். இது தான் அவர் வசம் உள்ள சிறிய நம்பிக்கை.

சுதர்சினி தொடர்ந்து தெரிவித்ததாவது:

நான், யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் அலுவலகம், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, சிறிலங்கா காவல்துறை, இராணுவ முகாம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் செய்துள்ளேன். எங்களது வீட்டிற்கு அருகாமையில் இராணுவ முகாம் உள்ளது, எனது கணவர் இராணுவத்தினருடன் நட்பாக பழகுபவர். எனவே அவருக்கு இப்படி நடக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

அவருக்கு விடுதலைப் புலிகளுடனோ அல்லது வேறு அமைப்புக்களுடனோ தொடர்புகள் இல்லை. நாங்கள் ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டோம். இருவருக்கும் ஒரே வயது தான். அவர் முச்சக்கர வாகன சாரதியாக பணிபுரிகிறார். எனக்கு அவரைப் பற்றி நன்கு தெரியும். அவருக்கு குடும்பமும் அவரது தொழிலும் தான் உலகம்.

நான், மனிதஉரிமை ஆணைக்குழுவின் தலைமையகத்திலும், போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கொழும்பு தலைமையகத்திலும் முறைப்பாடுகள் செய்துள்ளளேன். எனது கணவனை காணும் வரை நான் ஓயப்போவதில்லை. ஆனால் எனது இரு சிறு பிள்ளைகளுடனும், தாயாருடனும் தனித்த நின்று என்னால் இதற்குமேல் எதுவும் செய்ய முடியவில்லை.

எனவே எனக்கு உதவிகள் தேவை. எனது கணவரின்றி என்னால் வாழ முடியாது. எமது குடும்பம் அவரது வருமானததில் தான் தங்கியுள்ளது. தற்போது எங்களுக்கு என்ன நடைபெறப்போகின்றது என்பது எனக்கு தெரியவில்லை.

எனது கணவர் கடத்தப்பட்டது பிள்ளைகளின் கல்வியை வெகுவாக பாதித்துள்ளது. அவர்களின் கண்முன்னே தந்தையார் இழுத்துச் செல்லப்படும் போது அவர்களால் எப்படி நிம்மதியாக கல்வியை தொடரமுடியும்? தினமும் தமது தந்தையாரின் வரவை எண்ணி அவர்கள் அழுதவண்ணமே உள்ளனர்.

தற்போது எமது குடும்பம் வெளிநாட்டில் வசிக்கும் எனது சகோதரியின் உதவியில் தான் தங்கியுள்ளது. ஆனால் அதுவும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்பது யாருக்குத் தெரியும்?

எனது உறவினரான அச்சுதன் வைகுந்தன் (வயது 24) என்பவரும் எனது கணவர் கடத்திச் செல்லப்பட்ட தினம் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அவரின் வீடும் நீர்வேலியில் உள்ள எமது இல்லத்திற்கு அருகாமையில் தான் உள்ளது. அவருக்கு திருமணமாகவில்லை, அவருக்கு எந்த அமைப்புக்களுடனும் தொடர்புகள் இருந்ததில்லை. மேலும் அச்சுறுத்தல்களும் முன்னர் இருந்ததில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் சுதர்சினி நம்பிக்கையை கைவிடவில்லை தொடர்ந்து கணவனை தேடிக்கொண்டு தான் இருக்கிறார். இவர் போன்று பல குடும்பங்கள் தமது உறவினர்களை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றனர். கடத்தப்பட்ட தமது உறவினர்களின் உயிருக்கு ஏதேனும் நடந்திருக்குமோ என்ற அச்சமும் அவர்களை சூழ்ந்துள்ளது. சுதர்சினியும் அவர்களில் ஒருவர்.

இது தொடர்பாக யாழ். மனித உரிமைகள் அமைப்பின் பிராந்திய இணைப்பாளர் ரீ.சுவேந்திரராஜ் தெரிவித்ததாவது:

எங்களுக்கு இந்த கடத்தல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு எந்த உதவிகளும் வழங்கப்படுவதில்லை. மனித உரிமை அமைப்பு தமது விசாரணைகளை மேற்கொள்கின்ற போதும் யாழ். குடாநாட்டின் நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன.

இந்த வருடத்தில் மட்டும் குடாநாட்டில் 60 பேர் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் உள்ளனர். யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மிகவும் ஆபத்தாக உள்ளது சமீப காலமாக நாம் பல முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம்.

குடாநாட்டில் உள்ள எல்லா பொதுமக்களும் இரவில் விடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். வெளியில் செல்லும் மக்கள் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நிச்சயம் அற்ற தன்மை அங்கு நிலவுகின்றது. இரவில் நாய்கள் குரைத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்து விடுகின்றனர்.

மனித உரிமை அமைப்பின் உறுப்பினர்களும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் எங்களின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனவே எங்களால் முழுமையான விசாரணைகளை நடத்த முடிவதில்லை. பல உறுப்பினர்கள் அச்சத்தின் காரணமாக பணியில் இருந்து ஒதுங்கியுள்ளனர். இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு நான் கொழும்பு தலைமையகத்திற்கு வந்தள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

-புதினம்

செய்தித் தலைப்பு பிழையாகப் போடப்பட்டுள்ளது என நினைக்கிறேன். யாழில் நிகழும் மனித அவலத்தை எடுத்துக்கூறும் ஒரு பெண்ணின் கதை என்று போடாது யாழில் நிகழும் மனித அவலம் என போடப்பட்டிருக்கலாம்! கதை என்றதும் நம்மவர் சிறுகதை/குறும்படம் என நினைக்க வாய்ப்புண்டு.

இவை பயங்கரமான அனுபவங்கள், ஒரு ஆணாக இருந்து இச்சம்பவத்தை மனத்திரையில் �“டவிட்டு பார்க்கும் போதே நடுக்கம் வருகிறது. அந்தப் பெண் இவ்வளவு பயங்கரங்களையும் தாங்கிக் கொண்டு வேதனைகளுடன் எவ்வாறு வாழ்கின்றார் என தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.