Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காப் பிரதமருக்கு எதிராக இணையத்தள மனு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காப் பிரதமருக்கு எதிராக இணையத்தள மனு

சிறிலங்காவில் மக்கள் கடத்தப்படுவதை நிறுத்தும்படியும், அரசு அதனை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் அனைத்துலக உரிமைக்குழு சிறிலங்காவின் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்கவிற்கு இணையத்தளங்களின் ஊடாக எதிர்ப்பு மனுவை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல கடத்தல்கள், காணாமல் போதல் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (வயது 37) கடந்த வாரம் காணாமல் போயுள்ளார்.

சிறிலங்காவில் அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் அரசிற்கும் ஜே.வி.பிக்கும் இடையில் நடைபெற்ற இருவேறுபட்ட மோதல்களில் பல பத்தாயிரம் மக்கள் காணாமல் போனதற்கு சிறிலங்கா படைகள் தான் காரணமாக அமைந்துள்ளனர்.

அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவேண்டும். மேலும் இந்த குற்றங்களை புரிந்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டணைகளும் வழங்கப்பட வேண்டும். சில சம்பவங்களில் அரச படையினரால் அல்லது அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுவினரால் கைது செய்யப்படும் மக்கள் தொடர்பான தகவல்களை அரசு தெரிவிக்க மறுத்து வருகின்றது.

பொதுவாக இரு நோக்கங்களுடன் காணாமல் போதல் நிகழ்கின்றது. ஒன்று இதன் மூலம் கைது செய்யப்படுபவாகள் மீது சித்திரவதைகள் புரியப்படலாம். இரண்டாவது அவர்களின் மரணத்தை மறைத்து விடுவது. இந்த காணமால் போதல் தொடர்பாக இதுவரை எந்த வழக்குகளோ அல்லது தண்டணைகளோ வழங்கப்படவில்லை. எனவே தான் இது தொடர்கிறது என அது மேலும் தெரிவித்துள்ளது.

மன்னிப்புச் சபையின் மனுவில் 1988 ஆம் ஆண்டு காலியில் காணாமல் போன 20 வயது நிரம்பிய சிங்களப் பெண்கள் இருவர், 1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பின் சத்துருக்கொண்டானிலும் மற்றும் 3 கிராமங்களிலும் இருந்து கைது செய்யப்பட்ட 160 தமிழ் மக்கள், 7 யாழ். தமிழ் இளைஞர்களை தடுத்து வைத்திருத்தல், யாழில் இருந்து கடந்த வருடம் காணாமல் போன இருவர் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு காணாமல் போதல், காணாமல் போனவர்களின் தகவல்களையும் அவர்களின் நிலைமைகளையும் மறைத்தல் போன்றவற்றிற்கு எதிராக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பாரீசில் கையொப்பங்கள் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை காணாமல் போதல் தொடர்பாக ஒரு தெளிவான தடையை அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களில் கொண்டு வந்துள்ளதாக மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் லுயிஸ் ஆபர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம் யாரும் கடத்தப்பட்டு காணமல் போக முடியாது. எந்த காரணங்களும் இதற்கு விதி விலக்காக முடியாது. மேலும் யாரும் இதனை நியாயப்படுத்தவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எருமை மாட்டிலை மழை பெஞ்ச மாதிரித்தான். மந்திரி மாரே காணாமல் போகினம். மக்கள் எங்கை.

நாங்களும் கருத்து தெரிவிக்க வாய்ப்பிருக்கும் போல? யாராவது இனைப்பைக் கண்டுபிடித்து தாருங்கள்.

Edited by balapandithar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.