Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது

Featured Replies

மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது

 

 

narendramodi-Ranil.jpg(புதுடில்லியிலிருந்து க.கமலநாதன்)

இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்குதல் மற்றும் திருமலை துறைமுக அபிவிருத்தி பணிகளில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.

இயற்கை வாயு உற்பத்தி சூரிய சக்தி நிலையங்கள் உருவாக்கம், திருகோணமலை நகர அபிவிருத்தி, திருகோண மலை துறைமுக அபிவிருத்தியின் போது இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனத்துடன் கூட்டு அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுதல், திருமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தாங்கிகள் கட்மைப்பினையும் அபிவிருத்தி செய்தல், வீதி அபிவிருத்தி, புகையிரத சேவை புதுப்பிப்பு, விவசாயம் மற்றும் நீர் முகாமைத்துவச் செயற்பாடுகள் உள்ளிட்ட காரணங்கள் குறித்து முக்கிய மேற்படி ஒப்பந்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான ஐத்ராபாத் இல்லத்தில் இடம்பெற்றம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புச் சந்திப்பின் போதே மேற்படி விடயங்கள் குறித்து அவதானம் செலுதப்பட்டன.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, இந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்திய ஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கும் சமூக பொருளாதார கொள்கையின் மேம்பாட்டிற்காகவும் இந்தியாவின் முழுமையான உதவிகளை வழங்கி சக்திமிக்க இலங்கையை உருவாக்குவதற்கு வழிசெய்வதற்கு இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன் போது இருநாட்டு பிரதமர்களும் சமுத்திர பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பிராந்திய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆலோசித்து இணக்கப்பாட்டினை எட்டியிருந்தனர்.

 

அதேநேரம் இலங்கை இந்திய நட்புறவை  பேணுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னெடுப்புக்களையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அத்துடன் வருகின்ற மே மாதத்தில் தான் இலங்கைகான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதில் பொறுப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகாமைத்துவ செயற்பாடுகள், தொழில்நுட்ப செயற்பாடுகள், தகவல் தொடர்பாடல் செயற்பாடுகள் விருத்தி, பல்கலைக்கழக புத்துருவாக்கச் செயற்பாடுகள் ஆகிய செயற்பாடுகளுக்கு இந்தியாவின் உதவியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார். அதேநேரம் தற்சமயம் இந்திய உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பின் பின்னர் இந்தியா பொருளாதார ரீதியில் மேம்பாடுகளை அடையும் நாடாக மாறியுள்ளது. இது இலங்கை  போன்ற நாடுகளின் பொருளாதார ஸதீர தன்மைக்கு பாதுகாப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யுத்தின் போது பாதிக்கப்பட்டவர்களிள் மனப்பாதிப்புக்களை நிவரத்தி செய்து நாட்டினுல் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள்ளில் துரித அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன் நிலையான அபிவிருத்திக்கான இலங்கையின் முன்னெடுப்புக்களை மேலும் சீர்படுத்துமாரும் அறிவுறுத்தினார்.

http://www.virakesari.lk/article/19443

5 hours ago, நவீனன் said:

அதேநேரம் இலங்கை இந்திய நட்புறவை  பேணுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னெடுப்புக்களையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அத்துடன் வருகின்ற மே மாதத்தில் தான் இலங்கைகான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதில் பொறுப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை ஏற்பாடு செய்த ஐக்கிய தேசியக்கட்சி என்ற சிங்கள பயங்கரவாதக் கும்பலின் தலைவரான ரணில், இந்தியா சென்று வெற்றிகரமாக கோ/ஏமாளிகளான மோடி கும்பலை ஏமாற்றிவிட்டார்!

  • தொடங்கியவர்

காயங்­களை ஆற்றி நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்துங்கள்

raaa-7f896be6afaa1e9222014aaa75d8f8b772913b78.jpg

 

ரணி­லு­ட­னான சந்­திப்பில் இந்­திய பிர­தமர் மோடி தெரி­விப்பு : திரு­மலை துறை­முக கூட்டு செயற்­பாடு  குறித்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தமும் கைச்சாத்து 

(புது­டில்­லி­யி­லி­ருந்து க.கம­ல­நாதன்)

இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்  ட­வர்­களின் காயங்­களை நிவர்த்­தித்து நாட்டில் நல்­லி­ணக்­ கத்தை ஏற்­ப­டுத்தும் பணிகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண் டும் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். 

இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள பிர­த­மர் ரணில் விக்கி­ர­ம­சிங்க இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் உத்­தி­யோகபூர்வ வாசஸ்­த­ல­மான ஐத்­ராபாத் இல்­லத்தில் இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­ மோ­டியை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இந்த சந்­திப்பின் போதே இந்­திய பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

மேலும் இலங்­கையின் அபி­வி­ருத்தி 

செயற்­பா­டு­க­ளுக்கு உதவி வழங்­குதல் மற்றும் திரு­மலை துறை­முக அபி­வி­ருத்தி பணி­களில் கூட்டு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தல் தொடர்­பி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தமும் கைசாத்­தி­டப்­பட்­டது.

இந்த சந்­திப்­பின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து ,இந்து சமுத்­தி­ரத்தின் பொரு­ளா­தார மத்­தி­யஸ்­தா­ன­மாக இலங்­கையை மாற்­றி­ய­மைப்­ப­தற்கும் சமூக பொரு­ளா­தார கொள்­கையின் மேம்­பாட்­டிற்­கா­கவும் இந்­தி­யாவின் முழு­மை­யான உத­வி­களை வழங்கி சக்­தி­மிக்க இலங்­கையை ஒரு­வாக்­கு­வ­தற்கு வழி­செய்­வ­தற்கு இரு­நாட்டு பிர­த­மர்கள் சந்­திப்பில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

 இரு­நாட்டு பிர­த­மர்­களும் சமுத்­திர பாது­காப்பு, சுதந்­தி­ர­மான கப்பல் போக்­கு­வ­ரத்து பிரந்­திய அபி­வி­ருத்தி உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும் ஆலோ­சித்து இண­கப்­பாட்­டினை எட்­டினர்.

அதே­நேரம் இலங்கை இந்­திய நட்­பு­றவை நெருக்­க­மாக பேணு­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முன்­னெ­டுப்­புக்­க­ளையும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி வர­வேற்றார். அத்­துடன் வரு­கின்ற மே மாதத்தில் தான இலங்­கை­கான விஜ­யத்­தினை மேற்­கொள்ள வேண்டும் என்­பதில் ஆர்­வத்­துடன் இருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மேலும் முகா­மைத்­துவ தொழில்­நுட்ப செயற்­பா­டுகள், தகவல் தொடா்­பாடல் விருத்தி, பல்­க­லைக்­க­ழக புத்­து­ரு­வாக்கச் செயற்­பா­டுகள் ஆகி­ய­வற்­றுக்கு இந்­தி­யாவின் உத­வி­யையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கோரி­யி­ருந்தார். அதே­நேரம் தற்­ச­மயம் இந்­திய உத­வி­யுடன் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­படும் செயற்­பா­டுகள் குறித்தும் சந்­திப்­பின்­போது அவ­தானம் செலுத்­தப்­பட்­டது.

அத்­துடன் யுத்­தத்தின் போது பாதிக்­கப்­பட்­ட­வர்­களிள் மனப்­பா­திப்­புக்­களை நிவ­ரத்தி செய்து நாட்­டினுள் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­கள்ளில் துரித அவ­தானம் செலுத்த வேண்டும் எனவும் இந்­திய பிர­தமர் சுட்­டிக்­காட்­டினார். நிலை­யான அபி­வி­ருத்­திக்­கான இலங்­கையின் முன்­னெ­டுப்­புக்­களை மேலும் சீர்­ப­டுத்­து­மாரும் அறி­வு­றுத்­தினார்.

சந்­திப்பின் நிறைவில் கூட்டு வியா­பாரச் செயற்­பா­டுகள் வாயி­லாக இரு­நாட்டு மக்­களும் ஒரே அள­வி­லான இலா­ப­மீட்டும் செயற்­பா­டு­களை வலு­வூட்­டு­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தமும் கைசாத்­தி­டப்­பட்­டது. இந்த ஒப்­பந்தில் இந்­தியா சார்பில் அந்­நாட்டு வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவ­ராஜூம் இலங்கை சார்பில் சர்­வ­தேச பொரு­ளா­தார அலு­வல்கள் மலிக் சம­ர­விக்­ர­மவும் கைசாத்­திட்­டார்கள். 

இயற்கை வாயு உற்­பத்தி சூரிய சக்தி நிலை­யங்கள் உரு­வாக்கம், திரு­கோ­ண­மலை நகர அபி­வி­ருத்தி, திரு­கோ­ண­மலை துறை­முக அபி­வி­ருத்­தியின் போது இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­துடன் கூட்டு அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுதல், திரு­மலை துறை­முகம் மற்றும் எண்ணெய் தாங்­கிகள் கட்­மைப்­பி­னையும் அபிவிருத்தி செய்தல், வீதி அபிவிருத்தி, புகையிரத சேவை புதுப்பிப்பு, விவசாயம் மற்றுமு் நீர் முகாமைத்துவச் செயற்பாடுகள் உள்ளிட்ட காரணங்கள் குறித்து முக்கிய மேற்படி ஒப்பந்தத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்படி செயற்பாடுகளில் சிலவற்றை இலங்கை இந்தியா ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும், இதற்கான சகல தரப்பு பேச்சுவார்த்தைகளும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.