Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப்

Featured Replies

100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப்

 
 

அமெரிக்க அதிபராக தான்பதவியேற்ற 100-ஆவது நாளை குறிக்கும் வகையில் நடந்த பேரணியில் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார்.

ஊடகங்கள் மீது டிரம்ப் சாடல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஊடகங்கள் மீது டிரம்ப் சாடல்

பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப், ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிபர் அலுவலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுடனான இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 1981-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.

http://www.bbc.com/tamil/india-39761529

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊடகங்களால் தான் அவர் ரஷ்யன் ஆள் என்று மாட்டுபட்டவர் .அதான் இன்று சூடாக திருப்பி குடுத்தாங்கள் ட்ரம் நினைத்துவிட்டார் அமெரிக்காவை ரஸ்யா என்று .

  • தொடங்கியவர்

முதல் 100 நாள்களில் என்ன செய்தார் டொனால்டு ட்ரம்ப்? #Trump100

´
 

டொனால்டு  ட்ரம்ப்

லக அளவில் அதிக வல்லமை படைத்த பதவிகளில் ஒன்று அமெரிக்க அதிபர் பதவி. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது, தேர்தலுக்கு முந்தையநாள் வரை அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலக நாடுகளுமே ஹிலரி கிளின்டன்தான் அந்நாட்டின் அதிபராக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்திருந்தது. ஹிலரி பக்கமே சாய்ந்து அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்பட்டு, அமெரிக்காவின் முதல் பெண் அதிப‌ராக அவர் பொறுப்பேற்பார் என்று அவரை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர், ரியல் எஸ்டேட் அதிபர் மீம்ஸ் நாயகன் என்பதையெல்லாம் தாண்டி, டொனால்டு ஜான் ட்ரம்ப் புதிய அதிபரானார். ஆம். இதுதான் அமெரிக்க மக்களின் மனநிலை. "ட்ரம்ப் போன்றவர்களைத்தான் அமெரிக்க மக்களுக்குப் பிடித்திருக்கிறது" என்ற கருத்துகள் உலகமெங்கும் பேசப்பட்டன.

அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப், ஜனவரி 20-ம் தேதி  பதவியேற்றார். பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போகிறோம் என அமெரிக்காவில் இருந்து நிறைய குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. பராக் ஒபாமா அதிபராகப் பதவியேற்றபோது, வெள்ளை மாளிகையையே மறைக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியிருந்தது. ஆனால், டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றபோது அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் பங்கேற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பெருமளவுஇடம் காலியாகவே இருந்தது. ட்ரம்ப் பதவியேற்ற அன்று ட்விட்டரில் #ThankYouObama என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது, ட்ரம்புக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

டொனால்டு  ட்ரம்ப்

முதல் கையெழுத்து:

ட்ரம்ப் பதவியேற்றதும், முன்னாள் அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான உத்தரவில் தனது முதல் கையெழுத்தை போட்டார். அந்த உத்தரவில், "ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச்சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத்திட்டத்தை அறிமுகம் செய்வோம். புதிய திட்டம் அறிவிக்கும் வரை தற்போதுள்ள திட்டத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார். ட்ரம்ப்-ன் முதல் கையெழுத்தே அமெரிக்க மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

சிலிக்கான் வேலி சிக்கல்:

ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது போலவே  அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் நலன் கருதி ஈராக், சிரியா உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு இனி விசா கிடையாது என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தது, அந்த நாடுகளிடையே மட்டுமின்றி, உலக நாடுகள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாடுகளில் இருந்து யாரும் இனி அமெரிக்கா வர முடியாது. சிலிக்கான் வேலியில் உள்ள தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பலருக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது என அந்த நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் பொங்கினர். ஃபேஸ்புக் சிஇஓ சுந்தர் பிச்சை ட்ரம்ப்-ன் இந்த அறிவிப்பிற்கு கடும் அதிருப்தி தெரிவித்தார். "அமெரிக்கா புலம் பெயர்ந்தவர்களுக்கான நாடு, ட்ரம்ப் நீங்கள் தவறு செய்கிறீர்கள். திறமைசாலிகளை இழக்கப் போகிறீர்கள்" என்றார் அவர். 

டொனால்டு ட்ரம்ப்

ஆஸ்கர் அவமானம்:

ஏழு நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடையால் சிரியா நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் காலித் கதீப் விருது வென்றும் விழா மேடைக்கு வர முடியாமல் போனது. ஆஸ்கர் மேடையில் நின்றுகொண்டு ஆஸ்கர் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் லைவ் ட்வீட் செய்தார். அவர் ட்ரம்புக்குத் தான் ட்விட் செய்தார். சரமாரியான விமர்சனங்களால் ஆஸ்கர் மேடையில் ட்ரம்ப்-ஐ கலாய்த்துத் தள்ளினார்.

சிரியா சோகம்:

சிரியாவில், அரசுப் படையினர் நடத்திய ரசாயனத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், குழந்தைகள் உள்பட பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்கா, சிரியா விமான தளங்களை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இது அதிபர் ட்ரம்ப் உத்தரவின்பேரிலேயே நடத்தப்பட்டது. மேலும், சீன அதிபருடனான ட்ரம்ப்-ன் சந்திப்புக்குப் பின் இந்தத் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

போராட்டங்கள்:

அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபரானவுடன் 'ட்ரம்ப் எங்கள் அதிபர் இல்லை' என்ற போராட்டமும், 'ட்ரம்ப் கேர் நாட்டுக்கு நோயைத் தரும்' என்ற வாசகம் உள்ளிட்ட ட்ரம்ப்-க்கு எதிரான வாசகங்களுடன் கூடிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒபாமா பங்கேற்ற முதல் நிகழ்ச்சியிலேயே 'அடுத்த தலைமுறை தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என சூசகமாகக் கூறியது ட்ரம்ப்-க்கு எதிரான கருத்தாகவே பார்க்கப்படுகிறது. 

டொனால்டு  ட்ரம்ப்

நம்பர் கேம்:

ஜனநாயகக் கட்சியினர், கனடா, நீதிபதிகள் என அனைவரையும் விமர்சித்து கண்டனத்துக்குள்ளான ட்ரம்ப், அமெரிக்க அதிபராக 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். அதிபராகப் பதவியேற்று இந்த 100 நாட்களில் ட்ரம்ப் தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் 475 ட்வீட்களையும், அதிகாரப்பூர்வ அதிபர் பக்கமான @POTUS-ல் 492 ட்வீட்களையும் பதிவிட்டுள்ளார். மேலும் தனது சொந்த டிவிட்டரில் உள்ள பல ட்வீட்களை @POTUS பக்கத்திலும் ரீ-ட்விட் செய்கிறார். முன்னாள் அதிபர் ஒபாமா, தனது பர்சனல் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட்டைக் கூட ரீ-ட்விட் செய்ததில்லை. ஒபாமா அறிவித்த 9 திட்டங்களை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். 100 நாட்களில் 80 நாட்கள் வெள்ளை மாளிகையில் தங்கியுள்ளார். அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையே சுவர் எழுப்புவேன் என்று கூறிய ட்ரம்ப், ஒரு செங்கலைக்கூட வைக்கவில்லை. இவரால் மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது. ட்ரம்ப் இதே நிலையில் தொடர்ந்தால், வரும் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவியில் அவரது பெயர் கட்டாயம் இடம்பெறாத நிலை உருவாகும். சிறந்த அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். அதிபர் தேர்தலில் மீண்டும் ட்ரம்ப் போட்டியிட வேண்டுமானால், அமெரிக்காவுக்கு உருப்படியாக எதையாவது செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதை ட்ரம்ப் புரிந்து கொள்ள வேண்டும்!

http://www.vikatan.com/news/world/88033-a-short-note-on-100-days-of-donald-trump.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.