Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!

போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!

&
கவிப்புயல் இனியவன்

தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!

போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!

இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!

உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
தைக்கும்  உணர்வை தா......! 

&
கவிப்புயல் இனியவன்

  • Replies 233
  • Views 43.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!

காட்டி விட்டால் அப்புறம் அவளை மறக்கவே முடியாது போய்விடும் ....., அனுபவம் சொல்கிறது...அப்புறம் உங்கள் இஷ்டம்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

தமிழ் முதல் மொழி ....
சீனத்திலும் உண்டு ....
சீமையெல்லாம் உண்டு.....
உன் விழிகள் பேசும் ....
வார்த்தை மட்டும் ......
என்னிடம்  தான் உண்டு ...!

போதும் போதும் .......
நீ விழியால் பேசியது.....
வலிமேல் வலி தந்து......
விளையாடுவது போதும்....!

நீ ஒன்றுமே .....
செய்ய வேண்டாம்...
காதலிக்கிறேன் என்று.....
மட்டும்சொல்..........
அந்த வார்த்தையை......
வைத்துக்கொண்டே..........
அகராதி எழுதிவிடுகிறேன்...!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
 

  • தொடங்கியவர்

நீ
கலைந்தே போனாலும்
கலையவில்லை....
உன் கனவுகள். . !

நீ 
பிரிந்தே போனாலும்
விலகவில்லை 
உன் நினைவுகள்...!

நீ
மறந்தே போனாலும்.....
மறக்க வைக்கவில்லை.....
உன் நினைவு பரிசுகள்....!

நீ
சேர்ந்தே போனாலும்....
சேதமாகவில்லை....
என் காதல்.......!

&
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

கடவுளும் காதலும்....
ஒன்றுதான் ......
இரண்டையும் உணரலாம்....
அடைய முடியாது........!

என் இறப்புக்கு முன்.....
இறப்பிடத்தை.......
காதலால் காட்டுகிறாய்.......!

உன்னை நினைத்து........
பூக்களை பார்க்கிறேன்.......
பூக்களே வாடி விழுகிறது....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
               இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

  • தொடங்கியவர்

இறைவா.....
நீயும் அவளைபோல்.....
கனவில் மட்டும்.....
வந்து போகிறாய்......!

என்  கவிதைகள்.....
சிவப்பு நிறமாய்.....
இருக்க காரணம் நீ.....!

மறதியின் இடத்துக்கு.....
மறந்து போய் போய்விட்டேன்
மறந்து போய் உன்னை.....
மறுபடியும்நினைத்து விட்டேன்........!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 

  • தொடங்கியவர்

இறைவனை உணரவும்.....
காதலில் வெல்லவும்......
காத்திருப்பு அவசியம்.......!

உன் அழகுதான்.....
என் மனதை அழுக்காக்கி......
அலையவைக்கிறது..............!

காதலிக்க தயாராகுபவர்......
இதயத்தை கல்லாக்கவும்.....
கற்றுக்கொள்ள வேண்டும்......!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

  • தொடங்கியவர்

பிரபஞ்சத்தின் உச்சம்.....
இருண்டிருக்கும் என்கிறார்கள்....
என் காதலைபோல்........!

உன்னை 
காதலித்த நாள் முதல்......
என் ஆயுள் ரேகை.....
தேய்கிறது..................!

நீ எங்கே கனவில்.......
வரப்போகிறாய்........
நான் தூங்கினால் தானே.....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

  • தொடங்கியவர்

பொல்லாதவன்.....
ஆக்கியவளே.............
உன் ஒவ்வொரு அசைவையும்......
திருட மனசை தூண்டியவளே......
உன் கொலுசைகூட........
திருடவைத்துவிட்டாய்.........
இத்தனை தவறுகளையும்......
செய்யவைத்துவிட்டு.......
எதுவுமே செய்யாதவள்........
போல் உன்னால் எப்படி.......
இருக்க முடிகிறது....................?

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

  • தொடங்கியவர்

என் கவிதையை.......
ஒவ்வொன்றாக படித்துபார்.....
காதலின் மறுபக்கம்.......
உனக்கு தெரியும்.........
படித்தவுடன் உன் கண்ணில்......
ஒரு துளி கண்ணீர் நிச்சயம்.......
வடியும்.................
அது போதும் என் காதலை.......
நீ புரிந்ததற்கு..................!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

எனக்கு ஒரே ஒரு வலி......
உன் மீது அளவில்லாத.......
காதலை என்னைவிட.......
உன்னை விரும்புபவர்கள்.......
யாரும் இருக்க போவதில்லை....!

என்னை விட்டு உன்னால்......
காதலோடு யாருடனும்.....
வாழவும் முடியாது.........
காதலோடு வாழவேண்டும்.....
காதலாய் வாழவேண்டும்.....
உயிரே வந்துவிடு.......!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

  • தொடங்கியவர்

 தத்துவ கவிதைகள்
----------------------------------

இறப்பு வீட்டுக்கு சென்ற........
பல அனுபவங்களை..........
பார்த்தபோதுகேட்ட போது.....
ஒரு உண்மை புலப்பட்டது......
இறந்த பின் எல்லோரும்........
புனிதராகிவிடுகிறார்கள்.......
இப்போதுதான் எனக்கும்......
இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

  • தொடங்கியவர்

மறதி வாழ்க்கையில்......
ஒரு இன்பம்........
மரணம் வாழ்க்கையில்......
பேரின்பம்............
மரணத்துக்காக ஏங்கும்.....
ஆத்தாவுக்கு புரியும்......
மரணத்தின் இன்பம்........!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்

மனையாள் தரும் பொருட்பட்டியலில் 

 மறந்து ரெண்டை விட்டு  வீடேகினால் 

மறதியின் இன்பத்தை கர்ணம் கிழிய 

பரிபூரணமாய் பெற்றிடலாம் ......!  tw_blush:

 

கவிதைகள் சூப்பர் புயல்.....!  tw_blush:

 

  • தொடங்கியவர்

முயற்சி என்பது.....
வெற்றியல்ல........
வெற்றி பெறவைப்பது........
பயிற்சியில்லாத முயற்சி......
தோற்றுப்போகும்........
முயற்சியும் பயிற்சியும்.....
இரட்டை குழந்தைகள்....!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்
 

  • தொடங்கியவர்

வலிகளையும்......
துன்பங்களையும்......
மறக்க உதவும் மருந்து......
புன்னகை........
இறப்புக்கு நிகரான.......
பிரசவவலியை  அனுபவித்த.....
தாயின் வலி.......
குழந்தையை பார்த்து.....
புன்னகைத்ததும்......
மறைந்து போகிறது......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன் 

  • தொடங்கியவர்

ஒருவனது மரணத்தில்.....
இத்தனை குதூகலமா..?
பாடைக்கு முன்னால்.....
குத்தாட்டமும் ......
பட்டாசுகளும்.........!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன் 

  • தொடங்கியவர்

கவிதை 
வெறும் கருத்தல்ல.....
காயத்தின் வடுவுமல்ல....
மறந்த நினைவை.......
மீட்கும் வீணையுமில்லை.....
நிகழ்கால நிகழ்வின்......
புல்லாங்குழலூமல்ல......
ஆத்தாமாவுக்கு யாரால்...?
விளக்கம் கூறமுடியும்...?
கவிதையும் அதேபோல்.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன் 
 

  • தொடங்கியவர்
On 9/23/2017 at 7:47 PM, suvy said:

மனையாள் தரும் பொருட்பட்டியலில் 

 மறந்து ரெண்டை விட்டு  வீடேகினால் 

மறதியின் இன்பத்தை கர்ணம் கிழிய 

பரிபூரணமாய் பெற்றிடலாம் ......!  tw_blush:

 

கவிதைகள் சூப்பர் புயல்.....!  tw_blush:

 

நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

நீ 
எனக்காக அழுகிறாய்
என்றால் என்னை நீ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!

நீ 
உனக்காக  அழுகிறாய்
என்றால் உன் தப்பை
உணர்ந்து அழுகிறாய்
என்று அர்த்தம் ...! 

நிச்சயம்.........
என்னைவிட உன்னை.....
விரும்பும் உறவு உன்னில்....
இல்லவே இல்லை என்பேன்....!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 11
 

  • தொடங்கியவர்

நீ
இதயத்தில் இருந்த .....
காலத்தில்  என்....
தலையெழுத்து.....
மாறிவிட்டது.......!

யார் சொன்னது.....?
கண்ணீர் வருகிறது.....
என்று.......
இதயத்தில் இருந்த-நீ
வெளியேறுகிறாய்.....!

என் 
ஆயுள்ரேகையை.....
ஆண்டவன் எழுதவில்லை.....
காதல் எழுதிவிட்டது.....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

  • தொடங்கியவர்

இதயத்தில் இருந்து.....
எதற்காக முள் வேலி.....
போடுகிறாய்.....?

தீ மிதிப்பு......
இறைவனுக்காக.......
செய்யவேண்டும்......
காதலுக்காக .....
செய்பவன் - நான் ....!

மயானத்தின்.......
பாதையால் சென்றால்.....
உன்னை அடைய முடியும்....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

  • தொடங்கியவர்

உன் அருகில் நானிருந்து ..
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

@@@@@

உன்னை தவிர எதையும் 
நினைக்காத ஞான நிலையை 
என் இதயம் பெறவேண்டும் ....!!!


@@@@@


என்னில் இருக்கும் கண்ணீர் 
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!

@@@@@

நானும் ஒரு இயந்திர மனிதன் 
உன் நினைவுகளாலும் -உன் 
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!

@@@@@

காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன் 
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி 
கூட வாழ விரும்பமாடேன் ...!!!

@@@@@

கவிப்புயல்  இனியவன் 
எஸ் ம் எஸ் கவிதைகள்

  • தொடங்கியவர்

உன் அருகில் நானிருந்து ..
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

@@@@@

உன்னை தவிர எதையும் 
நினைக்காத ஞான நிலையை 
என் இதயம் பெறவேண்டும் ....!!!


@@@@@


என்னில் இருக்கும் கண்ணீர் 
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!

@@@@@

நானும் ஒரு இயந்திர மனிதன் 
உன் நினைவுகளாலும் -உன் 
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!

@@@@@

காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன் 
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி 
கூட வாழ விரும்பமாடேன் ...!!!

@@@@@

கவிப்புயல்  இனியவன் 
எஸ் ம் எஸ் கவிதைகள்

ஆயிரம் காதல்.....
கவிதைகளை .....
எழுதிவிட்டேன்.....
எனக்குள் 
காதல் ஆலமரமாய்.....
விழுதுவிட்டு 
படர்ந்திருக்கிறது.....!

என் மூச்சு 
காற்று நிற்பதற்குள்......
என் காதலியை 
கண்டுவிடவேண்டும்.....
அவள் விரும்பும் காதல்......
கவிதையொன்றை.......
அவளுக்காக எழுத வேண்டும்.....!

&
கவிப்புயல் இனியவன்
கவி நாட்டியரசர் இனியவன்

  • தொடங்கியவர்

ஆயிரம் காதல்.....
கவிதைகளை .....
எழுதிவிட்டேன்.....
எனக்குள் 
காதல் ஆலமரமாய்.....
விழுதுவிட்டு 
படர்ந்திருக்கிறது.....!

என் மூச்சு 
காற்று நிற்பதற்குள்......
என் காதலியை 
கண்டுவிடவேண்டும்.....
அவள் விரும்பும் காதல்......
கவிதையொன்றை.......
அவளுக்காக எழுத வேண்டும்.....!

&
கவிப்புயல் இனியவன்
கவி நாட்டியரசர் இனியவன்

கையசைத்தேன் கண்ணசைத்தாள்......
கைவிலங்கிட்ட கைதியானேன்........
கைகோர்த்து பேசக்கேட்டேன்........!

கையோடு கை இணையக்கேட்டேன்.....
கை சாத்திட்டு என் கையைப்பிடி.......
கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!

கைநழுவி போகாமல் இருக்க........
கைசாத்திட சம்மதித்தேன்........
கைப்பிடி விழாவும் முடிந்தது.........!

கைவழி இசைபோல் அவள்பேச.......
கைஞ்ஞானமாகியது என் புத்தி.......
கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று .......!

கை கவிதை  மனசோடு பேசுது.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.