Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏட்டிக்குப் போட்டியாக கொழும்பு, கண்டியில் கூட்டங்கள்

Featured Replies

ஏட்­டிக்குப் போட்­டி­யாக கொழும்பு, கண்­டியில் கூட்­டங்கள்

 

ஐ.தே.க.,சு.க. உள்ளிட்ட கட்­சி­களின் 15 பிர­மாண்­ட­மான மேதினக் கூட்­டங்­க­ளுக்கு ஏற்­பாடு  
(ஆர்.யசி)

உலக தொழி­லாளர் தின­மான இன்று உழைக்கும் வர்க்­கத்தின் உரி­மை­களை பறை­சாற்றும் வகையில் பிர­தான அர­சியல் கட்­சி­களின் 15 மே தினக் கூட்­டங்கள் நாட­ளா­விய ரீதியில் இடம்­பெ­று­கின்­றன. தமது அர­சியல் பலத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி கண்­டி­யிலும், ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு தலை முன்­னணி, பொது எதி­ரணி ஆகி­யன கொழும்­பிலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அம்­பா­றை­யிலும் பிர­தான மே தினக் கூட்­டங்­களை நடத்­து­கின்­றன. 

சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தை முன்­னிட்டு உலக தொழி­லா­ளர்­களின் உரி­மை­களை பலப்­ப­டுத்தும் வகையில் சகல நாடு­க­ளிலும் பல­மான மே தினக் கூட்­டங்கள் நடை­பெ­ற­வுள்­ளன. அதேபோல் இலங்­கை­யிலும் சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தை முன்­னிட்டு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளி­

னதும், சிவில் அமைப்­பு­க­ளி­னதும், தொழிற் சங்­கங்­க­ளி­னதும் தொழி­லாளர் தின பேர­ணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மே

தினக் கூட்டம் இன்று கண்­டியில் கெட்­டம்பே மைதா­னத்தில் பிற்­பகல் 2 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

சுதந்­திர தொழி­லாளர் தினம் என அடை­யா­ளப்­ப­டுத்­திய

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மே தினம் கட்­சியின் இளைஞர் அமைப்பின் ஏற்­பாட்டில் நடை­பெ­ற­வுள்­ளது.

அதற்­க­மைய கண்டி பேரா­தனை பண்­டா­ர­நா­யக்க வீதி­யூ­டாக சுதந்­திர கட்­சியின் மே தினக்­கூட்டம் கெட்­டம்பே மைதா­னத்தை வந்­த­டையும். பிற்­பகல் இரண்டு மணிக்கு ஆரம்­பிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பேரணி பிற்­பகல் நான்கு மணிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பிர­தான கூட்­டத்­துடன் நிறை­வ­டையும். மேலும் இந்த மே தினக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள் கண்­டிக்கு செல்­வ­தற்­கான விசேட பஸ் போக்­கு­வ­ரத்­து­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மே தினக் கூட்­டத்­திற்­காக நாட்டில் சகல பாகங்­களில் இருந்தும் 2300 அரச பேருந்­துகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மையில் நடக்கும் மே தினக் கூட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சிகள் மற்றும் தொழிற்­சங்­கங்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளன. இந்த மே தின கூட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட சக­ல­ருக்கும் எழுத்து மூல அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்­சியின் உறுப்­பி­னர்கள் இந்த மே தினக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளாத நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் கட்­சியின் மத்­தி­யக்­குழு தீர்­மானம் எடுத்­துள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்சி

 பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மே தினக் கூட்டம் "வெற்­றி­பெறும் மக்­களின் மே தினம்" எனும் தொனிப்­பொ­ருளில் இம்­மு­றையும் கொழும்பில் இடம்­பெ­று­கின்­றது. கொழும்பில் மரு­தா­னையில் இருந்து பிற்­பகல் 2மணிக்கு ஆரம்­பிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பேரணி புஞ்சி பொரளை ஊடாக சென்று மரு­தானை கெம்பல் மைதா­னத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பிர­தான கூட்­ட­மாக இடம்­பெ­ற­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சியல் தலை­மைகள், தொழிற்­சங்­கங்கள் இணைந்து முன்­னெ­டுக்கும் இந்த பேர­ணியில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் இணைந்­து­கொள்­ள­வுள்­ளன . மேலும் வடக்கு கிழக்கு உள்­ளிட்ட நாட்டின் சகல பகு­தி­களில் இருந்தும் இம்­முறை மூன்று இலட்சம் ஆத­ர­வா­ளர்கள் கொழும்­பிற்கு வர­வ­ழைக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அவர்­க­ளுக்­காக 3000 பஸ்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

மக்கள் விடு­தலை முன்­னணி

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மே தினக் கூட்டம் வழ­மைக்கு மாறாக இரண்டு பகு­தி­களில் அர­சியல் தலை­மை­களை பிர­தா­னப்­ப­டுத்­திய வகையில் அமை­ய­வுள்­ளது. சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தை முன்­னிட்டு மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மக்கள் பேரணி முதல் தட­வை­யாக யாழ்ப்­ப­ணத்தில் நேற்று இடம்­பெற்­றது. இந்த பேர­ணியில் கட்­சியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக, உறுப்­பி­னர்­க­ளான லால் காந்த, டில்வின் சில்வா, சுனில் ஹந்­துன்­நெத்தி உள்­ளிட்ட அர­சியல் குழு உறுப்­பி­னர்­களும், தொழிற்­சங்க அமைப்­பு­களும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் இளைஞர் அமைப்பு உறுப்­பி­னர்­களும் சர்­வ­தேச பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டனர்.

அதேபோல் இன்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மே தின கூட்டம் தெஹி­வளை எஸ். டி.எஸ் ஜெய­சிங்க மைதா­னத்தில் இருந்து ஆரம்­பிக்கும். பிர­தான மே தினக் கூட்டம் கிரு­லப்­பனை பி. ஆர்.சி மைதா­னத்தில் நிறை­வ­டை­ய­வுள்­ளது. இந்த மே தினக் கூட்­டத்தில் தொழிற்­சங்­கங்கள், இளைஞர் முன்­னணி, சிவில் அமைப்­புகள், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சர்­வ­தேச பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

பொது எதி­ரணி

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மை­யி­லான பொது எதி­ர­ணியின் மே தினக் கூட்டம் இன்று கொழும்பில் இடம்­பெ­ற­வுள்­ளது. ஸ்ரீலங்கா பொது ஜன பெர­முன, லங்கா சம­ச­மாஜ கட்சி, ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி, மக்கள் ஐக்­கிய முன்­னணி, தேசிய சுதந்­திர முன்­னணி ஆகிய கட்­சி­களும் இணைந்து கூட்­டத்தை நடத்­து­கின்­றன. மேலும் சோஷ­லிச இலங்கை தொழி­லாளர் சங்கம், வணி­கத்­தொ­ழி­லாளர் மற்றும் முற்­போக்கு சேவை சங்கம் ஆகிய தொழிற்­சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து கொழும்பில் பல்­வேறு இடங்­களில் இருந்து ஆரம்­பிக்கும் பொது எதி­ர­ணியின் மே தினக் கூட்டம் காலி­மு­கத்­திடல் மைதா­னத்தில் பிர­தான கூட்­டத்­துடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது. இம்­முறை மே தினக் கூட்­டத்தில் 20 இலட்சம் மக்­களை இணைத்து தமது பலத்தை வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் கூட்டு எதி­ர­ணி­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இம்­முறை மேதினக் கூட்­டத்தை கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை மாவட்­டத்தில் நடாத்­து­வ­தற்கு கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான சம்­பந்தன் தலை­மையில் அர­சியல் உறுப்­பி­னர்கள் அனை­வரும் இந்த மே தினக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அதேபோல் இந்த மே தினக் கூட்­டத்தில் அர­சாங்­கத்­திற்கு கூட்­ட­மைப்­பினர் ஐந்து அம்சக் கோரிக்­கை­களை முன்­வைக்­க­வுள்­ளனர்.

தமிழர் முற்­போக்கு கூட்­டணி

அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், திகாம்­பரம் , ராதா­கி­ருஸ்ணன் ஆகி­யோரின் தலை­மையில் தமிழர் முற்­போக்கு கூட்­ட­ணியின் மே தினக் கூட்டம் மலை­யக தமி­ழரின் ஒன்­று­பட்ட சக்தி என்ற தொனிப்­பொ­ருளில் தல­வாக்­கலை நக­ர­சபை மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. மலை­யக தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் மற்றும் அர­சியல் உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்ளும் வகையில் இந்த மே தினக்­கூட்டம் அமை­ய­வுள்­ளது.

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் மே தினம்

 மலை­யக மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்கும் போராட்­ட­மாக மாற்­றப்­படும் மே தினம் என தெரி­வித்து இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தமது மே தினக் கூட்­டத்தை இம்­முறை கினி­கெத்­தேன நகரில் நடத்­து­கின்­றது. கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ஆறு­முகன் தொண்­டமான் தலை­மையில் தோட்­டத்­தொழில் சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து இந்த மே தினத்தை நடத்­த­வுள்­ளன .

இதே­வேளை ஐக்­கிய சோஷ­லிச கட்சி, ஸ்ரீலங்கா கொமி­யுனிஸ்ட் கட்சி, சோஷ­லிச சமத்­துவ கட்சி, நவ சம­ச­மாஜ கட்சி, முன்­னிலை சோஷ­லிசக் கட்சி, சோஷ­லிசக் கட்சி, கொழும்­பிலும் கொழும்­புக்கு வெளி­யிலும் கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன. கிராம சேவகர் சங்கம்,கிருஸ்­துவ தொழி­லாளர் சகோ­த­ரத்­துவ அமைப்பு, இலங்கை வங்கி சேவை­யாளர் அமைப்பு, விவ­சா­யிகள் அமைப்பு, சுதந்­திர வர்த்­தக பொது சேவைகள் அமைப்பு, ஐக்­கிய விவ­சா­யிகள் சம்­மே­ளனம் ஆகிய அமைப்­பி­களின் மே தினக் கூட்­டங்­களும் கொழும்பில் தனித்­த­னியே இடம்­பெ­ற­வுள்­ளன. மரு­தானை, கிரு­லப்­பனை, புறக்­கோட்டை, கோட்டை, வாழைத்­தோட்டம் ஆர் பிரே­ம­தாச சிலைக்கு முன்னாள், கொள்­ளுப்­பிட்டி, ஒஉ­திய நகர மண்­டபம், பலா­மரச் சந்தி, விகா­ர­மா­க­தேவி பிர­தேசம் ஆகிய இடங்­க­ளிலும் கூட்­டங்கள் நடை­பெ­ற­வுள்­ளது.

ஜாதிக ஹெல உறு­மய தனித்து

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்­டணி கட்­சி­யாக இணைந்­துள்ள ஜாதிக ஹெல உறு­மைய இம்­முறை மே தின கூட்­டத்தை தனி­யாக நடத்­த­வுள்­ளது. கொழும்பு புறக்­கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தின் முன்­பாக இவர்­களின் மே தினக் கூட்டம் காலை 11 மணிக்கு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இவர்கள் புறக்­கோட்டை பகு­தியில் தொழில் புரியும் தொழி­லா­ளர்­க­ளுடன் இணைந்து தமது மே தினக் கூட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ளன .

 மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் மேதின ஊர்­வலம் பிற்­பகல் 2 மணி­ய­ளவில் கைத­டியில் ஆரம்­ப­மாகி பின்னர் சாவ­கச்­சேரி சிவல்­கோவில் ஆலய முன்றலில் பிரதான கூட்டம் நடைபெறவுள்ளது.

உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள் தமது உரிமைக்கு குரல் கொடுக்கும் இன்றைய மேதினத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் நாம் தன்னலமற்ற பாதையில் தனித்துவமாக தொடர்ந்தும் உழைக்க உறுதி கொள்வோம் என வலியுறுத்தும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு முழுவதும் சுவரொட்டி பிரசாரம் செய்யவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சமத்துவம் சமுக நீதிக்கான மக்கள் அமைப்பின் மேதினக் கூட்டம் அவ்வமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

அதேபோல் இன்றைய தினம் கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டங்களின் காரணமாக பாதுகாப்பான வாகன போக்குவரத்து பாதைகளை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.