Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராக சசிக்கு அனுமதி

Featured Replies

வீடியோ கான்பரன்சிங்கில்
ஆஜராக சசிக்கு அனுமதி
 
 
 

சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய, சசிகலா, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆஜராகலாம் என, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

 

Tamil_News_large_1764441_318_219.jpg

ஜெஜெ, 'டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதிகளை ஏற்படுத்தியதிலும், கருவிகளை வாடகைக்கு எடுத்தல் மற்றும் வெளிநாடுகளில், சட்ட விரோதமாக பணம் முதலீடு செய்ததிலும், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, சசிகலா, அவரது அக்கா மகன்கள் தினகரன் மற்றும் பாஸ்கரன் மீது1990 ல், அமலாக்கப்பிரிவு வழக்குகளை தொடர்ந்தது.

இந்த வழக்குகள், சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1 மற்றும், 2ல் நடந்து வருகிறது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், தினகரன், திகார் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன், அன்னிய செலாவணி மோசடி வழக்கில், மாஜிஸ்திரேட், மலர்மதி முன் ஆஜரானார்.

அப்போது, குற்றச்சாட்டுகள் பதிவு

செய்யப்பட்டன. இதேபோன்று, மற்றொரு வழக்கில், அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டி உள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீதும், மூன்று வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1, மாஜிஸ்திரேட்,ஜாகீர் உசேன் உத்தரவிட்டு இருந்தார்.

சில தினங்களுக்கு முன், இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் குமார், 'பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவுக்கு முதுகுவலி உள்ளது; அவரால் நீண்ட துாரம் பயணிக்க இயலாது. 'அவர், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும்' என, கோரினார்.

இந்த வழக்குகள், நேற்று விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'சசிகலா, வீடியோ கான்பரன்சிங் வாயிலாக, ஆஜராக அனுமதிக்க வேண்டும்' என, மனு அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட, மாஜிஸ்திரேட், ஜாகீர் உசேன் பிறப்பித்த உத்தரவு:

* பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலா, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆஜராகும் போது, அவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய, எந்த மொழியை தேர்வுசெய்துள்ளார் என, இரு வாரத்திற் குள், தெரிவிக்க வேண்டும்
* 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக குற்றச்சாட்டு கள் பதிவு செய்யப்பட்ட பின், 'திருப்தி இல்லை' என, கூறக்கூடாது
* 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆஜராவது பற்றி, பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகள்

 

மற்றும் அம்மாநில உள்துறை செயலர் அனுமதி அளித்ததற்கான சான்றிதழ்களை தாக் கல் செய்ய வேண்டும்; ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு, காலத்தை வீணடிக்க கூடாது
* இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை, மே 18க்கு தள்ளிவைக் கப்படுகிறது. அன்று, சசிகலா, 'வீடியோ கான்பரன்சிங்'கில் ஆஜரா கும் தேதி இறுதி செய்யப்படும்.இவ்வாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
 

பாஸ்கரன் நேரில் ஆஜர்


அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர் பாக, மாஜிஸ்திரேட், ஜாகீர் உசேன் முன், பாஸ்கரன் நேற்று, நேரில் ஆஜரானார். அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அவர் குற்றச்சாட்டு களை மறுத்தார். மேலும், அரசு தரப்பு சாட்சி களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரினார். இந்த வழக்கு விசாரணை, மே 10க்கு தள்ளி வைக்கப் பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1764441

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:
வீடியோ கான்பரன்சிங்கில்
ஆஜராக சசிக்கு அனுமதி

இனியென்ன....செல்லம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியிலை வரும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.