Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபத்தான புலிகளையும் விடுவித்துவிட்டு எனது பாதுகாப்பையும் குறைக்கிறது அரசு

Featured Replies

ஆபத்­தான புலி­க­ளை­யும் விடு­வித்­து­விட்டு எனது பாது­காப்­பை­யும் குறைக்­கி­றது அரசு

மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க முடி­யா­த­வர்­கள் எனக் கருதி தொடர்ந்­தும் தடுப்­பில் வைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் ஆபத்­தான உறுப்­பி­னர்­களை விடு­தலை செய்­து­கொண்டு மறு­பு­றத்­தில் தனக்­கான பாது­காப்­பை­யும் இந்த அரசு குறைத்­துள்­ளது என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கவ­லை­யும் விச­ன­மும் தெரி­வித்­துள்­ளார்.

அவ­ரது ஊட­கப் பிரி­வி­னால் அனுப்பி வைக்­கப்­பட்ட பத்­தி­ரி­கைக் குறிப்­பில் இது தொடர்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­க­விற்கு வழங்­கப்­பட்ட பாது­காப்பை நீதி­மன்­றத்­தின் ஊடா­கக்­கு­றைப்­ப­தற்கு, மகிந்த ராஜ­பக்ச நட­வ­டிக்கை எடுத்­த­தாக அர­சி­யல்­வா­தி­கள் சிலர் கூறி­ய­மைக்கு ஊட­கங்­கள் முக்­கி­யத்­து­வம் வழங்­கி­யுள்­ளன. இதனை நாம் முற்­றாக நிரா­க­ரிக்­கின்­றோம்.

மகிந்த ராஜ­பக்­சவோ, முன்­னாள் அரச அதி­பர் செய­ல­கமோ, பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளரோ நீதி­மன்­றத்­தில் இது தொடர்­பில் மனுத் தாக்­கல் செய்­ய­வில்லை.

அரச சார்­பற்ற நிறு­வ­னமே அதனை மேற்­கொண்­டி­ருந்­தது.
முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க விடுத்த வேண்­டு­கோ­ளைத் தொடர்ந்து, அப்­போ­தைய பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­பக்ச அவ­ரைச் சந்­தித்­தி­ருந்­தார். அதன் பின்­னர் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­ச­னை­களை மேற்­கொண்­டார். இத­னை­ய­டுத்த முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிக்­கா­வுக்­குத் தேவை­யான பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

நீதி­மன்­றம் உத்­த­ர­விட்ட போதி­லும் முன்­னாள் அரச தலை­வ­ரின் பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளில் எந்த மாற்­ற­மும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. எனி­னும் சில வங்­கு­ரோத்து அர­சி­யல்­வா­தி­கள் தங்­கள் பழி­வாங்­கல் நட­வ­டிக்­கை­களை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­காக அறிக்­கை­களை விடுத்து வரு­கின்­ற­னர்.

இலங்­கை­யின் தற்­போ­தைய அர­சின் கீழ் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்கு புத்­து­யிர் அளிப்­ப­தற்­கான பல முயற்­சி­கள் இடம்­பெற்­றுள்­ளன. இந்த வருட ஆரம்­பத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரைக் கொல்­வ­தற்­கான சதி அம்­ப­ல­மா­னது.

அரசு தடுப்­பில் உள்ள மிக­வும் ஆபத்­தான பயங்­க­ர­வா­தி­களை தொடர்ந்­தும் விடு­தலை செய்து வரு­கின்­றது. மகிந்­த­வின் காலத்­தில் சுமார் 10 ஆயி­ரம் விடு­த­லைப் புலி­க­ளுக்கு மறு வாழ்வு வழங்­கப்­பட்­டது. மறு வாழ்வு வழங்க முடி­யா­த­வர்­கள் என்று கரு­தி­ய­வர்­க­ளையே தொடர்ந்­தும் தடுப்­பில் வைத்­தி­ருந்­தது.

அவர்­களை அரசு தற்­போது விடு­தலை செய்து வரு­கின்­றது. இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அரசு, மகிந்த ராஜ­பக்­ச­வின் பாது­காப்பை பெரு­ம­ள­வில் குறைப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது –என்று அந்த அறிக்­கை­யில் உள்­ளது.

http://uthayandaily.com/story/1774.html

  • தொடங்கியவர்

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­டாமல் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி­க­ளினால் எனக்கு உயி­ரா­பத்து : மஹிந்த

 

 

தற்­போதைய அர­சாங்­கத்­தினால் விடு­விக்­கப்­பட்ட புனர்­வாழ்­வ­ளிக்­கப்­படாத விடு­தலை புலி­க­ளி­னா­லேயே தனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

mahindha.jpg

அதே­நேரம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் பாதுகாப்புச் செயற்பாடுகளை அவரின் வீட்டிற்கே சென்று கோத்தபாய ராஜபக் ஷ சீர் செய்து கொடுத்தாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஊட­கப்­பி­ரிவு விடுத்­துள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பாது­காப்பை குறைக்­கு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உயர் நீதி­மன்­றத்தில் மனு­வொன்றை தாக்கல் செய்த­தாக அர­சாங்க தரப்பு அர­சியல் வாதிகள் சிலரால் பரப்­பப்படும் கருத்­துக்கள் முற்­றிலும் பொய்­யா­னவை.

இவை வெறும் பிர­பல்­யத்­திற்­கான பிர­சாரம் மட்­டு­மே­யாகும். எந்த ஒரு மனுவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வி­னாலோ அல்­லது ஜனா­தி­பதி செய­லா­ளரி­னாலோ அல்­லது பாது­காப்பு செய­லா­ள­ரி­னா­லேயோ தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை.

இது அர­ச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்­றினால் தாக்கல் செய்­யப்­பட்­ட தனிப்­பட்ட மனு­வாகும். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க பண்­டா­ர­நா­யக்க தனது பாது­காப்பு தொடர்பில் கவ­ன­மெ­டுக்­கு­மாறு முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விடம் கேட்­ட­ போது அவர் அவ­ரது வீட்­டிற்கே சென்று அவ­ரது சிரேஷ்ட பாது­காப்பு அலு­வ­லர்­களை சந்­தித்து பாது­காப்பு வச­தி­களை சரி­ செய்­து­விட்டு வந்தார்.

அவ­ரது பாது­காப்பு ஒழுங்­கு ­மு­றை­களில் எவ்­வி­த­மான மாற்­றங்­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான கோரிக்­கைகள் பல தட­வைகள் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் சிரேஷ்ட பாதுகாப்பு அலு­வ­ல­ரினால் விடுக்­கப்­பட்ட போதும் நாம் அதனை உறுதி செய்தோம். 

சில அர­சியல் வாதிகள் தமது விம்­பத்­துக்கு பொருத்­த­மான வகையில் மக்­க­ளிடம் கருத்­து­களை பரப்பி வரு­கின்­றார்கள். அது அவர்­களின் சொந்த நியா­யப்­பா­டு­க­ளாகும். இந்த அர­சாங்­கத்­திலும் கூட பல தட­வைகள் புலி­களின் சதி முயற்­சிகள் அரங்­கேறி­யுள்­ளன. உதா­ர­ண­மாக இவ்­வ­ரு­டத்தின் ஆரம்­பத்தில் புலம்­பெயர் உறுப்­பினர் ஒருவர் தமி­ழ­ரசுக் கட்­சியின் பிர­தான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை தாக்க முற்­பட்­டி­ருந்தார்.

அது­ம­­ட்டு­மல்­லாது இரண்டு கிளைமோர் குண்­டு­களும் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. இது­போன்ற விடு­தலை புலி­களின் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இந்த அர­சாங்­கத்­திலும் தொடர்­கின்­றன. ஆனால் எனது அர­சாங்­கத்தில் 11 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட விடு­தலை புலி­களை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்தேன்.

ஒரு சிலரை மட்­டுமே எம்மால் புனர்­வாழ்­வுக்­குட்­ப­டுத்த முடி­யாமல் போனது. அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களினாலேயே எனது அச்சுறுத்தல் ஏற்படும்.

அந்த வகையில் 30 வருடகால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற வகையிலும் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்தவர் என்ற வகையில் தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 

http://www.virakesari.lk/article/19851

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மேலுள்ள பயம் இன்னும் குறைந்த மாதிரி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நவீனன் said:

ஆபத்­தான புலி­க­ளை­யும் விடு­வித்­து­விட்டு எனது பாது­காப்­பை­யும் குறைக்­கி­றது அரசு

மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க முடி­யா­த­வர்­கள் எனக் கருதி தொடர்ந்­தும் தடுப்­பில் வைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் ஆபத்­தான உறுப்­பி­னர்­களை விடு­தலை செய்­து­கொண்டு மறு­பு­றத்­தில் தனக்­கான பாது­காப்­பை­யும் இந்த அரசு குறைத்­துள்­ளது என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கவ­லை­யும் விச­ன­மும் தெரி­வித்­துள்­ளார்.

இவங்களுக்கு புலியை விட்டால் சோறுபோட ஆக்களில்லை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.