Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருக்கு உருளைகளும் குண்டடிபடும் உண்மைகளும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உருக்கு உருளைகளும் குண்டடிபடும் உண்மைகளும்!

-இமயவரம்பன்

கொழும்பில் மருதாணையில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய வீதி இருக்கின்றது. அந்த வீதி நெடுகிலும் உந்து உதிரிப்பாகக் கடைகள், தூத்துக்குடியில் பிறந்து கொழும்பு சென்று, பழைய இரும்பு வாங்கி விற்று, ஈர்வளைய உருளை வணிகத்தில் கொடிகட்டிப் பறந்து, உலக வங்கியிடம் நேரடிக் கடன் பெற்ற முதல் தமிழர் எனப் புகழ் பெற்றவரான ஏ. ஞானம், பஞ்சிகாவத்தையில் தன் வாழ்வைத் தொடங்கியவர். அவரைப் போன்ற புகழ்பெற்ற பல்லின (சிங்கள, தமிழ் முசுலிம்) வணிகர் பஞ்சிகாவத்தையில் உளர்.

இலங்கையிலேயே ஈர்வளைய உருக்கு உள் உருளை மொத்த வணிகத்தின் தாயகம் பஞ்சிகாவத்தை. நாளொன்றுக்குப் பல டன் எடையில் அவை அங்கு விற்பனையாகின்றன. பல நாடுகளில் இருந்து இறக்குமதியாகியே அவை விற்பனையாகின்றன. ஏனெனில் இலங்கையில் அவை உற்பத்தியாவதில்லை.

இலங்கையில் உற்பத்தியாகி மிக அதிகமாக விலைபோகும் ஒரே பொருள் சிங்கள புத்த இனவெறி. இனவெறியை உற்பத்தி செய்து சந்தைப் படுத்துவதில் பொழுதைப் போக்கும் சிங்கள அரசியல்வாதிகள், மக்களின் பிற தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. இதனால் அடிப்படை உற்பத்தி அங்கு நடைபெறுவதில்லை. சிங்கள புத்த இனவெறியின் நீட்டமாக, போர் நடைபெறுகிறது. சிங்கள இனவெறிக்கு எதிரானவர் யாவரும் பயங்கரவாதிகள் எனப் பட்டம் சூட்டப்படுகின்றனர். எனவேதான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் அங்கு நடைபெறுவதாக சிங்கள அரசு உரக்கக் கூவி உலகை ஏமாற்ற முற்படுகிறது.

அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 45% போர்ச் செலவினங்களுக்காக, அல்ல அல்ல சிங்கள புத்த இன வெறியை முன்னெடுப்பதற்காக.

எனவே இலங்கையில் அரிசி, (உணவு) துணி (உடை), ஓடு (உறைவிடம்) முதலாக அனைத்துப் பண்டங்களுமே இறக்குமதியாகின்றன. போர்ச் செலவுகளுக்கு இறக்குமதி வரிகளே தீனி. இந்த இறக்குமதி வரியைத் தவிர்த்து, கடத்தல் வழி கொணர்தல் வணிகருக்குக் கொள்ளையான நயம்.

பஞ்சிகாவத்தைக்கு வரும் உதிரிகள் பல கடத்தலாகவே உள்வருகின்றன. அவற்றுள் உருக்கு உருளைகள் அடங்கும். சுங்க அலுவலருக்குக் கையூட்டுக் கொடுத்தாலே போதும். வழக்கமாக வரும் கப்பல்களிலே கடத்தல் பொருள் வந்து சேரும்.

மும்பையில் உற்பத்தியாகி, சென்னை தூத்துக்குடி வழியாகக் கொழும்பு பஞ்சிகாவத்தைக்குப் போகின்றன உருக்கு உருளைகள். தூத்துக்குடியில் சுங்க அலுவலருக்கும் தெரியும், கொழும்பில் சுங்க அலுவலருக்கும் தெரியும். இந்தக் கடத்தல் இன்று நேற்றல்ல, பல்லாண்டுகளாகவே தொடரும் கடத்தல், உருக்கு உருளைகள் மட்டுமல்ல, பல்வேறு பொருள்களைக் கடத்துவது அந்தப் பகுதியில் பலருக்குத் தெரிந்த, வருவாய் தரும் தொழில்.

துருவித் துருவி ஆராய்ந்தால், புகழ் பெற்ற தமிழ் முசுலிம், சிங்களப் பெயர்கள், அரசியல்வாதிளின் பெயர்கள் இதில் வெளிவரும். தூத்துக்குடியிலும் வெளிவரும் கொழும்பிலும் வெளிவரும்.

1970களில் சிறீமாவோ ஆட்சிக்காலத்தில் வற்றல் மிளகாய்த் தட்டுப்பாடு வந்ததும், வள்ளம் வள்ளமாகத் தமிழகக் கரையோரங்களிலிருந்து சுங்க மற்றும் காவல்களைத் தாண்டி இலங்கைக்கு வற்றல் மிளகாய் கடத்தப்பட்டதை எவரும் மறக்க முடியாது.

இன்று அதே வற்றல் மிளகாயைக் கடத்தினால் விடுதலைப் போராளிகள், மிளகாய்ப் பொடி தயாரித்துச் சிங்கள பொதுமக்கள் கண்களிலும் சிங்களக் கூலிப் படையின் கண்களிலும் தூவிக் குருடாக்குவதற்காகக் கடத்தப்படுவதாகக் கொழும்பு அரசும் அவர்களுக்குத் துதிபாடும் தமிழக ஊடகங்களும் பேசுவர், எழுதுவர், நியாயங்களைக் குருடாக்குவர்.

தமிழகக் காவல்துறைக்கும் இந்தக் கண்ணோட்டம் தேனாய் இனிக்கும். ஆகா, விடுதலைப் போராளிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் எனக் காலத்தை ஓட்டலாம் அல்லவா?

தமிழகக் காவல்துறையின் செயல்பாடுகளுக்கும் பின்னணி இல்லாமல் இல்லை. தமிழ்த் தேசிய உணர்வு எதிர்ப்பாளர் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து காவல்துறைக்குள் இருப்பது மட்டுமல்ல, தமிழருக்குள்ளே அவர்களுக்கு அடிவருடிகளும் இருக்கிறார்கள்.

மிளகாயைக் கடத்தினால் இலங்கைப் போராளிகள் சிங்களப் பொதுமக்கள் கண்ணுள் மிளகாய்ப் பொடி தூவிச் சிங்களவரைக் குருடாக்க முயல்கிறார் என்பர். போதைப் பொருளைக் கடத்தினால் போராளிகளின் நிதிக்குக் கடத்தல் உதவுகிறது என்பர். எந்த ஒரு கடத்தலும் தமிழ்ப்போராளிகளுக்குத் தொடர்புடையதே எனக் கூசாது கூறுவதில் கோயபல்சை மிஞ்சியவர்கள் இந்தத் தமிழ்த்தேசிய உணர்வற்ற அடிமை மோகிகள்.

கலைஞரை அச்சுறுத்த வேண்டும், தமிழ்த் தேசிய உணர்வாளரை மழுங்கடிக்க வேண்டும், தமிழ்ப் போராளிகளைக் கொச்சைப்படுத்த வேண்டும். ஒரே கல்லில் பல மாங்காய்கள். இதுவே இவர்களின் அடிப்படை நோக்கம்.

செயலலிதா ஆட்சிக்காலத்தில் இதே உருக்கு உருளைகளை குறுணி தொடக்கம் குண்டானது வரை, பெருந்தொகையாக டன் டன்னாகக் கொழும்புக்குத் தூத்துக்குடி வழியாகக் கடத்தியுள்ளனர். இப்பொழுதைய விசாரணையில் அந்தச் செய்தி தெளிவாக வந்திருக்கிறது.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் அவை பெயர் மாற்றம் பெற்றன, குறுணிகளே குண்டுகளாயின. உருண்டிருப்பது எல்லாமே குண்டுதானா? குறுணி உருக்கு உருளைகள் மேல் காற்றாடிக்குள்ளே புதைந்திருக்கின்றன, குண்டுகளைப் புதைத்துக் காற்றாடியை வணிகர் விற்றார் என ஏன் அறிக்கை விடவில்லை.

மும்பையில் தமிழ்ப் போராளிகளின் ஊடுருவல், சென்னையில் தமிழ்ப் போராளிகள் ஊடுருவல், அகதி முகாம்களிலிருந்து எவரும் வெளியேறக்கூடாது, காவல்துறை தயார் நிலையில் என்றெல்லாம் சென்னையில் மட்டுமல்ல, கொழும்பிலுள்ள ஊடகங்களும் பெருங்கூச்சலிடுகின்றன.

மிளகாயைக் கடத்தினால் மிளகாய்ப் பொடி நியாயங்களைக் குருடாக்கும், உருக்கு உருளைகளைக் கடத்தினால் உண்மைகள் குண்டடிபடும்.

மிளகாயோ, உருக்கு உருளைகளோ உற்பத்தியாளருக்கு வருவாய் தருவன. நாட்டை வளப்படுத்துவன. சிங்கள புத்த இனவெறியைக் கட்டவிழ்த்து விட்டுப் போராக்கி, கொன்று குவிப்பதையே தொழிலாகக் கொண்டிருப்போருக்கு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் அக்கறையே இல்லாததால், நியாயமான தமிழ்த் தேசிய உணர்வாளரும், தூய்மையைத் தாங்கிய தமிழ்ப் போராளிகளும் உருக்கு உருளைக் கடத்தலுக்குப் பலிகடாக்களாகலாமா?

- தென்செய்தி

வெடிமருந்து செய்வதற்கு கொண்டு செல்லப்பட்ட அலுமினியக் கட்டிகளை தாம் கைப்பற்றி இருப்பதாக தமிழக காவல்துறை சொல்கிறது.

சிறீ லங்காவின் பஞ்சிகாவத்தைக்கு உருக்கு உருளைகள் காலம், காலமாக கடத்தப்படுவதாக கட்டுரை கூறுகிறது.

அப்படியானால் இவ்வளவு காலமுமாக பஞ்சிகாவத்தையிலிருந்தா புலிகளிற்கு வெடிமருந்துகள் செய்யப்பட்டு வன்னிக்கு அனுப்பப்படுகின்றன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.