Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரத பிரதமர் இன்று வருகிறார் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்புக்கு ஏற்பாடு

Featured Replies

பாரத பிரதமர் இன்று வருகிறார் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்புக்கு ஏற்பாடு

 

 

(ரொபட் அன்­டனி)

narendramodipti.jpg

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு  இன்று  வியா­ழக்­கி­ழமை மாலை இலங்­கைக்கு வருகை தரு­கின்றார். 

வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­ மிக்­க­தாக அமைந்­துள்ள  இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க,  

 எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தி­நி­திகள்,  இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரை அவர்   சந்­தித்து  பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.  

அத்­துடன் நாளை கொழும்பில்  ஆரம்­ப­மா­க­வுள்ள  ஐக்­கிய நாடு­களின் வெசாக் தின நிகழ்வை  ஆரம்­பித்து வைக்­க­வுள்ள  இந்­திய பிர­தமர் மோடி,  டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சா­லை­யையும் திறந்து  வைப்பார். அட்டன், டன்பார் மைதா­னத்தில் நடை­பெறும் மாபெரும் கூட்­டத்­திலும்   இந்­திய பிர­தமர் மோடி உரை­யாற்­ற­வுள்ளார்.  

பிர­தமர்  ரணில் வர­வேற்பு 

இன்று வியா­ழக்­கி­ழமை  மாலை 6.15 மணி­ய­ளவில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டை­ய­வுள்ளார்.   இலங்கை வரும்   இந்­திய  பிர­த­மரை   கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில்  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க  தலை­மை­யி­லான குழு­வினர் வர­வேற்பார் என்று  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   

கட்­டு­நா­யக்­கவில்  இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை வர­வேற்­ப­தற்­காக விசேட நிகழ்வு ஒன்றும்  ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­போது   வர­வேற்பு நிகழ்வு  இடம்­பெ­ற­வுள்­ள­துடன் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின்  மிக முக்­கிய விருந்­தி­னர்­க­ளுக்­கான அறையில்  கலந்­து­ரை­யாடல் ஒன்றும் நடை­பெறும்.    

மேலும் வர­வேற்பு நிகழ்வில்  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன்  பல  அமைச்­சர்­களும்  பிரதி அமைச்­சர்­களும்  கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.  அத்­துடன்  இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னிகர் தரன்ஜித் சிங் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களும்  கட்­டு­நா­யக்க விமான நிலைய வர­வேற்பு நிகழ்வில் கலந்­து­கொள்­வார்கள். 

கங்­கா­ராம விஜயம் 

அதனை தொடர்ந்து கொழும்பை வந்­த­டையும்  இந்­திய பிர­தமர் மோடி கங்­கா­ராம விஹா­ரைக்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.   தொடர்ந்து ஜனா­தி­பதி மாளி­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின்  இரவு விருந்­து­பார நிகழ்­விலும்   கலந்­து­கொள்­ள­வுள்ளார். இதன்­போது பல்­வேறு  சந்­திப்­புக்­க­ளிலும் இந்­திய பிர­தமர் ஈடு­ப­ட­வுள்ளார்.  

ஐக்­கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வு  

இன்று  வெள்­ளிக்­கி­ழமை காலை 9.30 மணி­ய­ளவில் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் ஆரம்­ப­மாகும்  ஐக்­கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை  இந்­திய பிர­தமர் நரேந்­திர  மோடி ஆரம்­பித்து  வைக்­க­வுள்ளார். 

இந்த நிகழ்வில்  இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி,  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன,  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க   புத்­த­சா­சன மற்றும் நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ மற்றும் பௌத்த மத தலை­வர்கள் பலரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.   எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட  அமைச்­சர்­களும் பிர­தி­ய­மைச்­சர்­களும்  இரா­ஜாங்க அமைச்­சர்­களும் உயர்­மட்ட அரச அதி­கா­ரி­களும்    வெ ளிநாட்டு தூது­வர்­களும் இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.  

ஐக்­கிய நாடுகள் வெசாக்­தின ஆரம்ப நிகழ்வில் 10 மணி­யி­லி­ருந்து 10.20 வரை   இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உரை­யாற்­ற­வுள்ளார்.  அத்­துடன்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும்   பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் உரை­யாற்­ற­வுள்­ளனர். வர­வேற்­பு­ரையை   புத்­த­சா­சன அமைச்சர்  விஜே­தாச ராஜ­பக்ஷ  நிகழ்த்­துவார்.   மேலும் இந்த நிகழ்வில் பௌத்த மத தலை­வர்­களும்  படி­ர­தான உரை­யாற்­ற­வுள்­ளனர். 

மலை­யக விஜயம் 

காலை 11.00 மணி­ய­ளவில்   மலை­ய­கத்­துக்கு செல்­ல­வுள்ள   இந்­திய பிர­தமர் மோடி  டிக்­கோயா - கிளங்கன் வைத்­தி­ய­சா­லையை  திறந்­து­வைக்­க­வுள்ளார். அதன் பின்னர் அட்டன், டன்பார் மைதா­னத்தில் இடம்­பெறும்  பொதுக் கூட்­டத்­திலும்  இந்­திய  பிர­தமர்  உரை­யாற்­ற­வுள்ளார்.   இக்­கூட்­டத்தில் அமைச்சர் மனோ கணேசன் வர­வேற்­புரை நிகழ்த்­த­வுள்­ள­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரும் உரை நிகழ்த்­த­வுள்­ளனர். இதனைத் தொடர்ந்து பிர­தமர் நரேந்­திர மோடி உரை­யாற்­று­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்தக் கூட்­டத்தைத் தொடர்ந்து  அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான  தமிழ் முற்­போக்கு கூட்­டணி மற்றும்  ஆறு­முகன் தொண்­டமான் தலை­மை­யி­லான இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­யி­னரை   சந்­தித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். 

தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யு­ட­னான    சந்­திப்பின் போது, 2015ஆம் ஆண்டில் முதன் முறை­யாக பிர­தமர் மோடி இலங்கை வந்­த­போது,  இடம் பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் பின்­தொ­டர்ச்சி பற்றி  ஆரா­யப்­படும் என  அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார். 

அத்­துடன்  வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரு­முறை இலங்கை வந்­த­போது  முற்­போக்கு கூட்­ட­ணியை சந்­தித்­த­போது   இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் பெறு­பே­றுகள் பற்­றியும் கலந்து ஆரா­யப்­படும் என தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் குறிப்­பிட்­டுள்ளார். 

இந்த சந்­திப்­புக்­களை அடுத்து  தலதா மாளி­கைக்கு செல்­ல­வுள்ள  இந்­திய பிர­தமர் மோடி அங்கு இடம்­பெறும் நிகழ்­வு­களில் பங்­கேற்­க­வுள்ளார்.    தொடர்ந்து அங்­கி­ருந்­த­வாறு   கட்­டு­நா­யக்க வரும் இந்­திய  பிர­தமர்   நாடு திரும்­ப­வுள்ளார்.  

கூட்­ட­மைப்­பி­ன­ருடன் சந்­திப்பு

இந்­தியப் பிர­தமர் நாடு திரும்­பு­வ­தற்கு முன்னர் விமான நிலை­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்து பேச­வுள்ளார். இந்தச் சந்­திப்பின் போது அதி­காரப் பகிர்வு தொடர்­பிலும் தமிழ் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்தும் கூட்­ட­மைப்­பினர் எடுத்துக் கூற­வுள்­ளனர்.

இது இவ்­வாறு இருக்க  சுமார்  ஆறா­யிரம் பொலிஸ் அதி­கா­ரிகள்  இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது விசேட  பாது­காப்பு கட­மை­களில் ஈடு­ப­டு­வார்கள்    என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  குறிப்­பாக  கொழும்பு மற்றும் கண்டி மாவட்­டங்­களில்  கடும் பாது­காப்பு ஏற்­பா­டுகள்    மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.   

இதே­வேளை இலங்­கைக்கு வருகை தரு­கின்ற இந்­திய  பிர­தமர்  நரேந்­திர மோடி இலங்­கை­யுடன் எவ்­வி­தான  உடன்­ப­டிக்­கை­க­ளிலும் கைச்­சாத்­தி­ட­மாட்டார் என்று  ஜனா­தி­பதி மைத்­தி­பால சிறி­சே­னவும்  அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித்த சேனா­ரட்­னவும்  கடந்­த­வாரம் தெரி­வித்­தி­ருந்­தனர். 

ஐக்­கிய நாடுகள் வெசக் தினம் இம் முறை இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள நிலையில்  இந்த சிறப்பு நிகழ்வின் பிர­தம அதி­தி­யாக கலந்துக் கொள்­வ­தற்­கா­கவே இந்­திய பிர­தமர் இலங்­கைக்கு வரு­கின்றார். 

ஐ.நா. வெசக் தினம் இதற்கு முன்னர் இரண்டு நாடு­களில்  13 தட­வைகள் இடம்­பெற்­றுள்­ளன. தாய்­லாந்தில் 11 தட­வை­களும் வியட்­னாமில் 2 தட­வை­க­ளு­மாக இடம்­பெற்­றுள்­ள­துடன் மூன்­றா­வது நாடாக   இலங்கை அமைந்­துள்­ளது. 1999 ஆம் ஆண்டில் அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரான ல­க்ஷமன் கதிர்­காமர் பௌத்த மதத்தில் இலங்­கைக்­குள்ள சிறப்­பு­களை எடுத்­து­ரைத்து ஐ.நா.வில் வலி­யு­றுத்­தி­ய­மைக்கு அமை­வாக இந்த வாய்ப்பு கிடைத்­துள்­ளது.  

இலங்­கையில் நடை­பெ­று­கின்ற ஐக்­கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்­து­கொள்­வ­தாக   அமெ­ரிக்கா   சீனா மற்றும் ஜப்பான் உள்­ளிட்ட சுமார் எண்­ப­திற்கும் மேற்­பட்ட  நாடுகள் வரு­கையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர்  2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டார்.    அதன் பின்னர்  2016 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம்  டில்­லியில் நடை­பெற்ற  பீம்ஸ்டெக் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக  இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்தார். 

இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர்  இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி  கடந்த  2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  இலங்­கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.   அதன் பின்னர்  தற்போது இலங்கைக்கு வருகின்றார்.  இடைப்பட்ட காலத்தில்   இரண்டு நாடுகளினதும் அமைச்சர்களும்  பிரதியமைச்சர்களும் அவ்வப்போது  உத்தியோகபூர்வ விஜயங்களை  மேற்கொண்டிருந்தனர்.  

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தக கொடுக்கல் வாங்கல் பெறுமதியானது  2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 

இரண்டு நாடுகளுக்கு இடையிலும் பொருளாதார தொழில்நுட்ப  உடன்படிக்கையை செய்துகொள்ளும் நோக்கில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.   விரைவில் இந்த உடன்படிக்கை  கைச்சாத்திடப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை  கடந்த 2000 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.   அந்தவகையில்  இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயமானது  முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது. 

http://www.virakesari.lk/article/19896

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

ஐ.நா. வெசக் தினம் இதற்கு முன்னர் இரண்டு நாடு­களில்  13 தட­வைகள் இடம்­பெற்­றுள்­ளன. தாய்­லாந்தில் 11 தட­வை­களும் வியட்­னாமில் 2 தட­வை­க­ளு­மாக இடம்­பெற்­றுள்­ள­துடன் மூன்­றா­வது நாடாக   இலங்கை அமைந்­துள்­ளது. 1999 ஆம் ஆண்டில் அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரான ல­க்ஷமன் கதிர்­காமர் பௌத்த மதத்தில் இலங்­கைக்­குள்ள சிறப்­பு­களை எடுத்­து­ரைத்து ஐ.நா.வில் வலி­யு­றுத்­தி­ய­மைக்கு அமை­வாக இந்த வாய்ப்பு கிடைத்­துள்­ளது.  

கதிர்காமரின் அரசியல் ஐ.நா மூலம் மோடியுடாக தொடர்கிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.