Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அங்குரார்ப்பண நிகழ்வில் மோடி

Featured Replies

அங்குரார்ப்பண நிகழ்வில் மோடி
 
 

article_1494563741-m2.jpg

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று காலை ஆரம்பமான சர்வதேச வெசாக் தின அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். 

article_1494563752-m1.jpg

- See more at: http://www.tamilmirror.lk/196476/அங-க-ர-ர-ப-பண-ந-கழ-வ-ல-ம-ட-#sthash.jigQTsvD.dpuf
மோடியின் விசேட உரையானது ‘3 மொழிகளில் உரைபெயர்ப்பு’
 
12-05-2017 09:37 AM
Comments - 0       Views - 11

article_1494562180-12.jpgடி.ஷங்கீதன்   

நோர்வூட் மைதானத்தில், இன்று (12) இடம்பெறும் பிரதான வைபவத்தில் பங்கேற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையை ஆங்கில மொழியிலேயே நிகழ்த்தவுள்ளார். 

அவருடைய உரையானது, தமிழ், சிங்களம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும், பின்னர் உரைபெயர்க்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

இந்த விசேட வைபவத்தின் வரவேற்புரையை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

வரவேற்புரையை தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஆகியோரின் உரைகள் இடம்பெறும். இறுதியாகவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.   

கோரிக்கைகளை முன்வைக்க எதிர்ப்பார்ப்பு  இந்திய அரசாங்கத்தின் உதவியில், மலையகத்துக்கு மேலும் 25,000 வீடுகள் கட்டித்தரப்படவேண்டும் உள்ளிட்ட இன்னும் பல கோரிக்கைகளை தமிழ் முற்போக்குக் கூட்டணி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் எமக்கு வழக்கப்பட்டுள்ளது. இதன்போதே, மேற்படி கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.   

“மலையகத்தின், சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முகமாக, வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

மலையகத்தின் கல்வி அபிவிருத்திக்காக, தமிழகத்திலிருந்து ஆசிரியர்களையும் அதே நேரத்தில் மலையகத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை அமைப்பதற்கும், கணினித் தொழில்நுட்பப் பயிற்சிகளை எமது இளைஞர் யுவதிகளுக்கு மலையக பகுதிகளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்போம்.   

இதேவேளை, வடக்கு,கிழக்குக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுகின்ற போது, மலையக மக்களின் அரசியல் தீர்வுக்கும் அவர்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் அதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் முன்வைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இணையும் மலையக தலைவர்கள்  மலையகத் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்வதை, பார்ப்பதற்கான வாய்ப்பு, மலையக மக்களுக்கு, இன்று (12) கிட்டவுள்ளது.   

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நோர்வூட் நகரில் பங்கேற்கும் விசேட நிகழ்வின் போதே, மலையக தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.   

அந்த வகையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் எம்.பி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் ஆகியோர், ஒரே மேடையில் அமரவுள்ளனர்.  அவர்களுடன், அந்த கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமரவுள்ளனர்.    

- See more at: http://www.tamilmirror.lk/196472/ம-ட-ய-ன-வ-ச-ட-உர-ய-னத-ம-ழ-கள-ல-உர-ப-யர-ப-ப-#sthash.6kERKOZv.dpuf
  • தொடங்கியவர்

ஐக்கிய நாடுகள் செவாக் தின நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் இந்தியப் பிரதமர்

Published by Priyatharshan on 2017-05-12 11:06:49

 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஐக்கிய நாடுகள் செவாக் தின நிகழ்வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

unnamed__5_.jpg

unnamed__4_.jpg

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

unnamed__3_.jpg

unnamed__7_.jpg

unnamed__6_.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/19925

  • தொடங்கியவர்

'இந்திய அபிவிருத்தியின் பயனை இலங்கையும் பெறலாம்'
 
12-05-2017 11:32 AM
Comments - 0       Views - 19

article_1494569010-narendramodi-sept11%2இந்தியப் பொருளாதார அபிவிருத்தியின் இலாபத்தை, இலங்கையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலாள பொருளாதார ஒத்துழைப்பு, 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதென்றும் கூறினார்.

சர்வதேச வெசாக் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த பிரதமர் மோடி, 'அசோக்க சாம்ராஜ்ஜியத்தின் மிஹிந்து தேரரைப் போன்றே, சங்கமித்தா தேர்த்தியும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டுவந்தனர். இதற்கமைய, பௌத்தத்தின் கேந்திர நிலையமாக, இலங்கை தற்போது விளங்குகின்றது' என்றார்.

'பின்னர், இலங்கையின் அநகாரிக்க தர்மபால அவர்கள், தர்மத்தின் தகவலை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு, நூற்றுக்கணக்காண ஆண்டுகளைக் கடந்ததாகும். இந்நிலையில், இந்தியாவின் விமானச்சேவை நிறுவனம், கொழும்புக்கும் இந்தியாவின் வாரணாசிக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை, விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

'அதன் மூலம், பௌத்த மற்றும் ஹிந்து மதங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், பெரும் பயனை அடைய முடியும்' என, இந்தியப் பிரதமர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/196488/-இந-த-ய-அப-வ-ர-த-த-ய-ன-பயன-இலங-க-ய-ம-ப-றல-ம-#sthash.0rVBkJFR.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

அவருடைய உரையானது, தமிழ், சிங்களம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும், பின்னர் உரைபெயர்க்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

எங்கன்டா முனிவர் தப்பிட்டார் அவருக்கு ‍ஹிந்தி ஆத்தாகே....

3 hours ago, நவீனன் said:

'பின்னர், இலங்கையின் அநகாரிக்க தர்மபால அவர்கள், தர்மத்தின் தகவலை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீங்கள் வியாபாரத்தை கொண்டுவந்துள்ளீர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.