Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஐந்து வருடப் பூர்த்தியும்

Featured Replies

புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஐந்து வருடப் பூர்த்தியும்

-நவா

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கிடைக்கப் பெற்றவைகள் கொலைகளும் கொள்ளைகளும் ஆள் கடத்தல்களும் காணாமல் போதல்கள் எனப் பல துன்ப துயரங்களே தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டது.

இதே நேரம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியினராகிய தமிமீழ விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்களில் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை ஸ்ரீலங்காப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு உயிர் கொடுத்து தியாயம் செய்துள்ளார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து வழங்கப்பட்ட கால அவகாசத்தில் ஸ்ரீலங்காப் படையினர் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்ட வலிந்து தாக்குதலினால் நில ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவும் ஸ்ரீலங்கா அரச படைகள் வாய்ப்பேற்படுத்தப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் மக்களை விரட்டியடிக்கவும் மற்றும் நில ஆக்கிரமிப்பை மேற் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன் வைத்து சர்வதேச நாடுகளிடம் ஸ்ரீ லங்கா அரசு கைநீட்டி சமாதாணம் என்ற கபட நாடகத்தின் மூலம் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பேற்ப்பட்டது.

சர்வதேச நாடுகளின் அணுசரனையுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் ஆறு சுற்றுப் பேச்சு வார்ததைகள் இடம் பெற்று காணப்பட்ட முடிவுகள் எதுவும் நடைமுறைப் படுத்தப்படாமலேயே அன்றை அரசாங்கம் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு செல்ல அரிய சந்தர்ப்பம் கிடைத்தது.

தென்னிலங்கையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் எற்படுத்தப்பட்டன வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய பொருளாதார வளர்சியென்ற பெயரில் குறிப்பிட்ட அரசியல் வாதிகள் தமது பைகளை நிரப்பிக்கொண்டார்கள்.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன் வைத்து சந்திரிகா அம்மையார் மீண்டும் அரசியலில் இழந்த அதிகாரத்தை மீளவும் பெற்றுக் கொண்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சந்திரிகா அம்மையார் நடைமுறைப்படுத்தவில்லையெனக் கூறி சமாதானத்தை வேண்டி நின்ற சிங்கள மக்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்து மீண்டும் புதிய ஒரு தலைமையான மகிந்த ராஐபக்ஸ குடும்ப ஆதிக்கம் தலை காட்ட வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் படைத்தரப்பினர் கடந்த ஒரு வருட காலத்தில் புரிந்தணர்வு ஒப்பந்தத்தை புறந்தள்ளி தான்தோன்றித்தனமாக பல இடங்களிலும் படை முகாம்களையும் மற்றும் காவலரண்களiயும் அமைத்து தமிழ் மக்கள் மீது பல்வேறு கெடுபிடிகளையும் மேற் கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றி வளைப்புகள், தேடுதல்கள், என்ற போர்வையில் பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ள போதிலும் படைத்தரப்பினர் மீது எந்த வகையான நடவடிக்கையும் இன்றி பாதுகாக்கக் கூடிய நிலமை காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் படைத்தரப்பினருடன் இணைந்து இயங்கும் ஒட்டுக் குழுக்கள் மற்றும் துணை ஆயுதப் படையினர் வடக்கு கிழக்கில் கப்பம், கொலைகள், திருட்டுக்களில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை கோன்ற இன்னோரன்ன நிகழ்வுகளே இந்த புரிந்தணர்வு ஏற்பட்ட ஐந்து வருட காலத்தில் அரங்கேறியுள்ளன.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை இறுக்கமாக கடைத்தப்பிடித்த விடுதலைப் புலிகள் போக்கும் மனிதாபிமான செயல்பாடும் பேரினவாத சிங்களத் தலைமைகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளமையும் ஏகாதிபத்திய வாதிகளான முதலாளித்துவ நாடுகளுக்கு தமது சுரண்டல் செயல்பாட்டிற்கு இப்பிரச்சினையை மேற்கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த ஐந்தாண்டு அமைதி காலம் என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் இரத்தமும் சதைகளும் சிதறிய இருண்ட காலமாகவே அமையப்பெற்ற வடுக்களாகவே காட்சியளிக்கின்றன.

சிறீலங்கா அரசாங்கம் கிழக்கின் ஆக்கிரமிப்பை தனது போர் வெற்றியாக கருதி மததையில் ஆழ்ந்திருக்கும் மகிந்தவுக்கு, இனிவரும் ஆக்கிரமிப்பு யுத்தமானது மகிந்தவின் சிந்தனைக்கு விழும் பேரியாகவே அமையப்போகின்றன.

சிறீலங்கா அரசாங்கம் யுத்தநிறுத்த உடன்படிக்கையில் நின்றுகொண்டு எவ்வகையில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடக்கி சர்வதேசத்தை ஏமாற்றியதோ? அவ்வாறே விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து கொண்டு அரச படைகளின் வலிந்த தாக்குதல்களை முறியடிக்கொண்டு தமிழீழத் தனியரசுக்கான போரைத் முன்னெடுத்துச் செல்வதையே இனிவரும் காலம் கட்டியம் கூறிநிற்கின்றது. சுருங்கச் சொன்னால் இனிவரும் காலம் விடுதலைப் புலிகளால் தீர்க்கமான முடிகளை எடுக்கக்கூடிய ஆண்டாகவே இவ்வாண்டு அமையப்போகின்ற என்பதே இன்றைய அரசியல் இராணுவ நகர்வுகள் சுட்டிநின்கின்றது.

http://www.pathivu.com/index.php?subaction...mp;ucat=18&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.