Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை மறந்து விடாதீர்கள்

Featured Replies

மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை மறந்து வடாதீர்கள்

 

வாக்குறுதி அளித்துவிட்டு பதவிக்கு வந்த தேசிய அரசாங்கம் தற்போது தனது பாதையி லிருந்து தடம்மாறுகின்றதா? அல்லது திசைமாறுகின்றதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதிருக்கிறது

நாட்டில் அர­சியல் போக்­குகள் சூடு­பி­டிப்­ப­தாக தெரி­கின்ற போதிலும் அர­சாங்­கத்தின் பயணம் என்­பது மந்­த­க­தி­யி­லேயே உள்­ளது விசே­ட­மாக இது­வரை முக்­கி­ய­மான பிரச்­சி­னைகள் எதுவும் தீர்க்­கப்­ப­டாத நிலை­யி­லேயே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்த தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. அப்­படி பார்க்கும் போது நல்­லாட்சி அர­சாங்கம் சரி­யான பாதையில் பய­ணிக்­கின்­றதா? அல்­லது தெளி­வற்­ற­பா­தையில் பய­ணிக்­கின்­றதா? என்ற சந்­தேகம் அர­சியல் அவ­தா­னி­க­ளினால் எழுப்­பப்­ப­டு­கின்­றது.

நாட்டின் அர­சியல் வர­லாற்றில் புது­மை­யையும் புரட்­சி­யையும் ஏற்­ப­டுத்­திய வண்­ணமே தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. சுதந்­திரம் கிடைத்­த­தி­லி­ருந்தே இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைப்­பது என்­பது சாத்­தி­ய­மற்ற ஒரு விட­ய­மா­கவே காணப்­பட்டு வந்­தது.

அதன் கார­ண­மா­கவே புரை­யோ­டிப்­போ­யுள்ள பல்­வேறு பிரச்­சி­னை­களை அர­சாங்­கத்­தினால் தீர்க்க முடி­யாத நிலைமை காணப்­பட்டு வந்­தது. பத­வியில் இருக்­கின்ற அர­சாங்கம் ஏதா­வது ஒரு திட்­டத்தை கொண்­டு­வரும் போது எதிர்க்­கட்­சி­யா­னது அதனை எதிர்க்கும் நிலைமை நீடித்து வந்­தது. அதே எதிர்க்­கட்சி ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் ஏதா­வது ஒரு திட்­டத்தைக் கொண்­டு­வரும் போது முன்னர் ஆட்­சியில் இருந்த கட்­சி­யா­னது அதனை எதிர்க்கும் நிலைமை நீடித்து வந்­தது.

இவ்­வாறு பிர­தான பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாத மிகவும் துர­திஷ்­ட­வ­ச­மான நிலை­மையே நீடித்து வந்­தது. இந்த நிலை­யி­லேயே 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் இந்த ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்த தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. இது மிகவும் புது­மை­யா­ன­தொரு விட­ய­மாக அனை­வ­ராலும் பார்க்­கப்­பட்­டது. முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களை தீர்த்து வைக்கும் நோக்­கி­லேயே இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கின.

அதா­வது நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணுதல், தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைத்தல், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றுதல், புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ருதல், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட நாட்டை விரை­வாக கட்­டி­யெ­ழுப்­புதல், பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்தல் போன்ற முக்­கி­ய­மான விட­யங்­களை மேற்­கொள்­ள­வேண்டும் என்ற நோக்­கத்­திற்­கா­கவே தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. அதா­வது இரண்டு வரு­டங்­க­ளுக்­காக தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது.

இவ்­வாறு உய­ரிய நோக்­கங்­க­ளுடன் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து உரு­வாக்­கிய தேசிய அர­சாங்கம் கடந்த இரண்டு வரு­டங்­களில் என்ன செய்­தது? என்ற கேள்வி எழு­வதை யாராலும் தவிர்க்க முடி­யாதிருக்­கி­றது. காரணம் தாங்கள் செய்­வ­தாக கூறிக்­கொண்டு வந்த எந்­த­வொரு விட­யத்­தையும் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்த தேசிய அர­சாங்கம் இது­வரை செய்­ய­வில்லை. மாறாக தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து நாங்கள் அதனை செய்வோம், இதனை செய்வோம் என்று கூறி சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­ப­டவும், சர்­வ­தேச உத­வி­களைப் பெறவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதே தவிர மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு ­காண்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

குறிப்­பாக சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­கின்ற விட­யத்தில் தேசிய அர­சாங்கம் வெற்­றி­பெற்­றுள்­ளது. ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை அர­சாங்கம் வாக்­கு­றுதி அளித்த விட­யங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக மேலும் இரண்­டு­ வ­ரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது இலங்கை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் கிடைத்­துள்ள மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும்.

அது­மட்­டு­மன்றி தற்­போது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கை­யையும் இலங்கை அர­சாங்கம் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இதுவும் தேசிய அர­சாங்­கத்­தினால் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட மிகப்­பெ­ரிய வெற்­றி­யென்று கூறலாம். இவ்­வாறு சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­பட்டு உத­வி­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளதே தவிர உள்­நாட்டு மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­காண இது­வரை உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வில்லை.

எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தலைமை வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் தாம் ஏன் தேசிய அர­சாங்­கத்தை அமைத்தோம் என்­பதை சிந்­தித்­துப்­பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். புரை­யோ­டிப்­போ­யுள்ள நீண்­ட­காலப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­ காண்­ப­தற்கு இதற்குப் பின்னர் இலங்கை அர­சி­யலில் தற்­போது இருக்­கின்­றதைப் போன்­ற­தொரு சந்­தர்ப்பம் கிடைக்­குமா என்­பது கேள்­விக்­கு­றியாகும்.

இந்­நி­லையில் தேசிய அர­சாங்கம் நிறு­வப்­பட்டு இரண்டு வரு­டங்கள் கடந்து விடப்­போ­கின்ற நிலையில் அர­சாங்கம் இது­வரை எந்­த­வொரு பிரச்­சி­னைக்கும் தீர்­வு­ கா­ணாமல் இருப்­ப­தா­னது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். மறு­புறம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சியல் காய்­களை மிகப்­பெ­ரிய அளவில் நகர்த்தி வரு­கிறார். அர­சாங்­கத்தை கவிழ்த்தே தீருவேன் என்று கங்­கணம் கட்­டிக்­கொண்டு அவர் செயற்­பட்டு வரு­கின்றார். இதனை அர­சாங்கம் புரிந்­து­கொண்டு அதற்­கேற்­ற­வா­றான அர­சி­யல்­காய்­களை நகர்த்­து­வ­தா­கவும் தெரி­ய­வில்லை.

இவ்­வா­றான பின்­ன­ணியில் தீர்க்­கப்­ப­டாமல் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­த­தாக தெரி­ய­வில்லை. தீர்­வுத்­திட்டம் என்ற விட­யத்தை நோக்­கும்­போது அர­சாங்கம் எவ்­வா­றான ஆக்­க பூர்­வ­மான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தாக கூறி­யுள்ள அர­சாங்கம் அதற்­காக பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பை­யாக மாற்­றி­ய­மைத்­தது.

அதன்கீழ் பிர­தான வழி­ந­டத்தல் குழுவும் ஆறு உப நிறை­வேற்­றுக்­கு­ழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டன. ஆறு உப குழுக்­களும் தமது அறிக்­கை­களை சமர்ப்­பித்­துள்­ளன. ஆனால் பிர­தான வழி­ந­டத்தல் குழுவின் செயற்­பா­டுகள் இன்னும் ஸ்தம்­பித நிலை­மை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன. இந்த பிர­தான வழி­ந­டத்தல் குழுவே இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு, தேர்தல் முறை மாற்றம், மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை மாற்றம் என்­பன தொடர்பில் ஆராய்­கின்­றது.

ஆனால் இது­வரை தேர்தல் முறை மாற்றம் தொடர்­பிலோ நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­முறை நீக்கம் தொடர்­பிலோ, இனப்­பி­ரச்­சி­னைக்கான தீர்­வுத்­திட்டம் குறித்தோ இறுதி இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­ப­ட­வில்லை. தேர்தல் முறை மாற்றம் மற்றும் இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றாலும் ஆக்­க­பூர்­வ­மான இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

அதே­போன்று நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை மாற்றம் தொடர்­பிலும் இது­வரை எவ்­வி­த­மான இணக்­கமும் எட்­டப்­ப­ட­வில்லை. ஆனால் அர­சாங்கம் தாங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ருவோம் என்றும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்வோம் எனவும், வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றுவோம் எனவும் தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கி­றது. எனினும் இது­வரை எந்­த­வொரு விடயம் குறித்தும் ஆக்­க­பூர்­வ­மான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­ப­ட­வில்லை என்­பதே யதார்த்­த­மாகும்.

இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதத்­துடன் தேசிய அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு இரண்டு வரு­டங்கள் நிறை­வ­டை­யப்­போ­கின்­றன. அதன் பின்னர் தேசிய அர­சாங்­கத்தை தொடர்­வதா இல்­லையா என்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. ஆனால் இந்த இரண்டு வரு­ட­கா­லத்­திலும் அர­சாங்கம் நீண்­ட­கால பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பதில் வெற்­றி­கண்­ட­தாக தெரி­ய­வில்லை. இது இவ்­வா­றி­ருக்க யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுத்­த­ரு­மாறு கோரி வடக்கு, கிழக்கில் தொடர்ந்து போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.

குறிப்­பாக காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரி பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்து போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு அர­சாங்கம் இது­வரை எவ்­வி­த­மான ஆக்­க­பூர்­வ­மான தீர்­வை

யும் வழங்­க­வில்லை. காணாமல் போனோர் விவ­கா­ரத்தில் ஒரு திருப்­பு­மு­னை­யாக கரு­தப்­பட்ட காணாமல் போனோர் குறித்து ஆராயும் நிரந்­தர அலு­வ­லகம் இது­வரை நிறு­வப்­ப­ட­வில்லை.

இந்த அலு­வ­ல­கத்­திற்­கான சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள போதிலும் இது­வரை அலு­வ­ல­கத்தை நிறு­வுவ­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டாமல் உள்­ளது. புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்து இரண்­டரை வருடம் கடந்­து­விட்ட நிலையில் இந்­த­வி­ட­யத்­திற்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை. காணாமல் போனோரின் உற­வுகள் வேத­னை­யையும் துய­ரத்­தையும் சுமந்­து­கொண்டு தொடர்ந்து போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.

ஆனால் அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அந்த போராட்­டங்கள் தொடர்பில் அக்­கறை கொள்­வ­தாக தெரி­ய­வில்லை. போராட்­டங்கள் வடக்கு, கிழக்கில் இடம்­பெற்று வரு­வதன் கார­ண­மாக அவ்­வாறு போராட்­டங்கள் இடம்­பெ­று­வ­தாக தென்­னி­லங்கை புரிந்­து­கொள்­வ­தி­லேயே தாமதம் காணப்­ப­டு­கின்­றதா என்ற சந்­தேகம் காணப்­ப­டு­கின்­றது. காரணம் மூன்று மாதங்­க­ளுக்கு மேலாக போராட்­டங்கள் தொடர்­கின்ற போதிலும் இந்தப் பிரச்­சி­னைக்கு ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்­டத்­தையோ, அதற்­கான அணு­கு­மு­றை­யையோ, வழி­மு­றை­யையோ அர­சாங்கம் முன்­வைக்­க­வில்லை.

இது இவ்­வா­றி­ருக்க காணி­களை இழந்த பாதிக்­கப்­பட்ட மக்­களும் தமது காணி­களைப் பெற்­றுத்­த­ரு­மாறு கோரி தொடர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். இந்தப் பிரச்­சி­னையை அர­சாங்கம் ஆரோக்­கி­ய­மான முறையில் தீர்த்­து­வைப்­ப­தாக கூறி நட­வ­டிக்­கையை ஆரம்­பத்தில் எடுத்­தி­ருந்­தாலும் காலப்­போக்கில் அவையும் மந்­த­க­தியை அடைந்­தன. பொறுத்­துக்­கொள்ள முடி­யாத கட்­டத்தில் காணி­களை இழந்த பொது­மக்கள் தற்­போது வீதியில் இறங்கி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இந்த விட­யத்தில் காணி­களை மீள்­வ­ழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அர­சாங்கம் தொடர்ந்து உறு­தி­ய­ளித்து வரு­கின்ற போதி

லும் இது­வரை ஆக்­கபூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. எனினும் கடந்த அர­சாங்க காலத்­துடன் ஒப்­பி­டு­கையில் தற்­போ­தைய அர­சாங்கம் காணி விடு­விப்பு விட­யத்தில் ஓர­ளவு பொறுப்­புத்­தன்­மை­யுடன் செயற்­ப­டு­கின்­ற­மையை ஏற்­றுக்­கொண்­டா­க­வேண்டும்.

இதே­வேளை மனித உரி­மை­மீ­றல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டு­க­ளிலும் இது­வரை எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று சமூ­­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களும் இரண்டு வரு­டங்கள் கடந்தும் உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. மாறாக அவ்­வப்­போது சமூ­கங்­­க­ளுக்­கி­டையில் விரிசல் ஏற்­ப­டுத்தும் சம்­ப­வங்­களே ஏற்­பட்டு வரு­கின்­றன. இவ்­வாறு பார்க்­கும்­போது தேசிய அர­சாங்­கத்தை அமைக்­கும்­போது செய்­வ­தாக உறு­தி­ய­ளித்த எந்­த­வொரு வேலைத்­திட்­டமும் இது­வரை சரி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலைமை நீடிக்­கப்­ப­டு­வதை காண முடி­கி­றது.

தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதன் நோக்கம் கடந்த இரண்டு வரு­ட­கா­லத்தில் நிறை­வேற்­றப்­பட்­டதா என்று பிர­தான இரண்டு அர­சியல் கட்­சி­களும் அந்த கட்­சி­களின் தலை­மை­களும் ஆழ­மான முறையில் சிந்­தித்துப் பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இல்­லா­விடின் தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­ட­தற்­கான நோக்­கத்தை கட்­சி­க­ளுக்கே உண­ர­மு­டி­யாமல் போய்­விடும். அந்­த­ள­விற்கு அர­சியல் காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­ற­னவே தவிர நீண்­ட­கால அடிப்­படை பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இந்த பிரச்­சி­னைகள் அனைத்­தையும் தீர்த்­து­வைப்­ப­தாக கூறிக்­கொண்டே புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்தது. அதனாலேயே புதிய அரசாங்கத்திற்கு தமிழ் பேசும் மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.

ஆனால் அவ்வாறு வாக்குறுதி அளித்துவிட்டு பதவிக்கு வந்த தேசிய அரசாங்கம் தற்போது தனது பாதையி லிருந்து தடம்மாறுகின்றதா? அல்லது திசைமாறுகின்றதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதிருக்கிறது. எனவே அரசாங்கம் இதுதொடர்பில் மீண்டும் மீண்டும் சிந்திக்கவேண்டியது அவசி யமாகும். தேசிய அரசாங்கத்தின் இரண்டு வருடகாலம் முடியும்போது எதனை சாதித்தோம் என்ற கேள்வி எழப்போவது நிச்சயமாகும். அப்போது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை என்ற விடை கிடைக்குமாயின் அது தேசிய அரசாங்கத்தின் பாரிய தோல்வியாக அமையும்.

அதுமட்டுமன்றி அரசாங்கத்திற்கு நம்பி ஆதரவளித்த மக்களுக்கும் மிகப்பெரிய தோல்வியாக அமையும். எனவே அரசாங்கம் அவசரமாக செயற்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும். பிரச்சினைகளைத் தொடர்ந்தும் இழுத்தடித்துக்கொண்டு செல்லும் போக்கை பின்பற்றக்கூடாது. மிக விசேடமாக தேசிய அரசாங்கம் எதற்காக அமைக்கப்பட்டது என்ற கேள்வியை இரண்டு பிரதான கட்சிகளும் மீண்டும் மீண்டும் தமக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் சிவில் சமூக நிறுவனங்களும், அரசியல் சக்திகளும் தமது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு முன்வரவேண்டியது அவசியமாகும். மக்கள் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படுமென தொடர்ந்தும் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை அதிகாரத்தில் இருக்கின்ற எந்த வொரு தரப்பும் மறந்துவிடக்கூடாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-20#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.