Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு துறைமுகத்தைத் தகர்க்க புலிகள் திட்டம் இந்திய எல்லையில் 15 தற்கொலை படை படகுகள்

Featured Replies

கொழும்பு: கொழும்பு துறைமுகத்தைத் தாக்கி தகர்க்க தமிழக கடலோரப் பகுதிகளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 15 தற்கொலைப் படை படகுகளை விடுதலைப் புலிகள் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விடுதலைப்புலிகளின் கடல் புலி பிரிவுக்குச் சொந்தமான படகை, பயங்கர ஆயுதங்களுடன் இந்திய கடலோர காவல் படை பிடித்தது. அதில் இருந்த 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படை பிடித்து தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தது.

இநத சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்பபடுத்தப்பட்டது. இந்த நிலையில்,தமிழக கடலோரப் பகுதிகளில் கடல்புலிகள் பிரிவுக்குச் சொந்தமான 15 வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தப் படகுகளைக் கொண்டு கொழும்பு துறைமுகத்தைத் தாக்கித் தகர்க்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய, இலங்கை எல்லையில் இந்தப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு காட்டு நாயகே சர்வதேச விமான நிலையத்தில் புகுந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை, விமானங்களை குறி வைத்துத் தாக்கியது. அதே போல தற்போது கொழும்பு துறைமுகத்தில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த கடல் புலிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.

தாக்குதல் நடத்த, 15 தற்கொலை படகுகளும் புலிகள் அமைப்பின் தலைமையின் உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. எந்த இடத்தை தாக்க வேண்டும் என்று சாடிலைட் போன் மூலம் வரும் உத்தரவுக்காக இவர்கள் காத்துள்ளனர். சிக்னல் கிடைத்தவுடன் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

அதேசமயம், நமது இலக்கு கொழும்பு துறைமுகம்தான், தமிழர்கள் மீதோ. இந்திய நிலைகள் மீதோ எந்த தாக்குதலும் நடத்த க்கூடாது என்று கடல் புலிகளுக்கு, புலிகள் தலைமையகம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத்தான் கடந்த வாரம் கோடியக்கரை அருகே இந்தியக் கடலோரக் காவல் படையினர், புலிகளின் படகை மடக்கிய போது விடுதலைப்புலிகள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சரண் அடைந்துவிட்டனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்நது, தமிழக கடலோரப் பகுதிகளில் முழு அளவில் உஷார் நிலையில் இருக்குமாறு உளவுத்துறை மத்திய, மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

ஆயுதக் கடத்தல்: மேலும் 6 பேர் கைது:

இதற்கிடையே, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் வெடிபொருட்கள், அலுமினியக் குண்டுகளை கடத்தியது தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 டன் அலுமினிய குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செல்வராஜ், குணசேகர பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அலுமினிய தகடுகள், பவுடர்கள் போன்றவற்றை வாங்கி கொடுப்பதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே உள்ள பொந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முரளி, பூமி, கண்ணன், பெரியசாமி, கர்ணன், முருகநாதன் ஆகிய 6 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு விடுதலைப்புலிகளுடன் நேரிடையாக தொடர்பு இருக்கிறதா? அல்லது ஏஜெண்டுகள் மூலமாக வெடிபொருட்களை அனுப்புகிறார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புலிகளை விசாரிக்க விரும்பும் இலங்கை கடற்படை:

இதற்கிடையே, ஆயுதக் கடத்தல் தொடர்பாக இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ள 3 விடுதலைப் புலிகளை தாங்களும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என இலங்கை கடற்படை இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக விடுதலைப் புலிகளிடம் நடைபெறும் விசாரணையில் கடற்படையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்திய அதிகாரிகளிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

கிளிநொச்சி பள்ளி மீது குண்டு வீச்சு:

இந்தநிலையில், வன்னி பகுதியில் இலங்கை விமானப்படையின் கேபிர் ரக விவீமானங்கள் விடிய விடிய குண்டு வீசித் தாக்கியதில், பல தமிழர் வீடுகள் தரைமட்டமாயின.

கிளிநொச்சி அருகே பள்ளிக்கூடம் மீது குண்டு வீசியதில், அங்கிருந்த மாணவர்கள் தப்பி ஓடினர். மருத்துவமனை மற்றும் சந்தை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது

http://thatstamil.oneindia.in

அப்ப 20 வருஸத்திற்கு பின்பும் இதுகளுக்கு விளங்கவே இல்லை. இப்ப இதில இருக்கிறவை விரல் சுப்பிக்கொண்டு தானே இருந்திருப்பீனம். நாங்கள புலிகள் வானத்தில இருந்து தொப்பு தொப்பென்று பனங்காய் மாதிரி பரச்சுற்றுடன் சுடலைப்பகுதியில விளேக்க நேர பார்த்தநாங்கள். அப்படி 50 கலிப்பர் அடி அதுக்கு பிறகு இப்ப இந்த கோள்மூட்டல் தானே கூடாது என்று சொல்லுறது. அவன் அடிக்கபோறவன் என்ன விசுகோத்தா 15 படகினையும் கொண்டந்து எல்லையில வச்சு படம் காட்ட. அவன் நினச்சா சில நேரம் இன்று இரவே அடிச்சு துவம்சம் பண்ணலாம் ஆனால் அவர்கள ஆழ்மாக யோசித்து தான் காலை விடுவார்கள். விட்டா பின்பு இந்தியா என்ன அவன் பெரிய துரையே போய் நிப்பாட்ட ஏலாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகமான திவியன இப்படிக் கூறுகிறது

புலிகளுக்கு எதிராக இந்திய கடற்படை `ஒப்பரேஷன் தாஷா' வை ஆரம்பித்துள்ளது

[22 - February - 2007] [Font Size - A - A - A]

அண்மைக்காலங்களில் விடுதலைப்புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் இந்தியத் தென் மாநிலமாகிய தமிழ் நாட்டிலிருந்து ஆயுதங்கள் வெடிகுண்டு பொருட்களைக் கொள்வனவு செய்து கடல்மார்க்கமாக தமது கட்டுப்பாட்டிலிருந்து வட பகுதிப் பிரதேசங்களுக்குத் கடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலும் அவ்வாறு அவர்கள் பெருந்தொகையான வெடிகுண்டு இரசாயனப் பொருட்களைத் தமிழ்நாட்டில் தெற்கு கரையோரத்திலிருந்து படகுகளில் கடத்திவரும் போது பல தடவைகள் சிறிலங்கா கடற்படையினராலும் இந்தியக் கடற்படையினராலும் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையிலும் இந்திய அரசு இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்த கடந்த 19 ஆம் திகதியிலிருந்து புதியதொரு கடற்படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கூடுதல் தொகையில் இந்தியக் கடற்படைக்கப்பல்களும் , விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் கடற்படையினரின் தீவிர நடவடிக்கைக்கு "ஒப்பரேஷன் தாஷா" (OPERATION THASHA) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்தினர் தமிழ்நாட்டிலிருந்து ஆயுதங்கள், வெடிகுண்டு பொருட்களை தமிழ்நாட்டின் கரையோரப் பிரதேசங்களிலிருந்தே படகுகளில் ஏற்றிக் கடத்திவருவதைத் தொடர்ந்து அப் பகுதிகளில் புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகளும், நடமாட்டங்களும் அதிகரித்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் இந்தியப் பாதுகாப்புத்துறைக்குத் தெரிவித்திருந்தனர். இந்திய புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளைத் தொடர்ந்தே இந்திய பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் இந்தியக் கடற்படை '` ஒப்பரேஷன் தாஷா" நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பாரிய முறையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையில் இந்தியக் கடற்படையின் 15 " டிஸ்ற்றோயர் " (DESTROYER) கப்பல்களும் 23 கண்காணிப்பு விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கடற்படை நடவடிக்கைக்கான உத்தரவை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் எம்.கே.அந்தனி விடுத்துள்ளார்.

மேலும் இவ்வாறு தமிழ்நாட்டின் கரையோரங்களின் பாதுகாப்புக்கு புலிகள் இயக்கத்தினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவு அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கடலோரப் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டதுடன், புலிகள் இயக்கத்தினர் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் , வெடிகுண்டு இரசாயனப் பொருட்களை கடத்தும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக கடலோரப் பாதுகாப்புப் படையினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை அவதானித்து அது சம்பந்தப்பட்ட மேலதிக உத்தரவுகளையும் இட்டுள்ளனர்.

இவ்வாறே புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தமது ஆயுதக்கடத்தல் உட்பட அனைத்து சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தையே அதிகம் குறிப்பாக இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தையே கேந்திர ஸ்தானமாக மாற்ற முயன்று வருவது இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் இந்திய பாதுகாப்பு துறைக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி "ஒப்பரேஷன் தாஷா" கடற்படைநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதியிலிருந்து தமிழ்நாடு மண்டபம் மற்றும் தூத்துக்குடி துறைமுகப்பகுதிகளில் கடலோரப்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படையின் தென்பிராந்திய கடலோரப் பாதுகாப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.thinakkural.com/news/2007/2/22/...s_page21914.htm

இந்தியா தனது சொந்த நாட்டில் நடக்கும் குண்டு தாக்குதல்களை புலனாய்வு திறமையால் கண்டு பிடிக்கமுடியவில்லை( நடக்கமுன்) ஆனா புலிகள் எங்க எப்ப தாக்க போகிறார்கள் என்று கண்டு பிடித்து அறிவித்து விடுவார்கள்.

இதை நாம் கேக்க கூடாது இந்திய உறவுகள்( தமிழ்நாட்டு) மத்திய அரசை பார்த்து கேக்கனும்.

கேட்ப்பிர்களா????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.