Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள்

Featured Replies

அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள்

 
அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள்
 

இலங்­கை­யின் முத­லா­வது நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிய டி.எஸ். சேனா­நா­யக்­க­வின் அர­சில் நிதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன ஆவார். டி.எஸ். சேனா­நா­ய­க­வின் திடீர்ச் சாவை­ய­டுத்து தலைமை அமைச்­ச­ராக ஆன டட்லி சேன­நா­ய­கா­வும் நிதி­ய­மைச்­ச­ராக ஜே.ஆரையே நிய­மித்­தார்.

1952 ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் அதி­கா­ரத்தை மீண்­டும் கைப்­பற்­றிய டட்லி, ஜே. ஆரையே தமது அர­சின் நிதி அமைச்­ச­ராக்­கி­னார். அந்­த­வே­ளை­யில் டட்­லிக்­கும் ஜே.ஆருக்­கு­மான உற­வில் விரி­சல் ஏற்­பட்­டி­ருந்­த­போ­தி­லும், 1953 ஆம் ஆண்­டின் வரவு செல­வுத் திட்­டம் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இரு­வ­ரி­டை­யே­யான உறவு பெரிய அள­வில் விரி­சல் கண்­டது. 1951 இல் இலங்கை 345 மில்­லி­யன் ரூபா அபி­ரி­மித நிதி வளத்­தைக் கொண்­டி­ருந்தபோதி­லும் 1953 இல் அது 200 மில்­லி­யன் ரூபா பற்­றாக்­கு­றை­யாக ஆகி­யி­ருந்­தது.

இத­னால் ஜே.ஆர் 1953 ஆம் ஆண்டு ஜுலை மாதத்­தில் நாடா­ளு­மன்­றில் முன்­வைத்த வரவு செல­வுத் திட்­டத்­தில் துண்டு விழும் தொகையை ஈடு­கட்ட புதிய வரி­களை நாட்டு மக்­கள் மீது சுமத்த வேண்டி ஏற்­பட்­டது. நாட்­டின் பொரு­ளா­தா­ரப் பின்­ன­டைவை ஈடு­கட்ட மேற்­கு­நா­டு­கள் உத­வு­மென ஜே.ஆர் நம்­பி­னார். அமெ­ரிக்­கா­வி­டம் 50 மில்­லி­யன் டொலர் உத­வி­பெற ஜே.ஆர் மேற்­கொண்ட முயற்சி வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

அந்த வேளை­யில் உலக வங்­கி­யின் ஆலோ­ச­னை­க­ளுக்கு எடு­பட்டு ஜே.ஆர் தயா­ரித்து முன்­வைத்த வரவு செல­வுத் திட்­டம் கடை­சி­யில் டட்­லி­யின் தலை­மை­யி­லான அர­சைப் பத­வி­யி­லி­ருந்து விலக வைக்­கக் கார­ண­மா­யிற்று.
அது­வரை நாட்டு மக்­க­ளுக்கு அரசு வழங்கி வந்த பல நிவா­ரணங் களை நிறுத்­திய ஜே.ஆர், அவற்­றுக்கு மேல­தி­க­மாக பல சேவைக்­கட்­ட­ணங்­களை உயர்த்­தி­ய­தன் மூலம் நாட்டு மக்­க­ளது அதி­ருப்­தி­யை­யும் எதிர்ப்­பை­யும் சம்­பா­தித்­துக் கொண்­டார்.

அரிசி விலையை அதிகரித்த ஐ.தே.கட்சி அரசு

ஐ.தே.கட்சி அரசு பத­வி­யி­லி­ருக்­கும் வரை ஒரு கொத்து அரி­சியை 25 சதத்­துக்கு வழங்­கு­மென வாக்­கு­றுதி வழங்­கிப் பொது மக்­க­ளது ஆத­ரவை ஈட்டித் தேர்­த­லில் வெற்றி பெற்ற ஐ.தே.கட்சி அரசு, குறித்த அந்த வரவு செல­வுத் திட்­டத்­தின் மூலம் ஒரு கொத்து அரி­சி­யின் விலையை 70 சத­மாக உயர்த்­தி­ய­தன் மூலம் நாட்டு மக்­க­ளது கடும் எதிர்ப்­பைச் சம்­பா­தித்­துக் கொண்­டது.

நிதி அமைச்­ச­ரான ஜே.ஆரின் அந்த முடிவுக்கு எதிராக அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முன்­னெ­ டுக்­கப்­பட்ட ஹர்த்­தால் கார­ண­மாக அர­சுக்கு எதி­ரான எதிர்ப்­பு­ணர்வு தீவி­ர­ம­டைய நேர்ந்­தது. அர­சுக்கு எதி­ரான அந்­தத் தீவிர எதிர்ப்­புக் கார­ண­மாக கடை­சி­யில் டட்லி சேன­நா­யக தனது தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து தாமாக வில­கிக் கொள்ள வேண்டி ஏற்­பட்­டது.

ஜே.ஆர். தனது திட்­ட­மொன்றை இதன் மூலம் நிறை­வேற்­றிக் கொண்­டுள்­ளார் என அந்த வேளை­யில் ஒரு சிலர் விமர்­சித்­த­துண்டு. பின்­னர் தலைமை அமைச்­ச­ரா­கப் பத­வி­யைக் கையேற்ற சேர்.ஜோன்.கொத்­த­லா­வலை, முதன்­மு­த­லில் மேற்­கொண்ட நட­வ­டிக்கை, ஜே.ஆரை, நிதி அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து அகற்றி அவருக்கு வேறு அமைச்­சுப் பத­வி­யொன்றை வழங்­கி­ய­யமை ஆகும். ஆனால் அந்த வேளை­யில் குதிரை லாயத்தை விட்டு வெளி­யே­றிச் சென்று விட்­டி­ருந்­தது.

1956 ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் ஐ.தே.கட்சி படு­தோல்­வி­யைச் சந்­திக்க நேர்ந்­தது. ஜே.ஆர். கூட தேர்­த­லில் தோல்­வி­யைச் சந்­திக்க நேர்ந்­தி­ருந்­தது. ஆயி­னும் பின்­னா­ளில் ஜே.ஆர்.நாட்­டின் அரச தலை­வ­ராகி நாட்டை நிர்­வ­கித்த போதி­லும், 1956 ஆம் ஆண்­டில் டட்லி சேனா­நா­ய­க­வின் அர­சைப் பத­வி­யி­ழக்க வைத்­த­தில் அந்­த­வே­ளைய எதிர்க்­கட்­சி­யி­னரை விட ஜே.ஆரே பெரும் பங்­காற்­றி­ய­தாக விமர்­ச­னங்­கள் வெளி­வந்­த­துண்டு.

1956 ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் வெற்­றி­யீட்­டிய எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்­டா­ர­நா­யகா தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்சி களனி ராஜ­ம­கா­வி­கா­ரை­யில் மேற்­கொண்ட மத­வ­ழி­பா­டு­க­ளின் பின்­னர், பஞ்ச மகா சக்தி மூலம் நிறு­வப்­பட்ட புதிய அர­சைப் பொறுப்­பேற்­றுக் கொண்­டது. அந்த அர­சின் நிதி அமைச்­ச­ராக ஸ்ரான்லி டி.சொய்சா நிய­ மிக்­கப்­பட்­டார்.

பண்­டா­ர­நா­யகா படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­தில் அதற்கு திட்­ட­மிட்­ட­தா­ கக் கூறப்­பட்ட பிர­திப் பொலிஸ் மா அதி­பர் சிட்னி டி சொய்­சா­வின் சகோ­த­ரரே இந்த ஸ்ரான்லி டி.சொய்சா ஆவார். தம் மீதான கடும் விமர்­ச­னங்­க­ளை­ய­டுத்து 1959 நவம்­பர் மாதம் 23 ஆம் திக­தி­யன்று ஸ்ரான்லி டி சொய்சா தமது பத­வி­யி­லி­ருந்து தாமாக வில­கிக் கொண்­டார். அதன் தொடர்ச்­சி­யாக அர­சும் பத­வி­யி­ழந்­தது.

மீண்டும் மீண்டும் ஐ.தே.கட்சி அரசின் நிதி அமைச்சர் ஜே.ஆரே

1960 மார்ச் மாதம் இடம்­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் டட்லி சேனா­நா­ய­க­வின் தலை­மை­யி­லான ஐ.தே.க அரசு ஆட்சி அமைத்த வேளை அதன் நிதி அமைச்­ச­ராக ஜே.ஆர் நிய­மிக்­கப்­பட்­டார். சிம்­மா­ச­னப் பிர­சங்க வாக்­கெ­டுப்­பில் தோல்­வி­யுற்ற அரசு, 30 நாள்­க­ளில் பத­வி­இ­ழந்­தது.

தொடர்ந்து அதே ஆண்­டின் ஜுலை மாதத் தேர்­த­லில் சிறி­மா­வோ­வின் தலை­மை­யி­லான அரசு பத­வி­யேற்­ற­வேளை பீலிக்ஸ்­ட­யஸ் பண்­டா­ர­நா­யகா அந்த அர­சின் நிதி அமைச்­ச­ராக நிய­ம­ன­மா­னார். அர­சுக்­குள் தமக்­கெ­தி­ராக உரு­வான எதிர்ப்­புக்­க­ளை­ய­டுத்து 1962 ஆம் ஆண்­டில் பீலிக்ஸ் டயஸ் தமது நிதி­ய­மைச்­சர் பத­வி­யைக் கைவிட்­டார். 1960 ஜுலை முதல் 1964 ஆம் ஆண்டுவரை நாட்­டின் நிதி அமைச்­ச­ர்களாக ஐவர் பணி­யாற்­றி­யி­ருந்­த­னர் என்­பது சுவா­ரஸ்­ய­மான ஒன்­றா­கும்.

அந்த வகை­யில் இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில் பத­வி­யி­லி­ருந்த அர­சுக்­கள் கவிழ்க்­கப்­ப­டப் பெரும்­பா­லும் கார­ண­மாக அமைந்­தது அந்­தந்த அர­சுக்­க­ளது நிதி அமைச்­சர் பத­வி­களே. ஒரு அர­சின் அர­சுத்­த­லை­வர், தலைமை அமைச்­சர் என்ற பத­வி­நி­லை­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது நிதி அமைச்­சின் செயற்­பா­டு­க­ளி­லேயே நல்­ல­தும் கெட்­ட­தும் அமைந்து, அதுவே அந்த அர­சின் செயற்­பா­டுக்கு பாதிப்­பா­க­வும், பாராட்டாகவும் அமை­கி­றது. அந்த வகை­யில் மிக அண்­மை­யில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றம் அர­சின் வீழ்ச்­சி­யின் ஆரம்­ப­மாக அர­சி­யல் அவ­தா­னி­க­ளால் விமர்­சிக்கப்படுகிறது.

தாம் தமது நிதி அமைச்­சின் செயற்­பா­டு­களை நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்றத்தை நோக்கி இட்­டுச் சென்­ற­தா­லேயே தமக்கு உல­கின் சிறந்்த நிதி அமைச்­சர் என்ற கௌர­வம் கிடைத்­த­தா­கக் கூறி­வந்த ரவி கரு­ணா­நா­யக, தாம் அந்­தப் பத­வியை ஒரு­போ­தும் கைவி­டத் தயா­ரில்லை என­வும் கூறி வந்­தி­ருந்­தார். ஆயி­னும் நிதி அமைச்­சர் பத­விக்கு அவர் பொருத்­த­மா­ன­வ­ரல்ல என அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­கள் பலர் குற்­றம் சாட்டி வந்­த­னர்.

அமைச்­ச­ரவை மாற்­றம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தன் நோக்­கம், ஊழல் பேர் வழி­களை வெளி­யேற்­று­வ­தா­கும் என­வும் அவர்­க­ளில் பலர் கூறி வந்­த­னர்.
அதே­வேளை அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­மதாச மற்­றும் ஹரீன் பெர்­னாண்டோ ஆகியோர் நிதி அமைச்­சர் என்ற வகை­யில் ரவி கரு­ணா­நா­யக தமது அமைச்­சுக்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்­டில் குறைப்­புச் செய்­வ­தா­கக் குற்­றம் சாட்­டி­யி­ருந்­த­னர். ஆயி­னும் அவர்­க­ளுக்­கும் ரவிக்­கும்­இ­டை­யில் கட்­சிக்­குள்­ளான பிர­ப­லத்­து­வம் குறித்த அதி­கா­ரப் போட்­டியே இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­கான பின்­னணி என­வும் ஒரு தரப்­பி­னர் சுட்­டிக் காட்­டி­யி­ருந்­த­னர்.

அதே­வேனை நல்­லாட்சி அரசு பதவி இழப்­ப­தற்கு ரவி கரு­ண­ாநா­யக்க பெரும் உதவி புரிந்து வரு­வ­தாக கூட்டு எதி­ர­ணித்­த­ரப்­பின் ஒரு­சி­லர் தெரி­வித்­துள்­ள­னர். ரவி­யி­ட­மி­ருந்து எடுக்­கப்­பட்ட நிதி அமைச்­சர் பதவி மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை, வெளி­யு­றவு அமைச்­ச­ராக தமது கைவ­ரி­சை­யைக் காட்டி வந்த மங்­க­ள­ச­ம­ர­வீ­ர­வுக்கு ஒரு தடுப்­புக்­கட்டை போடும் விதத்­தி­லேயே தற்­போது நிதி அமைச்­சின் பொறுப்­புக்­கள்­அ­வ­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக மற்­றொரு தரப்­பி­னர் கரு­து­கின்­ற­னர்.

வெளி­யு­ற­வுத் துறை­யைச் சிறப்­பாக முன்­னெ­டுத்த மங்­களவிட­மி­ருந்து அந்த அமைச்­சின் பொறுப்பை மீளப்பெற்று அதனை ரவி கரு­ணா­நா­ய­க­வுக்கு வழங்­கி­யி­ருப்­பது கேலிக்கு இட­மா­ன­தொன்­றெ­ன­வும் அந்­தத் தரப்­பி­னர் விமர்­சித்­துள்­ள­ னர். ஆயி­னும் அண்­மைய அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் பின்­னர் அர­சுக்­குள் நீறு பூத்த நெருப்­பாக இருந்த கருத்து வேறு­பா­டு­கள், வெளியே பகி­ரங்­க­மா­கத் தலை­காட்­டத் தொடங்­கி­யுள்­ளன என்­பது மட்­டும் மறுக்க இய­லாத உண்­மையே.

அதே­வேளை அண்­மைய அமைச்­ச­ரவை மாற்­றம், அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­கள் மத்­தி­யில் மட்­டு­மின்றி, அமைச்­சர் மற்­றும் ராஜாங்க அமைச்­சர் பத­வி­யொன்றை ஈட்­டும் முனைப்­பில் எதிர்ப்­பார்­பு­க்களுடன் காத்­தி­ருந்த அரச தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மத்­தி­யி­லும் ஒரு அதி­ருப்­தி­யை­யும் அர­சுக்கு எதி­ரான ஒரு மனப்­பொ­ரு­மல் நிலை­யை­யும் தோற்­று­வித்­துள்­ளது. மொத்­தத்­தில் இவர்­க­ளில் பலர் ஒரு குழப்ப நிலைக்கு உட்­பட்­டுள்­ள­தா­கக் கரு­த­மு­டி­கி­றது.

அமைச்­ச­ரவை மாற்­றம் கார­ண­மா­கச் சூடா­கிப் போயுள்ள அரச தரப்­புக்­குள், எதிர்­வ­ரும் நாள்­க­ளில் எத்­த­கைய சிக்­கல்­கள் தலை­தூக்­கப் போகின்­றன என்­பதை எவ­ரா­லும் நிச்­ச­யிக்க இய­லாது போயி­ருப்­பி­னும், அர­சுக்­கும் ஏதோ­வொரு பிர­ள­யம் தலை­தூக்­கவே வாய்­பி­ருப்­ப­தாக அர­சி­யல் நோக்­கர்­கள் கரு­து­கின்­ற­னர்.

அந்த வகை­யில் முன்­னைய மகிந்த அர­சைப் பத­வி­யி­லி­ருந்து அகற்றி, நல்­லாட்சி அர­சைப் பத­விக்­குக் கொண்டு வந்து பெரும் அர­சி­யல் மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­திய தரப்­புக்­கள் இன்­றைய நல்­லாட்சி அர­சைப் பதவி கவிழ்க்க முய­ல­மாட்டா என எவ­ரா­லும் உறுதி கூற இய­லாது.

http://uthayandaily.com/story/4313.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.