Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு : மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

Featured Replies

இயற்கையின் கோரம் : பலியானோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு : 4 இலட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிப்பு!

 

 

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போனோரின் எண்ணிக்கை 104 ஆகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

asfafaf.jpg

இலங்கையில் மொத்தமாக 15 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 18 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.virakesari.lk/article/20431

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தொடர்கிறது அவலம்

p17-0da146b4cc42e00125ac0e8edafc7468f50bb803.jpg

 

உயி­ரி­ழப்பு 151; 111 பேரை காண­வில்லை

நீரில் மூழ்­கி­யுள்ள பல நக­ரங்கள்

போக்­கு­வ­ரத்து பாதிப்பு

நீர் மின் சேவை செய­லி­ழப்பு

மக்­களின் அவலம் நீடிக்­கின்­றது

(ஆர்.யசி, எம்.எப்.எம்.பஸீர்)

சீரற்ற கால­நிலையினால் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு கார­ண­மாக 15 மாவட்­டங்­களில் ஏற்­பட்ட அனர்த்­தங்­களில் சிக்­குண்டு உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 151 ஆக அதி­க­ரித்­துள்­ள­துடன் 111 பேர் காணாமல் போயுள்­ளனர்.

மேலும் ஒரு இலட்­சத்து 12 ஆயி­ரத்து 565 குடும்­பங்­களை சேர்ந்த 4,38,295 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்கும் எனவும் அஞ்­சப்­ப­டு­கின்­றது. களுத்­துறை, காலி, இரத்­தி­ன­புரி மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­களே அதி­க­ள வில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.  

கடந்த வியா­ழக்­கி­ழமை மற்றும் வெள்­ளிக்­கி­ழமை நாட்டில் பெய்த கன­மழை கார­ண­மாக ஏற்பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரி­வு­களில் இரத்­தி­ன­புரி, களுத்­துறை,

மாத்­தறை,

 காலி, ஹம்­பாந்­தோட்டை, கொழும்பு, கம்­பஹா, கேகாலை, மாத்­தளை, கண்டி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு,

திரு­கோ­ண­மலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்கள் பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்ள நிலை­யி­லேயே இது­வ­ரையில் இந்த அனர்த்­தங்­களில் சிக்­குண்டு 151 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

பாது­காப்பு படை­யினர் மற்றும் பொது­மக்கள் தொடர்ந்தும் மீட்புப் பணி­களை துரி­த­மாக முன்­னெ­டுத்து வரும் அதே வேளையில் நாட்டில் சகல பகு­தி­களில் இருந்தும் பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக நிவா­ர­ணப்­பொ­ருட்­க­ளையும் வழங்கி வரு­கின்­றனர். அர­சாங்­கமும் பாதிக்­கப்­பட்ட பொது­மக்­க­ளுக்­கான நிவா­ர­ணங்­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­தாக தெரி­வித்­துள்­ளது.

மேலும் கடந்த வியா­ழக்­கி­ழமை, வெள்­ளிக்­கி­ழமை ஆகிய இரண்டு நாட்­க­ளாக கன­மழை பெய்த நிலையில் நேற்று முன்­தினம் மழை குறை­வ­டைந்­துள்­ளது. எனினும் நேற்று பிற்­ப­கலில் மீண்டும் நாட்டில் பல பகு­தி­களில் மழை­யுடன் கூடிய கால­நிலை ஆரம்­பித்­துள்­ளது. அத்­துடன் நீர்­நி­லைகள் நிரம்பி வழிந்­துள்ள நிலையில் மக்கள் இன்னும் பாதிப்­பு­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்­துக்கு அதிக சேதம்

அனர்த்­தங்­க­ளினால் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­துக்கே அதிக சேதம் ஏற்­பட்­டுள்­ளது. மண் சரிவு, வெள்ளம் கார­ண­மாக இந்த சேதங்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் நேற்று நான்­கா­வது நாளா­கவும் இரத்­தி­ன­புரி நகரம் வெள்­ளத்தில் மூழ்­கி­யி­ருந்­தது. இந் நிலையில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மட்டும் இது­வரை 71 பேர் மண் சரிவு மற்றும் வெள்­ளத்­துக்கு பலி­யா­கி­யுள்­ள­துடன் மேலும் 33 பேர் காணாமல் போயுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த எண்­னிக்­கை­யா­னது மேலும் அதி­க­ரிக்கும் அபாயம் உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. , கல­வான மற்றும் நிவித்­தி­கல ஆகிய பகு­தி­களில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலை­மைகள் தொடர்பில் சரி­யான தக­வல்கள் இன்னும் கிடைக்கப் பெறா­ததால் இத்­த­கைய சந்­தேகம் எழுந்­துள்­ளது. தொடர்ச்­சி­யான மழை தற்­போது ஓய்ந்­துள்ள நிலையில் இரத்­தி­ன­புரி பிர­தான நகரம் தொடர்ந்தும் நீரில் மூழ்­கி­யுள்­ளது.

 இரத்­தி­ன­புரி நகரின் அன்­றாட நட­வ­டிக்­கைகள் அனைத்தும் நேற்று நான்­கா­வது நாளா­கவும் ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்­தன. எல­பாத்த, பெல்­ம­துளை, குரு­விட்ட, எஹ­லி­ய­கொட, கிரி­யெல்ல, இம்­பு­ளுவ,அய­கம, காவத்தை, கல­வான ஆகிய பிர­தேச செய­லக பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட அனைத்து தாழ் நிலப் பகு­தி­களும் தொடர்ந்தும் வெள்­ளத்தில் மூழ்­கிய நிலையில் காட்­சி­ய­ளிக்­கின்­றன.

இந் நிலையில் இரத்­தின புரி மாவட்­டத்தில் மட்டும் இந்த இயற்கை அனர்த்­தத்தால் 16389 குடும்­பங்­களைச் சேர்ந்த 69350 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்­களில் 7642 குடும்­பங்­களைச் சேர்ந்த 33248 பேர் 134 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இத­னை­விட இரத்­தின புரி மாவட்­டத்தில் வெள்ளம் மண் சரிவு கார­ண­மாக 42 வீடுகள் முற்­றா­கவும் 296 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேதம் அடைந்­துள்­ளது.

மாத்­தறை நக­ருக்கு எச்­ச­ரிக்கை

நிள்­வலா கங்கை தொடர்ந்து பெருக்­கெ­டுத்து வரு­வதால் மாத்­தறை நகர் நீரில் மூழ்கும் அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ளது. எனினும் நேற்று மழை வீழ்ச்சி பதி­வா­காத நிலையில் குறித்த அபாயம் அதி­க­ரிக்­காமல் தொடர்ந்தும் நில­வு­கி­றது. நில்­வளா கங்கை பெருக்­கெ­டுத்­ததன் விளை­வாக மாத்­தறை மாவட்­டத்தின் பல தாழ் நிலப் பகு­திகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.

குறிப்­பாக மாத்­தறை மாவட்­டத்தின் மொற­வக்க மண் சரிவு, பிர­தேச வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி இது­வரை 14 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 17 பேர் காணாமல் போயுள்­ளனர்.மாத்­தறை மாவட்­டத்தின் அனர்த்த நிலை­மைகள் கார­ண­மாக 23530 குடும்­பங்­களைச் சேர்ந்த 85969 பேர் பாதிக்­கப்ப்ட்­டுள்­ளனர். இத­னை­விட பாதிக்­கப்ப்ட்­டோரில் 7676 குடும்­பங்­களைச் சேர்ந்த 31479 பேர் 29 முகாம்­களில் தங்­க­வைக்­கப்ப்ட்­டுள்­ளனர். அம்­மா­வட்­டத்தில் இது­வரை 16 வீடுகள் முற்­ரா­கவும் 25 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன.

களுத்­து­றையும் பாதிப்பில்

மண் சரிவு மற்றும் வெள்ள நிலைமை கார­ண­மாக இது­வரை களுத்­துறை மாவட்­டத்தில் மாத்­திரம் 43 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 68 பேர் காணாமல் போயுள்­ளனர். களு கங்­கையின் நீர் மட்டம் உயர்­வ­டைந்­துள்­ளதை அடுத்து களு கங்­கையின் உயர் பகு­தியில் இருந்து தாழ் பகுதி நோக்கி நீர் வடிந்­தோடி வரு­வதால் களுத்­துறை மாவட்­டத்தின் களு கங்கை கரை­களில் உள்ள கிரா­மங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 உயி­ரி­ழப்­புக்­களில் பெரும்­பா­லா­னவை மண் சரி­வி­னா­லேயே ஏற்­பட்­டுள்­ளன. குறிப்­பாக களுத்­துறை மாவட்­டத்தின் 5 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­களில் 26 பாரிய மண் சரிவு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் மண் சரிவு கார­ண­மாக 40 உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன. களுத்­துறை மாவட்­டத்தில் மாத்­திரம் 21346 குடும்­பங்­களைச் சேர்ந்த 78933 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்­களில் 1398 குடும்­பங்­களைச் சேர்ந்த 5272 பேர் 46 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதனை தவிர 47 வீடுகள் களுத்­துறை மாவட்­டத்தில் முற்­றாக சேத­ம­டைந்­துள்ள நிலையில் 759 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

காலி மாவட்­டத்தின் வெள்ளம் தொடர்­கி­றது.

காலி மாவட்­டத்தின் பல பகு­தி­களும் தொடர்ந்தும் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்ள நிலையில் காட்­சி­ய­ளிக்­கின்­றன. கிங் கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­ததன் விளை­வாக ஏற்­பட்ட வெள்­ளத்­தி­லேயே கிங் கங்­கையை அண்­மித்­துள்ள பகு­திகள் அனைத்தும் நீரில் மூழ்­கி­யுள்­ளன.. இந் நிலைமை கார­ண­மாக காலி மாவட்­டத்தில் 36314 குடும்­பங்­களைச் சேர்ந்த 142149 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 8 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­க­ட­டினார். பாதிக்­கப்­பட்­டோரில் 525 குடும்­பங்­களைச் சேர்ந்த 1218 பேர் 6 முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

 ஏனைய மாவட்­டங்கள்

கேகாலை மாவட்­டத்தில் 1439 குடும்­பங்­களை சேர்ந்த 5262 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இருவர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மாத்­தளை மாவட்­டத்தில் 7 குடும்­பங்­களை சேர்ந்த 31 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கண்டி மாவட்­டத்தில் 9 குடும்­பங்­களை சேர்ந்த 40 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

வவு­னியா மாவட்­டத்தில் 31 குடும்­பங்­களை சேர்ந்த 102 பேர் பாதிக்கப் பட்­டுள்­ள­துடன், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 26 குடும்­பங்­களை சேர்ந்த 70 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 1073 குடும்­பங்­களை சேர்ந்த 3827 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 5பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கொழும்பு மாவட்­டத்தில் 5567 குடும்­பங்­களை சேர்ந்த 21370 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கம்­பஹா மாவட்­டத்தில் 8155 குடும்­பங்­களை சேர்ந்த 34357 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 4 குடும்­பங்­களை சேர்ந்த 20 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 206 குடும்­பங்­களை சேர்ந்த நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 26 குடும்­பங்­களை சேர்ந்த 123 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

போக்­கு­வ­ரத்து பாதிப்பு

அதிக வெள்ளம் மற்றும் நீர் மட்­டத்தின் அதி­க­ரிப்பு கார­ண­மாக பல்­வேறு பிர­தான போக்­கு­வ­ரத்து பாதைகள் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் இரத்­தி­ன­புரி - கல­வான, இரத்­தி­ன­புரி - பாண­துறை, இரத்­தி­ன­புரி - பலா­வெல வீதி ஆகி­யவை வௌ்ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் குரு­விட - கொக­ருல்ல, கல­வான - இரத்­தி­ன­புரி, கல­வான - பொது­பி­டிய, கல­வான - மது­கம, எஹ­லி­ய­கொட - எல்­லா­வல, பொது­பி­டிய - ரக்­வானை, கொலன்ன - தெனி­யாய, நிவ்­தி­கல - கல­வான, கிரி­எல்ல - பாணந்­துறை ஆகிய பாதை­களும் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

மேலும் களுத்­துறை மாவட்­டத்தின் களுத்­துறை - கெத்­ஹேன, பது­ர­லிய - அத்­வெல்­லாவ, புளத் சிங்­கள - பது­ர­லிய, கல­வெல்­லாவ - தெபு­வன, மது­கம - களுத்­துறை, வெலி­பென்ன - அளுத்­கம, அளுத்­கம - மது­கம, களுத்­துறை - ஹொரண, தெபு­வத - நெபட ஆகிய வீதிகள் வௌ்ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. காலி மாவட்­டத்தின் நெலுவ - தெல்­லவ, நெலுவ - உடு­கம, நெலுவ - பெல­வத்தை, உடு­கம - பத்­தே­கம, வது­ரப - மாப­ல­கம, வது­ரப - யக்­க­ல­முல்ல, வது­ரம - பத்­தே­கம, போத்­தல - பத்­தே­கம, எக்­வெல்ல - கிங்­தொட, கிநி­தும - நெலுவ, கிநி­துவ - உடு­கம, கிநி­துவ - அகு­ரஸ்ஸ ஆகிய பாதை­களும் வௌ்ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. , மாத்­தறை - அகு­ரஸ்ஸ, மாத்­தறை - கம்­பு­ரு­பி­டிய மற்றும் தங்­காலை - வீர­கெ­டிய போன்ற வீதி­களும் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

களனி பொலிஸ் பிரி­வி­லுள்ள பிய­கம - கடு­வளை, பிய­கம - கொழும்பு, ஆகிய வீதி­களில் வாகனப் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் முல்­லே­ரியா பொலிஸ் பிரிவின் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க மாவத்தை முழு­மை­யாக வௌ்ளத்தில் மூழ்­கி­யுள்­ளது. பாதுக்க - கங்­வெல்ல வீதி, பாதுக்க - இங்­கி­ரிய வீதி, களு­அக்­கல - லபு­கம வீதி, பஹத்­தே­கம - தித்­தெ­னிய வீதி, கடு­வளை - ஹோமா­கம வீதி ஆகி­ய­வற்­றிலும் போக்­கு­வ­ரத்­திற்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

நிவா­ரண உத­விகள்

அனர்த்­தத்­தினால் உயி­ரி­ழந்த நபர்கள் குடும்­பங்கள் மற்றும் பாதிப்­புக்கு உள்­ளான வீடு­க­ளுக்­காக நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கும், வீடு­களில் சேத­ம­டைந்த பொருட்­க­ளுக்கு உரிய நட்­ட­ஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கும், உயிரிழந்த நபர்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்வதற்கும் தேவையான ஆலோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் வழங்கப்பட்டுள்ளது. . அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 150 மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தேவைக்கு ஏற்றாற் போல் எல்லா நேரங்களிலும் மேலதிக நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அனர்த்தத்திற்கு உள்ளான 7 மாவட்டங்களில் இருக்கும் அரச அதிகாரிகள் தொகை போதுமான அளவு காணப்படாவிடின், அதனை சூழவுள்ள மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. சொந்த இடங்களுக்கு வெளியில் சென்று வாழும் நபர்கள் உயிரிழந்து இருப்பின், அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு உரியமரியாதையுடன் அவ்வுடல்களுக்கு இறுதி கிரியைகளை செய்வற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-29#page-1

  • தொடங்கியவர்

அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு : மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

 

 

நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளதுடன் 109 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

DAwYZH-VoAA2-y6.jpg

இதேவேளை, இவ் அனர்த்தத்தில் சிக்கி 109 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போனவர்களளை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் உடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/20451

  • தொடங்கியவர்

அசாதாரண காலநிலை : உயிரிழப்புகள் 180 ஆக அதிகரிப்பு 

 

 

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போனோரின் எண்ணிக்கை 110 ஆகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

180.jpg

இலங்கையில் மொத்தமாக 15 மாவட்டங்களில் 153 ஆயிரத்து 382 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சுமார் 4800 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாகவும், 109 பேர்வரையில் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை 18 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20457

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.