Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

180 பேர் உயிரிழப்பு

Featured Replies

180 பேர் உயிரிழப்பு

p15-7faacc67ec1aa69904b6c1861920f33fbd9f0bc5.jpg

 

110 பேரைக்காணவில்லை

ஐந்தரை இலட்சம் பேர் பாதிப்பு

76 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்

தொடர்ந்தும் இயல்பு நிலை பாதிப்பு

வெள்ள நீர் வழிந்தோட ஆரம்பம்

போக்குவரத்தும் ஸ்தம்பிதம்

(ஆர்.யசி,எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் தொடரும் மோச­மான கால­நிலை கார­ண­மாக வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் சிக்­குண்டு பலியா­னோரின் எண்­ணிக்கை 180 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது.  மேலும் 110 பேர் காணா­மல்­போ­யுள்­ளனர். அத்­துடன் அனர்த்­தங்­களில் 1 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 303 குடும்­பங்­களை சேர்ந்த 5 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 82 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட 18,845 குடும்­பங்­களை 

 சேர்ந்த 75,308 பேர் தொடர்ந்தும் முகாம்­களில் தங்­கி­யுள்­ளனர்.

கடந்த வாரம் ஏற்­பட்ட சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு என்­ப­ன­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் எண்­ணிக்கை தொடர்ந்தும் அதி­க­ரித்­த­வண்ணம் உள்­ளது. பாதிப்­புக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்­களை நேற்று 179 ஆக உயர்­வ­டைந்­துள்­ள­துடன் 109 பேர் காணாமல் போயுள்­ளனர். அதேபோல் இரத்­தி­ன­புரி, கேகாலை, மாத்­தளை, கண்டி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மாத்­தறை, ஹம்­பாந்­தோட்டை, காலி,கொழும்பு, களுத்­துறை, கம்­பஹா, மட்­டக்­க­ளப்பு,திரு­கோ­ண­மலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் 1 இலட்­சத்து 50 ஆயி­ரத்து 392 குடும்­பங்­களை சேர்ந்த 5 இலட்­சத்து 57 ஆயி­ரத்து 505 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதி­க­மாக பாதிக்­கப்­பட்ட 18 ஆயி­ரத்து 612 குடும்­பங்­களை சேர்ந்த 74 ஆயி­ரத்து 928 பேர் இது­வ­ரையில் 366 தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர் .

நேற்று மற்றும் நேற்று முன்­தினம் கால­நிலை சாதா­ரண நிலை­மையில் இருந்த போதிலும் சாதா­ரண மழை­வீழ்ச்சி காணப்­பட்­டது. சில பகு­தி­களில் கடு­மை­யான மழை வீழ்ச்சி குறித்த சில மணி­நே­ரங்­க­ளுக்கு மாத்­திரம் பதி­வா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களின் நீர் தேங்­கி­யுள்­ளதை அடுத்து மக்­களின் இயல்பு வாழ்க்கை தொடாந்தும் பதிக்­கப்­பட்ட வண்­ணமே உள்­ளது. வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்கம் கார­ண­மாக மீண்டும் கன­மழை பெய்­யக்­கூ­டிய வாய்ப்­புகள் உள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

 மாத்­தறை மாவட்­டத்தில்

அதி­க­ள­வானோர் பாதிப்பு

இந்த அனர்த்­தங்­களில் மாத்­தறை மாவட்­டமே அதி­க­மாக பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. மாத்­தறை மாவட்­டத்தை சேர்ந்­த­வர்­களே அதி­க­ளவு பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலைய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. மாத்­த­றையில் மாத்­திரம் 24 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் 15 பேர் காணாமல் போயுள்­ளனர். பாது­காப்பு படை­க­ளினால் காணமால் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்­த­வண்ணம் உள்­ளன. குறித்த மாவட்­டத்தில் 16 பிர­தேச செய­ல­கங்கள் அனர்த்­தத்­தினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இப் பிர­தேச செய­லங்­க­ளுக்கு உட்­பட்ட 87 வீடுகள் முற்­றா­கவும் 2001 வீடுகள் பகுதி அள­விலும் சேத­ம­டைந்­துள்­ளது. மாத்­தறை மாவட்­டத்தில் 41 ஆயி­ரத்து 545 குடும்­பங்­களைச் சேர்ந்த 1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 775 பேர் வெள்ளம் மற்றும் மண் சரிவால் பாதிக்­கப்­பட்ட நிலையில் அவர்­களில் 2714 குடும்­பங்­களைச் சேர்ந்த 9 ஆயி­ரத்து 370 பேர் 29 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

களுத்­து­றையில் 54 பேர் பலி

இயற்கை அனர்த்­தத்தில் சிக்­குண்டு களுத்­துறை மாவட்­டத்தில் 54 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 69 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் கார­ண­மாக மேலும் 57 பேர் காணாமல் போயுள்­ளனர். களு கங்­கையின் நீர் மட்டம் ஓர­ளவு குறைந்­துள்ள போதும் தாழ் நிலப் பகு­தி­களில் தொடர்ந்தும் வெள்ள நிலைமை நீடித்து வரு­கின்­றது. இது வரை­யி­லான காலப்­ப­கு­தியில் களுத்­துறை மாவட்­டத்தில் 29 ஆயி­ரத்து199குடும்­பங்­களைச் சேர்ந்த 107906 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்­களில் 1602 குடும்­பங்­களைச் சேர்ந்த 6034 பேர் 60 முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

  களுத்­துறை மாவட்­டத்தின் 5 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­களில் 26 பாரிய மண் சரிவு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. களுத்­துறை, மது­ரா­வல, தொடான்­கொடை செய­லகப் பிரி­வு­களின் கீழ் உள்ள பகு­திகள் பல நேற்றும் அபாய எச்­ச­ரிக்­கையின் கீழேயே அடை­யா­ள­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேல் மாகா­ணத்தி க்கு தொடர்ந்து மழை பெய்யக் கூடிய அபாயம் காணப்­படும் நிலையில் களுத்­துறை மாவட்­டத்­திற்­கான எச்­ச­ரிக்கை தொடர்­கி­றது.

 காலியில் 12 உயி­ரி­ழப்­புக்கள்

 நிவா­ரண சேவைகள் தீவிரம்

தொடர்ச்­சி­யாக பெய்த கன­மழை கார­ண­மாக காலி மாவட்­டத்தின் பல பகு­தி­களும் தொடர்ந்தும் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. கிங் கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­ததன் விளை­வாக ஏற்­பட்ட வெள்­ளத்தில் கிங் கங்­கையை அண்­மித்­துள்ள பகு­திகள் அனைத்தும் நீரில் மூழ்­கிய போதும் தற்­போது வெள்ளம் வடிந்­தோ­டி­வ­ரு­கின்­றது. எனினும் காலியின் பத்­தே­கம மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் வெள்ள நீர் தொடர்ந்தும் அதே மட்­டத்தில் காணப்­படும் நிலையில் அப்­ப­கு­தி­களில் உள்ள பல கிராம சேவகர் பிரி­வு­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை கொன்டு செல்லும் பணி­களில் தொடர்ந்தும் சிரமம் காணப்­ப­டு­கின்­றது.

 அனர்த்தம் கார­ண­மாக காலி மாவட்­டத்தில் 38155 குடும்­பங்­களைச் சேர்ந்த 151360 பேர் பாதிக்­கப்ப்ட்­டுள்­ள­துடன் 12 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் 10 பேர் காணாமல் போயுள்­ளனர். பாதிக்­கப்­பட்­டோரில் 634 குடும்­பங்­களைச் சேர்ந்த 1411 பேர் 13 முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இரத்­தி­ன­பு­ரியில் 77 உயி­ரி­ழப்­புக்கள்

   28 பேரை காண­வில்லை

அனர்த்­தங்­க­ளினால் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­லேயே அதிக உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன. மண் சரிவு, வெள்ளம் கார­ண­மாக இந்த உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ள­துடன் நேற்று ஐந்­தா­வது நாளா­கவும் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் பல பகு­திகள் தொடர்ந்தும் நீரில் மூழ்­கி­யி­ருந்­தன. இந் நிலையில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மட்டும் இது­வரை 77 பேர் மண் சரிவு மற்றும் வெள்­ளத்­துக்கு பலி­யா­கி­யுள்­ள­தா­கவும் 26 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் 28 பேர் காணாமல் போயுள்­ளனர். இரத்­தின புரி மாவட்­டத்தில் தற்­ச­மயம் மழை ஓய்ந்­துள்ள போதும் , இரத்­தி­ன­பு­ரியின் 325 கிராம சேவகர் பிரி­வுகள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

 ஏனைய மாவட்­டங்கள்

கேகாலை மாவட்­டத்தில் 1526 குடும்­பங்­களை சேர்ந்த 5799 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் நான்கு பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மாத்­தளை மாவட்­டத்தில் 7 குடும்­பங்­களை சேர்ந்த 31 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கண்டி மாவட்­டத்தில் 4 குடும்­பங்­களை சேர்ந்த 20பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். வவு­னியா மாவட்­டத்தில் 31 குடும்­பங்­களை சேர்ந்த 102 பேர் பாதிக்கப் பட்­டுள்­ள­துடன், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 27குடும்­பங்­களை சேர்ந்த 72பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 2409 குடும்­பங்­களை சேர்ந்த 10368 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 5பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கொழும்பு மாவட்­டத்தில் 5150 குடும்­பங்­களை சேர்ந்த 20172நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கம்­பஹா மாவட்­டத்தில் 3756 குடும்­பங்­க­களை சேர்ந்த 16133பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 4 குடும்­பங்­களை சேர்ந்த 20 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 206 குடும்­பங்­களை சேர்ந்த நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 28 குடும்­பங்­களை சேர்ந்த 123 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நீர்­மட்டம் குறைவு.

மழை­வீழ்ச்சி குறை­வ­டைந்­துள்ள நிலையில் களு­கங்கை, நில்­வலா கங்கை, கிங் கங்கை, களனி கங்கை ஆகிய நான்கு கங்­கை­களின் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்ள நிலையில் வெள்­ள­பெ­ருக்கும் குறை­வ­டைந்­துள்­ளது. தற்­போது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்ட போதிலும் திடீர் மழை பெய்யும் நிலையில் மீண்டும் அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

எட்டு மாவட்டங்கள் தொடர்தந்தும்

அனர்த்த எச்சரிக்கை.

 கேகாலை, காலி மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, அம்பாந்தோட்டை களுத்துறை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த நிலைமை எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று மாலை விடுக்கப்பட்ட இந்த அறிவித்தலின் அடிப்படையில் மலைப்பாங்கான பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.