Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றில் ஜே.வி.பியினர் பெரும் ரகளை

Featured Replies

நாடாளுமன்றில் ஜே.வி.பியினர் பெரும் ரகளை

[Friday February 23 2007 04:21:13 AM GMT] [tharan]

ரணில் பிரபா யுத்தநிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி ஜே.வி.பியினர் நாடாளுமன்றத்தின் நடுவே நேற்று ஆர்ப் பாட்டம் செய்தனர்.

இதனால் சபை நட வடிக்கைகள் ஸ்தம்பித்தன. இந்தச் சந்தர்ப் பத்தில் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் செங் கோலைத் தூக்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓட்டம் பிடித்தார்.

ஜே.வி.பியின் திருமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த வீரசேகரவே செங்கோலைத் தூக்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓடினார். படைக்கல சேவிதரும் உதவியாளர்களும் அவரைப் பின்னால் துரத்திச் சென்று செங்கோலை அவரிட மிருந்து பறித்து வந்து சபா பீடத்தில் வைத் தனர்.

நாடாளுமன்றத்தில் அமைதியான போராட்டங்களை நடத்தலாம். ஆனால், பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடத் திய அமைதியான போராட்டத்தை முன் உதாரணம் காட்டி ஜே.பி.யினரைக் கடுமையாகக் கண்டித்தார் சபாநாயகர்.

அரசு இந்த யுத்தநிறுத்த உடன்படிக்கையை கிழித்து எறியாவிட்டால், வடக்கு கிழக்கைப் பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் சென்றதுபோல் ரணில் பிரபா ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றம் செல்ப்போவதாகவும் ஜே.வி.பியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடியபோது ஜே.வி.பி. நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ஸ, ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் செய்துகொண்ட யுத்தநிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசு உடனடியாக ரத்துச் செய்யவேண்டும் எனக்கோரி விசேட உரை ஒன்றை ஆற்றினார்.

விமல் வீரவன்ஸவின் உரை

அப்போது அவர் கூறியதாவது:

ஐந்து ஆண்டுகளின் முன் ரணில் விக்கிரமசிங் கவும், பிரபாகரனும் செய்துகொண்ட ஒப்பந்தம் தமது தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தேசத்துரோக ஒப்பந்தம். அதற்கு இன்று ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. அதனால், அரசுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

ஆனால், இலங்கையில் அரச கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு பிரதேசம் புலிகளின் அதாவது, வேலுப்பிள்ளை பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என சர்வதேச அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

நோர்வே அரசின் சர்வாதிகார தலைமையின்கீழ் நேரடிக் கண்காணிப்பில் செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் இடைக்கால நிர்வாகசபை ஒன்றை அமைக்கவும் வழிவகுத்துள்ளது. இது தனித்தமிழ் ஈழ இராச்சியத்துக்கான அத்திவாரம். அதனால்தான் நாம் ஆரம்பம் முதலே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தோம்.

இந்தத் தேசத்துரோக ஒப்பந்தம் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கோ, நாடாளுமன்றத்துக்கோ தெரியாமல் செய்துகொள்ளப்பட்டது.

ரணில் பிரபா ஒப்பந்தத்தின் மூலம் ஏ 9 பாதை திறக்கப்பட்டது நாட்டுமக்களுக்கோ அல்லது அரசுக்கோ எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை. மாறாக புலிகள் ஆயுதங்களை சேர்க்கவும் தமது இராணுவபலத்தை அதிகரிக்கவும் வழிவகுத்தது.

புலிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தாக்கினர், ஆனையிறவு படைமுகாமைக் கைப்பற்றியதுடன் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடையச் செய்து பிரதமராக்கினர். இதற்கு கைமாறாகவே ரணில் பிரபா ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இந்தத் தேசத்துரோக ஒப்பந்தம் தொடர்பாக அரசுக்குள்ளேயே மூன்றுவிதமான கருத்துகள் வெளிப்பட்டுள்ளன.

செத்துப்போன ஒப்பந்தம்

அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண இந்த ஒப்பந்தம் அவசியம் என்கின்றார். சிலர் ஒப்பந்தம் செத்துப்போய்விட்டது என்கின்றனர்.

வேறு சிலர் ரத்துச் செய்யப்படவேண்டும் என்கின்றனர். ஒப்பந்தம் இறந்து விட்டதாகக் கூறும்போது ஏன் அந்தச் சடலத்தை அடக்கம் செய்யாமல் பிரேதஅறையில் வைத்துக்கொண்டு மாரடிக்கிறீர்கள்? அதனைப் புதைத்து ஒழிக்க வேண்டியதுதானே.

இந்தத் தேசத்துரோக உடன்படிக்கையை ரத்துச் செய்யும்படி உண்ணாவிரதம் இருக்கிறனர்; ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்றனர். ஆனால், அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. அப்படியானால் இந்த அரசும் சமூக விரோதச்செயல்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றதா? ஒப்பந்தத்தின் காரணமாகவே தென்பகுதியில் சிங்களப் புலிகளும் உருவாகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மேலும் காலம் கடத்தாமல் இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்யவேண்டும். தவறினால் வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு நாம் உயர்நீதிமன்றம் சென்றதுபோல் இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்கும் நீதிமன்றம் செல்வோம். அரசு இவ்விடயத்தில் அதன் நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்தார்.

பிதமர் பதிலளிப்பார்

விமல் வீரவன்ஸவின் உரைக்கும் அவரது கோரிக்கைக்கும் பதில் அளிக்கும் வகையில் சபைமுதல்வர் எழுந்து ""ஜே.வி.பியினரின் கோரிக்கை தொடர்பாக பிரதமர் கூடிய விரைவில் பதிலளிப்பார் என்று கூறினார்.

Tamilwin

அப்படியானால் இந்த அரசும் சமூக விரோதச்செயல்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றதா? ஒப்பந்தத்தின் காரணமாகவே தென்பகுதியில் சிங்களப் புலிகளும் உருவாகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

கிடைக்கும் ஒவ்வொரு துரும்பும் எமது போராட்டத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. மேல்வீடு காலியானது சிங்களவருக்கல்ல தமிழருக்கே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.