Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐங்கரநேசன், குருகுலராசா அமர்வில் பங்கேற்பு

Featured Replies

ஐங்கரநேசன், குருகுலராசா அமர்வில் பங்கேற்பு

 
ஐங்கரநேசன், குருகுலராசா அமர்வில் பங்கேற்பு
 

பதவி விலக வேண்டும் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்த அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா இருவரும், வடக்கு மாகாண சபையின் அமர்வில் பங்கேற்றுள்ளனர்.

சபை அமர்வு ஆரம்பமாகி சில நிமிடங்களில் இருவரும் சபைக்குள் வந்து தமது ஆசனங்களில் அமர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

18948600_1393284347385816_1773067545_o-7

18948884_1393284370719147_2063546933_o-7

 

http://uthayandaily.com/story/5326.html

  • தொடங்கியவர்

பதவி விலக தவராசாவும் வலியுறுத்து

பதவி விலக தவராசாவும் வலியுறுத்து
 

ஜன­நா­ய­கத்­தைப் பாது­காப்­ப­தற்­கும் மக்­க­ளுக்குப் பொறுப்­புக் கூறலை உறுதி செய்­வ­தற்கும் வடக்கு மாகாண சபை அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் த.குரு­கு­ல­ராசா இரு­வ­ரும் பதவி விலக வேண்­டும்.

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான ஊழல், நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த குழு தனது அறிக்கையில், வடக்கு மாகாண அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா இருவரும் பதவி விலக வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

‘‘இந்தியாவில் நேருவின் காலத்தில், தொடருந்து தடம்புரண்டதற்கு அந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் உடனடியாகப் பதவி விலகியிருந்தார்.

அந்த அமைச்சர், தொடருந்துப் பாதையை அமைக்கவுமில்லை, தொடருந்தைச் செலுத்தவுமில்லை. ஆனால் பொறுப்புக் கூறுதல் அடிப்படையில் பதவி விலகியிருந்தார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுகின்றேன் -’’ என்றார் தவராசா.

http://uthayandaily.com/story/5324.html

  • தொடங்கியவர்

விசாரணைக் குழு பரிந்துரைத்தபடி அமைச்சர்கள் இருவரும் உடன் பதவி விலகார்

விசாரணைக் குழு பரிந்துரைத்தபடி  அமைச்சர்கள் இருவரும் உடன் பதவி விலகார்

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் த.குரு­கு­ல­ராசா ஆகிய இரு­வ­ரும் பதவி வில­க­வேண்­டும் என்று, ஊழல் மோசடி தொடர்­பில் விசா­ரிக்க முத­ல­மைச்­சர் நிய­மித்த விசா­ர­ணைக் குழு பரிந்­து­ரைத்­த­போ­தும் அந்த இரு அமைச்­சர்­க­ளும் உட­ன­டி­யா­கப் பதவி வில­கும் எண்­ணத்­தில் இல்லை என்று வட­மா­காண சபை அர­சி­யல் வட்­டா­ரங்­கள் உத­யன் பத்­தி­ரி­கைக்­குத் தெரி­வித்­தன.

இத­னால் முத­ல­மைச்­ச­ருக்கு நெருக்­கடி அதி­க­மா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மாகாண விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மீதும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா மீதும் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக் களை விசா­ரணை செய்த முத­ல­மைச்­ச­ரின் குழு, அவர்­கள் இரு­வர் மீதான குற்­றச்­சாட் டுக்­கள் பல­வற்­றில் அவர்­க­ளைக் குற்­ற­வா­ளி­க­ளா­கக் கண்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டை­யில் அவர்­கள் பதவி வில­க­வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­தி­ருந்­தது.

அந்த அறிக்கை கடந்த சனிக்­கி­ழமை முத­ல­மைச்­ச­ரால் அமைச்­சர்­க­ளுக்கு அனுப்பி வைக்கப்­பட்­டது. அறிக்­கை­யில் இடம்­பெற்­றி­ருந்த முக்­கிய விட­யங்­கள் சில கசிந்த நிலை ­யில் உத­யன் அவற்றை நேற்று வெளி­யிட்­டது. இத­னை­ய­டுத்து முத­ல­மைச்­ச­ருக்கு நெருக்­கீ­டு­கள் வராத வகை­யில் அமைச்­சர்­கள் இரு­வ­ரும் உட­ன­டி­யா­கப் பதவி வில­கு­வார்­கள் என்ற எதிர்­பார்ப்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் இருந்­தது. ஆனால், அமைச்­சர்­கள் இரு­வ­ரும் உட­ன­டி­யா­கப் பதவி வில­கு­வ­தற்­கான சாத்­தி­யங்­களோ ஏற்­பா­டு­களோ தென்­ப­ட­வில்லை என்று மாகாண சபை அர­சி­யல் வட்­டா­ரங்­கள் உத­யன் பத்­தி­ரி­கைக்­குத் தெரி­வித்­தன.

அமைச்­சர்­க­ளின் இந்த நிலைப்­பாடு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு கடும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தும் என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அமைச்சர்கள் இருவரும் பதவி விலகவேண்டும் என்று சரமாரியாகக் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவர்களைப் பதவியிலிருந்து முதலமைச்சர் நீக்கவேண்டும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

இத்தகையதொரு நிலையில் முதலமைச்சர் மீது அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் என்று அவதானிகள் கூறுகின்றனர்.

http://uthayandaily.com/story/5354.html

 

  • தொடங்கியவர்

அமைச்சர்கள் ஐங்கரநேசன், குருகுலராசா இருவரும் உடனே பதவி விலகவேண்டும்

இல்லையேல் முதல்வர் பதவி நீக்கவேண்டும் என ரெலோ வலியுறுத்து

 
அமைச்சர்கள் ஐங்கரநேசன், குருகுலராசா இருவரும் உடனே பதவி விலகவேண்டும்
 

வடக்கு மாகாண சபை அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­ நே­சன் மற்­றும் த.குரு­கு­ல­ராசா இரு­வ­ரும் தமது பத­வி­க­ளி­லி­ருந்து வில­க­வேண்­டும். அவர்­கள் அவ் வாறு செய்­யத் தவ­றி­னால் முத­ல­ மைச்­சர் அவர் களைப் பதவி நீக்­கம் செய்­ய­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது. கூட்­ட­மைப் பின் பங்­காளிக் கட்­சிக­ளுள்ஒன்­றான ரெலோ.

கட்­சி­யின் செய­லா­ ளர் ந.சிறிகாந்தா இது தொடர்­பில் அனுப்பி வைத்­துள்ள பத்­தி­ரி­கைச் செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்ளதாவது,

வடக்கு மாகாண சபை­யின் இரண்டு அமைச்­சர்­கள் மீது தொடுக்­கப்­பட்ட ஊழல் மற்­றும் அதி­கார முறை­கேடு குற்­றச்­சாட் டுக்­கள் நிரூபிக் கப்பட்டிருப்பதாக இது குறித்து விசாரணை செய்வதற்கு என்று நியமிக்கப்பட்ட சுயாதீன விசாரணைக்குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்திருப்பதாக ஆதாரபூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகப் பாரதூரமான விவகாரமாகும்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று மகத்தான மாபெரும் ஆதரவினை வழங்கிய மக்களின் நம்பிக்கைக்கு மோசடி செய்த எவரையும் சகித்துக் கொள்ளமுடியாது.

ஏனைய இரண்டு அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று விசாரணைக்குழு தெரிவித்து இருந்தாலும்கூட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வடமாகாண சபையின் அமைச்சரவை முற்று முழுதாக மாற்றியமைக்கப்படுவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அபார நம்பிக்கை வைத்த மக்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் வழங்கக்கூடிய பிராயச்சித்தமாக இருக்கும். தனது தலைமையிலான அமைச்சரவையை முற்றுமுழுதாக மாற்றியமைப்பதற்கு முதலமைச்சர் இப்போது கடமைப்பட்டுள்ளார்.

அமைச்சர்களை நியமிப்பதற்கு முன்னர், ஆளும்கட்சி உறுப்பினர்களிடம் இருந்து அவர்களின் சுயவிபரக்கோவையை முதலமைச்சர் தானாகவே பெற்றுக்கொண்டார் என்பதையும், அதன் பின்னரே அமைச்சர்களை அவர் நியமித்தார் என்பதையும் நாம் மறந்துவிடவில்லை.

முதலமைச்சர் தவிர, ஏனைய நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக, இரு வருடங்களுக்கு முன்னர் தந்தை செல்வநாயகத்தின் பிறந்தநாள் அன்று கொழும்பில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் நிகழ்ந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் சமூகமளித்திருந்த அந்தக் கூட்டத்தில் எவரும் என்னை மறுத்துரைக்கவில்லை.
ஆயினும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எதனையும் அமைப்பு ரீதியாக முன்னெடுக்க கூட்டமைப்புத் தவறியிருந்தது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறியே ஆக வேண்டும்.

வடக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியாக உள்ள கூட்டமைப்பு, தமிழினம் சம்பந்தப்பட்ட அடிப்படை அரசியல் பிரச்சினைகளை, அதன் ஒருங்கிணைப்புக்குழு ஊடாகக் கையாளும் அதேநேரத்தில், வடமாகாண சபையின் ஆளும்கட்சி, ஊழலற்றதும் பொதுமக்கள் நலன் சார்ந்ததுமான தூய நிர்வாகத்தை தனது எஞ்சிய பதவிக் காலத்தில் வடக்கு மாகாண மக்களுக்கு வழங்குவதற்கு உறுதிபூண்டு செயற்படவேண்டும்.

தூய்மையான கரங்களைக் கொண்டுள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இதனைச் செயலாக்க முடியும் என்ற நல்ல நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் உள்ளது – என்று கூறப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/5343.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.