Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-க.வே.பாலகுமாரன்-

தமிழர் தாயகத்தின் தென்பகுதி சிறிலங்காவுடன் நீண்ட தரை எல்லையைக் கொண்டிருப்பினும், இலங்கைத் தீவைச் சூழவுள்ள கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கரையோரத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இலங்கைத் தீவில் 1770 கிலோ மீற்றர் நீளமான (தீவுகள் நீங்கலாக) கரையோரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தமிழர் தாயகப் பகுதிக்குள் உட்பட்ட தாகவுள்ளது.

அத்தோடு, தமிழர் தாயகத்தின் பெரும்வளம், கடற்பிராந்தியத்திலேயே உள்ளது. இன்றைய நிலையில் பெட்ரோலியப் படிமங்களில் இருந்து பெரும் மீன் வளம் வரையில் - அதாவது கனி வளத்திலிருந்து உயிரியல் வளம் வரையிலான பெரும்வளம் கடற்பரப்பிலேயே கொட்டிக்கிடக்கின்றது.

இவற்றை நீண்ட காலமாக அனுபவித்து வரும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் இன்று அவற்றைத் தமிழ் மக்களின் அனுமதியோ, ஒத்துழைப்போ இன்றி சில நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கவும், விற்பனை செய்யவும் முற்பட்டுள்ளனர். சுருக்கமாகக் கூறுவதானால், எமது இயற்கை வளத்தை விற்றுப் பெறும் பணத்தில் எமது இனத்தையே அழித்துவிடக்கூடிய யுத்த நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது.

இது ஒருபுறம் இருக்க, தமிழர் தாயகத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் கடல் வகிக்கப்போகும் பங்கு மிகவும் காத்திரமானதாகவே நிச்சயம் இருக்கும். குறிப்பிட்டுக் கூறுவதானால், கடலில் இடம்பெறக்கூடிய பெரும் சமர்கள் போராட்டத்தை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கும் எனக் கூறின் மிகையாகமாட்டாது.

உலக வரலாற்றில் நீண்ட காலமாகவே கடலை ஆள்பவன் உலகை ஆள்வான் என்ற கேட்பாடு இருந்து வருகின்றது. இது வரலாற்று ரீதியில் நிரூபிக்கப்பட்டதொன்று. கடலானது ஒரு தேசத்தின் பாதுகாப்பிற்கானதாகவும் உள்ளது. அதேசமயம், பலவீனமானதாகவும் உள்ளது.

உலக போரியல் வரலாற்றில் பெரும் கடற்படையைக் கொண்டுள்ள நாடுகளே வல்லரசுகளாகக் கோலோச்சியுள்ளன. இது சோழப் பேரரசில் இருந்து பிரிட்டிஷ், அமெரிக்க சாம்ராஜ்யங்கள் வரையில் பொருத்தப்பாடானதே.

சில சாம்ராச்சியங்களின் எழுச்சியும், சில சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியும்கூட கடற் போரினால் தீர்மானிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாகப் பிரிட்டிஷ் கடற்படைக்கும் - ஸ்பானியக் கடற்படைக்கும் இடையில் நடந்த ~அமெடா| கடற்போர் தோல்வியினால் ஸ்பானிய சாம்ராஜ்யம் சரியத் தொடங்கப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. சூரியன் மறையாத சாம்ராஜ்யம் ஒன்றை பிரிட்டனால் ஸ்தாபிக்க அதன் வலுமிக்க கடற்படை காரண மாகியது.

இன்றுகூட ஈராக் - அமெரிக்கப் போரில் அமெரிக்க கடற்படை வகிக்கும் பாத்திரத்தைச் சுட்டிக்காட்ட முடியும். தரையில் ஒரு தளப்பிரதேசம் இன்றியே செயற்படத்தக்க அளவில் அமெரிக்கக் கடற்படை செயற்பட முடியும் என்பதை வளைகுடாப் போர் அதாவது, ஈராக் கிற்கு எதிரான போரில் அமெரிக்கக் கடற்படை நிரூபித்துள்ளது.

நெப்போலியனும், ஹிட்லரும் பெரும் வெற்றிகளைத் தமது இராணுவம் மூலம் ஈட்டியிருப்பினும் அவர்களினால் கடற்பரப்பில் குறிப்பாக, அத்திலாந்திக்கின் வடகிழக்குக் கடற்பிராந்தியத்திலும், ஆங்கிலக் கால்வாயிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாமல் போனதே அவர்களின் தோல்விக்கு அடிப்படையாக அமைந்த முக்கியமான காரணிகள் எனக் கூறின் மிகையாகாது. அதாவது, நெப்போலியனும், ஹிட்லரும் கடற்போரில் சந்தித்த தோல்விகள் அவர்களின் ஒட்டுமொத்தத் தோல்விக்கு அடிப்படையாகின. சிறிது காலமாயினும் ஆங்கிலக் கால்வாயும் வடகிழக்கு அத்திலாந்திக்கும் அவர்கள் வசம் இருந்திருப்பின் இன்றைய உலக வரலாறே மாறியிருக்கும்.

இதேவேளை, தமிழர் தாயகத்திற்கான விடுதலைப் போரில் சிறிலங்காக் கடற்படைக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் சமர்கள், இடம்பெறப்போகும் சமர்கள் விடுதலைப் போரின் பெரும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பவையாக இருக்கும் எனத் துணிந்து கூறமுடியும். விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை குறிப்பிட்டதுபோல் 'ஈழப் போரின் இறுதிச் சமர் கடற்சமராகவே இருக்கும்" எனக் கூறப்பட்டமைகூட மிகையானதொன்றாக இருக்கமாட்டாது.

ஐஐ

மேற்கூறப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரச தரப்பாலும் - விடுதலைப் புலிகளினாலும் நன்கே விளங்கப்பட்டதொன்றாகவே உள்ளது. இதன் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையும், விடுதலைப் புலிகளும் தமது பலத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

அரசு என்ற ரீதியில் சிறிலங்கா அரசாங்கம் ~சுதந்திரத்தோடு| தனது கடற்படையையும் உருவாக்கி இருந்தது. ஆரம்பத்தில் இதன் முக்கிய பணி இந்தியாவிற்கும் - இலங்கைக்கும் இடையிலான கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் செயற்பாடு கொண்டதாகவே இருந்தது. அதன் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் அது படிப்படியாக வளர்ச்சி கண்டது.

இதேவேளை, கடற்புலிகளின் உருவாக்கமானது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் - குறிப்பாக, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஆகாயக் கடல்வெளிச் (ஆ.க.வெ) சமரின் பின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் பலம் மிக்கதானதொரு படையாகக் கட்டி வளர்க்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் ஒரு முன்னுதாரணமான படையணியாக அது உள்ளதெனில் மிகையாகாது. இதன் சிறப்புத் தளபதியாக கேணல் சூசை அவர்கள் செயற்பட்டு வருகின்றார்.

சிறிலங்கா கடற்படைக் கட்டமைப்பைப் பொறுத்து, இலங்கைத்தீவின் கடற்பிராந்தியம் ஐந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய வலயங்கள் தமிழர் தாயகக் கரையோரத்தை கொண்டவையாகவுள்ளன. மேல் மற்றும் தென் வலயங்கள் சிறிலங்கா கரையோரங்களை உள்ளடக்கியவையாகவுள்ளன.

இதில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் வலயங்களில் உள்ள கடற்படைத் தளங்களில் காரைநகர் (1955), திருமலை (1957) ஆகிய கடற்படைத் தளங்களைவிட ஏனையவையும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற பின்பு அதிலும் குறிப்பாக, விடுதலைப் போராட்டத்தில் கடற்புலிகளின் பிரவேசத்தின் பின்பு விரிவாக்கம் பெற்றவையாகும்.

இதேசமயம், கடற்புலிகளைப் பொறுத்து அவர்கள் வடகிழக்குப் பகுதியிலும், வட மேற்குப் பகுதியிலுமான கடற்கரைப் பிரதேசத்தில் தமது தளங்களைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, வடகிழக்கே, நாயாற்றில் இருந்து தாளையடி வரையிலான கடற்கரைப் பிரதேசத்திலும் வடமேற்குப் பகுதியில் மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்திலும் யாழ். மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் கிழக்குக் கரையோரத்திலுமாகத் தமது தளங்களைக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, தமிழர் தாயகத்தைச் சூழவுள்ள கடற்பரப்பானது சகல பகுதிகளிலும் ஒரே வகையான கரையோரத்தையோ கடற்பரப்பையோ கொண்டதல்ல. ஒரு வகையில் பார்க்கப்போனால், பல விரிகுடாக்களையும், கடல் நீரேரிகளையும், முனைகளையும், தீவுகளையும் கொண்டதாக கடற்பகுதி உள்ளது. இதில் குடாக்கடல்களைப் பொறுத்து யாழ். கடல் நீரேரி மட்டுமே ஓரளவு ஆயினும் - அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான படகுப் போக்குவரத்திற்கு உகந்ததாகும். ஏனைய கடல் நீரேரிகள் எவையும் இராணுவ நோக்கில் பயன்படுத்தப்பட முடியாத சிறுபரப்புக்களாகவே உள்ளன. இதேசமயம், நாச்சிக்குடா, முள்ளிவாய்க்கால் போன்ற விரிகுடாக்கள் கடற்படைகளின் செயற்பாட்டிற்கு ஒருபுறத்தில் சாதகமானi யாகவும், மறுபுறத்தில் பாதகமானவையாகவும் உள்ளன.

அத்தோடு, தமிழர் தாயகத்தைச் சூழவுள்ள கடற்பரப்பும் அதாவது, கரையோரம் மற்றும் கடல்பரப்பு, அவற்றின் சூழல் போன்றவையும் வேறுபடுபவையாகவுள்ளன. சுலபமாக இதனை விபரிப்பதானால், மூன்று வலயங்களாக இவற்றைப் பிரிக்கலாம்.

01. மேற்கு கரையோரம்

02. வடகரையோரம்

03. கிழக்குக் கரையோரம்.

மேற்குக் கரையோரம் பல தீவுக்கூட்டங்களைக் கொண்டதும், பல குடாக்களைக் கொண்டதாகவும் உள்ளது. பிரதான நிலப்பரப்பிற்கு அண்மையாக அதிக ஆழமற்ற கடற்பரப்பைக் கொண்ட இப்பிரதேசமானது கடல் அடித்தளத்தில் சிறியளவிலான பாறைப் படைகளையும்; மணற்பாங்கான கடலடித்தரையும் கொண்டதாகும்.

இக்கடற்பிரதேசத்தைக் கண்காணிக்கவோ அன்றி இப்பகுதியில் போரிடுவதற்கோ ஆழம் குறைந்த கடற்பரப்பில் பயணிக்கத்தக்கதான கடற்கலங்கள் அதிகளவில் தேவைப்படுவதாக இருக்கும்;. இதேசமயம், குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால், அதாவது, தீவுப்பகுதிகளின் மேற்குப் புறங்களில் ஆழ்கடல் பரப்பு காணப்படுவதால் பெரியளவிலான போர்க் கலங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால், அப்பிராந்தியத்தில் கரையோரங்களில் இருந்து சுமார் 10-20 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இந்தியக் கடற்பரப்பு உள்ளதினால், சிறிலங்கா கடற்படையைப் பொறுத்து ஆழ்கடல் ரோந்து என்பது அப்பகுதியில் இடம்பெறுவது அரிதே ஆகும்.

இதேசமயம், இப்பகுதியில் உள்ள தீவுகளுக்கு இடையிலான கடற்பரப்பும், (நெடுந்தீவு போன்ற தொலைதூரத்தீவுகள் தவிர) யாழ். கடல் நீரேரி போன்ற குடாக்கடலும் மிகவும் ஆழம் குறைந்தவையாக உள்ளன. பெரும்பாலும் மணற்திட்டுக்களையும், இடையிடையே பாறைப் படைகளையும் கொண்டவையாக இவை இருப்பதன் காரணமாக இவை தனித்துவமான தன்மை கொண்டவையாக - பெரிய கடற்கலங்கள் பயணிக்க முடியாதவையாகவும் உள்ளன.

அடுத்ததாக, மேற்குக் கரையோரத்தில் மன்னாருக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்டதான கடற்பரப்பும் குறிப்பிடத்தக்கதானதொரு முக்கியத்துவத்தைப் பெறுவதொன்றாகவே இருக்கும். ஒரு விரிகுடா போன்ற தன்மையைக் கொண்ட இக்கடற்பரப்பின் அடித்தளம் மணற்பாங்கு கொண்டதாகவும் அதேநேரத்தில் தமிழீழக் கடற்பரப்பில் ஒரு தனித்துவமான பகுதி போன்றதாகவும் உள்ளது.

அதாவது, தலைமன்னாருக்கும் இந்திய தனுஷ்கோடிக்கும் இடையில் மணற்பாங்கான திட்டுக்கள் தொடராக உள்ளமையால் மேற்குக் கரையோரத்தின் வடபகுதி ஊடான போக்குவரத்திற்கு எவ்வேளையிலும் ஏற்றதான தன்மை இருப்பதாக இல்லை. அத்தோடு, இக்கடற்பரப்பானது அரபிக் கடலுடன் தொடர்பட்டதான தனித்துவமான தொன்றாகவே உள்ளது. ஆயினும் இதன் எல்லைகளும் இந்தியக் கடற்பரப்புடன் தொடர்புபட்டதாக இருப்பினும் கொழும்பிற்கு மேற்காகவுள்ள சர்வதேச கடல் மார்க்கத்தை இதனூடாக எட்டமுடியும்.

அடுத்ததாக வடகடற்பரப்பானது - பொதுவில் கரையோரத்திற்கு அண்மையாகவுள்ள முருகைக்கற்பாறைகள் இதில் முக்கியத்துவமுடையவையாகவுள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.