Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது

Featured Replies

இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது

 
Sri Lanka Press Conference
icc-clips-728-90-newest.jpg

பாகிஸ்தான் அணியுடனான தோல்வியின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியது. நாட்டை வந்தடைந்தவுடனேயே, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

 

குறித்த ஊடவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால,

Thilanga Sumathipalaஇந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது, எமக்கு சிறு கவலையைத் தருகின்றது. ஏனெனில், எமது அணி அரையிறுதி வாய்ப்பினை தவறவிட்டிருந்தது. எமது அணியும், எமது அணித் தலைவரும் இத்தொடரிற்காக அரும்பாடுபட்டிருந்தனர். எனினும், அது எமக்கு சம்பியன்ஸ் கிண்ணத்தில் சாதிக்க போதுமானதாக இருந்திருக்கவில்லை.

எனினும், எமது அணி இந்தியாவிற்கு எதிராக அதி சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்தது. அதே ஆட்டத்தினை பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் வெளிக்காட்ட துரதிஷ்டவசமாக தவறியிருந்தது. எமது அணியின் ஆட்டம் சகல துறைகளிலும் இத்தொடரில் முன்னேற்றமைடைந்திருப்பதனை காட்டுகின்றது. சிரேஷ்ட வீரர்களும், இளம் வீரர்களும் தங்களுக்குரிய பங்களிப்பினை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர். இனி வரும் காலங்களில் எமக்கு கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் சரிவர உபயோகித்து மீண்டெழ முயற்சிப்போம்“ என்றார்.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் தமது அணி வீரர்கள் விட்ட தவறுகளிலிருந்து பெற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் அவர்கள் வருங்காலங்களில் சிறப்பாக செயற்படுவார்கள் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

Mathews“சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை சாதிக்காததையிட்டு இந்நாடு ஏமாற்றம் அடைந்ததை நாம் அறிவோம். நாமும் அதனால் ஏமாற்றம் அடைந்திருந்தோம். இத்தோல்விக்கு ஒரு அணியாக நாமே முழுப்பொறுப்பினையும் ஏற்கின்றோம். ஆனால் சிலர், குறிப்பிட்ட சில வீரர்களே இதற்கு காரணம் எனக்கூறி அவர்களின் குரல் வளையினை நெரிக்க முற்படுகின்றனர்.  

அது தவறாகும், ஏனெனில் இதற்கு முழு அணியுமே பொறுப்பு. என்னைபப் பொறுத்தவரையில் இத்தொடர் எமக்கு சிறப்பாகவே அமைந்திருந்தது. நாம் முதல் போட்டியினை சிறப்பாக ஆரம்பித்திருப்பினும் துடுப்பாட்டத்தில் சொதப்பியதாலேயே தோல்வியுற்றோம். எனினும் இரண்டாம் போட்டியில் இந்திய அணியினை வீழ்த்தி சிறப்பாக செயற்பட்டிருந்தோம்.

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நாம் களத்தடுப்பில் சற்று மோசமாக செயற்பட்டிருந்தோம். அதுவே தோல்விக்கு காரணம் எனினும் எமது அணி மோசமானது என குறிப்பிட முடியாது. எதிர் காலத்தில் தவறுகளே செய்ய முடியாது என்று உறுதியாக கூற முடியாது.  இவ்வாறான தவறுகளை குறைத்துக்கொண்டு, அதிலிருந்து கற்றுக்கொண்டவற்றை வைத்து  நாம் சிறப்பாக செயற்படுவோம்”

என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்ட், இலங்கை அணியானது இத்தொடரில் ஏனைய அணிகளை விட ஒப்பீட்டு ரீதியில் அதிக நல்ல விடயங்களை பெற்றிருப்பதாக கூறியிருந்தார். மேலும் இலங்கை அணியானது களத்தடுப்புகளில் விட்டிருந்த சில பிழைகளை திருத்திக்கொள்ளும் எனில், வரும் போட்டிகளில் நல்ல ஆட்டத்தினை எதிர்பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

  •  
     
  •  
     
 

இலங்கை அணி, அடுத்ததாக இங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் மோதவுள்ளது.

 

http://www.thepapare.com

  • கருத்துக்கள உறவுகள்

சனத் ஜெயசூரியாவின் ஆட்ட திறமையை குறிப்பிட மறந்துவிட்டார் சுமதிபால ....tw_blush: 

  • தொடங்கியவர்

நான் பழைய மாலிங்க அல்ல : வெளிப்படையாகக் கதைத்த லசித் மாலிங்க

 
Lasith Malinga
icc-clips-728-90-newest.jpg

கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்தில் உள்ள அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்தி வந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, நான் முன்னர் போன்று சிறந்த முறையில் செயற்படவில்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்விடைந்தமையினால், அத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியதும் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பொழுதே மாலிங்க இவ்வாறு தெரிவித்தார்.

 

இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய லசித் மாலிங்க, பின்னர் காயம் காரணமாக சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து அணிக்காக விளையாடாமல் இருந்து வந்தார். அதனைத் தொடர்ந்து இறுதியாக பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற T-20 தொடரிலேயே அவர் நீண்ட ஒரு இடைவெளியின் பின்னர் இலங்கை அணியில் இணைந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடியதன் மூலம் மாலிங்க 19 மாதங்களின் பின்னர் 50 ஓவர்கள் கொண்ட போட்டியொன்றுக்காக இலங்கை அணியில் இணைந்துகொண்டார்.

இலங்கை அணி இத்தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாடியிருந்தார். எனினும், மொத்தமாக 3 விக்கெட்டுகளையே கைப்பற்றினார். இந்நிலையில் இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்பட்டது.

அதற்கு அவர், “எனக்கு இப்பொழுது 33 வயதாகின்றது. நான் முன்னர் நிறைய சாதித்துள்ளேன். எனினும் இப்பொழுது முடியாமல் உள்ளது. ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. எனினும் நான் தற்பொழுது போட்டிகளை வெற்றி பெற வைக்கும் பந்து வீச்சாளராக இல்லை. எனது முன்னைய திறமை என்னிடம் இருக்கின்றது என நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இறுதியாக பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியின் களத் தடுப்பு மிகவும் மோசமாக இருந்தமையே தோல்விக்கு காரணம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும், மாலிங்க அவ்வாறான விமர்சனங்களை முழுமையாக மறுத்தார்.

 

அணி பிடியெடுப்புக்களை தவறவிட்டபோது எனக்கு கோபம் வரவில்லை. நான் இதைவிட அதிகமான பிடியெடுப்புக்களை தவறவிட்டுள்ளேன். எந்த ஒரு வீரரும் சிறப்பாக செயற்படும்போது அது குறித்து கதைக்காத மக்கள், வீரர்கள் தவறுவிடும்பொழுது அது குறித்தே கதைப்பதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் களத் தடுப்பில் சில தவறுகள் விடப்பட்டாலும், ஒரு அணியாக நாம் சிறந்த முறையில் செயற்பட்டதாகவும் மாலிங்க தெரிவித்தார்.

தனது எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ”நான் எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடுவேனா இல்லையா என்று எனக்கே தெரியாது. தெரிவுக்குழு என்னை அணியில் இணைத்தால் விளையாடுவேன். எனினும் தற்பொழுது நுவன் பிரதீப், சுரங்க லக்மால், குலசேகர போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் லசித் மாலிங்க இலங்கை அணியில் இருப்பதையே இலங்கை அணியின் ரசிகர்கள் மாத்திரமன்றி அதிகமான கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகின்றனர். எனினும், 2019ஆம் அண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது.

மாலிங்கவின் பந்து வீச்சில் முன்னர் இருந்த வேகம் தற்பொழுது இல்லாமல் போயுள்ளது. இது, எதிரணியில் துடுப்பாடும் வீரர்களுக்கு அவரது பந்தை எதிர்கொள்வதில் அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு காரணியாக இருக்கும்.

அவர் இம்முறை ஐ.பி.எல் போட்டியின்போது விளையாடினாலும், ஒரு போட்டியில் கூடுதலாக 4 ஓவர்களே வீசியுள்ளார். எனினும், நீண்ட இடைவெளியில் இருந்துவிட்டு ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ஓவர்கள் வீசுவது சற்று கடினமானதாகவே இருக்கும்.

இவ்வாறான ஒரு நிலையில் தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் பங்குகொள்வதன் மூலம் மாலிங்கவிற்கு தனது வேகத்தை அதிகரிக்க முடியுமாயின் அது தேசிய அணியில் தொடர்ந்து தனது இருப்பை வைத்துக்கொள்ள சாதகமான ஒன்றாக இருக்கும்.  

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.