Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதி விபத்து நோய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[24 - Fஎப்ருஅர்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

எதிர்பாராத வகையில் தற்செயலாக இடம்பெறுகின்ற சம்பவங்களையே நாம் விபத்துகள் என்கின்றோம். ஆனால், இன்று வீதி விபத்துகளை நோக்கும்போது அவை அந்த அடிப்படை அர்த்தத்துக்கு அப்பால் சென்று `வழமையான விபரீதங்கள்' என்று வர்ணிக்கப்படக் கூடியவையாக மாறிவிட்டன. இன்று நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட வீதி விபத்துகள் இடம்பெறாமல் ஒருநாள் கழிவதைக் காண முடிவதில்லை.

இலங்கையில் வீதி விபத்துகளில் வருடாந்தம் 3,000 க்கும் அதிகமானவர்கள் பலியாவதாக கணிப்பிடப்பட்டிருக்கிறது. இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு எண்ணிக்கையானோர் விபத்துகளில் படுகாயமடைகிறார்கள். டெங்கு நோயின் விளைவான மரணங்களைவிட விபத்து மரணங்கள் நான்கு மடங்கு அதிகமானவையாக இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. ஆனால், வீதி விபத்துகளை விட டெங்கு போன்ற நோய்களுக்கே மக்கள் பயப்படுகிறார்கள். அச்சம் தரும் நோய்களைப் பற்றிய பாரம்பரிய எண்ணமே இதற்குக் காரணம். ஆனால், இலங்கையில் இப்போது ஏனைய நாடுகளைப் போன்று வீதி விபத்துகளும் ஒரு நோயாகக் கருதப்பட வேண்டுமென்று அண்மையில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்திருந்த கருத்து மிகுந்த அக்கறையுடன் நோக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. வீதி விபத்துகள் இப்போது வெறுமனே தற்செயலாக இடம்பெறுகின்ற சம்பவங்களாக இல்லை என்பதையே இந்த நிபுணரின் கருத்து உணர்த்தி நிற்கிறது.

வீதி விபத்துகள் தொடர்பான நெருக்கடிகளைக் கையாளும் பொறுப்பை வெறுமனே வீதி ஒழுங்கு மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒரு விவகாரமாக பொலிஸாரிடம் மாத்திரம் விட்டு விட முடியாத அளவுக்கு அது ஒரு பாரதூரமான பிரச்சினையாகிவிட்டதை நாமெல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையில் வீதி விபத்துகள் இப்போது உலகளாவிய ஒரு நெருக்கடியாகிவிட்டன. உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த விபரங்கள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன. வீதி விபத்து ஆபத்துகளுக்கு முகங்கொடுத்த வண்ணமே வாழ வேண்டியிருக்கும் இலங்கையர்கள் இந்த விபரங்களை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் வீதி விபத்துகளினால் வருடாந்தம் 12 இலட்சம் மக்கள் பலியாகிறார்கள். தினமொன்றுக்கு 3,000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகிறார்கள். உலகம் பூராவும் வருடாந்தம் 5 கோடி மக்கள் விபத்துகளில் காயமடைகிறார்கள். இவர்களைக் குணப்படுத்துவதற்கு வருடாந்தம் 51,800 கோடி டொலர்கள் செலவிடப்படுகின்றன. 15- 44 இடைப்பட்ட வயதினரான ஆண்களைப் பொறுத்த வரை, அகால மரணங்களுக்கான முக்கிய காரணிகளில் எயிட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக வீதி விபத்துகளே விளங்குகின்றன. உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் 2020 ஆம் ஆண்டளவில் வீதி விபத்துகளின் விளைவான மரணங்களும் பாதிப்புகளும் சுமார் 65 சதவீதத்தினால் அதிகரிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது. வீதி விபத்துகளினால் ஏற்படும் மரணங்களைப் பொறுத்தவரை, 80 சதவீதமானவை குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளிலேயே இடம்பெறுகின்றன. பாதுகாப்பற்ற வீதிப் போக்குவரத்துகள் உலகளாவிய ரீதியில் சுகாதாரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. காயமடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்கு வறிய நாடுகள் வருடாந்தம் 6,500 கோடி டொலர்களைச் செலவிட வேண்டியிருக்கிறது.

இலங்கையிலும் வீதி விபத்துகளில் காயமடைபவர்களுக்கான சிகிச்சை சுகாதார பட்ஜெட்டில் பெரும் பகுதியை விழுங்குகிறது என்று சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஒரு தடவை குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. மக்களின் சுகாதாரத்துக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துகள் விகாரமடைந்திருப்பதால் அரசியல் மட்டத்தில் இப்பிரச்சினை குறித்து அக்கறை காட்டப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. வீதிப் பாதுகாப்பு (றொஅட் சfஎட்ய்) தொடர்பில் மக்கள் மத்தியிலான விழிப்புணர்வை அதிகரிப்பதில் அரசியல் மட்ட ஈடுபாடு இலங்கையில் மிகவும் பரிதாபகரமான ஒரு நிலையிலேயே இருக்கிறது. பாரதூரமான விபத்தொன்று இடம்பெற்றவுடன் உறுதியான நடவடிக்கைகள் குறித்துப் பேசுவதும் பின்னர் நாளடைவில் சகலதும் மறக்கப்படுவதுமே வழமையான சமாச்சாரம். சம்பவத்துக்குப் பின்னர் சகலருமே புத்திசாலித்தனமாகப் பேசுகின்ற `பாரம்பரியத்தைக் கைவிட்டு வீதி விபத்து நோயைத்' தடுக்க பயனுறுதியுடைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசியல் மட்டத்தில் மானசீகமான அக்கறை காண்பிக்கப்பட வேண்டும்.

இது விடயத்தில் அரசியல் மட்ட ஈடுபாட்டுக்கு பிரான்ஸ் சிறந்ததொரு உதாரணமாக விளங்குகிறது. அந்நாட்டு ஜனாதிபதி ஜாக்ஷிராக் வீதிப் பாதுகாப்பை முன்னுரிமை கொடுத்துக் கவனிக்கப்பட வேண்டிய அரசியல் விவகாரமாக்கியதையடுத்து ஒரு சில ஆண்டுகளில் வீதி விபத்து மரணங்கள் 20 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய முன்னுதாரணத்தை எமது அரசாங்கத் தலைமைத்துவமும் பின்பற்றினால், வீதி விபத்தின் விளைவான மரணங்களையாவது குறைக்கலாம் அல்லவா?

http://www.thinakkural.com/news/2007/2/24/...l_page21999.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.