Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’கேவலமான அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்’

Featured Replies

’கேவலமான அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்’
 

image_d08c1e5800.jpg

எனது வவுனியா வருகைக்கு பயந்து, பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். காட்டுத்தர்பார் அரசியல் நடத்தினால்தான் தனக்கு அங்கிகாரம் கிடைக்குமென நம்பிக்கொண்டிருப்பவர்களின் பித்தலாட்டங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள சின்னப்பள்ளிக்குளம், கோவில்குளம் தமிழ் மகா வித்தியாலயம், மடுன்கந்தை சிங்கள மகா வித்தியாலயம், வவுனியா கல்வியியல் கல்லூரி, பட்டனிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் சாலம்பைக்குளம் போன்ற இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கிவைத்த பின்னர், ஆண்டியா புளியங்குளத்தில் நேற்றுப் புதன்கிழமை மாலை நடைபெற்;ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சருடன் தேவையில்லாமல் பிரச்சினைப்பட்டுள்ளார்கள். முதலமைச்சர் வெளிநடப்பு செய்கின்ற அளவுக்கு பிரச்சினை ஏற்படுத்தவேண்டிய எந்த அவசியமும் அங்கு இருக்கவில்லை. வடக்கிலுள்ள தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதில் வரிந்துகட்டிக்கொண்டு செயற்படுகின்ற வேலைதான் இது.

“வீண் வம்புக்கு அரசியல் செய்வது சிலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது. சண்டையை ஆரம்பிக்கும் நோக்கத்தில்தான் அவர்கள் வருகிறார்கள். ஏன், எதற்கு சண்டையை ஆரம்பிக்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது. சண்டையை கிளப்பி, மறுநாள் அது பத்திரிகையில் வரவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மோதுவது தனக்கு ஒரு தகுதி. அது தன்னை உயர்த்திவிடும், மக்கள் மத்தியில் பெரிய பிரபல்யத்தை கொண்டுவரும் என்று நினைக்கின்ற கேவலமான இந்த அரசியல் செயற்பாடு மிகவும் ஆபத்தானது. வடக்கில் தமிழ், முஸ்லிம்களிடையே சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், அதில் குளிர்காய்வதல்ல எமது நோக்கம். அதற்கு தீர்வுகாணவேண்டும்.

“இரு சமூகங்களிடையே தேவையில்லாமல் சங்கடங்களை ஏற்படுத்துகிறார்கள். நான் மக்களுக்காக போராடுபவன் என்ற பெயர் பத்திரிகையில் வரவேண்டும் என்பதற்காகத்தான் மாத்திரம்தான் இப்படியான கூத்துகளை நடக்கின்றன. ஆரம்பித்த பிரச்சினைகள் இன்னும் முடிவடையவில்லை.

“பாதுகாக்கப்பட்ட வில்பத்து காட்டை அரசியல்வாதிகள் அழிக்கிறார் என்ற விஷமத்தனமான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நாங்கள் தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றபோது, அவர்களுடைய கட்சிக்காரர்களை கொண்டுவந்து கூட்டம் நடத்தவிடாமல் குழப்புகின்ற வேலைகளை செய்தனர். யார் மூலமாகவாவது தீர்வு கிடைக்கட்டும் என்றில்லாமல், தங்கள் மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படியான வேலைகளை செய்கின்றனர்.

“சில்லறைத்தனமான, கேவலமான, அசிங்கமான ஒரு அரசியல் இந்த மண்ணில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் நடந்த விடயத்தில், தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு பங்கிடுவதற்கு தாராளமாக காணிகள் இருக்கின்றன. ஆனால், கூட்டத்தில் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். வடக்கு முதலமைச்;சர் கடும்போக்காளர் என்று தெற்கில் கதை பரவுகின்ற நிலையில், முதலமைச்சர் வெளிநடப்பு செய்கிறார் என்பதை போட்டுக்கொடுப்பதற்கும், உரிமைக்காக போராடுபவராகவும் தம்மை காட்ட முயல்கின்றனர்.

“பக்குவமில்லால் ஆரவார அரசியல் செய்து பழகிய இவர்கள், மக்கள் உரிமைக்காக போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள். இப்படியான அரசியல் செய்யவேண்டிய தேவை எங்களுக்கு கிடையாது. சாணக்கியமாக, சகோதர தமிழ் சமூகத்தையும் அரவணைத்துக்கொண்டு நாங்கள் செல்கிறோம்.

“நியாயங்களை பேசவேண்டிய இடங்களில் பேசவேண்டும். காட்டுதர்பார் நடத்துவதுபோல கூட்டம் நடத்தமுடியாது. அப்படி நடத்துவதால்தான் தனக்கு அங்கிகாரம் கிடைக்குமென்று நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பித்தலாட்டங்களை மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. கேவலமான இந்த கலாசாரத்துக்கு முடிவுகட்டப்பட வேண்டும்.

“மாங்குளம் பகுதியிலுள்ள சிட்டுக்குளம் பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. அபிவிருத்திகளை மக்களிடம் கையளிக்கிறோம், அதன்போது அவர்களுடன் பேசுகிறோம். சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்கிறோம். அதனைத் தடுப்பதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகள் மிகவும் அசிங்கமானது. அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் தனிக்காட்டு தர்பார் நடத்தவேண்டாம்.

“கட்சியிலிருந்து பிரிந்துசென்ற சிலருக்கு அரசியல் பிழைப்புக்காக முகாம்களை தேடிக்கொண்டிருந்தனர். அவர்களை சேர்த்துக்கொண்டு கூட்டமைப்பு என்ற பெயரில் முஸ்லிம் காங்கிரஸுடன் மோதலாம் என்று பார்க்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்தாலும் இந்த சாம்ராஜ்யதுக்கு ஒருபோதும் சவால்விட முடியாது.

“வவுனியா மாவட்டத்தில் சுத்தமான குடிநீரின்மையால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். மூன்று கிராமங்களுக்கு குடிநீரை சுத்திகரித்து வழங்கக்கூடிய இயந்திரங்களை இன்று உங்களுக்கு வழங்கியுள்ளோம். இதுவொரு தற்காலிகமான ஏற்பாடுகள்தான். வீடு வீடாக குடிநீரை வழங்குவதற்கான குழாய்நீர் விநியோகத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக திட்டங்களை நாங்கள் தற்போது மேற்கொண்டிருக்கிறோம்;.

“2,000 மில்லியன் ரூபாய் செலவில் உலர் வலய நகர நீர் வழங்கல் திட்டத்தில் ஒரு பகுதியை அண்மையில் பிரதமர் தலைமையில் மன்னாரில் ஆரம்பித்துவைத்தோம். இத்திட்டம் புத்தளம், சிலாபம், வவுனியா ஆகிய பிரதேசங்களிலும் அமுல்படுத்தப்படவுள்ளது. வவுனியா மாவட்டத்தில் 12,000 குடும்பங்களுக்கு நீர் வழங்கக்கூடிய திட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளோம்.

“பாவற்குளத்திலுள்ள நீரைப் பெற்றும் இன்னும் 25,000 பேருக்கு நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. மல்வத்து ஓயா இரண்டாம்கட்ட வேலைகள் பூர்த்தியானதும், எல்லாம் சேர்த்து மொத்தமாக 60,000 பேருக்கு குடிநீர் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்” என்றார்.

நேற்றையதினம், வவுனியாவிலுள்ள புலிதரித்த புளியங்குளம், செல்வநகர் ஆகிய பிரதேசங்களில் குடிநீர் வழங்கல் திட்டத்துக்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச். ரயீஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.பி. பாருக், வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் மாஹிர், வட மாகாண பிரதி பொது முகாமையாளர் உமர் லெப்பை, அமைச்சின் மேலதிக செயலாளர் நபீல், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

image_0943a315b6.jpgimage_81a90877ad.jpgimage_bb1a59f498.jpgimage_d9220ca1db.jpg

  •  

http://www.tamilmirror.lk/வன்னி/கேவலமான-அரசியலுக்கு-முடிவு-கட்ட-வேண்டும்/72-200549

  • தொடங்கியவர்

கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்தாலும் எமது சாம்ராஜ்ஜியத்துக்கு சவால்விட முடியாது

p31-f4604b5667de2838333f75042d3a7dc0bb2ca0ff.jpg

 

காட்­டுத் ­தர்பார் அர­சி­ய­லுக்கு முடி­வு­கட்­டப்­ப­ட­வேண்டும்  : வவு­னி­யாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
(நமது நிருபர்)

எனது வவு­னியா வரு­கைக்கு பயந்து, பள்­ளி வாசல் தலை­வ­ருக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருக்­கி­றார்கள். காட்­டுத்­தர்பார் அர­சியல் நடத்­தி­னால்தான் தமக்கு அங்­கீ­காரம் கிடைக்­கு­மென நம்­பிக்­கொண்­டி­ருப்­ப­வர்­களின் பித்­த­லாட்­டங்­க­ளுக்கு விரைவில் முடிவு  கட்­டப்­ப­ட­வேண்­டு­மென ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். 

வவு­னியா மாவட்­டத்­தி­லுள்ள சின்­னப்­பள்­ளிக்­குளம், கோவில்­குளம் தமிழ் மகா வித்­தி­யா­லயம், மடுன்­கந்தை சிங்­கள மகா வித்­தி­யா­லயம், வவு­னியா கல்­வி­யியல் கல்­லூரி, பட்­ட­னிச்சூர் முஸ்லிம் மகா வித்­தி­யா­லயம் மற்றும் சாலம்­பைக்­குளம் போன்ற இடங்­களில் குடிநீர் சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரங்­களை வழங்­கி­வைத்த பின்னர், ஆண்­டியா புளி­யங்­கு­ளத்தில் நேற்று (12) புதன்­கி­ழமை மாலை நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

முல்­லைத்­தீவில் நடை­பெற்ற மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழு கூட்­டத்தில் வட மாகாண முத­ல­மைச்­ச­ருடன் தேவை­யில்­லாமல் பிரச்­சி­னைப்­பட்­டுள்­ளார்கள். முத­ல­மைச்சர் வௌிந­டப்பு செய்­கின்ற அள­வுக்கு பிரச்­சினை ஏற்­ப­டுத்­த­வேண்­டிய எந்த அவ­சி­யமும் அங்கு இருக்­க­வில்லை. வடக்­கி­லுள்ள தமிழ் - முஸ்லிம் உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வதில் வரிந்­து­கட்­டிக்­கொண்டு செயற்­ப­டு­கின்ற வேலைதான் இது.

வீண் வம்­புக்கு அர­சியல் செய்­வது சில­ருக்கு கைவந்த கலை­யாக இருக்­கின்­றது. சண்­டையை ஆரம்­பிக்கும் நோக்­கத்­தில்தான் அவர்கள் வரு­கி­றார்கள். ஏன், எதற்கு சண்­டையை ஆரம்­பிக்­கிறோம் என்று அவர்­க­ளுக்கே தெரி­யாது. சண்­டையை கிளப்பி, மறுநாள் அது பத்­தி­ரி­கையில் கொட்டை எழுத்தில் வர­வேண்டும் என்­ப­துதான் அவர்­க­ளு­டைய நோக்கம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் மோது­வது தனக்கு ஒரு தகுதி. அது தன்னை உயர்த்­தி­விடும், மக்கள் மத்­தியில் பெரிய பிர­பல்­யத்தை கொண்­டு­வரும் என்று நினைக்­கின்ற கேவ­ல­மான இந்த அர­சியல் செயற்­பாடு மிகவும் ஆபத்­தா­னது. வடக்கில் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே சிறு­சிறு பிரச்­சி­னைகள் இருந்­தாலும், அதில் குளிர்­காய்­வ­தல்ல எமது நோக்கம். அதற்கு தீர்­வு­கா­ண­வேண்டும்.

இரு சமூ­கங்­க­ளி­டையே தேவை­யில்­லாமல் சங்­க­டங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றார்கள். நான் மக்­க­ளுக்­காக போரா­டு­பவன் என்ற பெயர் பத்­தி­ரி­கையில் வர­வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் மாத்­தி­ரம்தான் இப்­ப­டி­யான கூத்­து­களை நடக்­கின்­றன. ஆரம்­பித்த பிரச்­சி­னைகள் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை.

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து காட்டை அர­சி­யல்­வா­திகள் அழிக்­கிறார் என்ற விஷ­மத்­த­ன­மான பிர­சா­ரங்கள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவற்றை நாங்கள் தீர்த்­து­வைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­கின்­ற­போது, அவர்­க­ளு­டைய கட்­சிக்­கா­ரர்­களை கொண்­டு­வந்து கூட்டம் நடத்­த­வி­டாமல் குழப்­பு­கின்ற வேலை­களை செய்­தனர். யார் மூல­மா­க­வா­வது தீர்வு கிடைக்­கட்டும் என்­றில்­லாமல், தங்கள் மூலம் மட்­டுமே தீர்வு கிடைக்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் இப்­ப­டி­யான வேலை­களை செய்­கின்­றனர்.

சில்­ல­றைத்­த­ன­மான, கேவ­ல­மான, அசிங்­க­மான ஒரு அர­சியல் இந்த மண்ணில் அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கி­றது. முல்­லைத்­தீவில் நடந்த விட­யத்தில், தமிழ் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு பங்­கி­டு­வ­தற்கு தாரா­ள­மாக காணிகள் இருக்­கின்­றன. ஆனால், கூட்­டத்தில் வேண்­டு­மென்றே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். வடக்கு முத­ல­மைச்சர் கடும்­போக்­காளர் என்று தெற்கில் கதை பர­வு­கின்ற நிலையில், முத­ல­மைச்சர் வௌிந­டப்பு செய்­கிறார் என்­பதை போட்­டுக்­கொ­டுப்­ப­தற்கும், உரி­மைக்­காக போரா­டு­ப­வ­ரா­கவும் தம்மை காட்ட முயல்­கின்­றனர்.

பக்­கு­வ­மில்லால் ஆர­வார அர­சியல் செய்து பழ­கிய இவர்கள், மக்கள் உரி­மைக்­காக போரா­டு­கிறோம் என்று சொல்­லிக்­கொண்டு திரி­கின்­றார்கள். இப்­படி கேவ­ல­மான, பிழைப்­பு­வாத அர­சியல் செய்­ய­வேண்­டிய தேவை எங்­க­ளுக்கு கிடை­யாது. சாணக்­கி­ய­மாக, சகோ­தர தமிழ் சமூ­கத்­தையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு நாங்கள் செல்­கிறோம்.

நியா­யங்­களை பேச­வேண்­டிய இடங்­களில் பேச­வேண்டும். காட்டு தர்பார் நடத்­து­வ­து­போல கூட்டம் நடத்­த­மு­டி­யாது. அப்­படி நடத்­து­வ­தால்தான் தனக்கு அங்­கீ­காரம் கிடைக்­கு­மென்று நினைத்­துக்­கொண்­டி­ருக்­கிறார். இந்தப் பித்­த­லாட்­டங்­களை மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. மிகவும் கேவ­ல­மான இந்த கலா­சா­ரத்­துக்கு முடி­வு­கட்­டப்­பட வேண்டும்.

மாங்­குளம் பகு­தி­யி­லுள்ள சிட்­டுக்­குளம் பள்­ளி­வாசல் தலை­வ­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அபி­வி­ருத்­தி­களை மக்­க­ளிடம் கைய­ளிக்­கிறோம், அதன்­போது அவர்­க­ளுடன் பேசு­கிறோம். சில பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண்­கிறோம். அதனைத் தடுப்­ப­தற்­காக மேற்­கொள்­கின்ற முயற்­சிகள் மிகவும் அசிங்­க­மா­னது. அர­சியல் செய்­கிறோம் என்ற பெயரில் தனிக்­காட்டு தர்பார் நடத்­த­வேண்டாம்.

கட்­சி­யி­லி­ருந்து பிரிந்­து­சென்ற சில­ருக்கு அர­சியல் பிழைப்­புக்­காக முகாம்­களை தேடிக்­கொண்­டி­ருந்­தனர். அவர்­களை சேர்த்­துக்­கொண்டு கூட்­ட­மைப்பு என்ற பெயரில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் மோதலாம் என்று பார்க்­கின்­றனர். அவர்கள் எல்­லோரும் ஒன்­று­சேர்ந்­தாலும் இந்த சாம்­ராஜ்­ய­துக்கு ஒரு­போதும் சவால்­விட முடி­யாது.

வவு­னியா மாவட்­டத்தில் சுத்­த­மான குடி­நீ­ரின்­மையால் சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்ட பலர் இருக்­கின்­றனர். மூன்று கிரா­மங்­க­ளுக்கு குடி­நீரை சுத்­தி­க­ரித்து வழங்­கக்­கூ­டிய இயந்­தி­ரங்­களை இன்று உங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளோம். இது­வொரு தற்­கா­லி­க­மான ஏற்­பா­டு­கள்தான். வீடு வீடாக குடி­நீரை வழங்­கு­வ­தற்­கான குழாய்நீர் விநி­யோ­கத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக திட்­டங்­களை நாங்கள் தற்­போது மேற்­கொண்­டி­ருக்­கிறோம் என்றார்.

2000 மில்­லியன் ரூபா செலவில் உலர் வலய நகர நீர் வழங்கல் திட்­டத்தில் ஒரு பகு­தியை அண்­மையில் பிர­தமர் தலை­மையில் மன்­னாரில் ஆரம்­பித்­து­வைத்தோம். இத்­திட்டம் புத்­தளம், சிலாபம், வவு­னியா ஆகிய பிர­தே­சங்­க­ளிலும் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. வவு­னியா மாவட்­டத்தில் 12,000 குடும்­பங்­க­ளுக்கு நீர் வழங்­கக்­கூ­டிய திட்­டத்தை இன்னும் ஓரிரு மாதங்­களில் ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

பாவற்­கு­ளத்­தி­லுள்ள நீரைப் பெற்றும் இன்னும் 25,000 பேருக்கு நீர் வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நடந்துகொண்டிருக்கின்றன. மல்வத்து ஓயா இரண்டாம்கட்ட வேலைகள் பூர்த்தியானதும், எல்லாம் சேர்த்து மொத்தமாக 60,000 பேருக்கு குடிநீர் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

அன்றையதினம் வவுனியாவிலுள்ள புலிதரித்த புளியங்குளம், செல்வநகர் ஆகிய பிரதேசங்களில் குடிநீர் வழங்கல் திட்டத்துக்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச். ரயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.பி. பாருக், வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் மாஹிர், வட மாகாண பிரதி பொது முகாமையாளர் உமர் லெப்பை, அமைச்சின் மேலதிக செயலாளர் நபீல், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.