Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கடலில் நடந்து செல்வதற்கான வசதி அறிமுகம்; மகிழ்ச்சியில் மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 15/07/2017 at 11:56 AM, Nathamuni said:

நான் சொல்ல வந்தது பண்ணை கடல் கரை அண்மிய உடனடி வேலை வாய்ப்புகள்.

தமக்குள் அடிபடுவதை விடுத்து, வட மாகாணசபை பொருளாதார ரீதியிலான மிக முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இங்கே பல தடவை எழுதியுளேன்.

புலம் பெயர் பொருளாதாரம் எங்கே போகின்றது என்பது தென் இலங்கை அரசை விட வட மாகாணசபைக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

அரசியல் ஒரு பக்கமும், பொருளாதரா வேலைகள் மறு புறமுமாக இருக்க வேண்டாமா?

இந்த மிளகாய் தூளும், ப்ரோடடா ரொட்டியும், குத்தரிசியும் மலையாளியா இங்கே அனுப்ப வேண்டும்?

தாய்லாந்திலிருந்து பிலாப்பழமும், இளனியும், நெத்தலியும் வரவேண்டுமா?  

இறக்குபவர்களை குறை சொல்ல முடியாது. லாபம் பார்ப்பவர்கள்.

ஆனால், மண்டைதீவு, வன்னி  போன்ற பகுதிகளில் தொழில் பேடடைகளை அமைத்து, கொழும்பு அரசுடன் பேசி, கட்டு நாயக்க சுதந்திர வர்த்தக மையம் போன்று வரி வாய்ப்புகளை பெற்று, இந்த இறக்குமதியாளர், எம்தமிழர்களை கவர முடியுமே.

மேலும் இங்குள்ள ஊடகங்களில், விக்கினேஸ்வரன் நேரடியாக மக்களிடம் ஊர்ப் பொருட்களை வாங்க கோரிக்கை விட முடியுமே.

மேலும் GSP + க்கு அதிகமாக தமிழர் பகுதி பொருள்களுக்கு விசேட சலுகைகளை, கனேடிய, ஐரோப்பிய அரசுகளுடன் பேசி பெறலாம். 

ஏர்லங்கா போன்ற விமான சேவைகளிடம் குறைந்த கட்டன சலுகை பேசிப் பெறலாம்.

இவ்வகையில் இறக்குமதியாளர்கள் செலவினைக் குறைத்தால், அவர்கள் வாங்குவார்கள் தானே.

முஸ்லீம் தலைவர்கள் மத்திய கிழக்கில் அரசுகளிடம் சலுகை பெற்று தமது மக்களை வாழ வைக்கின்றனர்.

நான் முன்பே சொல்லி இருக்கிறேன். எமது அரசியல் விடுதலை வர முதல், பொருளாதார விடுதலை வர வேண்டும்.

பொருளாதார விடுதலை வரும் போது, வேலை தேடி தமிழ் படித்துக் கொண்டு தென் இலங்கையர் வருவர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவும், இந்தியாவின் மும்பையும் தலை நகரங்கள் அல்ல. ஆனால் பொருளாதார மையங்கள்.

இதை புரிந்து எமது புலம் பெயர் சார் பொருளாதாரம் கட்டி எழுப்ப பட வேண்டும். விக்கியர், தகுந்த நிபுணர்களை தேடிப் பிடித்து பொறுப்பை கொடுக்க வேண்டும்.

இந்த நோக்கம் குறித்து தெளிவாக கொழும்புக்கு எடுத்து சொல்லி, அங்குள்ள அதிகாரிகள் ஒத்துழைப்பு பெற வேண்டும்.

செய்வாரா?

சிலவேளைகளில் விக்கியர், தம்மை முழுமையாக அரசியல் பக்கமே வைத்துப்பதால், intellectual capability (அறிவார்ந்த திறன்) உள்ளவரா என்று தோன்றுவதுண்டு. 

 

23 hours ago, விசுகு said:

வடமாகாண  சபை ஆரம்பித்து  விக்கியர்  முதலமைச்சராக  வந்தவுடன்இதை நானும் எதிர்பார்த்தேன்

ஆனால் என்னவோ  அவர்வேறு  விடயங்களுக்கு  முன்னுரிமை கொடுக்கிறார்

நாங்கள் தூர  இருந்து கொண்டு சொல்வது சுலபம்

ஆனால்  அவருக்கும் என்னென்ன...........????

நீங்கள் மேலே கூறிவை எல்லாம் சரி.

ஆனால் இந்த  கருத்துகள்  ஆக்கக் குறைந்தது கேள்விக்குறியாகும்.

"இந்த நோக்கம் குறித்து தெளிவாக கொழும்புக்கு எடுத்து சொல்லி, அங்குள்ள அதிகாரிகள் ஒத்துழைப்பு பெற வேண்டும்."

"சிலவேளைகளில் விக்கியர், தம்மை முழுமையாக அரசியல் பக்கமே வைத்துப்பதால், intellectual capability (அறிவார்ந்த திறன்) உள்ளவரா என்று தோன்றுவதுண்டு."

"ஆனால் என்னவோ  அவர்வேறு  விடயங்களுக்கு  முன்னுரிமை கொடுக்கிறார்."

நீங்கள் மேலே கூறிவை எல்லாம் சரி.

ஆனால் இந்த  கருத்துகள்  ஆக்கக் குறைந்தது கேள்விக்குறியாகும்.

இங்குதான் மாண்புமிகு முதலமைச்சரின் சிங்கள அரசின் யாப்பு பற்றிய அறிவும் அதனை சட்ட ரீதியாக செயட்படுத்தக்கூடிய அல்லது சுற்றி வளைத்து தவிர்க்கக்கூடிய (அப்படி முடியும் என்றால்) உபாயங்கள்  நடைமுறை அறிவும் ஆழ்ந்து அவதானித்தால் மிக கூர்மையாக புலப்படும்.

மாண்புமிகு முதலமைச்சர் ஏன் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க முயன்றார்? என் இங்கு லண்டன் கனடாவுடன் நகர பங்காளிகள் என்ற அமைப்புகளை உருவாக்க முயன்றார்?

இவை அனைத்தும் சிங்களத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றிட்ற்கு முதல் மாண்புமிகு முதலமைச்சர் சிங்களத்துடன் நிதி அதிகாரங்களுக்காக மிவும் போராடிக் களைத்து சலித்து விட்டே இத்தகைய முடிவுகளுகு வந்துள்ளார் என்றே தோன்றுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் லண்டன் மற்றும்  கனடா சென்ற போது, ரணில்  "நகர பங்காளிகள்" என்ற  கருத்தியிலிற்கும் அதன் தோற்றுவாய்களிற்கான நடைமுறை நடவடிக்கைகளுக்கும் இவ்வளவு இலகுவாக இடமளித்துவிட்டாரா என்று  மிகவும் சந்தேகப்பட்டேன்.

ஆயினும் அச்சந்தேகம் மிகவும் குறுகிய காலத்தினுள் உறுதிசெய்யப்பட்டது.  ரணில் தானோ அல்லது சிங்கள அரசோ  நகர பங்காளிகள் என்பதற்கு இடையூறு அல்ல என்பதையும் நகர பங்காளிகள் என்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்ற தோற்றபாட்டையும் சர்வதேச சமூகத்திற்கு, முக்கியமாக கொழும்பு இல் இருக்கும் வெளி நாடு தூதுவர்களுக்கு ஏற்ப்படுத்தவே ரணிலின் இந்த நாடகம்.             

நீங்கள் சொல்லியவை, நிதி அதிகார பகிர்வு மற்றும் இறைமையுடன் மிகவும் தொடர்புடைய விடயடங்கள்.

சந்திரிகா எப்போது இத்தகைய கருத்தை கூறினார் என்பதை என்னால் இப்போது நினைணுவிய கூர முடியாமல் உள்ளது.  அவர் கூறிய அதே வார்த்தைகளும்  இப்போது நினைவு  கூர முடியாமல் உள்ளது.

அவர்  ஏறத்தாழ  கூறியது:

"நாம் நிதி அதிகாரப் பகிர்வில் மிகவும் கவனத்துடனும் கண்டிப்புடனும் இருப்போம். அவை அரசியல் அதிகாரங்களுக்கு மேற்பட்டவை."

அரசியல் மற்றும் போர் அனலில் நாம் இத்தகைய கூற்றுகளை மேலெழுந்தவாரியகப்  பார்த்துவிட்டு, அதன் ஆழ்ந்த மற்றும் பொதிந்த நடைமுறைத் தத்துவங்களை ஆய்ந்து பார்ப்பதில்லை.  

நாங்கள் இதை பற்றி மேலும் எத்தனையோ சொல்லலாம், ஆயினும் சிங்கள அரசின் ஓர் இம்மியளவேனும் நெகிழ்வற்ற (utterly inflexible) சிங்கள பௌத்த  பேரினவாத யாப்பின் ஊடக இத்தகைய பொருளாதார அபிவிருத்தியை மிகவும் இலவுவாக மறுக்கமுடியும் என்பது ஓர் பாமரனிற்கே மிக தெளிவாக தெரியும்.

கிந்தயவும் அதனையே ஆவலாக விரும்புகிறது, ஒப்பனை மற்றும் வேறு காரணங்களுக்காக.

 

 

 

 

Edited by Kadancha

  • தொடங்கியவர்

சுற்றுலாத் தளமாகிறது பண்ணைக் கடற்கரை

நிதி விடுவிக்கப்பட்டு பணிகள் ஆரம்பம்

 
சுற்றுலாத் தளமாகிறது பண்ணைக் கடற்கரை
 

யாழ்ப்­பா­ணம் பண்­ணைக் கடற்­கரை மற்­றும் அத­னைச் சுற்றி உள்ள பகு­தி­யைச் சுற்­று­லாத் தள­மாக மாற்­று­வ­தற்­கான நிதி கிடைக்­கப் பெற்றுள்ளது. அதன் வேலைத்­திட்­டங்­கள் விரை­வு­ ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்று யாழ்ப்பாண பிர­தேச செய­ல­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

யாழ்ப்­பா­ணம் பண்­ணைக் கடற்­கரை மற்­றும் அத­னைச் சுற்றி உள்ள பகு­தி­யைச் சுற்­று­லாத் தள­மாக மாற்­று­ம் செயற்­திட்ட முன்­மொ­ழிவு கடந்த வரு­டம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இதற்­கான ஆரம்­பக்­கட்ட வேலைத்­திட்­டங்­கள் கடந்த ஆண்­டின் இறு­திப் பகு­தி­யில் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்த வேலைத்­திட்­டங்­களை யாழ்ப்­பாண மாந­க­ர­சபை,யாழ்ப்பாண பிர­தேச செய­ல­கம், மாவட்­டச் செய­ல­கம் ஆகி­யன இணைந்து மேற்­கொண்டு வரு­கின்­றன. இது தொடர்­பாக மேலும் தெரி­விக்கப் பட்டதா­வது:

சுற்­று­லாத் துறை அமைச்­சின் நிதி ஒதுக்கீட்டில் பண்­ணைக் கடற்­க­ரையைச் சுற்­றுலா இட­மாக மாற்­று­வ­தற்­காக கடந்த ஆண்டு மாவட்­டச் செய­ல­கத்தில் செயற்றிட்­டம் நிறை­வேற்­றப்­ பட்டது.அதன்படி அபி­வி­ருத்தி வேலை­யின் ஒவ்­வொரு பகு­தி­யை­யும் யாழ்ப்பாண பிர­தேச செய­ல­கம், யாழ்ப்­பாண மாந­கர சபை என்­பன பொறுப்­பேற்று செயற்படுத்துகி­ன்றன.

இந்தத் திட்­டத்­தின் கடந்த ஆண்­டுக்கான நிதி தற்­பொ­ழுது விடுவிக்கப்பட்டுள்­ளது.அதனால் அபிவிருத்தி வேலை­கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. பண்­ணைப் பாலத்­தின் கரையோரமாக சூரிய சக்­தி­யில் ஒளி­ரும் மின்­கு­மிழ்­கள் பொருத்­தும் பணி­கள் நிறை­வ­டைந்­துள் ளன. மண்டைதீவு ,சாட்­டிக் கடற்­கரை போன்ற கடல் பிர­தே­சங் க­ளுக்­கான பட­குச் சவாரி விளை­யாட் டுக்­களை வழங்கு­வதற்கு வேலைத்­திட்­டங்­கள் தற்­பொ­ழுது நடை­பெற்று வரு­கின்­றன.

40 மில்­லி­யன் ரூபா செல­வில் இந்தத் திட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. வேலணை சாட்­டி­யி­லும் 34 மில்­லி­யன் ரூபா செல­வில் செயற்றிட்­டங்­கள் மேற்­கொள்­ளப்பட­வுள்­ளன . பண்­ணைப் பாலத்­துக்கு அருகே பட­கு­கள் கரையை அடை­யும் போது அதன் அடிப்­ப­குதி கல்­லில் பட்டு இடை­யூறு ஏற்­ப­டாத வகை­யில் பாலத்­தின் கரை­யோ­ரப் பகுதி சீராக்­கப்­பட்டு வரு­கி­றது என்று மேலும் தெரி­விக்கப்பட்டது .

http://uthayandaily.com/story/11978.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.