Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலங்கை எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?': ஜேர்மனியில் விவாத அரங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கை எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?': ஜேர்மனியில் விவாத அரங்கம்

ஜேர்மனியை தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியமும், பொருண்மிய மதியுரையகத்தின் ஜேர்மனிக் கிளையும் ஒருங்கிணைந்து கடந்த சனிக்கிழமை (24.02.07) மாலைல 5.30 மணியளவில் சோஸ்ற் நகரில் (Soest) "இலங்கை எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?" என்பதை தலைப்பாக கொண்ட விவாத அரங்கு ஒன்றினை நடத்தியது.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்களை அனைத்துலக புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஆலே மொழி மாற்றீட்டாளருமான திருமதி தேவிகா கெங்காதரனு பொருண்மிய மதியுரையகத்தின் செயலாரான கே.வலன்ரைனும் அறிமுகம் செய்து வைத்தனர்.

இதில் ஜேர்மனியில் உள்ள பல்வேறு துறை சார்ந்த அரசியல் மருத்துவம், ஆன்மீகம், பத்திரிகை, சமூக சேவை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

பேச்சாளர்களாக ஜேர்மனி வணபிதா அல்பேட் கோலன் (Albert Koolen)

பேராசிரியர் கலாநிதி பீற்றர் ஷால்க் சுவீடன் (peter Schalk)

விராஜ் மென்டிஸ் மனித உரிமையாளர் (Viraj Mendis)

போராசிரியர் கலாநிதி டாக்மா கெல்மன் ராஜநாயகம் (Dagmar Helllmann) ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள் அனைவரும் எமது தாய் நாட்டுக்கும், தென்னாசிய நாடுகளுக்கும் அறிவியல் சார்ந்த பயணங்களை மேற்கொண்டவர்கள். அங்குள்ள மக்கள் சார்ந்த வாழ்வியல் பற்றியதான பார்வையை தெளிவாகவே கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக எசன் SpectraVerlaG பதிப்பகத்தின் இயக்குநர் பிரான்ஸ் ஜோசப் கூன்,

கற்றிங்கன் உதவியமைப்பின் தலைவர் கான்ஸ் காட்டுங் (Hans Hartung), அபிவிருத்தி கூட்டுறவு உத்தியோகத்தர திரு கிறிஸ்டியான் வால்கர் (Christian Walgar) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் எமது தாயகத்தில் கல்வி நிலைய கட்டுமானங்களுக்கான நிதி உதவிகள் சேகரித்தவர்கள். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு மீள்கட்டுமான பணிகளில் பங்கேற்றவர்கள்.

இவர்களோடு ஜேர்மனி, தமிழ் ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், பிரித்தானிய மருத்துவ குழு, மருத்துவத்துறை மாணவர்கள், மற்றும் ஜேர்மனிய மக்களும் மிக ஆர்வமாக பங்கேற்றனர்.

முக்கிய கருத்துரைகளாக 2002 மாசி 23 ஆம் நாள் புரிந்தணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தி நிலையில், எதனை சாதித்துள்ளது?

ஆழிப்பேரலை அழிவுகள் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. அபிவிருத்தியில் காட்டப்படும் அக்கறை என்ன?

ஐந்து வருட சமாதான காலத்தில் சிறிலங்கா அரசு அரசு எதனை சாதித்துள்ளது? என்ற மையக் கருத்தினைக் கொண்ட விவாதம் இடம்பெற்றது.

முக்கியமாக இந்த விவாத அரங்கின் நோக்கம் சிறிலங்கா மக்களின் உரிமை பிரச்சனையோடு, தமிழ் மக்களின் பொருளாதாரப் பிரச்சனையும் ஆராயப்பட்டது. இதனை ஜேர்மனிய மக்களும் அறிய வேண்டும் எங்களுக்குள்ளே பரிமாறிக் கொண்டிருப்பதை விட வெளிக்கொணருவதே சந்திப்பின் பிரதான நோக்கம் என்பதும், இலங்கையிலிருந்த வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பாக, ஓருபக்க சார்பாகவும், தமிழர்களது அனைத்து விடயங்களும் புறக்கணிக்கப்படுவது பற்றியும் விபரமாக விவாதிக்கப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கம் பொய்ப்பரப்புரைகளை மிகப்பெரும் பணம் செலவு செய்து நடத்தி வருவதும் இலங்கையின் சமகால நிகழ்வுகளையும், ஜேர்மன் அரசுக்கும், மக்களுக்கும் புரிய வைத்து தாமதமின்றி அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிக்கும் படியும் வலியுறுத்தப்பட்டது

இந்த விவாத அரங்கில் பங்கேற்ற ஊடகவியலாளர் வரதராஜா கருத்துரையாக "அனைத்துலக நாடுகளின் வேண்டுதலின் பேரில் தமிழீழ மக்களின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகள் பூர்த்தி செய்து விட்டது. ஆனாலும் அரசு தமிழர் பிரச்சனை தொடர்பாக இன்று அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது 4,000-க்கும் மேற்பட்ட தமிழர்களை கொலை செய்தும், 1,000 தமிழர்கள் மேல் காணாமலும், 3 லட்சம் தமிழர்கள் இருப்பிடங்களை இழந்தும், 24,000 தமிழர் மேல் இந்தியாவில் தஞ்சமாகியும், வடக்கு - கிழக்கு உட்பட இலங்கையில் சகல தமிழர்களும் இயல்பு வாழ்வை இழந்துள்ளனர். எனவே தம் வாழ்வை தாமே முடிவு செய்யும் உரிமையை தமிழர்கள் முன்னிறுத்துவதை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழர்கள் சிறிங்காவிலிருந்து பிரிந்து தமிழீழம் அமைப்பதை அனைத்துலக நாடுகளும் ஏற்க வேண்டும். அதன் மூலம் சிங்கள மக்களும் கூட அமைதியான வாழ்வை மேற்கொள்ளலாம். சிங்கள மக்களும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளனர் அதற்கு முக்கிய காரணம் அரசு நாட்டின் செலவில் 45 சதவீதமான பணத்தை போருக்கு பயன்படுத்துகின்றது. தமிழீழம் அமைப்பதன் மூலம் இச்செலவீனம் தவிர்க்கப்படுகின்றது. எனவே தமிழ் மக்கள், சிங்கள மக்கள் இருபகுதியினரும் நிம்மதியாக வாழ தமிழீழம் தான் என்பதை அனைத்துலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" என்றார்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.