Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாநாட்டு மக்களும் போக்குவரத்தும்

Featured Replies

யாழ் குடாநாட்டு மக்களும் போக்குவரத்தும்

யாழ் குடாநாட்டு மக்கள் கடந்த ஆறு மாதங்களாக உயிர் ஆபத்துக்கள் கடத்தல்களுக்கு மத்தியில் திறந்த வெளிச் சிறைச் சாலையில் தமது வாழ்க்கையைக் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ம் திகதி மாலை 5.00மணிக்கு எ 9 பாதை மூடப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள நிலமை இதுவாகும்

இதனைத் தொடாந்து கடந்த ஆறு மாத காலத்தில் யாழ் குடாநாட்டு மக்கள் முகம் கொடுத்த வரும் பிரச்சனைகள் கஸ்டங்கள் சொல்லும் தரமன்று.அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமையான போக்குவரத்தையே மறுத்து அவாகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளதுடன் உதவுவதாக சர்வதேசத்திற்கு கூறிக் கொண்டே தமிழ் மக்களை வாட்டி வதைக்கும் செயல்பாட்டையே முன்னெடுத்து வருகின்றதுடன் அவர்களின் சுமந்திரமான நடமாட்டத்தை வெளி மாவட்டங்களுக்கு மட்டும் மேற் கொள்ள வில்லை யாழ் குடா நாட்டுக்குள்ளும் இதனையே செய்து வருகின்றது என்பதே உண்மையாகும

1986 ம் ஆண்டின் முன்னர் யாழ்ப்பாணத்திற்கும் தென் பகுதியான கொழும்புக்கும் இடையே தொடர் வண்டிப் போக்குவரத்து நாளொன்றுக்க ஐந்து சேவைகள் இடம் பெற்ற வந்தன அதிகாலையில் உத்தர தேவியும் நன்பகல் இரவில் யாழ் தேவியும் இடையில் தபால் சேவையும் மற்றும் இன்ர சிற்றி என்று அழைக்கப்படுகின்ற நகர் சேர் கடுகதி சேவையும் மற்றும் சரக்கு வண்டியென ஒரு சேவையுமாக் இடம் பெற்று வந்தன

இதனை விட நாளாந்தம் விமான சேவை மற்றும் இலங்கை போக்கவரத்தச் சபையின் நாளாந்தம் வெளி மாவட்டங்களுக்கான சேவையென பல மன்னார் மட்டக்களப்ப அணுராதபுரம் கண்டி கொழும்பென பல சேவைகளும் தனியார் வாகணங்களில் செல்பவர்கள் என பல வசதிகளும்; காணப்பட்டன இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரத்திற்கும் குறையாத மக்கள் தமது தேவைகள் காரணமாக போக்குவரத்தை மேற் கொண்டு வந்தார்கள்

இந் நிலமையில் வடக்கு கிழக்கில் ஏற்பட்டு யுத்தம் காரணமாக போக்குவரத்துடனான புகையிரத சேவையானது 1990 ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட போதிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் யாழ் குடா நாட்டு மக்கள் அரசின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் போக்குவரத்தை மேற் கொண்டார்கள்

1995 அம் ஆண்டு காலப் பகுதியில் யாழ் குடாநாட்டை ஸ்ரீ லங்கா இராணுவம் மீளக் கைப்பற்றியதைத் தொடாந்து பொது மக்களுடைய போக்கவரத்தை அதாவது யாழ் குடாநாட்டு மக்களை ஸ்ரீ லங்கா படையினர் தமது உயிர் பாது காப்பக்கான மனித கவசமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளாhகள் என்பதே உண்மையாகும்

யாழ் குடாநாட்டில் நிலை கொண்டுள்ள சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் தமது பயணங்களுக்கு இந்த மக்களை கவசமாகக் கொண்டு பயணத்தை மேற் கொள்வதுடன் இந்த மக்களிடம் போக்குவரத்து என்ற பெயரில் பண மோசடிகளிலும் சுரண்டலிலும் ஈடுபட்டு தமது பைகளை நிரப்பி வருகின்றாhகள் என்பதும் உண்மையாகும்

முகமாலை முதல் புளியங’குளம் வரையான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதினால் பொது மக்கள் தரை வழியாக போக்குவரத்தை மேற் கொள்ள முடியாதெனக் கூறி கடல் வழியாகவும் மற்றும் ஆகாய வழியாகவும் போக்குவரத்தை ஏற்படுத்தினாhகள்

இதில் கூட கப்பல் கட்டணத்தை உயர்தியும் விமான சேவையை விமானப் படையினர் கூடிய கட்டணத்தில் நடாத்தியும் மற்றும் மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு இராணுவத்தினரின் முன் அனுமதி பெற்வேண்டும் எனக் கூறி பலத்த கெடுபிடிகளை ஏற்படுத்தியும் வந்தார்கள் இதனால் இராணுவத்துடன் இயங்கும் ஒட்டுக் குழுக்களின் நடவடிக்கையையும் மோசடிகளையும் வளர்த்து வந்தார்கள்

1995ம் ஆண்ட காலப் பதியில் கப்பல்கட்டணமாக சுமார் 500 ரூபாவும் விமானக்கட்டனமாக சுமார் ஆறாயிரத்தி ஐநூறு ரூபாவும் அறவிடப்பட்ட இத்தகைய கால் கட்டத்தில் சிங்களப் பேரினவாதிகளின் பலத்த எதிர்புக்கு மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்காவுக்கும் இடையே இடம் பெற்ற புரிநதுணர்வு ஒப்பந்தத்தைத் தொடாந்து இடம் பெற்ற போர் நிறுத்தம் காரணமாக சுமார் ஏழு வருடங்கள் பூட்டப்பட்டு இருந்த எ.9 நெடுஞ் சாலை திறந்து விடப்பட்டதைத் தொடாந்து படைத்தரப்பினரின் அதிருப்திக்கு மத்தியில் நாளாந்தம் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அதாவது தென்னிலஙகையில் இருந்தும் யாழ் குடாநாட்டில் இருநதும் தமது போக்குவரத்துக்களை மேற் கொண்டார்கள்

இந்தக் கால கட்டத்தில் இன்றைய அளவுக்கு பொது மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லையென்பது உண்மையாகும் இன்று பயணம் செய்யும் ஒருவர் பல ஆயிரம் ரூபாக்களை செலவிட வேண்டிய நிலமையில் காணப்படுகி;னறாhகள்

எ 9 பாதை திறந்து விடப்பட்ட காலத்தில்;; மொத்தமாக தென்னிலங்கையான கொழும்புக்கு ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்வதற்கு ஐநுர்று ரூபாவுக்கு உட்பட்ட தொகையையே செலுத்த வேண்டியிருந்தது யாழ்ப்பாணத்தில் இருந்து முகமாலை வரை இலங்கை பேரூந்து சேவையில் செல்வதற்கான கட்டணம் 25 ரூபா தனியார் சிற்றூர்திச் சேவையில் செல்வதானால் 30 ரூபா கடுகதியில் செல்வதானால் 40 ரூபா முகமாலையில் இருந்து புளியங்குளம் வரையான புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தழிழீழ போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தில் செல்வதற்கு 180 ரூபா புளியங்குளத்தில் இருந்து ஓமந்தை செல்வதற்கு நடந்தும் செல்லலாம் இல்லாவிட்டால் 5 ரூபா கட்டணத்தில் பேரூந்தில் செல்லலாம் ஓமந்தையில் இருந்து வவுனியா செல்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துக்கு 25 ரூபாவும் தனியார் சிற்றூர் திக்கு 30 ரூபாவும் அறவிடப்பட்டது வவுனியாவில் இருந்து இருந்து கொழும்பு செல்வதற்கு தனியார் சிற்றூர்திக்கு 180 ரூபாவில் இருந்து 200 ரூபா வரை அறவிடப்பட்டது புகை வண்டியில் வவுனியாவில் இருந்து பயணம் வெய்வதற்கு இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கைக்கு சுமார் 250 ரூபாவும் 3ம் வகுப்புக்கு நூற்றி இருபது ரூபாவும் அறவிடப்பட்டது

இந்த வகையில் பயணம் செய்யும் ஒருவர் மொத்தமாக செலவு செய்யும் தொகை ஐநூறு ரூபாவுக்கு உட்பட்டதாகவே காணப்பட்டது அரசாங்கம் இன்று கூறுகின்றது புலிகள் வரிகள் அறவிடுவதினால் மக்கள் மீது பொருளாதாரச் சுமைகள் எற்படுகின்றன அதனால் அவாகள் வரி வசூலிப்பதை நிறுத்தினால் தாம் எ 9 பாதையைத் திறப்பதாகக் கூறிக் கொள்கின்ற நிலமையில் இதனை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் அவசியமும் உண்டு

எ 9 பாதையை தமிழிழ விடுதலைப் புலிகள் திறந்து பயன்படுத்தவதற்க தயாhராக இருக்கின்ற போதிலும் அரசாங்கம் வேண்டத்தகாத செயலில் குறிப்பாக படைத்தரப்பினரும் அரச உயர் அதிகாரிகளும் தமது நலனையும் சுரண்டலையும் முன் வைத்துக் கொண்டு வேண்டத்தகாத நியாங்களை முன் வைத்தக் கொண்டும் தமது பைகளை நிரப்பும் நடவடிக்கையில் கவனமாக இருக்கின்றாhகள் என்பதே உண்மையாகும்

தற்போது யாழ்ப்பாணத்திற்க்கும் கொழும்புக்கும் இடையில் போக்குவரத்துக்கு இரண்டு மார்க்கங்களே காணப்படு:கின்றன ஒன்று கடல் வழி மற்றையது தரை வழி கடல் வழிப்பயணத்தை எடுத்துக் கொண்டமாக இருந்தால் அதற்கு சுமார் இரண்டாயிரத்தி நாநூறு ரூபா அறிவிடப்படுகின்றது ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாவுடன் தொடங்கிய கட்டண அறவட்Pடு கடந்த நானடகு மாத காலத்தில் படிப்படியாக அதிகாரிக்கப்பட்டு இரண்டாயிரத்தைத் தாண்டி தற்போது காணப்படுகின்றது

கப்பல் பயணம் என்பதும் கூட பணம் படைத்தவருக்கும் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழக்களுடன் தொடர்புகள் கொண்டவாகளுக்கே அதிகம் சாத்தியமாகின்றது மற்றும் ஒருவர் பயணம் செய்ய வேண்டுமாக இருந்தால் இன்று பல ஆயிரம் லஞ்சம் கொடுத்தோ அன்றி செல்வாக்கைப் பயன்படுத்தினால் தான் இவாகளுக்கு பயணம் என்பது சாத்தியமாகின்றது

யாழ் குடாநாட்டில் பதினொரு பிரதேச செயலகங்களும் நான்கு உதவி அரசாங்க அதிபர் காhயாலயங்களும் காணப்படுகின்றனஇங்கு மட்டுப்படுத்திய அளவில் பிரயாணத்திற்கான படிவங்கள் நாளாந்தம் ஐம்பது என்ற அடிப்படையில் விநியோகம் செய்யப்படுகின்றனஅதாவது செல்வாக்கைப் பயன்படுத்திப் பெறப்படும் படிவங்கள் தவிர்த்;து இவர்கள் இராணுவத்திடம் அனுமதி பெற்று ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆககக் குறைந்தது எழுநூற்றி ஐம்பது பேர் மட்டுப்படுத்திய அளவில் கொழும்பு செல்வதற்கு தயாராக இருக்கின்றார்கள்

திருகோணாமலைக்கும்யாழ்ப்பாண

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.