Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமிதப்பட வேண்டிய தமிழீழப் பெண்கள்

Featured Replies

பெருமிதப்பட வேண்டிய தமிழீழப் பெண்கள்

f_headerm_a0ab1ce.jpg

தமிழ்த்தேச விடுதலையின் முக்கியமான ஒரு கால கட்டத்தில் நிற்கின்றோம். இந்தக் கால கட்டத்தில் தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் மற்றும் 2ம் லெப் மாலதி அவர்களின் 19வது ஆண்டு நினைவு நாளையும் நினைவு கூறும் இத்தருணத்தில் தமிழீழப் பெண்கள் தீர்க்கமான சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்திற்கு அவசியமானது.

ஈழத்தமிழர் வரலாறு வீரவரலாறாகப் படைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த வரலாற்றில் தமிழீழப் பெண்களின் வீரமும், தியாகமும், பங்களிப்பும் பெருமைப்பட வேண்டிய விடயம்.

அந்தப் பெருமைக்கு வழிகாட்டியாக அடிமை விலங்குகளால் கட்டுண்டு கிடந்த பெண்கள் சமூகத்துக்கு சமத்துவ நிலை வழங்கிய பெருமை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைச் சாரும்.

தமிழ் பெண்களின் வாழ்க்கை சமய ரீதியிலான கட்டுப்பாடுகளுக்குள் உட்படுபவை. பாரம்பரிய நடைமுறை என்ற கண்ணோட்டத்தில் பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்து வருவதால் அவர்களது சுதந்திரம் கட்டுப்பட்டு அடிமை நிலைப்படுத்தப்பட்ட சமூகமாக இருந்து வந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்கள் அளித்த சமத்துவ நிலை அவர்களின் அடிமைத் தனத்தை தகர்த்தெறிந்து. ஆண்களுக்கு நிகரான ஆற்றல் கொண்டவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டினர்.

இந்த ஆற்றலை வீரத்தை வெளிப்படுத்தி எதிர்காலப் பெண்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தான் 2ம் லெப் மாலதி ஆவார். மன்னார் ஆட்காட்டிவெளியைச் சேர்ந்த பேதுறு சகாயசீலி என்ற பெண் தமிழீழ தேச விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதில் இணைந்து கொண்டவர்.

இவ்வாறு இணைந்து கொண்ட 2ம் லெப் மாலதி அவர்கள் கடந்த 10.10.1981ம் திகதி அன்று யாழ் கோப்பாய் பகுதியில் நடந்த இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்தார்.

இந்த மாலதி காட்டிய முன்னுதாரணமான வீர வரலாறு தான் அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆயிரமாயிரம் பெண்கள் இணைவதற்கு வழிகோலியது.

அடுப்பங்கரையும், அகப்பையுமாக சமையல் கட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள் இயந்திரத் துப்பாக்கிகளைத் தூக்கி எதிரியை சுட்டு வீழ்த்துகின்ற, எதிரிகளுடன் கள முனைகளில் நின்று சமர் புரிகின்ற, கடலில் சென்று எதிரியின் விசைப்படகை முற்றுகையிட்டு தாக்கும் மனோ உறுதியை தேசிய விடுதலைப் போராட்டம் களமமைத்துக் கொடுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து தேசியத் தலைவர் அவர்கள் அன்று சொன்ன கருத்துப் பகிர்வு சிந்திக்க வேண்டிய விடயம்.

எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்து தான் எமது விடுதலை இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப்படுத்தியது. பெண்களை அரசியலில் மையப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணிதிரட்டியது.

இவ்வகையில் தமிழீழ சமூகம் மத்தியில் ஒரு புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.

காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண் இனம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கின்றது. சீருடை தரித்து நிற்கின்றது. காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து எமது போராட்டத்தின் புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது. வீரத்திலும், தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்றார் தேசியத் தலைவர் அவர்கள்.

அந்த வீர சாதனைகளின் உச்சமாக நெஞ்சிலே வெடி குண்டுகளைச் சுமந்து சென்று எதிரிகளை அல்லது எதிரிகளின் இலக்குகளை அழித்து விடுதலைப் போராட்டத்தில் ஏற்படுகின்ற தடைகளை தகர்த்தெறிந்து சாதனை படைத்துள்ளார்கள் என்றால் தமிழீழப் பெண்கள் பெருமைக்குரியவர்கள் என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை.

உலக விடுதலை வரலாறுகளுடன் ஒப்பிடுகின்ற போது அந்த விடுதலைக்கான போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு கனிசமான இருப்பை பெற்றிருந்து. விடுதலையை விரைவாகப் பெற்றெடுப்பதற்கு அது வழிகோலியது. உதாரணமாக சீன விடுதலையை நாம் நோக்குமிடத்து அந்தப் பெண்களின் எழுச்சி முக்கியத்துவம் மிக்கதாக உலக வரலாறுகளில் தடம் பதித்து நிற்கிறது. தேசத்தின் விடுதலை, வர்க்க விடுதலை, சோசலிசம் என்பவற்றுக்காக போராடுவதன் மூலம் தான் உண்மையான விடுதலையை பெற்றுக் கொள்ளலாம் என்பதனைச் சீனப் பெண்கள் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து கொண்டனர்.

1924ம் ஆண்டு தொடக்கம் 1927ம் ஆண்டு வரைக்கும். 1927 தொடக்கம் 1937ம் ஆண்டு வரைக்குமான முதலாம் இரண்டாம் உள்நாட்டு போர்களிலும் 1937-1945களில் ஜப்பானியர்களுக்கு எதிரான போரிலும் 1945-1949 வரையிலான சீன விடுதலைப் போரிலும் பல மில்லியன் கணக்கான சீனப் பெண்கள் ஆண்களுடன் இணைந்து போராடினார்கள். பிரபுத்துவம் மேலாதிக்கம் ஏகாதிபத்தியம் போன்றவற்றை எதிர்த்து சீனப் பெண்கள் போராடியது மட்டுமன்றி உலகின் பெண் விடுதலைப் போராட்டங்களுக்கும் தமது ஆதரவை நல்கியிருந்தனர்.

மாவோ சேதுங் அவர்களின் கம்யூனிசியக் கட்சியில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இணைந்தனர். இதனையடுத்து மாவோ சேதுங் அவர்களினால் சீனப் பெண்களுக்கு தனியான படையணி ஒன்று நிறுவப்பட்டது. 1932ல் தனது இருபதாவது வயதில் இணைந்து கொண்ட இளமங்கை வேராசன்சிங் என்பவரால் இந்தப் படையணி வழிநடத்தப்பட்டது.

ஜப்பானுக்கு எதிராக சீனா போரிட்ட போது இந்தப் பெண்கள் படையணி சீன இராணுவ வீரர்களுக்கு சப்பாத்துக்கள், காலுறைகள் என்பவற்றை தயாரித்து வழங்கினர். அது மாத்திரமின்றி பதுங்கு குழிகளை அமைப்பதிலும் ஆரம்பத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சூட்டுப் பயிற்சி உட்பட இதர ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றனர். பின்னர் நீளக் காற்சட்டை இடுப்புபட்டி, நெற்றியைச் சுற்றி வெள்ளை நிறப்பட்டியணிந்து வீரம் மிக்க பெண்களாக களமுனையில் சாதனை படைத்தனர்.

1940ம் ஆண்டு ஜப்பான் வீரர்கள் சீனாவின் நகர்ப்புறக் கிராமம் ஒன்றை ஆக்கிரமித்த போது சீற்றம் கொண்டெழுந்த சீனப் பெண் போராளிகள் ஜப்பான் வீரர்களின் நகர்வை தடுத்து நிறுத்தி சரித்திர வெற்றிபடைத்தனர்.

சீனப் பெண்கள் எழுச்சி கொள்ளும் போதே சீனப் புரட்சியும் வெற்றி பெறும்|| என்று மாவோ சேதுங் சொன்னதை சீனப் பெண்கள் நிஜமாக்கியது போன்று இன்று தேசியத்தலைவர் அவர்களின் தூர நோக்குடனான வழி நடத்தலின் கீழ் தமிழீழப் பெண்களும் விடுதலைப் போராட்டத்தில் சமத்துவம் மிக்கவர்களாக போராட்டத்தை வலிமைப்படுத்திப் பிரகாசிக்கின்றனர்.

இதேசமயம் இன்றைய கால கட்டத்தை நாம் பரந்துபட்ட கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும். போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பிற்பாடு சமாதானத்தின் எதிர்பார்ப்புகள் தமிழ் மக்களிடையே இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடையாது தோல்வியடைந்த நிலையில் மக்கள் தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரணிகள் மூலம் தமது நிலைப்பாட்டை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தினர், தெளிவுபடுத்தினர்.

இதில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. எனினும் சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் யுத்தம் மூலம் தான் தமிழினம் தமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பது நியதியாகி விட்ட சூழல் தமிழ் பெண்கள் ஆயுதப் பயிற்சியின் தேவையும் அவசியம் உணர்த்தப்பட்டது.

இதன் அடிப்படையில் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான ஆயுதப் பயிற்சிகளை பெண்கள் பெற்றுள்ள சூழலில் போர் நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைத்துள்ள சிறிலங்கா அரசு தமிழின அழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

சிங்கள அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கை என்பது ஒரு உளவியல் ரீதியான போராட்டமாக நாம் கருத வேண்டியுள்ளது. ஏனெனில் தமிழ் மக்களை கொன்றழிப்பது, வீடுகளை நாசம் செய்வது, கிபீர் விமானத் தாக்குதல், பல்குழல் பீரங்கித் தாக்குதல், ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் மக்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகவுள்ளது.

இவ்வாறான பாதிப்புக்களால் தமிழினம் சோர்ந்து விடக் கூடாது. ஒரு விடுதலைப் போராட்டத்தில் சாவும், அழிவும், துன்பமும், துயரமும் தவிர்க்க முடியாதவை. பெரிய தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் புரிந்து தான் நாம் எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என தேசியத் தலைவர் கூறியிருக்கிறார்.

எனவே 2ம் லெப் மாலதி அவர்கள் அன்று இந்திய வல்லாதிக்க இராணுவத்துடன் நேரடி மோதலில் ஈடுபட்டு வீரச்சாவடைந்தார். இந்த வீரமரணம் தான் 2ம் லெப் மாலதியை நினைவு கூருவதற்கு வழி வகுத்திருக்கின்றது. அதுமாத்திரமின்றி ஆயிரமாயிரம் பெண்கள் விடுதலைப் போராட்டத்தில் இணைவதற்கும் பெண்கள் பற்றி பெருமை கொள்வதற்கும் வழிவகுத்துள்ளது.

எனவே இன்றைய சூழலில் கூடப் பெண்கள் தேசிய எழுச்சி பெற்று விடுதலைப் போராட்டத்திற்கு தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். அடுப்பூதும் பெண்கள் எல்லோரும் ஆயுதங்கள் தூக்கி களமுனைகளில் நின்று எதிரியைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக மாறுகின்ற போது எதிரியின் பல்குழல் பீரங்கியும் கவச வாகனமும் எமது தாயக பூமிக்குள் கால் வைக்க முடியாது என்பதை எதிர்காலத்தில் நிஜமாக்க வேண்டிய பொறுப்பு தமிழீழத் தாயகப் பெண்களின் வரலாற்று கடைமையாகும்.

எனவே எதிரி இன்று தமிழர் தாயகம் மீது ஏற்படுத்தியிருக்கும் அவலங்கள் நிரந்தரமானவை அல்ல. அவை தற்காலிகமானவை என்ற உறுதிப்பாட்டுடன் தமிழீழப் பெண்கள் விழித்தெழ வேண்டும்.

நன்றி - மட்டு ஈழநாதம்.

http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1160175391&archive=&start_from=&ucat=8&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.