Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை ஐக்கிய நாடுகள் சபை கைப்பற்றும் வகையில் சர்வதேசம் செயற்படுகின்றது

Featured Replies

வியாழக்கிழமை 1 மார்ச் 2007 ஜனனி

எமது நாட்டை ஐக்கிய நாடுகள் சபை கைப்பற்றும் வகையில் சர்வதேச சமூகம் திட்டமிட்டு செயற்படுகின்றது. மட்டக்களப்பில் இடம் பெற்ற தூதுவர்கள் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்களையும் சர்வதேச சமூகம் இதற்காகவே பயன்படுத்திவருகின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி. யின் பிரசார செயலாளருமான விமல் வீரவங்ச தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுவதுபோன்று இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போர்நிறுத்த உடன்படிக்கை தடையாக இருக்கவில்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால். புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டுமானால் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவேண்டும். இந்த உடன்படிக்கை சட்ட ரீதியாக அமுலில் இருக்கின்ற நிலையில் இராணுவம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களை கைப்பற்றினாலும் அதில் அர்த்தம் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பு தேசிய நூலக ஆவணாக்கல் சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நன்றி : நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வின் பொறுப்பில் இலங்கையை கொண்டு வரும் திட்டமிட்ட நாடக அரங்கேற்றமே மட்டக்களப்பு தாக்குதல் -விமல் வீரவன்ச கூறுகிறார்

மட்டக்களப்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை "கடுமையான தொனியில்" கண்டிக்காத சர்வதேச சமூகம் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை ஐ.நா.வின் பொறுப்பில் இலங்கையை கொண்டு வருவதற்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான செயற்பாடேயென தெரிவிக்கும் விமல்வீரவன்ச எம்.பி.இது புலிகளின் திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்றும் ஒரு நாடக அரங்கேற்றமே என்றும் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி.எம்.பி.யுமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பிற்கு வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

புலிகளின் பாசிஸ அச்சுறுத்தல் இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் முன்னெடுக்கப்படுகிறதென்ற மறைமுக அறிவிப்பை இத் தாக்குதல் மூலம் விடுத்துள்ளனர்.

யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஐந்து வருட பூர்த்திக்கு பின்னர் புலிகள் விடுத்துள்ள அறிக்கையில், தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களை உத்தியோகப்பற்றற்ற இராஜ்யமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதென்று அறிவிக்கப்பட்ட பின்னரே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தூதுவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு வர வேண்டுமென்றால் தம்மிடம் அனுமதி பெற வேண்டுமென்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.இத் தொடரை கவனமாக நோக்குவோமெனில் புலிகளின் தாக்குதல் அரங்கேற்றப்பட்ட நாடகமே என்பது புலனாகும்.புலிகளின் இத் தாக்குதல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில், மீண்டும் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இத்தாலி இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்திடம் விளக்கம் கோரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தவும் இல்லை. புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அறிவிக்கவுமில்லை.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன.கொலைகள் அதிகரித்துள்ளன, தாக்குதல்களால் மக்கள் அவதியுறுகின்றனர் என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை சுமத்தி இலங்கையை ஐ.நா.வின் பொறுப்பின் கீழ் கொண்டு வருவதற்கு சர்வதேச நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அதற்காக மட்டக்களப்பு தாக்குதலையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. எனவே தான் கடுமையான கண்டனங்கள் வெளிவரவில்லை.

இதனை மக்கள் சிந்திக்க வேண்டும். புலிகளுக்கு இவ்வாறானதொரு அந்தஸ்தினை வழங்கியது யுத்த நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தமேயாகும்.

எனவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை குறைத்து மதிப்பிட முடியாது. சர்வதேச நாடுகளின் தலையீடு அதிகரிக்க இதுவே காரணமாகும்.

சூடானின் சுயாதிபத்தியத்தை கருத்தில் கொண்டு அங்கு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவில்லையென புலிகள் தெரிவித்துள்ளனர்.இது தாமும் பிரிந்து போவதற்கு முடியும் என்பதை சொல்லாமல் சொல்வதாகும்.

யுத்த நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எமது அரசியலமைப்பு ரீதியாக சட்ட விரோதமானதாக இருக்கலாம். ஆனால், எமது நாட்டை ஆட்சி செய்த ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கங்கள், அவற்றைப் பாதுகாப்பதாக உறுதியளித்தன. அதனையும் மீறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உடன்படிக்கையை பாதுகாப்பதாக எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியுள்ளது. இவையனைத்தும் அதனை சர்வதேச ரீதியில் வலுப்படுத்தியுள்ளன.

ஆயுத ரீதியாக புலிகளை எமது படையினரால் பலவீனமடையச் செய்ய முடியும். ஆனால், அரசியல் ரீதியாக முடியாது.எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இது தொடர்பாக தெளிவில்லாமல் இருக்கின்றாரா அல்லது தெரிந்தும் தெரியாதவரைப் போல் செயற்படுகின்றாரா என்பது தெரியாது. ஆனால் அவர் இதனை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் புலிகளை முழுமையாக தோல்வியடையச் செய்ய முடியாது.

டாக்டர் குணதாச அமரசேகர

யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை வெறுமனே ரணில் - பிரபாகரன் செய்து கொண்ட உடன்படிக்கையல்ல. அதனை மீறி சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நோர்வேயினால் தயாரிக்கப்பட்ட பயங்கரமான உடன்படிக்கையாகும்.இது எமது அரசியலமைப்பை மாற்ற வேண்டுமென்றும் பரிந்துரைக்கின்றது. எனவே இதனை இரத்துச் செய்ய வேண்டுமென்று இங்கு உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இதில் தம்பர அமில தேரர், சிரில் விக்கிரமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.