Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை

Featured Replies

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை:-

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்

யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்புக்கு வருமாறும் அது தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை தாம் பதிவு செய்ய வேண்டி உள்ளதாகவும், அத்துடன் பௌத்த தேரர் ஒருவரை அவதூறாக பேசியமை தொடர்பிலும் வாக்கு மூலம் பெற வேண்டும் எனவும் சிவாஜிலிங்கத்திற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவ்வழைப்பை நிராகரித்த சிவாஜிலிங்கம், தன்னால், கொழும்புக்கு வர இயலாது உள்ளதாகவும், தேவையெனில் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு வருகை தந்து வாக்கு மூலத்தை பதிவு செய்து கொள்ளுமாறும் , அதற்கு முடியாவிட்டால் யாழ்ப்பாணம் காவல் நிலையம் வந்து தன்னால் வாக்கு மூலம் வழங்க முடியும் என குற்றபுலனாய்வு பிரிவினருக்கு அறிவித்து உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ் காவல்நிலையத்திலுள்ள குற்றத்தடுதடுப்பு பிரிவிற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்தை அழைத்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் குறித்த ஊடக சந்திப்பில் அவருடன் கலந்து கொண்டிருந்த சக மாகாணசபை உறுப்பினர்களான கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை ஊறுப்பினர் பசுபதிப்பிள்ளை மற்றும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் தியாகராஜா ஆகியோரும் அழைக்கப்பட்டு அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/archives/34895

  • தொடங்கியவர்

தேரர் உட்பட பலர் கொடுத்த முறைப்பாடுகளுக்கு அமையவே எம்மீது  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

Published by Priyatharshan on 2017-07-31 19:15:08

 

கடந்த மே மாதம் 8 ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில் இனப்படுகொலை தொடர்பாக பேசியிருந்தேன்.  இது தொடர்பாக ஹெல பொதுசவிய அமைப்பை சேர்ந்த “புதுகல ஜினவன்ஸ” என்ற தேரர் உட்படப் பலர் கொடுத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே  குற்றபுலனாய்வு பிரிவை சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் 4 மணி நேரமாக எங்களிடம் விசாரணை நடத்தியதாக வடமாகாண  உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

sivajilingam.jpg

குறித்த விசாரணை தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விடயங்கள் தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றபுலனாய்வு பிரிவினர் 4 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் 8 ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில் இனப்படுகொலை தொடர்பாக பேசியிருந்தேன். அதனை எதிர்த்து இனப்படுகொலை நடக்கவில்லை. நடைபெற்றது புலிகளுக்கு எதிரான போர் அதில் புலிகளே கொல்லப்பட்டார்கள் என ஹெல பொதுசவிய அமைப்பை சேர்ந்த “புதுகல ஜினவன்ஸ” என்ற தேரர் ஒருவர் உட்படப் பலர் முறைப்பாடு கொடுத்திருக்கின்றார்கள். 

இதனடிப்படையிலேயே குற்றபுலனாய்வு பிரிவை சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் 4 மணி நேரமாக எங்களிடம் விசாரணை நடத்தியிருந்தார். இதன்போது நான் கூறியிருக்கிறேன் 1948 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடைபெற்று கொண்டிருக்கின்றது.

 

இதேபோல் ஐ.நா சபை இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமித் திருந்த ஒரு குழு கூறியிருக்கின்றது 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக, அதேபோல் மற்றொரு குழு கூறியிருக்கின்றது 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக. எனவே மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அது இனப் படுகொலையே அந்த அடிப்படையில் இனப்படுகொலை நினைவு நாளைநினைவுகூர்ந்திருக்கிறோம்.

 

அதேபோல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஜனாதிபதி முல்லைத்தீவு வர கூடாது. வந்தால் கறுப்பு கொடி காண்பிப்போம், ஜனாதிபதி தப்பி ஓடும் நிலை வரும் என கூறியது தொடர்பாக கேட்டார்கள். அதற்கு நான் கூறினேன் எனக்குள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையிலேயே கூறியிருக்கிறேன் என கூறியுள்ளேன். அதேபோல் போரில் புலிகளே கொல்லப்பட்டார்கள் மக்களை கொல்லும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என சொன்னார்கள் ஆனால் அதனை நான் மறுத்திருக்கிறேன். காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதை திட்டவட்டமாக கூறியிருக்கிறேன். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விடயங்கள் தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றபுலனாய்வு பிரிவினர்  4 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கும் நிலையில், சட்ட நடவடிக்கை உட்பட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக மாகாணசபை உறுப்பினர்கள் கூறியிருக்கின்றனர்.

 

கடந்த மே மாதம் 8 ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சு.பசுபதிப்பிள்ளை, எம்.தியாகராஜா ஆகியோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக பத்திரிகைகளுக்க கருத்து கூறியிருந்தனர். மேற்படி பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாகவே இன்று விசாரணை நடத்தப்பட்டிருக்கின்றது.

http://www.virakesari.lk/article/22564

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.