Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவறான பாதையில் பயணிக்கும் அரசு

Featured Replies

தவறான பாதையில் பயணிக்கும் அரசு

 

நாடு ஒரு புறத்­தி­லும், அரச அதி­கா­ரத்­தை­யும் அரச வளங் க­ளை­யும் தன்­ன­கத்தே கொண்­டி­ருக்­கும் அரசு மற்­றொரு புறத்­தி­லும் செயற்­பட நேர்ந்­துள்­ளது.

நாட்டை முன்­னேற்ற உழைப்­போ­மெ­னக் கூறி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்­டுள்ள தரப்­பி­னர், முற்­று­மு­ழு­தாக அதற்கு மாறான வித்­தி­லேயே செயற்­பட்டு வரு­கின்­ற­னர்.

நாடு அத்­த­கைய போக்­குக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழு­கி­றது. அப்­போது அரச வளங்­க­ளூ­டாக அதி­கா­ரத்­தைக் கொண்­டுள்ள அரசு, நாட்டு மக்­க­ளு­டன் மோதிக்­கொள்ள நேர்­கி­றது. எம்மை ஏசு­வ­தால் பய­னில்லை.

நாம் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­யது, எமது வசதி வாய்ப்­புக்­களை அனு­ப­விக்­கவே என்ற மனோ­நி­லை­யி­லேயே ஆட்­சி­யா­ளர்­கள் நடந்து கொள்­கின்­ற­னர். இயற்­கைப் பாதிப்­புக்­கள், வறுமை, எமக்கு நாமே ஏற்­ப­டுத்­திக் கொள்­ளும் சுற்­றா­டல் பாதிப்­புக்­கள்.

பாதாள உல­கக் கோஷ்­டி­யி­ன­ரது செயற்­பா­டு­கள், சாலை விபத்­துக்­கள் போன்­ற­வற்­றால் சிர­மங்­க­ ளுக்கு உள்­ளா­கும் நாட்டு மக்­கள் குறித்து ஆட்­சி­யா­ளர்­கள் அலட்­டிக் கொள்­ளாத போக்­குத் தொடர்­கி­றது.

ஆனால் அர­சி­ய­லில் அதி­கா­ரத்­தைக் கொண்­டுள்ள வாய்ப்­பால் அதி­கா­ரத்­த­ரப்­பி­னர்­கள் பல்­வேறு வகை­க­ளில் தமது வச­தி­வாய்ப்­புக்­க­ளைப் பெருக்­கிக் கொண்டு தம்­மைக் கோடீஸ்­வ­ரர்­க­ளாக ஆக்­கிக் கொள்­கின்­ற­னர். மனி­தத்
து­வத்தை முற்று முழு­தாக மறந்­து­வி­டு­கின்­ற­னர்.

அந்த வகை­யில் இன்று நாட்­டு­மக்­கள் இந்த நாடு மட்­டுமே எம்­மு­டை­யது, ஆனால் அரச அதி­கா­ரம், அர­சின் அடக்­கு­முறை, மற்­றும் நிர்­வா­கம் என்­ப­தெல்­லாம் ஆட்­சி­யா­ளர்­க­ளது கைக­ளி­லேயே என்ற நிலைப்­பாட் டையே ஏற்க நேர்­கி­றது.

நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து மக்களுக்கு எதுவுமே தெரியாது

இந்த நாடு இன்­ன­மும் உணர்ந்து கொள்­ளாத ஒரு விட­ யம் உள்­ளது. அதே­போன்று ஆட்­சி­யா­ளர்­கள் இந்த நாட்­டுக்கு, நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­விக்­கா­த­தொரு விட­ய­மும் உள்­ளது. இவை இரண்­டுமே ஒன்­று­தான். அதா­வது, இந்த நாட்­டின் அரசு வங்­கு­ரோத்து நிலைக்கு உட்­பட்டு ள் ளது என்­பதே அது. நாட்­டின் பொரு­ளா­தா­ரம் வங்­கு­ரோத்து நிலைக்கு உட்­பட்­டா­கி­யுள்­ளது. நாட்­டின் சொத்­துக்­கள் என்று பெரி­தாக எத­னை­யும் கூறிக் கொள்­ளவோ, சுட்­டிக் காட்­டவோ இய­ல­வில்லை.

பொருள்­கள் மற்­றும் சேவை­கள், வர்த்­த­கம் வங்­கு­ரோத்து நிலை கண்­டுள்­ளன. நிதி வர்த்­தகச் சந்தை வங்­கு­ரோத்­துக்கு உட்­பட்­டுள்­ளது. அர­சி­யல், மக்­கள் நல­னோன்­புத் துறை­கள், கல்வி, சுகா­தா­ரம், போக்­கு­வ­ரத்து போன்ற மக்­கள் நலன் சார் துறை­கள், யாவும் வங்­கு­ரோத்­துக் கண்­டுள்­ளன.

ஜன­நா­ய­கம், நாடா­ளு­மன்­றம், மாகா­ண­ச­பை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி நிர்­வா­கம் என்று சகல துறை­சார் செயற்­பா­டு­க­ளும் வங்­கு­ரோத்து நிலை கண்­டுள்­ளன. இவை குறித்து நாட்டு மக்­கள் தெளி­வா­கத்தெரிந்து கொண்­டி­ருக்­க­வில்லை. ஆட்­சி­யா­ளர்­கள் இவை குறித்து நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வ­தும் கிடை­யாது.

அந்த விதம் நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­வந்­தா­லும், ஆளும் தரப்­பி­னர் அனு­ப­விக்­கும் வசதி வாய்ப்­புக்­கள் குறித்து பிரச்­சினை பெரி­தாக எழ வாய்ப்பு ஏற்­ப­டாது. விமர்­ச­ னங் கள் எழு­மா­னால், அதனை மூடி மறைப்­ப­தற்­கான போர்­வை­யாக ஆட்­சி­யா­ளர்­க­ளால் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ‘‘நாம் நாட்டை அபி­வி­ருத்தி செய்து வரு­கி­றோம்’’ என்ற மேலாடை களை­யப்­பட்டு அரசு நிர்­வா­ணப்­ப­டுத்­தப்­பட நேரும்.

காலா­தி­கா­ல­மாக கூட்டு வர்த்­த­கத்­துக்­கும், கூட்டு அதி­கார அர­சி­ய­லுக்­கும் அடிப்­படை வச­தி­களை வழங்­கும் பன்­னாட்டு மற்­றும் தேசிய கூட்டு முத­லா­ளித்­து­வத்­தால் இந்த நாட்­டின் அரசு வங்­கு­ரோத்து அர­சாக ஆக்­கப்­பட்டு விட் டுள்­ளது.

இலங்­கையை அந்த நிலைக்கு உட்­ப­டுத்­திய இந்த நாட்டு ஆட்­சி­யா­ளர்­க­ளைப் பாராட்டி பன்­னாட்டு கூட்டு முத­லா­ளித்­து­ வத்­தின் உத­வி­யா­ளர்­க­ளான ஐக்­கிய இராச்­சி­யம், ஐரோப்­பிய ஒன்­றி­யம், ஐ.நா.சபை உலக வங்கி. உலக வர்த்­தக ஒன்­றி­யம். ஆசிய அபி­வி­ருத்தி வங்கி போன்ற பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளும், இந்­தியா, சீனா போன்ற நாடு­க­ளும் இலங்­கைக்கு விரு­து­கள் வழங்­கி­யுள்­ளன.

எதிர்­கா­லத்­தி­லும் அது தொடர இட­முண்டு. உல­கி­லேயே சிறந்த அமைச்­சர்­கள் என்ற வகை­யில் இலங்­கை­யின் சகல அமைச்­சர்­க­ளுக்­கும் எதிர்­கா­லத்­தில் விரு­து­கள் வழங்­கப்­ப­டக்­கூ­டும்.

அதே­போன்று நாட்­டு­மக்­க­ளால் புறக்­க­ணிக்­கப்­பட்ட அர­சி­யல்­வா­தி­களை தேசி­யப் பட்­டி­யல் மூல­மாக நாடா­ளு­மன்­றத்­துக்­குக் கொண்டு வரு­வ­தா­லும், பெரும்­பான்மை உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட எதி­ரணி இருந்த நிலை­யில் சிறு­பான்மை எதி­ர­ணித் தரப்­புக்­க­ளுக்கு எதிர்க்­கட்­சித் தலை­மைப் பத­வியை வழங்­கி­ய­தா­லும், எந்­த­வொரு தேர்­த­லை­
யும் நடத்­தா­மல் காலத்தை இழுத்­த­டித்­துச் செல்­லும் போக்­கா­லும் உல­கத்­தின் மூத்த ஜன­நா­யக அர­சுக்­கான விருது கூட இலங்கை அர­சுக்­குக் கிட்­டக் கூடும்.

போதிய அதி­கா­ரம் கைவ­ச­மி­ருந்­தும், இந்த அரசு வங்­கு­ரோத்­துக்கு உள்­ளா­கும்­வரை ஆகா­யத்தை அண்­ணாந்து பார்த்து மௌனம் காத்­த­தன் மூலம், அதற்கு உத­வி­ய­மைக்­காக சில அரச தலை­வர்­க­ளுக்­கும் சிறந்த அரச தலை­வர் என்ற விருது கிட்­டக்­கூ­டும்.

நாடு வங்­ரோத்து நிலை அடை­வது பெரி­ய­தொரு விபத்தே

எந்த வகை­யில் பார்த்­தா­லும், ஒரு இராச்­சி­யம் மற்­றும் அதன் அரசு வங்­கு­ரோத்து ஆவ­தென்­பது ஒரு நாடு முகம் கொடுக்­க­நே­ரும் பெரி­ய­தொரு விபத்தே. அத்­த­கை­ய­தொரு நாடு வெற்­றி­பெற்ற நாடாக மற்­றும் வெற்­றி­பெற்ற அர­சா­கத் தலை­யெ­டுக்க வேண்­டு­மா­னால், அதற்­குக் கடும் முயற்சி அவ­சி­ய­மா­கும்.

தற்­போது எமது நாட்­டுக்­குள்ள ஒரே­யொரு சாத­க­மான நிலைமை, இலங்கை இராச்­சி­ய­மும் அதன் அர­சும் வங்­கு­ரோத்து அடைந்­துள்­ள­போ­தி­லும், இ ந்த நாடு இது­வரை வங்­கு­ரோத்து அடை­யாது தொடர்ந்து இயங்­கு­த­லா­கும். நீர்­கொ­ழும்பு மீன­வர்­கள், ரது­பஸ்­வல பொது­மக்­கள், மீதோட்­ட­முல்ல பகு­தி­மக்­கள், லொத்­தர் சபை விநி­யோ­கஸ்­தர்­கள் போன்ற தரப்­பி­னர்­க­ளது எதிர்ப்­புக்­கள், பொது மக்­க­ளது அன்­றாட உண­வுப் பொருள்­க­ளது விலை­யேற்­றம்.

சைற்­றம் எதிர்ப்பு, பெற்­றோ­லிய ஊழி­யர்­கள் மற்றும் துறை­முக ஊழி­யர்­கள் எதிர்ப்பு போன்­ற­வற்­றின் மூலம் புலப்­ப­டும் உண்மை இந்த நாடு இன்­ன­மும் வங்­கு­ரோத்து அடை­ய­வில்லை என்­ப­தே­யா­கும்.

ஆனால் இத்­த­கைய எதிர்ப்­புக்­க­ளின்­போது நில­விய மற்­றும் நில­வும் முக்­கிய பின்­ன­டைவு என்­ன­வெ­னில், எதிர்ப்­பா­ ளர்­கள் தமது பிரச்­சி­னை­க­ ளுக்­கான தீர்­வைத் தாம் வங்­கு­ரோத்து நிலை அடைந்­துள்ள அர­சி­ட­மி­ருந்தே கோரு­கி­றோம் என்­ப­தைத் தெரிந்து கொள்­ளா­தி­ருப்­ப­தே­யா­கும்.

அதே­போன்று பல்­வேறு பிரி­வு­க­ளி­ லும் ஜன­நா­யக நடை­முறை வங்­கு­ரோத்­துக்கு உட்­பட்ட நிலை­யி­லுள்ள அர­சி­டமே தாம் தமது கோரிக்­கை­களை முன்­வைப்­பதை அவர்­கள் அறிந்­தி­ருக்­க­வில்லை. நாட்­டைப் பற்­றிப் பீடித்­துள்ள நோய்­க­ளுக்­கான சிகிச்­சையை அந்த நோய்­க­ளைக் காவும் அர­சு­க­ளி­ட­மி­ருந்து அல்­லது அர­சி­னால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அரச அதி­கா­ரம். அடக்கி ஒடுக்­கல் மற்­றும் நிர்­வா­கம் ஆகி­ய­வற்­றி­னூ­டாக மக்­கள் பெற­நேர்­கி­றது.

அது புரிந்­து­ணர்­வற்ற தன்­மை­யின் பலா­ப­ல­னா­கும். ஒரு புறம் அரச வளங்­கள் மற்­றும் அவற்­றைக் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள அரசு நோய் நிவா­ர­ணி­யல்ல நோயின்­மூ­ல­கா­ர­ணமே அது­தான்.

ஆத­லால். நோய்க்­கான மருந்தோ. நிவா­ர­ணமோ கோரி கூப்­பா­டு­போ­டு ­வது எந்த வகை­யி­லா­வது பயன்­த­ர­வல்­லதா? ஆனால் உண்­மை­யில் அத்­த­கைய புரிந்­து­ணர்­வற்ற செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­ கின்­றன.

நாட்­டின் வளங்­களை விற்­ப­னை­ செய்­வது, 99 வரு­டங்­க­ளுக்கோ அல்­லது 198 வரு­டங்­க­ளுக்கோ குத்­த­கைக்கு விடு­வது , மென்­மே­லும் கடன் பெறு­வது, ரூபா­யின் மதிப்­பைக் குறைத்­தல் அல்­லது வெளி­நாட்­டுப் பங்­குச்­சந்தை அரச நிறு­வ­னங்­க­ளது நிபந்­த­னை­க­ளுக்கு கீழ்ப்­ப­டி­வது, என்­பவை சில பகு­தி­க­ளா­கப் பார்க்­கப்­பட வேண்­டும்.

அர­சொன்று இத்­த­கைய முக்­கிய தீர்­மா­னங்­க­ளை­ மேற்­கொள்­வது ஒன்­றில் அரசை முன்­னெ­டுத்­துச் செல்ல இய­லாத அள­வுக்கு வங்­கு­ரோத்து நிலைக்கு உட்­ப­ட­நே­ரும் சந்­தர்ப்­பத்­தி­லேயே அல்­லது வெளி­நாட்­டுத் தரப்­புக்­க­ளால் அத்­த­கைய விதத்­தில் செயற்­ப­டு­மாறு அழுத்­தம் மேற்­கொள்­ளப்­ப­டு­வது அல்­லது அவ்­வி­தம் செயற்­ப­டா­விட்­டால் அரசை கவிழ்த்து விடு­வ­தான மிரட்­டல் விடப்­ப­டு­வ­தா­ லா­கும், அல்­லது அத்­த­கைய தீர்­மா­னங்­க­ளால் சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்­க­ளுக்கு பெரும் இலா­ப­மீட்­டும் வாய்ப்­புக் கிட்­டு­வ­தா­லும் அந்த நிலை ஏற்­ப­டக் கூடும்.

அத்­த­கைய விற்­ப­னை­யால் கையூட்டு அல்­லது பங்­குத்­தொகை பெறும் வழக்­கம் முத­லா­ளித்­துவ தரப்­புக்­கள் மத்­தி­யில் வழக்­கில் உண்டு.

எதிர்ப்­பா­ளர்­கள் மீது பாது­காப்­புப்­ப­டை­யி­னர் மூலம் பல தரப்­பட்ட எதிர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது, எதிர்ப்­பா­ளர்­க­ளால் அரச சேவை­யா­ளர்­கள் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­வது, எவர் எதிர்த்த போதி­லும் அரசு தான் தீர்­மா­னித்த விதத்­தி­லேயே செயற்­ப­டு­மென தேசி­யப்­பட்­டி­யல் மூலம் அமைச்­சுப்­ப­தவி பெற்­றுச் செயற்­ப­டும் அமைச்­சர்­கள் இறு­மாப்­பு­டன் தெரி­வித்­தல் அரச சட்­ட­திட்­டங்­க­ளுக்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கும் உரிமை நாட்டு மக்­க­ளுக்­குக் கிடை­யா­தென தெரி­வித்­தல் போன்­ற­வற்றை மேற் கூ­றப்­பட்ட பின்­ன­ணி­யின் அடிப்­ப­டை­யி­லேயே வைத்து நோக்க வேண்­டி­யுள்­ளது.
வங்­கு­ரோத்து அடைந்­துள்ள பின்­ன­ணி­யில் நாடு புரிந்து கொள்ள வேண்­டிய விட­ய­மொன்று உள்­ளது. நாட்டு மக்­க­ளது தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் இய­லுமை இன்று அர­சி­டம் இல்லை.

இத­னால் அரசு பின்­ன­டைவு நிலை கண்­டுள்­ளது. வெளி­நா­டு­க­ளது அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து விடு­பட விரும்­பி­னா­லும், அந்­த­வி­தம் செயற்­ப­டும் வலிமை அர­சி­டம் இல்லை. அந்த இய­லா­மையை அரசு நாட்டு மக்­க­ளுக்­குக் காட்­டிக் கொள்­ள­வும் விரும்­பாது.

அந்த விதம் வங்­கு­ரோத்து நிலை­யி­லி­ருந்து நாட்டை விடு­விக்­கத்­தக்­க­தி­றன் கொண்ட அர­சி­யல்­வா­தி­கள் எவ­ரும் இன்­றைய நாடா­ளு­மன்­றத்­தில் இல்லை. ஏனைய அரச நிறு­வ­னங்­க­ளி­லேயோ, அரச சேவை­யா­ளர் மற்­றும் குடி­சார் சமூ­கத்­தின் மத்­தி­யிலோ அத்­த­கைய திறன் கொண்ட எவ­ரும் கிடை­யாது.

இத்­த­கைய வங்­கு­ரோத்து நிலை­யி­லி­ருந்து நாடு விடு­ப­ட­வேண்­டு­மா­னால் அதற்­கான உரிய செயற்­றிட்­டங்­கள் வகுக்­கப்­பட்டு, அவை முறைப்­படி முன்­னெ­டுக்­கப்­ப­டல் வேண்­டும். பழைய அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து நாம் பாடம் கற்­றுக் கொண்­டாக வேண்­டும். நாம் நினைப்­ப­தை­விட அர­சி­யல் பொரு­ளா­தா­ரம், மற்­றும் சமூக இயக்­கம் என்­பவை சிக்­கல்­கள் நிறைந்­தவை.

எனவே நியா­ய­மா­கச் சிந்­தித்து நாட்­டின் அர­சி­யல் செயற்­பா­டு­களை உரிய முறை­யில் திட்­ட­மிட்டு, உரி­ய­மு­றை­யில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

http://uthayandaily.com/story/15357.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.