Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறை படுகொலையின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள்

Featured Replies

வல்வெட்டித்துறை படுகொலையின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள்

5981ab1439723-IBCTAMIL.jpg
 
 
5981ab141e0eb-IBCTAMIL.jpg
 
 

1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னமும் அழியாத ஆறாத காயங்களாக தமிழ் மக்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கின்றன.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்ட நாள்.

ஜெயவர்த்தனா, இராஜீவ் கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த என இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) என்ற பெயரில் 1987இல் இலங்கைக்கு வருகை தந்தது.

இந்திய அமைதி காக்கும் படை ஆக்கிரமிப்பு படையாக உருமாறி ஈழ தமிழர்கள் பலரின் உயிர் குடித்தது.

இந்திய அமைதி காக்கும் படையை ஈழ மண்ணில் இருந்து விரட்ட தமிழீழ விடுதலை புலிகள் போராடினர்.

ஈழ தமிழ் மக்களுக்கு இந்த ஆக்கிரமிப்பு படை செய்த கொடுமைகளை எதிர்த்து தமிழ் மக்கள் அறவழி போராட்டங்களையும் நிகழ்த்தினார்.

அதன் உச்ச கட்டமாக   தியாகி திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மகாத்மாவானார்.

அவரை தொடர்ந்து தென்தமிழீழத்தில் பெற்ற பத்து பிள்ளைகள் இருக்க பாரதத்தை விரட்ட அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்து தியாகி ஆனார்.

அவரை தொடர்ந்து மேலும் பலர் உயிர் கொடுத்து போராட முன்வந்தனர். இவ்வாறாக தமிழ் மக்கள் போராட்டம் வலிமை பெற்று இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்தியதனால் தமிழீழ விடுதலை புலிகள் அப்போதைய சிறிலங்கா
ஜனாதிபதி பிரேமதாசாவுடனான சில உடன்பாடுகளை தொடர்ந்து பின்னர் மார்ச் 31, 1990 இல் இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஈழத்தில் இந்திய படைகள் நீங்கினாலும் அவை விட்டு சென்று பாதக கொடுமைகளின் தடங்கள் 28 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அழியவில்லை. அவை ஆறாத காயங்களாக தமிழ் மக்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கின்றன.

https://news.ibctamil.com/ta/internal-affairs/28th-anniversary-of-the-Velvettuthurai-massacre

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.