Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘நான் நலமாக இருக்கிறேன், ஆனால்...’ - தினகரனிடம் கதறிய சசிகலா #VikatanExclusive

Featured Replies

‘நான் நலமாக இருக்கிறேன், ஆனால்...’ - தினகரனிடம் கதறிய சசிகலா #VikatanExclusive

 

சசிகலா,தினகரன்

சிறையில் சசிகலாவைச் சந்தித்த தினகரனிடம், 'நான் நலமாக இருக்கிறேன், ஆனால் சிறை நெருக்கடிகளைச் சமாளிக்க முடியவில்லை' என்று கண்ணீர்மல்கக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க, நேற்று தினகரன் சென்றார். ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகே அவருக்கு சசிகலாவைச் சந்திக்க அனுமதி கிடைத்தது.  சீருடையில் வந்த சசிகலாவிடம் பேசியிருக்கிறார் தினகரன். சிறையில் நடக்கும் விவரங்களை சசிகலா, கண்ணீருடன் சொல்லியிருக்கிறார். தினகரன், ஆறுதலாகச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வெளியில் வந்திருக்கிறார்.

இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில், 'கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்வதைத் தடுக்க முடியாது. எனக்கு 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. சசிகலா, சிறையில் நலமாக இருக்கிறார்' என்று கூறினார் தினகரன். ஆனால், சிறையில் சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகளால் அவர் சோர்ந்துபோய் உள்ளாராம். விரைவில் சிறையிலிருந்து வெளியில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா இருக்கிறார் என்கின்றன, உள்விவர வட்டாரங்கள். 

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலாவைச் சந்திக்க அனுமதி கேட்டு எங்களிடம் விண்ணப்பித்திருந்தார். சிறை விதிமுறைகளுக்குட்பட்டு, நேற்று அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சசிகலாவும் தினகரனும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. தினகரனிடம் பேசும்போது, சசிகலா அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டார். சிறையில் சசிகலாவுக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. சக கைதிகளைப் போலவே அவர் நடத்தப்படுகிறார். சீராய்வு மனு விசாரணையை எதிர்பார்த்து அவர் காத்திருக்கிறார். அதில் சாதகமான உத்தரவு கிடைக்கும் என்று நம்புகிறார். மேலும், இளவரசியுடன் மட்டும் பேசும் அவர், புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்" என்றனர். 

சசிகலாவைச் சந்தித்துவிட்டு வந்த தினகரன், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அவரின் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால், ஆதரவாளர்களுக்கு தினகரன் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 5-ம் தேதி, அவர் கட்சி அலுவலகத்துக்குச் செல்லும் தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தேனி மாவட்டத்தில் ஆதரவாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதனால், அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவாரா அல்லது தேனி மாவட்டத்துக்குச் செல்வாரா என்ற கேள்வி ஆதரவாளர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. 

தினகரன்,எடப்பாடி பழனிசாமி

சசிகலாவைச் சந்தித்த பிறகு, தினகரன் தன்னுடைய தீவிர ஆதரவாளர்களிடம் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, 'சசிகலாவுக்கு சிறையில் கொடுக்கப்படும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எந்நேரமும் சிறைக்காவலர்களின் கண்காணிப்பில் சசிகலா இருப்பதால், அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சிறையில் கொடுக்கப்படும் உணவையும் சரியாக சாப்பிடமுடியவில்லை' என்று சொல்லும்போது, தினகரனின் குரல் உடைந்திருந்தது. 'ஏற்கெனவே, உடல்நலம் பாதிப்பால் சிரமப்பட்டு வரும் அவர், உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்துபோய் இருக்கிறார். இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன்  கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

கட்சி விவகாரம் தொடர்பாக சசிகலாவிடம் ஆலோசித்தபோது சில அறிவுரைகளைக் கூறியிருக்கிறார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியாலும் ஓ.பன்னீர்செல்வத்தாலும் கொடுக்கப்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க, 'சமரசமாகப் பேசி முடிவு எடு' என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.  கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்றால், அதையே காரணம்காட்டி உன்மீது நடவடிக்கை எடுப்பார்கள்.  யோசித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மேலும், நம்முடைய ஆதரவாளர்கள்மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசி, ஒரு முடிவை எடு. அடுத்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை வெற்றியோடு முடித்துவிட்டு வா. நமக்குக் கட்சியில் ஆதரவு இருப்பதாலேயே எடப்பாடி பழனிசாமியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓ.பன்னீர்செல்வம், நம் குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தபோதும், எடப்பாடி பழனிசாமி அமைதியாகவே இருப்பதற்கு அதுதான் காரணம். நம்முடைய ஆதரவாளர்களின்  எண்ணிக்கை அதிகரித்ததாலேயே எல்லா பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் சசிகலா.

 

இந்தத் தகவலை, தன் ஆதரவாளர்களிடம் பகிர்ந்துள்ளார் தினகரன். தற்போதைய சூழ்நிலையில், கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் செல்வதைவிட, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்துக்குத் தயாராகிவிட்டாராம். தினகரனின் இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி தரப்பும் வரவேற்றுள்ளதாம். இப்போதைக்கு, ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகோக்க வாய்ப்பில்லை என்கின்றன கட்சியின் உள்விவர வட்டாரங்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/97817-sasikala-breaks-out-on-seeing-ttvdinakaran.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

நான் நலமாக இருக்கிறேன், ஆனால்...’ - தினகரனிடம் கதறிய சசிகலா

கதறுதலுக்கும் கண்ணீர் மல்கவிற்கும் வித்தியாசம்/ அர்த்தம் தெரியாத ஊடகங்கள் நிறையவே வந்துவிட்டது.

சிணுங்கினாலும் அல்லது கவலைப்பட்டாலும் "கதறல்" என்ற சொல்லை எல்லா ஊடகங்களிலும் சர்வசாதாரணமாக  பயன்படுத்துகின்றார்கள்.
கதறல் என்பது ஒரு மனிதனின் இறுதிக்கட்டத்தில் வருவது அல்லது உச்சக்கட்டத்தில் வருவது.
தெருவில் நடந்து போகும்போது தடக்குப்பட்டு விழுந்து அழுதால் அது கதறல் இல்லை.

கதறி அழுததை பார்க்காத சமூகத்திற்கு கதறலை எப்படி புரியவைப்பது??????? :(

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

கதறுதலுக்கும் கண்ணீர் மல்கவிற்கும் வித்தியாசம்/ அர்த்தம் தெரியாத ஊடகங்கள் நிறையவே வந்துவிட்டது.

சிணுங்கினாலும் அல்லது கவலைப்பட்டாலும் "கதறல்" என்ற சொல்லை எல்லா ஊடகங்களிலும் சர்வசாதாரணமாக  பயன்படுத்துகின்றார்கள்.
கதறல் என்பது ஒரு மனிதனின் இறுதிக்கட்டத்தில் வருவது அல்லது உச்சக்கட்டத்தில் வருவது.
தெருவில் நடந்து போகும்போது தடக்குப்பட்டு விழுந்து அழுதால் அது கதறல் இல்லை.

கதறி அழுததை பார்க்காத சமூகத்திற்கு கதறலை எப்படி புரியவைப்பது??????? :(

அவசரத்தில் தாலியை கட்டி, ஆறுதலா அந்தரப்படு என்ற பழமொழி யாருக்குப் பொருந்துதோ இல்லையோ இந்த அம்மணிக்கு பொருந்தும்.

சும்மா, விசுவாசமாக இருந்த OPS ஐ, இறக்கி ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி, உச்ச நீதிமன்றையும் உசுப்பி, சிறை போக முன்னம், அப்பாவி மாதிரி நடித்த EPS ஐ முதல்வராகி.... உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணி நிலைமைதான். 

இப்ப கதறி அல்லது கண்ணீர் விட்டு என்ன பிரயோசனம்? 

இதுக்கு தான் இன்னுமொரு பழமொழி: நிறைவாகும் வரை மறைவாயிரு. :223_speak_no_evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.