Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இராஜதந்திரிகளின் உயிராபத்துக்களுக்கு கோத்தபாயவே காரணம்': மங்கள

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இராஜதந்திரிகளின் உயிராபத்துக்களுக்கு கோத்தபாயவே காரணம்': மங்கள

"கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் தாக்குதல் இடம்பெற்ற பகுதி மிகவும் உயரதிகாரிகள் செல்லக்கூடிய பாதுகாப்பான பகுதியல்ல. எனவே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இராஜதந்திரிகளுக்கு உயிராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்"

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

"அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி விட்டோம் என பாதுகாப்பு அமைச்சரும், செயலாளரும் கூறிக்கொண்டிருக்கும் போது தங்களிடம் நீண்ட தூர ஆட்லறிகள் இருப்பதை விடுதலைப் புலிகள் நிரூபித்திருக்கின்றனர்.

பாதுகாப்பு நிலைமைகள் உறுதியற்ற பிரதேசத்திற்கு எமது நான்கு நட்பு நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றது அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றது. இதன் முழுப் பொறுப்பும் பாதுகாப்பு அமைச்சையே சாரும்.

நாட்டின் தற்போதைய உண்மை நிலை தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இராஜதந்திரிகள் மற்றும் அமைச்சர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலை நாம் கண்டிக்கின்றோம்.

படையினரின் உயிர்த்தியாகங்களின் மத்தியில் இடம்பெற்று வரும் போரானது சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் படி நடத்தப்படுகின்றது. இது தொடர்பாக நான் ஆழ்ந்த வருத்தமடைகின்றேன். ஊடகங்களின் பரப்புரைகளினால் களத்தின் உண்மை நிலை மறைக்கப்படுகின்றது.

மகிந்தவிற்கு நெருங்கிய நபர் ஒருவர் ஊடகத்துறையின் சுதந்திரத்தில் பல குறுக்கீடுகளை செய்தபடி உள்ளார். அவர்கள் தொடர்பான செய்திகள், நேர்காணல்களை பிரசுரிக்க வேண்டாம் எனவும் தடுத்து வருகின்றார்.

நான் துறைமுகங்கள் சிவில் போக்குவரத்து அமைச்சராக இருந்த சமயத்தில் மகிந்தவின் இந்த நெருங்கிய உறவினர் தமக்கு பிடிக்காத சில பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை கொடுக்க வேண்டாம் எனவும் அதிகாரிகளை மிரட்டியிருக்கின்றார்.

மகிந்தவின் அந்த நெருக்கமானவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே உலகில் ஜனநாயகத்தை ஏற்படுத்த துடிக்கும் அமெரிக்கா, ஜனநாயக அடிப்படைகளில் உள்ள இப்படியான வன்முறைகளை கருத்தில் எடுக்கவேண்டும்.

அந்த நபர் அமெரிக்காவின் கடவுச்சீட்டையும் வைத்திருக்கின்றார். எனவே ஆசியாவிலேயே பழமை வாய்ந்த ஒரு ஜனநாயக நாட்டில் இவரால் மேற்கொள்ளப்படும் ஊடகங்களின் மீதான வன்முறைகள் தொடர்பாக அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும். மேலும் எங்களின் மீது சேறடிப்பதற்காகவே அரச ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சுதந்திரக்கட்சியை ஒரு நடுநிலையான அரசியல் பாதைக்கு கொண்டுவருவதே எனது விருப்பம். அரசுக்கு நான் நிபந்தனைகளை விதிக்கவில்லை அவை வேண்டுகோள்களைத்தான் விடுத்திருக்கின்றேன். சுதந்திரக்கட்சி சர்வாதிகார வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றார் அவர்.

-புதினம்

மகிந்தவிற்கு நெருங்கிய நபர் ஒருவர் ஊடகத்துறையின் சுதந்திரத்தில் பல குறுக்கீடுகளை செய்தபடி உள்ளார். அவர்கள் தொடர்பான செய்திகள், நேர்காணல்களை பிரசுரிக்க வேண்டாம் எனவும் தடுத்து வருகின்றார்.

நான் துறைமுகங்கள் சிவில் போக்குவரத்து அமைச்சராக இருந்த சமயத்தில் மகிந்தவின் இந்த நெருங்கிய உறவினர் தமக்கு பிடிக்காத சில பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை கொடுக்க வேண்டாம் எனவும் அதிகாரிகளை மிரட்டியிருக்கின்றார்.

மகிந்தவின் அந்த நெருக்கமானவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே உலகில் ஜனநாயகத்தை ஏற்படுத்த துடிக்கும் அமெரிக்கா, ஜனநாயக அடிப்படைகளில் உள்ள இப்படியான வன்முறைகளை கருத்தில் எடுக்கவேண்டும்.

அந்த நபர் அமெரிக்காவின் கடவுச்சீட்டையும் வைத்திருக்கின்றார். எனவே ஆசியாவிலேயே பழமை வாய்ந்த ஒரு ஜனநாயக நாட்டில் இவரால் மேற்கொள்ளப்படும் ஊடகங்களின் மீதான வன்முறைகள் தொடர்பாக அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும். மேலும் எங்களின் மீது சேறடிப்பதற்காகவே அரச ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மங்களம் சொல்லும் நபர் யார்? மகிந்துவின் சகோதரரா?

மங்களத்திற்கு மங்களம்! மகிந்துவுக்கு மங்களம்! மகிந்து உறவினனுக்கு மங்களம்! சிறீ லங்காவுக்கு மங்களம்! :P

மங்களத்திற்கு நேற்றுவரை இல்லத ஞானம் எல்லாம் திடீர் என்று வருது.......? நம்ம மேல அக்கறையிலா? இல்லை மகிந்து மாமா மேல பாசத்திலா..........?

இவர் சொல்லுவது கோத்தபாயவை என நினைகின்றேன்

பாதுகாப்பு தொடர்பான அலட்சியமே மட்டக்களப்பு தாக்குதலுக்கான காரணம்

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிற்கு சென்ற இராஜதந்திரிகள் மீதான மோட்டார் எறிகணைத் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும் எனவும், அதிகாலையில் அந்தப் பகுதியில் எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்ற போதும் பாதுகாப்பு ஒழுங்குகளை புறக்கணித்ததே இதற்கு காரணம் எனவும் சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமானப்படைத் தளப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு மட்டுமே தாக்குதல்கள் இடம்பெற்றதாக படைத்தரப்பு தெரிவித்த போதும், உலங்குவானூர்திகள் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றது என்று தற்போது தெரியவந்துள்ளது.

உலங்குவானூர்திகள் சிறப்பு அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களக்கு முன்னரும் விமானப்படைத் தளத்தின் மீது மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை சிறப்பு அதிரடிப்படை தளபதி நிமால் லெவ்கே ஒப்புக்கொண்டுள்ளார்.

காலை 7.30 மணிக்கும் 8.15 மணிக்கும் எறிகணைத் தாக்குதல்கள் அந்தப்பகுதியில் நடத்தப்பட்டிருந்தன. எனவே அங்கு நிச்சயமாக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் இருந்திருக்கின்றன.

இராஜதந்திரிகளை ஏற்றி வந்த உலங்குவானூர்திகள் காலை 8.40 மணிக்கே தரையிறங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தன. எனவே அவற்றின் தரையிறக்கத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியிருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாங்கள் அங்கு போய் இறங்கும் வரையிலும் முன்னர் தாக்குதல்கள் இடம்பெற்றதாக எமக்கு அறியத்தரப்படவில்லை என இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்ததுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=30946

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.