Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்கப்படும் பாதிக்கப்பட்டோர்

Featured Replies

மறக்கப்படும் பாதிக்கப்பட்டோர்

 

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் யுத்தத் தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டிய பாரிய பொறுப்பைக் கொண்­டி­ருக்­கின்­றது. மக்­க­ளுக்கு நீதி­வ­ழங் குவோம் என நாட்­டுக்கு உறுதி வழங்­கி­யிருக் கி­றது. ஏன் சர்­வ­தே­சத்­திற்குக் கூட அந்த வாக்­கு­று­தியை வழங்­கி­யி­ருக்­கி­றது. அதன்படி அநீ­திக்­குட்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் நீதியை நிலை­நாட்­டியே ஆக­வேண்டும். அந்த நீதி வழங்கும் செயற்­பாட்­டி­லி­ருந்து அரசாங்கம் ஒரு­போதும் விலகி நிற்­க­மு­டி­யாது 

 

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி வழங்கும் விட­யத்தில் எதுவும் நடக்­காது போன்றே தெரி­கின்­றது. மக்கள் தொடர்ந்து ஏமாற்­றத்­து­ட­னேயே போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டிய அர­சாங்கம் தென்­னி­லங்­கையில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் சவால்­களை சமா­ளிப்­ப­தற்கு வியூகம் அமைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

இதன் முக்­கிய விளை­வாக வடக்கு, கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் மறக்­க­டிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இல்லை. அந்த மக்­களே மறக்­க­டிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர் என்று கூறலாம். பாதிக்­கப்­பட்ட மக்கள் ஏக்­கங்கள், ஏமாற்­றங்கள், மற்றும் வேத­னை­யுடன் நீதிக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டிய நீதி­யா­னது தூர­மா­கிக்­கொண்டே போகின்­றதே தவிர நீதி­யா­னது மக்­களை நெருங்­கி­வ­ரு­வ­தாக எந்­த­வொரு சமிக்­ஞையும் தெரி­ய­வில்லை.

 

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டிய பாரிய பொறுப்பைக் கொண்­டி­ருக்­கின்­றது. மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்­குவோம் என நாட்­டுக்கு உறுதி வழங்­கி­யி­ருக்­கி­றது. ஏன் சர்­வ­தே­சத்­திற்குக் கூட அந்த வாக்­கு­று­தியை வழங்­கி­யி­ருக்­கி­றது. அதன்­படி அநீ­திக்­குட்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் நீதியை நிலை­நாட்­டியே ஆக­வேண்டும். அந்த நீதி வழங்கும் செயற்­பாட்­டி­லி­ருந்து அர­சாங்கம் ஒரு­போதும் விலகி நிற்­க­மு­டி­யாது.

ஆனால் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களைப் பார்க்­கும்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் செயற்­பாட்­டி­லி­ருந்து எங்கே விலகி நிற்­கின்­றதோ, அல்­லது தூரப் போகின்­றதோ என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யா­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக தென்­னி­லங்கை அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள சல­ச­லப்­புகள் அவற்றை தீர்த்து வைப்­ப­தற்­காக முன்­னெ­டுக்­கப்­படும் நகர்­வுகள், அவற்றை எதிர்­கொள்­வ­தற்­காக அர­சியல் கட்­சிகள் மேற்­கொள்ளும் காய்­ந­கர்த்­தல்கள் என்­பன பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை தாம­தித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அதற்­கான சந்­தர்ப்­பத்தை அழித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலை­மையே தற்­போது தொடர்ந்து நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. தென்­னி­லங்கை அர­சி­யலில் தற்­போது ஒரு வகை­யான சல­ச­லப்பு ஏற்­பட்­டுள்­ளது என்­பதை நாம் மறுக்க முடி­யாது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்­கத்­துவம் வகிக்­கின்ற இரு பிர­தான அர­சியல் கட்­சி­களும் இந்த அர­சியல் சல­ச­லப்பை சமா­ளிப்­ப­தற்­காக பல்­வேறு வியூ­கங்­களை அமைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. இரு துரு­வங்­க­ளி­லி­ருந்து செயற்­படும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து ஆட்சி அமைத்து அதனைக் கொண்­டு­செல்­வது என்­பது இல­கு­வான விட­ய­மல்ல. அது­மி­கவும் சவா­லுக்­கு­ரிய மற்றும் சிக்­கல்­க­ளுக்கு உட்­பட்­டுள்ள ஒரு­ வி­ட­ய­தா­ன­மாகும்.

இவ்­வா­றான அர­சியல் பின்­ன­ணி­க­ளுக்குள் பாதிக்­கப்­பட்ட மக்கள் சிக்கித் தவிக்­கின்­றனர் என்­பதே உண்­மை­யாகும். ஆனால் இவ்­வா­றான தென்­னி­லங்­கையின் சல­ச­லப்­புக்­களை முன்­னி­றுத்தி பாதிக்­கப்­பட்ட மக்­களின் நீதியை மறு­த­லிப்­ப­தற்கு எந்­த­வொரு தரப்பும் முயற்­சிக்­கக்­கூ­டாது.

 கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் பாதிக்­கப்­பட்ட இலட்­சக்­க­ணக்­கான மக்கள் தமக்கு ஏதோ ஒரு வழியில் நீதி நிலை­நாட்­டப்­படும் என நம்­பி­யி­ருந்­தனர். இலங்கை அர­சியல் வர­லாற்றில் மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு திருப்­பு­மு­னை­யாக காணப்­பட்ட அந்த சந்­தர்ப்­பத்தில் அந்த மக்­க­ளுக்கு எதிர்­பார்ப்­புக்கள் அதிகம் இருந்­தாலும் இறு­தியில் ஏமாற்­றமே சொந்­த­மா­கி­யது.

உள்­நாட்டில் ஒரு விசா­ர­ணைப்­பொ­றி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­களின் குறை­தீர்க்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதும் எது­வுமே நடக்­க­வில்லை. கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்கள் மற்றும் சமூ­கத்தின் செல்­வாக்கு மிகுந்­த­வர்­களின் சாட்­சி­யங்கள் பெறப்­பட்­ட­போ­திலும் அவற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எந்­த­ வி­மோ­ச­னமும் கிடைக்­க­வில்லை.

பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளா­கவே இருந்­தனர். இந்­நி­லையில் இலங்கை அர­சாங்கம் தன்­னிச்­சை­யாக எத­னையும் செய்­யாது என்று தெரிந்­து­கொண்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை அநீ­திக்­குட்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் என்ற நோக்கில் 2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பான ஒரு பிரே­ர­ணையை நிறை­வேற்­றி­யது. அந்தப் பிரே­ர­ணையில் உள்­நாட்டில் ஒரு பொறி­மு­றை முன்­னெ­டுக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டு­மென பரிந்­து­ரை­களும் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் அந்த பிரே­ரணை முழு­மை­யாக அப்­போ­தைய அர­சாங்­கத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

தொடர்ந்தும் 2013ஆம் ஆண்டும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யினால் மற்­று­மொரு பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது. கிட்­டத்­தட்ட 2012ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு ஒப்­பா­ன­தா­கவே இந்தப் பிரே­ர­ணையும் அமைந்­தது. ஆனால் அத­னையும் அப்­போ­தைய அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரித்­து­விட்­டது.

தொடர்ந்து பொறுமை இழந்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை 2014 ஆம் ஆண்டு மற்­று­மொரு பிரே­ர­ணையை நிறை­வேற்­றி­யது. அதில் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்­த­வேண்­டு­மென பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அந்தப் பிரே­ர­ணை­யையும் அப்­போ­தைய அர­சாங்கம் நிரா­க­ரித்­தது. ஆனால் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை அலு­வ­லகம் அந்த விசா­ர­ணையை சர்­வ­தே­சத்­தி­லி­ருந்­த­வாறே நடத்­தி­யது.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும்­போது இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் விசா­ரணை முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. தொடர்ந்து ஐ.நா.வுக்கும் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் இடையில் கடும் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டு­வந்­தன. அந்த நேரத்தில் இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­படும் சூழல் உரு­வா­கி­யது. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. அதனைத் தொடர்ந்து இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­திற்கும் ஐக்­கிய நாடுகள் சபைக்­கு­மி­டையில் புது­வி­த­மான உறவு கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது. அதா­வது ஒரு புரிந்­து­ணர்­வுடன் கூடிய நல்­லு­றவு இலங்­கைக்கும் ஐ.நா.வுக்­கு­மி­டையில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது என்று கூறலாம்.

மேலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உள்­ளகப் பொறி­மு­றையின் அடிப்­ப­டையில் விசா­ரணை நடத்தி நீதியை நிலை­நாட்­டு­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­விட்டு புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கும் வந்­தது. இத­னி­டையில் 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஐ.நா. அலு­வ­லகம் இலங்கை குறித்த விசா­ரணை அறிக்­கையை வெளி­யிட்­டது. அதில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தற்­காக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுக்க கலப்பு நீதி­மன்றம் பயன்­ப­டுத்­தப்பட­வேண்­டு­மென பரிந்­துரை செய்­யப்­பட்­டது.

அதனை இலங்­கையின் புதிய அர­சாங்கம் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­வதில் தயக்கம் காட்­டி­யது. இதற்­கி­டையில் 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் நடை­பெற்ற 30ஆவது ஐ.நா. மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் அமெ­ரிக்கா, பிரித்தானியா உள்­ளிட்ட ஐந்து நாடுகள் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ர­ணையை சமர்ப்­பித்­தன. அதில் கலப்பு நீதி­மன்­றத்­திற்கு பதி­லாக சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுடன் கூடிய விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வேண்­டு­மென பரிந்­துரை செய்­யப்­பட்­டது.

அந்த பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அத்­துடன் அப்­போது இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கு ஒரு வாக்­கு­று­தி­யையும் வழங்­கி­யது. அதா­வது உண்மை, நீதி, நஷ்டஈடு, மீள்­நி­க­ழாமை ஆகிய நான்கு விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வ­தாக இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கும் ஐக்­கி­ய­நா­டுகள் சபைக்கும் வாக்­கு­றுதி அளித்­தது.

எனினும் 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் குறித்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்ட காலத்­தி­லி­ருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இலங்கை அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கக்­கூ­டிய வகையில் பெரி­தாக எத­னையும் செய்­ய­வில்லை. 2016ஆம் ஆண்டு காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டாலும் அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இந்த இடைப்­பட்ட கால­மா­னது பாதிக்­கப்­பட்ட மக்கள் விட­யத்தில் முன்­னேற்­ற­மின்­றியே காணப்­பட்­டது. தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெற்ற ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 34ஆவது கூட்டத் தொடரில் அமெ­ரிக்­கா­வினால் மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதா­வது 2015 ஆம் ஆண்டு கொண்­டு­வந்த பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் இரு வரு­ட­கால அவ­கா­சத்தை வழங்கும் வகையில் புதிய பிரே­ரணை 2017ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த இடத்­தில்தான் தமிழ் மக்­க­ளுக்கு தமக்­கான நீதி கிடைக்­காமல் போய்­வி­டுமோ என்ற சந்­தேகம் மற்றும் ஏமாற்றம் ஏற்­ப­ட ஆரம்­பித்­தது.

அதா­வது தமது பிரச்­சி­னையை காலத்தை இழுத்­த­டிக்கும் ஒரு கரு­வி­யாக மட்­டுமே அர­சாங்­கமும் சர்­வ­தே­சமும் பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­ற­னவா என்ற நியா­ய­மான சந்­தேகம் மக்கள் மத்­தியில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதமே ஏற்­பட்­டது. ஏனெனில் கடந்த இரு வரு­ட­கா­லத்தில் பெரி­தாக எத­னையும் முன்­னெ­டுக்­காத அர­சாங்­கத்தை கிட்­டத்­தட்ட பாராட்டும் வகை­யி­லேயே சர்­வ­தேசம் கால அவ­கா­சத்தை வழங்­கி­யது.

சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் இந்த விட­யத்தில் கடும் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்ட போதிலும் அதி­கா­ரத்தில் உள்ள நாடுகள் அவற்றைக் கவ­னத்­தில்­கொள்­ள­வில்லை. எனினும் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் இந்த இரு வருட கால அவ­கா­சத்­திலும் அர­சாங்கம் எத­னையும் செய்­யப்­போ­வ­தில்லை என்ற நிலைப்­பாடே காணப்­பட்­டது.

அதனால் பாதிக்­கப்­பட்ட மக்­களும் இதனை விமர்­சித்­தனர். இந்தப் பின்­ன­ணி­யி­லேயே தற்­போ­தைய சூழல் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் சொல்­லொணாத் துன்­பங்­களை எதிர்­கொண்டு வாழ்க்­கையை நடத்­து­கின்­றனர். குறிப்­பாக காணா­மல்­போனோர் விவ­காரம், காணிகள் மீள்­வ­ழங்­கப்­ப­டாமை, அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டாமை, நஷ்ட­ஈடு செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டாமை, பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தாரம் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டாமை, அர­சி­யல்­தீர்வு முன்­வைக்­கப்­ப­டாமை போன்ற பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் நீண்­டு­கொண்டே செல்­கின்­றன.

அர­சாங்கம் இந்த விட­யத்தில் தொடர்ந்தும் இழுத்­த­டிப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கும் மௌன­மாக இருப்­ப­தற்­குமே முயற்­சிப்­ப­தா­கவே தெரி­கி­றது. காரணம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் செயற்­பாட்டை ஆழ­மான முறையில் முன்­னெ­டுத்தால் எங்கே தமது அர­சாங்­கத்­திற்­கான இருப்பு ஆட்டம் கண்­டு­வி­டுமா என்று அர­சாங்கம் சிந்­திப்­பதை காண­மு­டி­கின்­றது.

அதற்கு ஏற்­றாற்போல் தென்­னி­லங்­கையின் கடும்­போக்­கு­வா­தி­களும் பல்­வேறு அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அதனை சமா­ளிப்­ப­தற்கே அர­சாங்கம் பாரிய சவால்­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கின்­றது. எவ்­வா­றெ­னினும் இந்த விட­யங்­களை காரணம் காட்டி பாதிக்­கப்­பட்ட மக்களுக்கான நீதிவழங்கும் செயற்பாட்டை எந்தவொரு தரப்பும் மறுத்து செயற்பட முடியாது.

மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றத்துடனேயே இருக்கின்றனர். கடந்த 8 வருடங்களாக நீதி கிடைக்காமல் காத்திருந்த மக்கள் தற்போது பொறுமையிழந்து வீதிக்கு இறங்க ஆரம்பித்துவிட்டனர். எனவே உலக நாடுகளும் அரசாங்கமும் ஐக்கியநாடுகள் சபையும் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டிய தேவை காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களை விரக்தியின் விளிம்பிற்கு கொண்டுசெல்லவேண்டாம்.

இதுபோன்ற நிலைமைகளை கொண்டிருந்த உலக நாடுகளில் நீதிவழங்கும் செயற்பாடுகள் பாரிய வெற்றி அடைந்ததாக கூறமுடியாது. ஆனால் நீதி வழங்கும் செயற்பாட்டில் வெற்றியடைந்தமைக்கு நியாயம் கற்பிக்கும் நாடாக தென்னாபிரிக்கா இருக்கிறது. எனினும் அவ்வாறான காரணங்களைக் கொண்டு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை அந்தரத்தில் விடமுடியாது. இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு சவால்கள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த சவால்களை காரணம் காட்டி பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது.

எனவே அரசாங்கம் விரைந்து செயற்பட்டு முடங்கிப்போய் காணப்படும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை அவசரப்படுத்தி மக்களுக்கு நீதியை நிலைநாட்ட முன்வரவேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அவசரத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டும் என மக்கள் இன்னும் நம்புகின்றனர். ஏதோவொரு வகையில் மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை சிதறிடிக்க வேண்டாம்.

ரொபட் அன்­டனி 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-19#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.