Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கலுக்குள் மாட்டியுள்ளது கூட்டு எதிரணி

Featured Replies

சிக்கலுக்குள் மாட்டியுள்ளது கூட்டு எதிரணி

 
சிக்கலுக்குள்  மாட்டியுள்ளது கூட்டு  எதிரணி
 

என் மீதும், எனது மனச்­சாட்­சி­யின் மீதும் நம்­பிக்கை வையுங்­கள் என வேண்­டிக் கொள்­கி­றேன். நான் பிர­புக்­கள், கோடீஸ்­வ­ரர்­கள் குடும்­பத்­த­வ­னல்ல, விரி­வு­ரை­ யா­ளரோ, பேரா­சி­யரோ அல்ல. இந்த நாட்­டின் விவ­சாயி ஒரு­வ­ரது மகன். நான் நீண்ட கால­மாக அர­சி­ய­ல­ரங்­கில் செயற்­பட்டு வரும் ஒரு­வன்.

நான் எனது குடும்ப உறுப்­பி­னர்­கள் ஐந்­து­பே­ரி­னது உயிர்­க­ளைப் பண­யம் வைத்தே அர­சி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளேன். இந்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் பல சவால்­களை எதிர்­நோக்க நேரும் என்­பதை நான் நன்­க­றி­வேன். பொது வேட் பா­ள­ரா­கத் தெரி­வாகி 12 மணித்­தி­யா­லங்­கள் கழி­யு­முன் எனக்­கான பாது­காப்பு நீக்­கப்­பட்டு விட் டது. நான் எனது பாது­காப்பை மக்­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கி­றேன்.’’

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர், இன்­றைய அரச தலை­வர், ஐ.தே.கட்­சித் தலை­மை­ய­க­மான சிறி­கோத்­தா­வில் வைத்­துத் தெரி­வித்த கருத்தே மேற்­கண்­ட­தா­கும். 1952 ஆம் ஆண்டு முதல் இரண்டு தரப்­புக்­க­ளா­கப் பிரிந்து மோதிக்­கொண்ட இரு முதன்மைக் கட்­சி­க­ளை­யும் ஒன்­றி­ணைக்­கும் முனைப்­பி­லும், எதேச்­சா­தி­கா­ரப் பய­ணம் மேற்­கொண்ட முன்­னைய ஆட்­சித்­த­லை­வரை வீட்­டுக்கு அனுப்­பும் முர­ச­றை­ வா­க­வும் அவ­ரது மேற்­கு­றித்த கருத்து வெளிப்­பாடு அமைந்­த­தெ­ன­லாம்.

சுதந்­தி­ரக்­கட்­சிக்­காக இராப் ப­கல்­பா­ராது உழைத்த மனி­தர்; கட்­சிச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­தன் கார­ண­மாக க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்சை எழுத கைவி­லங்­கு­டன் பரீட்­சை­மண்­ட­பத்­துக்கு அழைத்­துச் செல்­லப்­பட்ட மனி­தர்; காலில் செருப்­பில்­லா­மல் வெறுங்­கா­லு­டன் கட்­சிப்­ப­ரப்­பு­ரைக்­காக ஊரூ­ரா­கத் திரிந்த மனி­தர்; சிறிய பத­வி­யொன்­று­டன் ஆரம்­பித்து அர­சி­ய­லில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் பத­வி­வரை பய­ணித்த மனி­தர் என்ற வகை­யில் மைத்­தி­ரி­பால சிறி­சேன, கடை­சி­யில் கட்­சி­யின் எதேச்­சா­தி­கார தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக அரச தலை­வர் தேர்­த­லில் பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிட நேர்ந்­தது.

மகிந்­தவை எதிர்க்­க துணிந்து
புறப்­பட்டார் மைத்­தி­ரி­பால

மகிந்­த­வின் மடத்­த­ன­மான நிர்­வா­கத்தை மாற்­றி­ய­மைக்­கும் தேவையே மைத்­தி­ரிக்கு இருந்­தது. எதேச்­சா­தி­கார, ஊழல்­கள் மலிந்த ஏமாற்று நிர்­வா­கத்தை மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யி­ருந்­தது. மகிந்­த­வின் அர­சுக்கு எதி­ராக எவ­ருமே வாய் திறக்க இய­லா­தி­ருந்த ஒரு கால­கட்­டத்­தில், இந்­தச் சிறிய மனி­தர் மேற்­கொண்ட அந்த முடிவு துணிச்­சல் மிக்­க­தொன்றே.

அந்த வகை­யில் நாட்­டில் நில­விய ஊழல் மோச­டி­கள், அச்­சு­றுத்­தல்­கள், எதேச்­சா­தி­கா­ரப் போக்கு, நீதி மறுக்­கப்­பட்ட நிலை ஆகிய தவ­றான செயற்­பா­டு­களை நிறுத்துவேன் என்ற வாக்­கு­றுதி வழங்­கியே மைத்­தி­ரி­பால அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்­டார்.

கூட்­டு­அ­ரசு நிர்­வா­கத்­தைப் பொறுப்­பேற்­ற­வேளை, நூறு நாள்­கள் வேலைத் திட்­டம் குறித்து மீளாய்வு செய்து பார்த்­த­போது மைத்­தி­ரி­பால, அர­சுத் தலை­வ­ருக்­கான பிரி­வு­க­ளின் வேலைத்­திட்­டங்­களை நிறைவு செய்­தி­ருந்­தார். அமைச் சர்­க­ளுக்­கு­கென ஒதுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­களே பூர்த்­தி­ யா­காத நிலை­யில் இருந்­தன.

“எங்கே, திரு­டர்­க­ளைப் பிடித்து விட்­டீர்­களா?”
“பொய் கூறியே பத­விக்கு வந்த அரசு இது”
“மகிந்த தரப்­பி­லல்ல, திரு­டர்­கள் அர­சுக்­குள்­தான் இருக்­கி­றார்­கள்,”
என்­றெல்­லாம் பொது­மக்­கள் கூட்டு அரசை விமர்­சிக்­கத் தொடங்­கி­னார்­கள்.

‘‘அமைச்­சரே, இந்த அர­சுக்கு எங்கு தவறு நேர்ந்­தது?’’ என்று வார இறுதி அர­சி­யல் விவா­தங்­க­ளில் பங்­கேற்­கும் அமைச்­சர்­க­ளி­டம் வினா­வி­னால் அவர்­களோ, ‘‘எங்­க­ளால் திரு­ட­ர் க­ளைப் பிடிக்க இய­லாது போய்­விட்­டது’’ என்று ஒரே குர­லில் கூறு­கி­றார்­கள். ‘‘அதற்­காக நாங்­கள் நாட்டு மக்­க­ளி­டம் மன்­னிப்­புக் கோரு­கின்­றோம். எங்­க­ளால் ஒரு பெரிய திரு­ட­னைக் கூடப் பிடிக்க இய­லா­மல் போய்­விட்­டது’’ என மூக்­கால் அழு­கி­றார்­கள்.

இருந்­த­போ­தி­லும், இந்­தக் கூட்டு அர­சுக்­குள்­ளும் திரு­டர் கள் இருக்­கக்­கூ­டும் தானே?’’ என்று ஊட­கங்­கள் கதை­விட்­டால், ‘‘இந்த அர­சுக்­குள்­ளும் திரு­டர்­கள் இருக்­கத்­தான் செய்­கி­றார்­கள்’’ என்று இழுக்­கும் அமைச்­சர்­கள், ‘‘முன்­னைய அர­ சின் முன்­னாள் திரு­டர்­கள் விடு­தலை செய்­யப்­பட, அங்கு இங்­கென்று இருக்­கும் நபர்­க­ளும் எப்­ப­டி­யும் விடு­த­லை­யா­ வார்­கள் தானே அமைச்­சரே ?’’ என்று கேள்­வி­யெ­ழுப்­பி­னால், ‘‘அது உண்­மை­யில் பெரிய பிரச்­சி­னை­தான், எங்கோ ஓரி­டத்­தில் இதற்­கான “டீல்” ஒன்று இருக்­கி­றது தான்’’ என்­கி­றார்­கள்.
இத்­த­கைய விதத்­தில் இரண்டு ஆண்­டு­கள் நிறை­வில் கூட்டு அர­சின் மானம் கப்­பல் ஏறி­யுள்­ளது.

நம்­பத்­தன்­மை­யற்ற
ஐ.தே.கட்­சித் தரப்பு

“வெளித் திரு­டர்­களை விட உள்­ள­கத் திரு­டர்­களே நிறைந் தி­ருக்­கி­றார்­கள். இத்­த­கைய குத்­திக் காட்­டல்­க­ளால் மைத்­தி­ரி­பா­ல­வுக்கே மனக் கஷ்­டம். இரண்டு முதன்மைக் கட்­சி­கள் இணைந்த கூட்டு அர­சா­ன­போ­தி­லும் அவற்­றில் ஐ.தே.கட்­சியே பலம் வாய்ந்ததாய் இருக்­கின்­றது.

முக்­கிய அமைச்­சுக்­க­ளைத் தம்­வ­சம் கொண்­டுள்­ளோர் ஐ.தே.கட்­சி­யி­னரே. முக்­கி­ய­மான அழுத்­தம் கொடுக்­கும் தரப்­பி­னர்­கள் ஐ.தே.கட்சி தரப்­பி­லேயே இருந்­துள்­ள­னர்.கடை­சி­யில் மிகப்­பெ­ரும் குற்­றச்­சாட்­டுக்கு உட்­பட்­டோ­ரும் ஐ.தே. கட்­சி­ யி­னரே.

‘‘அரசு கவிழ நேரு­மா­னால் கூட ஐ.தேகட்­சிக்­குப் பிரச்­சினை எது­வும் வரப்­போ­வ­தில்லை. அவர்­க­ளுக்கு மகிந்­த­வு­டன் கொடுக்­கல் வாங்­கல் தொடர்பு உள்­ளது. ஆனால் எனக்­குச் சிக்­கல் சிக்­கல்­தான்’’. முக்­கி­ய­மான அரச தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பின் போது மைத்­தி­ரி­பால இவ்­வி­தம் தெரி­வித்­தார் எனப் பேச்சு அடி­ப­டு­கி­றது.

கூட்டு அர­சின் பய­ணம், நாளுக்கு நாள் காட்­டுப் பாதை­யில் தொடர நேர்ந்­துள்­ள­தால், சிர­மத்­துக்­கும் கவ­லைக்­கும் உள்­ளா­ன­வர் மைத்­தி­ரி­பா­லவே. ஏனெ­னில் இது அவர் உயி­ரைக் கொடுத்து உரு­வாக்­கிய அரசு என்­ப­தா­லா­கும். இன்­ன­மும் பல ஆண்­டு­கள் கலங்­க­லற்ற நீரோட் ட­மாய் பய­ணிக்­கும் வாய்ப்­பைக் கொண்­டி­ருந்த மகிந்­த­வி­னது அர­சைக் கவிழ்ந்­த­வர், மைத்­தி­ரி­பா­லவே.

கிரா­ம­மட்ட ஐ.தே.கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு புதிய அர­சொன்று உரு­வாக்க இருந்த சிர­மம்­கூட, கட்­சி­யின் பெரிய தலை­க­ளுக்கு இருந்­த­தில்ல. மகிந்த தரப்­பி­னர்­க­ளுக்கு ரணி­லு­டன் எந்­த­வி­தக் கோப­மும் கிடை­யாது. மைத்­தி­ரி­யின் மீது தான் அவர்­க­ளுக்கு ஆத்­தி­ரம்.

”பொலிஸ் திணைக்­க­ளத்­தை­யும் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தை­யும் மூன்று மாதங்­க­ளுக்கு நிர்­வ­கிக்க என்­னி­டம் தந்து பாருங்­கள். நான் வேலையை எப்­படி நிறை­வேற்­றிக் காட்­டு­கி­றேன் என்­பதை இருந்து பாருங்கள்’’
கடை­சி­யில் பொறுமை காக்க இய­லாத நிலை­யில் மைத்­தி­ரி­பால இப்­ப­டிச் சவால் விட்­டார்.

பிணை­முறி ஊழல்
விவ­கா­ரமே அர­சின்
மதிப்­பைக் கெடுத்­தது

உண்­மை­யில் இந்­தக் கூட்டு அரசு மதிப்­புக் கெட­நேர்ந்­தது மத்­திய வங்­கி­யின் பிணை­முறி ஊழல் கார­ண­மா­கவே.
மத்­திய வங்­கிப் பிணை­முறி ஊழல் தொடர்­பான அர­சுத் தலை­வர் ஆணைக்­கு­ழு­வின் செயற்­பாடு, லஞ்ச ஊழல் குறித்த விசா­ரணை மற்­றும் தண்­டனை வழங்­கல் தொடர்­பான அரச தலை­வ­ரது செயற்­பா­டு­கள் அள­வுக்கு சிறப்­பாக அமைந்­தி­ருந்­தது.

அரசு நேர்­மை­யா­ன­தொன்­றா­னால் ரவி கரு­ணா­நா­ய­காவை அவ­ரது அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்கி விட­வேண்­டும். அதன் பின்­னரே விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வேண்­டும். அவர் குற்­ற­வா­ளி­யா­கவோ சுற்­ற­வா­ளி­யா­கவோ இருக்­கட்­டும். அர­சின் ஒரு அங்­க­மாக அவர் செயற்­ப­டு­வதே அவரை அவ­ரது பத­வி­லி­ருந்து நீ்க் குமாறு நாம் கோரு­வ­தற்­கான கார­ண­மா­கும் என ஜே.வி.பி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுனில் ஹந்­துன்­நெத்தி பி.பி.சிக்­குத் தெரி­வித்­தி­ருந்­தார்.

கடை­சி­யில் வெளி­யு­றவு அமைச்­சர் பத­வியை வகித்த ரவி கரு­ணா­நா­யகா தாமா­கத் தமது பத­வி­யி­லி­ருந்து வில­கிக் கொண்­டார். நாலா­பக்­கங்­க­ளி­லி­ருந்து கிளம்­பிய கடும் விமர்­ச­னங்­களே அதற்­குக் கார­ண­மா­யின. அர­சின் மத்­தி­யில் ரவி­க­ரு­ணா­நா­யக அதி­கா­ரம் படைத்­த­வா­ரா­யி­ருந்­தார்.

நல்­ல­துக்கோ கெட்­ட­துக்கோ தெரி­யாது அந்த அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அவர் சிற்­சில விடங்­களை நிறை­வேற்­றிக் கொண்­டார். நிதி அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து அயலுறவுத்துறை அமைச்­சுப் பதவி கிட்­டி­ய­போது கூட, சிறப்­புப் பரிசு என்ற விதத்­தில் அவ­ருக்­குத் தேசிய லொத்­தர்­ச­பை­யின் பொறுப்­பும் கிடைத்­தது. அந்த வகை­யில் அவர் அர­சில் அழுத்­தம் கொடுக்­க­வல்ல வர­லாற்று நப­ரா­கத் திகழ்ந்­தார்.அதே­வேளை தற் போது அர­சுக்­குப் புதிய போராட்­டக் கோச­மொன்று கிடைத்­துள்­ளது.

கிட்­டிய வாய்ப்­பைப் பயன்­ப­டுத்த
வியூ­கம் வகுத்த அரச தரப்பு

‘‘நாம் திரு­டர்­க­ளைக் கைது செய்­யும் விட­யத்­தில் பத­விக்கோ அந்­தஸ்­துக்கோ மதிப்­ப­ளிப்­ப­தில்லை. ஊழல் மேற்­கொள்­ளும் எவ­ரை­யும் சட்­டத்­தின் பிடிக்­குள் கொண்­டு­வ­ரு­வோம்’’ என்­பதே அர­சுக்­குக் கிட்­டி­யுள்ள அந்த வாய்ப்பு.

‘‘நாட்­டில் இடம்­பெற்­று­வந்த ஊழல் செயற்­பா­டு­க­ளைத் தடுத்து நிறுத்­து­வது மட்­டு­மல்­லாது கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக நாட்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளைப் போன்று பத்து மடங்கு அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­வேன்’’ என மைத்­தி­ரி­பா­ல­வின் அர­ச­த­லை­வ­ருக்­கான தேர்­தல் விஞ்­ஞா­ப­னத்­தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதனை நடை­மு­றைப்­ப­டுத்த அரசுத் தலை­வர் மைத்­தி­ரி­பால நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்த போதி­லும், நாளை அந்த அள­வுக்கு இருள் இருக்­காது. எது எப்­ப­டியோ அரசு தற்­போது திட­மான மாற்­ற­மொன்­றில் பிர­வே­சித்­துள்­ளது. அது, முத­லில் தமது வீட்­டைச் சுத்­தப்­ப­டுத்­திக் கொள்­ளும் வேலை­யி­லி­ருந்து ஆரம்­பிப்­ப­தா­கும். தற்­போது அச்­ச­மின்றி ஏனைய இடங்­க­ளை­யும் சுத்­தப்­ப­டுத்த இய­லும்.

‘‘திரு­டர்­க­ளுக்கு எதி­ராக நேரடி நட­வ­டிக்கை எடுப்­ப­தில் நாம் திட­மாக உள்­ளோம் என்­ப­தற்கு உதா­ர­ணம் காட்­டி­யுள்­ளோம்’’ எனக் கூறும் அரச தரப்­பி­னர்­கள், “நாம் எங்­கள் தரப்­பி­லி­ருந்து வேலையை ஆரம்­பித்­துள்­ளோம். முன்­னாள் திரு­டர்­களே, ஜாக்­கி­ர­தை­யாக இருங்­கள்’’ என்ற செய்­தி­யை­யும் விடுத்­துள்­ள­னர்.

திரு­டர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­யே­தும் மேற்­கொள்­ளாது தூக்­கக் கலக்­கத்­தில் அரசு ஆழ்ந்­தி­ருந்­த­போது கூட்டு எதி­ர­ணி­யி­னர் மகிழ்ச்­சி­யான நிலைப்­பாட் டில் வலம் வந்­தார்­கள். சமீபகாலமாக அவர்­கள் அதே மன­நி­லை­யில் இருந்து வந்­துள்­ள­னர்.

ஆனால் தற்­போது அவர்­கள் மௌன­மா­கி­யுள்­ள­னர். முன்­னைய அரசு காலத்து ஊழல் செயற்­பா­டு­கள் குறித்து, இன்­றைய கூட்டு அரசு எத்­த­கைய அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளப் போகி­றது எனத் தெரிந்துகொள்ள இய­லா­த­தால் அவர்­கள் தற்­போது குழம்­பிப்­போய்க் காணப்­ப­டு­கின்­ற­னர்.

பசில் ராஜ­பக்ச, விமல் வீர­வன்ச, நாமல், யோசித தரப்­பி­னர்­கள் விசா­ர­ணைக்கென அழைக்­கப்­பட்­ட­போது கூட்டு அரசு தம்­மைப்­ப­ழி­வாங்க முயல்­வ­தா­கக் குற்­றம் சாட்டி வந்­தார்­கள். தற்­போது அரசு தன­து­ அயலுற வுத்துறை அமைச்­ச­ரி­லி­ருந்தே தனது நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள் ளது.

அந்த வகை­யில் பார்க்­கும்­போது கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னர் தற்­போது பெரும் சிக்­க­லில் மாட்­டுப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் வச­மி­ருந்த பெரிய போராட்­டக் கோசம் தற்­போது அர­சின் கைக­ளுக்கு மாறி­யுள்­ளது.
கூட்டு அரசு இன்று கவி­ழும்; நாளை கவி­ழும் என நம்­பிக்­கொண்­டி­ருந்த அவர்­கள், அந்த எண்­ணத்தை மேலும் சில ஆண்­டு­க­ளுக்­குத் தள்­ளிப் போகும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­மையே இலங்கை அர­சி­ய­ல­ரங்­கின் இன்­றைய யதார்த்த நிலை­யா­கி­ யுள்­ளது.

சிங்­கள மூலம்: மவ்­பிம
தமி­ழில் : வீஎஸ் ரீ

http://newuthayan.com/story/20788.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.