Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஸ்கிரிய பீடாதிபதிகளின் ஆசிர்வாதம் பெற்றார் கடற்படைத்தளபதி

Featured Replies

அஸ்கிரிய பீடாதிபதிகளின் ஆசிர்வாதம் பெற்றார் கடற்படைத்தளபதி

 

 

இலங்கையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ரவிஸ் சின்னையா இன்று கண்டி தலதா மாளிகையில் சமய அனுஷ்ட்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் மல்வது மற்றும் மஹா நாயக்க தேரர்களின் கால்கலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

Travis-Sinniah-2.jpg

கடற்படைத் தளபதி அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவற்கு முன்னர் தலதா மாளிகையின் நிலமேயை சந்தித்து நட்புரையாடலில் ஈடுபட்டார்.

5.JPG

5.JPG

பின்னர் அஸ்கிரிய பீடாதிபதிகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன் போது பீடாதிபதிகள் புதிய உயர்பதவிகளை பொறுப்பேற்று எவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும் என சுருக்கமான அறிவுரையை வழங்கி தளபதி தன் பணிகளை நீதியோடும் நேர்மையோடும் நடாத்திச் செல்ல வலிமை கிடைக்க வேண்டும் என ஆசிர்வதித்தனர்.

http://www.virakesari.lk/article/23606

4 hours ago, நவீனன் said:

மல்வது மற்றும் மஹா நாயக்க தேரர்களின்

சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தின் மூலஸ்தானங்கள்!

  • தொடங்கியவர்

ஒரு­வ­ருட கால அவ­காசம் தாருங்கள் முழு­மை­யாக நிறுத்திக் காட்­டு­கிறோம் : வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா

Published by Vijithaa on 2017-08-26 12:42:58

 

இலங்கை கடல் எல்­லையில் போதைப்­பொருள் கடத்தல் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்­துள்­ளன. எமக்கு ஒரு வரு­ட­காலம் அவ­காசம் தாருங்கள் முழு­மை­யாக நிறுத்­திக்­காட்­டு­கின்றோம் என கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா தெரி­வித்தார். 

Local_News.jpg

இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் இருந்து விரைவில் புதிய கப்­பல்கள் கொள்­வ­னவு செய்­ய­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா நேற்று கண்டி தலதா மாளி­கையில்   வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்­த­துடன் அஸ்­கி­ரிய, மல்­வத்து மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து ஆசி பெற்­றி­ருந்தார். இதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனை குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

இலங்­கையின் கடல்  பாது­காப்பில் இலங்கை கடற்­படை அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. நாம் எமது கடல் எல்லை பாது­காப்பை பலப்­ப­டுத்தி  புதிய கப்­பல்­களை கொள்­வ­னவு செய்­ய­வுள்ளோம். அடுத்த மாதம் ஒரு கப்­பலை நாம் கொள்­வ­னவு செய்­ய­வுள்ளோம். அத்­துடன் இந்­தி­யா­விடம் இருந்து அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் நவீன கப்­பலை கொள்­வ­னவு செய்­ய­வுள்ளோம்.   மேலும் மூன்று   புதிய கப்­பல்கள் அடுத்த ஆண்டில் எமக்கு கிடைக்­க­வுள்­ளன. இவை எமது கடல் எல்லை பாது­காப்பை பல­ப்ப­டுத்த நாம் எடுக்கும் முயற்­சி­க­ளாகும். 

எமக்கு கடல் எல்லை பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் உள்­ளது. போதைப்­பொருள் கடத்தல் விட­யங்­களில் நாம் அதிக அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்டு வரு­கின்றோம். அதற்­கா­கவே நாம் இந்த கப்­பல்­களை கொள்­வ­னவு செய்ய வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த செயற்­பா­டு­களை தடுக்க வேண்­டிய முயற்­சிகள் எம்­மிடம் உள்­ளன. எமக்கு ஒரு வருட காலம் தாருங்கள் நாம் முழு­மை­யாக இந்த செயற்­பா­டு­களை நிறுத்தி காட்­டு­கின்றோம். 

இலங்கை கடற்­படை மீது பல்­வேறு குற்­றங்கள் கடந்த காலங்­களில் சுமத்­தப்­பட்­டன. எனினும் இவை தொடர்பில் நாம் அக்­கறை செலுத்தி வரு­கின்றோம். ஒழுக்கம் என்­பது   முக்­கிய அம்­ச­மாகும். இந்த ஒழுக்­கத்தை வைத்­து­க்கொண்டு எதிர்­வரும் காலங்­களில் நாம் எமது கட­மை­களை முன்­னெ­டுப்போம். நடந்த விட­யங்கள் தொடர்பில் நாம் நட­வ­டிக்­கை­களை எடுப்போம். இதில் எவரும் சந்­தே­கங் ­கொள்ள வேண்­டிய அவசியம் இல்லை. 

இந்­திய கடற்­றொ­ழி­லா­ளர்கள் இலங்கை எல்லை குறித்த தெளி­வில்­லாமல் அத்­து­மீறி பிர­வே­சிக்­கின்­றனர். இந்த நிலையில் அவர்­க­ளுக்கு உதவும் வகையில் இலங்கை இந்­திய கடல் எல்லையை அடையாளப்படுத்தி அதனை அவர்கள் மீறும் போது எச்சரிக்கை சமிக்ஞையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த செயற்பாடுகளுக்காக புதிய இயந்திர படகுகளை இலங்கை கடற்படையுடன் இணைக்கவுள்ளோம் என்றார்.

http://www.virakesari.lk/article/23629

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.